08/16/2026
08/15/2026
எங்களது புதிய கல்வி ஆண்டை நேற்று மிகச் சிறப்பான முறையில் இனிதே தொடங்கினோம்!
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய எங்களது முதல் நாளில், முதல்வர் கீதா அவர்களின் சிறப்பு உரையோடு நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாணவர்கள் வகுப்பறைக்குச் சென்ற பிறகு பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களுடன் அடுத்தடுத்து சிறப்பான கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்றன.
பல புதிய குடும்பங்கள் எங்களது சுகர்லேண்ட் தமிழ்ப் பள்ளியை தங்களது இரண்டாவது குடும்பமாகத் தேர்ந்தெடுத்து இணைந்திருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இத்தருணத்தில், எங்களது அருமையான ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் உங்களின் அர்ப்பணிப்பும் சேவையும் போற்றத்தக்கது.
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு சமூகமாக வளர்வோம்! வாழ்க தமிழ்!