Ifan Anaas

Ifan Anaas

Share

Official Page

11/05/2026

நகர சபை வழக்கு நீ சாட்சி இல்லை...!!

நகர சபையே நீயே சாட்சி..!!

சாய்ந்தமருதுக்கு ஏதோ ஒரு உள்ளூராட்சி சபை என்ற கோஷம் தான் இருந்தது.

அது பிரதேச சபை அல்ல, நகர சபை என்று கூறியவர் அதாஉல்லா...

கல்முனை பரிபோகாமல் அனைவரும் சமமாக வாழ நான்காக பிரிக்கும் யோசனையை முன்வைத்தவர் அதாஉல்லா...

2015இல் பள்ளிவாசலோ ஊரோ கேட்காமல், சிராஸின் காலத்தில் வர்த்தமானி வெளியிட்டவர் அதாஉல்லா.

அதனைத் தடுத்தவர்கள் ரிஷாத் மற்றும் ஹக்கீம் குழுவினர் (கல்முனைப் பள்ளியின் வேண்டுகோள்)

2020இல் மஹிந்த தலமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சாய்ந்தமருது சார்பாக யாருமே இல்லாத சந்தர்ப்பத்தில், அதாஉல்லா நின்றார், இது தான் பிரச்சினை இது தான் தேவை என்று கூறினார்.

வர்த்தமானி வெளிவந்தது...

மரிக்கார் ஹிருனிக்கா போன்றோர் தடுக்க ரிஷாத் ஹக்கீம் போன்றோர் ஒரே அணியில் இருந்து வாய் மூடி வேடிக்கை பார்த்தனர்.
அந்த நேரம் உண்மையை உடைத்திருந்தால் இவ்வளவு இழுபறி வந்திருக்காது...

கோத்தா அதாஉல்லாவுடம் நெருக்கமில்லை,
மஹிந்த தான் நெருக்கம்.
சரியான நேரம் பார்த்து அதாஉல்லா கிடப்பில் போட்டார்.. கோத்தா அரசு கவுன்றது.

ரணில் அரசில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், பொதுத் தேர்தலின் போது சலீம் டிஸ் வியூகம் ரீவி நேர்காணலில் கூறினார் 'செல்லுபடியற்ற கெஸட் ' என்று.

பின்னர் அவரே வெற்றி கொண்டாடுகிறார்.

எது எப்படியோ...

சபை தறுவோறுக்கு சந்ததி வரை வாக்களிப்போம் என்பது சாய்ந்தமருது பள்ளிவாசலின் சத்தியம்..

ஆனால் நான் ரிஷாத்தோட நிக்கனே தம்பி எப்படி அதாஉல்லாக்கு போட சொல்ற??

அப்பா அதாஉல்லாஹ்ட பிழை ஒன்றை கண்டுபிடிக்கனும் என்பதே 'நகர சபை வழக்கே நீயே சாட்சி ' என்னும் முனாபிக் தனம்.

இதே வர்த்தமானியை ஹக்கீம் ரிஷாத் கொண்டுவந்திருந்தால்....

பார்க்க தேவல்ல வாப்போ..
இந்நேரம் பெரிய ஊர்வலமே நடந்திருக்கும்.

அதாஉல்லா சாய்ந்தமருதுக்கு ஏலவே கண்க்க செய்துட்டார் வாப்பா... நீங்க நன்றி செய்து கடுமையா கிழிச்ச...

உங்கட வாக்க நீங்க ரிஷாத்துக்கு போடுங்கோ...

உங்கட சத்தியம் எனும் சபத்தை NPPக்கு காட்டுங்கோ..

நன்றி மறந்த மருதூரானாய் நானும் இல்லை எனபதற்கான வரலாற்றுப் பதிவு இது..

சலீம் காக்கா நீங்க அரசியல்ல நல்லா வருவிங்க மாஷா அல்லாஹ் 👏

குறிப்பு:
✅ அதாஉல்லா வர்த்தமானி கொண்டுவந்த..
✅ அதாஉல்லா வர்த்தமானி பொய் என்டு சொன்ன... 😂
✅ அதாஉல்லா தடுத்த, ரிஷாத் ஹகீம் கடுமையா பாடுபட்ட... 😂
✅ அவன் கொண்டுவந்த சபைல நாங்க ரோஷமில்லாம எலக்கிஷன் கேப்பம்.
✅ வழக்குப் போட ரணில் 05 லட்சம் தந்த ஆனால் அதாஉல்லாக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல 😂
✅ அதாஉல்லா தான் தந்த ஆனா அவர் வழக்க தடுத்த so அவரு துரோகி.. 😂
✅ Last but not least,,,NPP தான் சபைய கட்டித் தந்த 😆so அவங்களுக்கு தான் வோட்டு..

Open ஆ சொல்லுங்க
எங்களுக்கு அதாஉல்லாக்கு வோட்டு போட ஏலா..

வெளக்கம் முடிஞ்சி..

சுத்தி வளைக்க தேவல்ல சலீம் காக்கா..

ALM Athaullah Alm Saleem
Mhm Ibrahim

11/12/2025

"எலி கொழுத்து பூனையை கல்யாணம் முடிக்க கூப்பிடுதாம்"

அரசியல் காற்றுப் பட்டவர்கள் தொட்டு அரசியல் புயலில் புழுதி தழுவியர்கள் வரை இவ்வார பேசு பொருளாகியுள்ளது அதா+ஹகீம் இணைந்த அனர்த்த மறுசீரமைப்பு முயற்சி.

இதற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் சந்தித்த அவல நிலைகளின் போது சேராத இவர்கள் ஏன் சேரந்தார்கள்??
ஹக்கீமின் பின்னால் சென்று‌ அதா ஏன் வேலை செய்ய வேண்டும்??

இதனை அரசியல் இணைவாக பலர் விமர்சிப்பது ஆச்சரியமானவை அல்ல..
தர்கா நகர் கலவரம் தொட்டு ஜனாஸா எரிப்பு வரையுள்ள அவல நிலைகளுடன் அதா+ஹக்கீமின் இணைவை தொடர்புபடுத்துவது என்பது புரிதலில் பிரிதல் உள்ளது என்பதே உண்மை.

மேற்கூறிய சம்பவங்கள் அவர்கள் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தி நின்றாலும், ஒவ்வொருவரும் அவரவர் கொள்கைகள், அனுபவம், மற்றும் இயலுமைகளின் அடிப்படையில் அவர்களாலான முயற்சிகளை செய்தார்கள், அரசியலும் செய்தார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இணையாதது போல் இப்போதும் இடம்பெற்றிருந்து, இன்னுமொறு இன்னலில் இணைந்திருந்தால் அதனையும் கேள்விக்குற்படுத்தியிருப்பீர்கள்.

மேற்கூறிய விடயங்கள் அரசியல் சதுரங்கம் மற்றும் அரசாங்க‌ அசைவுகளோடு சம்பந்தப்பட்டவைகள் மாறாக ஒரு இயற்கை பேரழிவின் நிர்க்கதி நிலமை இல்லை என்பதை விமர்சகர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது விடயம், அதாஉல்லா ஹக்கீமின் பின்னால் சென்று வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை போன்ற விடயங்களை அதாஉல்லா ரசிகர்களின் விமர்சனப் பார்வையாக கண்டேன்.
விமர்சகர்கள் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
இது அரசியல் இணைவோ கூட்டணியோ அல்ல. இது ஒரு இயற்கை பேரனர்த்தமும் பேரழிவும். இதில் இனம் மதம் சார்ந்த பாகுபாடுகளைத் தவிர்த்து ஓர் உண்மையான உணர்வுமிக்க இலங்கையனாக செயற்படுதல் என்பதே நோக்கம். (எண்ணமே வாழ்வு)

இது அதாஉல்லாஹ் ஹக்கீமின் கள வேலையாக இருந்தாலும், அரசாங்கத்திற்கு ஏதோவொரு வகையில் ஏதோ ஒரு பாரமும் குறைகிறது.
அதாஉல்லா மற்றும் அவரது அணியினர் மூதூரிற்கும் சென்று இயலுமான உதவிகளைச் செய்கின்ற நிலையில்; (இந்த அணியை எனது மண்ணிற்காக மக்களுக்காக ஏன் நான் பாவிக்கக் கூடாது) என்று ஹக்கீம் அவர்கள் உதவி கேட்டார், அதாஉல்லா கரம் நீட்டினார் (உங்கள் ஈன விமர்சனம் போன்ற ஈன அரசியல்வாதி அல்லாத) அதாஉல்லா இப்போது ஒரு மாநகர மேயர் என்ற அடிப்படையில் தனது மாநகராட்சி பொறுப்பினை ஓர் இலங்கையனாக முன்னெடுக்கறார்.

பாதிப்புகளுக்குள்ளான கொழும்பு கம்பஹா திருகோணமலை பதுளை கண்டி குருணாகலை போன்ற மாவட்டங்களில் உதவி கேட்க முடியாத நிலையில்; சுனாமியை மிஞ்சிய பேரழிவின் காரணமாக மேயராக இருக்கும் அதாஉல்லாஹ்வின் அனுபவ உதவியையும் அவரது மாநகர உதவியையும் ஹக்கீம் நாடியிருப்பது அரசியல் பார்வைகளுக்கு அப்பாற்பட்ட மனித நேயத்தோடு சம்பந்தப்பட்டது.

ஹக்கீமோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இது ஒன்றும் அரசியல் சார்ந்த விடயம் அல்ல. இது ஒரு நிர்க்கதி நிலை. (பெறும் துயர்)

விமர்சனம் செய்யும் நீங்கள் யார் என்றால்,,,??

அதாஉல்லா சேர்ந்து வேலை செய்கிறாரா அல்லது ஹக்கீம் அதாஉல்லாஹ்வின் உதவியை நாடி காரியங்கள் நடக்கின்றனவா என்ற நிதர்சன யதார்த்ததை கணிக்க முடியாத மலடுகள் நீங்கள்.

ஒரு அரசியல் இணைவு என்ன அது எந்த முறையில் எச்சந்தர்ப்பத்தில் இடம்பெறும் என்பதை தெரிந்தும் தெரியாமல் இருக்கும் குண்டுச் சட்டிகள் நீங்கள்.

தேர்தல் கூட்டனி என்றாலென்ன அது எந்த அடிப்படையில் என்ன நோக்கத்திற்காக இடம்பெறும்,‌அது காலத்தின் தேவையா இல்லையா என்பதை தெரிந்தும் தெரியாமல் இருக்கும் மந்தைகள் நீங்கள்.

மனித நேய ஒத்தாசைகளுக்கு ஒத்துப் போகாத இசைந்து போகாத பூனை எலி என கல்யாணக் கதையாடும் மடந்தைகள் நீங்கள்.

இயற்கை அழிவுகளில் இன்னல் படும் மக்களுக்கு கள விஜயம் சென்று கரம் நீட்டாமல் சொத்த புத்தகத்தில் செய்தி சொல்லும் பிச்சைக்காரர்கள் நீங்கள்.

அரசியல் Vs உதவி என்றால் என்ன‌ என்பதை பாகிஸ்தானுக்கு வான் கரம் நீட்டிய இந்தியாவிடம் கேளுங்கள். நிர்க்கதியில் வேறுபாடு பாகுபாடு மற்றும் உயிரைக் கூட பார்க்கக் கூடாது என்பதை உணர்த்திய செல்லப் பிராணி பிரியர்களிடம் கேளுங்கள். இவற்றை பிரித்தரியத் தெரியாக குருடர்கள் நீங்கள்.

கலந்து இணைதல் கறைந்து இணைதல் என்ற பகுத்தறிவை வகுக்கத் தெரியாத ஜாஹிலிய்யா நீங்கள்.

நிற்க;
ஏதோ ஒரு நோக்கத்தின் அடிப்படையில் முஸ்லிம் தலைமைகள் இணைந்த கூட்டனி எதிர்காலத்தில் அமையெப்பெற்றால்,‌ஆளும் தரப்பிற்கான ஆதரவுகள் இன்னும் அதிகரிக்கும் என்பதை அதாஉல்லா போன்ற கொள்கைவாதிகள் புரிந்திருப்பார்கள் என நினைத்து முற்றுப் பெறுகிறேன்.

ALM Athaullah
Rauff Hakeem
AL Thavam

08/12/2025

Scroll Down for English

அனர்த்த முகாமைத்துவம் (Disaster Management)

இலங்கை எனும் வளமிக்க நாடு, காலந்தோறும் இயற்கை மாற்றங்களால் உருவாகும் இடர்களை எதிர்கொண்டு வருகிறது. அண்மையில் ஏற்பட்ட Ditwah Cyclone போன்ற பேரிடர்கள், நாடு முழுவதும் அனர்த்த முகாமைத்துவத்தில் புதிய மாற்றங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட திட்டங்களை அவசியப்படுத்துகின்றன.
இத்தகைய இடர் நிலைகளில் ஒருங்கிணைந்த மற்றும் சீரான முகாமைத்துவம் உருவாகுவதற்காக சில பரிந்துரைகளைக் கீழ்வருமாறு முன்வைக்கிறேன்.

I. நிவாரண சேகரிப்பும் விநியோகமும்
(Relief Collection and Distribution)

• இடர் ஏற்படும் போது, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து பிரதேச செயலகங்கள் உத்தியோகபூர்வமாக அவசர பட்டியல் ஒன்றை வெளியிட வேண்டும்.

• அந்த தேவைகளின் அடிப்படையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பகுதிகளில் பணம் அல்லது பொருள் வடிவிலான நிவாரணங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

• ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்பட்ட நிவாரண நிலையங்கள் நிறுவப்பட்டு, அனைத்து நிவாரணங்களும் இந்நிலையங்கள் வழியாக மட்டுமே சேகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட வேண்டும். (பிரதேச செயலகங்கள் நேரடி தலையீடு செய்யக்கூடாது.)

• சேகரிக்கப்பட்ட நிவாரணங்கள், பாதிக்கப்பட்ட மக்களின் சேதாரங்களையும் அவசரத் தேவைகளையும் கருத்தில் கொண்டு விகிதாசாரமாக சரியான முறையில் வழங்கப்பட வேண்டும்.

• வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் அவசர நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட நிவாரணங்கள் அரச அமைப்புகள் வழியாக மட்டுமே அனுப்பப்படல் வேண்டும்.

• வெளிநாட்டு தூதரகங்களில் சேவைகளை நாடும் இலங்கையர்களிடமிருந்து “அனர்த்த நிவாரண நிதி” எனும் கட்டாய சிறு தொகை உண்டியல் முறையில் சேகரிக்கப்பட வேண்டும். இது அவசரநேர (Instant) நிதியாக பயன்படுத்தப்படலாம்.

• நாட்டின் அனைத்து பாதிக்கப்பட்ட பிராந்தியங்களுக்கும் சமமாகவும் தேவைக்கு ஏற்பவும் நிவாரணங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

• சேகரிக்கப்பட்ட நிவாரணங்கள் உரிய பயனாளர்களை சென்றடைந்ததா என்பதைப்பற்றி வாரந்தோறும் அறிக்கை மூலம் குறித்த நிலையத்தால் அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.

• ஊடகங்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு தரை ஆய்வுகள் செய்து உண்மை நிலையை சமூகமயமாக வெளிப்படுத்த வேண்டும்.

• மாவட்ட நிவாரண நிலையங்கள் அனைத்து சேகரிப்பு மற்றும் விநியோகம் தொடர்பான இறுதி அறிக்கைகளை பிரதேச செயலகங்கள் மூலமாக அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்; பின்னர் அவை மக்களிடம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

II. இடர் முகாமைத்துவ படையணி
(Disaster Management Force-DMF)
• இலங்கையில் முப்படைகளுக்கு அப்பால், தனித்துவமான இடர் முகாமைத்துவ படையணி (Disaster Management Force) ஒன்று நிறுவப்படல் வேண்டும்.

• இப்பிரிவிற்கு தேவையான நவீன கருவிகள், வாகனங்கள் மற்றும் பிற வளங்கள் பிரத்தியேகமாக ஒதுக்கப்படல் வேண்டும்.

• படையணி உறுப்பினர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இடர் முகாமைத்துவம் தொடர்பான பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும்.

• பாடசாலைகள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடர் முகாமைத்துவம் சார்ந்த அடிப்படை அறிவு மற்றும் பயிற்சிகள் சேர்க்கப்பட வேண்டும்.

• சிவில் அமைப்புகளில் மாவட்ட அடிப்படையில் இடர் முகாமைத்துவ பிரிவுகள் நிறுவப்பட வேண்டும்.

• இளைஞர் சேவை மன்றங்கள் வழியாக, பாதிக்கப்படாத பிராந்தியங்களிலிருந்து இளைஞர்களை அனர்த்த கால உதவி பணிகளில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். (பங்கேற்காத இளைஞர் கழகங்கள் பதிவு ரத்துச் செய்யப்படல் வேண்டும்.)

• இடர் நிலை முடிந்தபின், பாதிக்கப்பட்டவர்களுக்கு மன வெற்றிடத்தை சமாளிக்க சிறப்பு மன வலிமை பெறும் செயலமர்வுகள் நடத்தப்பட வேண்டும். (மத அமைப்புகளும் இதில் பங்கேற்கலாம்.)

• சுனாமிக்குப் பிறகு கடற்கரையில் வீடமைப்பு தடை செய்யப்பட்டதைப் போன்று, நிலச்சரிவு ஏற்படும் பிராந்தியங்களிலும் இதே போன்ற கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

• மத நிலையங்கள் மற்றும் பள்ளிகளை அவசர தங்குமிடங்களாக பயன்படுத்துவதைத் தவிர்க்க, ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் உட்பட்ட பிராந்தியங்களில் பிரத்தியேக அனர்த்த தற்காலிக தங்குமிடங்கள் நிரந்தரமாக அமைக்கப்பட வேண்டும்.

• நாட்டிற்குள் இருக்கும் சக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் உள்ளூராட்சி மன்றங்களின் வளங்களை இடர் நிலையின் போது பயன்படுத்த பரஸ்பர உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டும்.

• திடீர் அனர்த்தங்கள் ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து விரைவாக உதவி பெறுவதற்கான பரஸ்பர ஒப்பந்தங்கள் முன்னதாகவே கையெழுத்திடப்பட வேண்டும்.

முடிவுரை
இவ்வாறான நடவடிக்கைகள் எமது இலங்கை எனும் வளமான நாட்டில் நடைமுறைக்கு வந்தால், இனிமேல் நேரிடக்கூடிய இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கலாம்.

இந்தப் பரிந்துரைகள் (Recommendations) ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்படும்.அவர்கள் விரும்பிய பரிந்துரைகளை ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம்;ஆனால் ஒரு பொறுப்புள்ள இலங்கையனாக இதை முன்வைப்பது எனது கடமையாக நான் கருதுகிறேன்.

நீங்களும் விரும்பினால் உங்கள் ஆலோசனைகளை பின்னூட்டமாக வழங்கலாம்.உங்களுடைய மின்னஞ்சலும் cc-இல் இணைக்கப்படும்.

நன்றி
அபூ உக்காஷாஹ்
08.12.2025

Disaster Management

Sri Lanka, a resource-rich nation, continues to face recurring natural disasters such as the recent Ditwah Cyclone. These events highlight the urgent need for improved and strengthened disaster-management systems. The following recommendations aim to establish a more coordinated and efficient national response.

I. Relief Collection and Distribution

• Divisional Secretariats should publish official emergency needs lists immediately after a disaster.
• Relief—cash or goods—should be collected locally and internationally based on these needs.
• Each district should operate a dedicated Relief Centre to handle all collections and distributions. (Divisional authorities must not intervene directly.)
• Relief should be distributed proportionally based on actual damage and urgency.
• Sri Lankan embassies abroad must initiate emergency-relief efforts quickly and send all collected aid only through government channels.
• A compulsory “Disaster Relief Fund” (till box) contribution should be collected from Sri Lankans seeking services at foreign embassies, to serve as an instant emergency funding.
• Aid should be allocated fairly across all affected regions.
• Weekly reports must be submitted to the government to confirm whether relief reached the intended beneficiaries.
• Media should conduct ground assessments and report the actual situation to the public.
• Final district-level reports must be submitted to the government through Divisional Secretariats and made public.

II. Disaster Management Force (DMF)

• A dedicated Disaster Management Force should be established apart from the tri-forces.
• To allocate modern equipment, vehicles, and other resources specifically for this force.
• To provide specialized disaster-management training locally and internationally.
• To include basic disaster-management education and training in school and technical-college levels’ curriculum.
• To form district-level disaster-response units within civil organizations.
• Youth clubs in unaffected regions must participate in disaster-relief activities; non-participating clubs should lose their registration for a certain period.
• To conduct post-disaster mental-health programs to help victims recover; religious groups may participate.
• To enforce resettlement restrictions in landslide-prone areas, similar to post-tsunami coastal construction restrictions.
• To establish permanent emergency-shelter facilities in each region to avoid using temples, churches, mosques, and schools.
• To form mutual-aid agreements between local government bodies within Sri Lanka and those abroad to share resources during disasters.
• To sign pre-disaster international agreements (mutual) to ensure rapid foreign assistance when sudden emergencies occur.

Conclusion
Implementing these measures will help safeguard the lives of Sri Lankans during future natural disasters.
These recommendations will be formally submitted to the President and Prime Minister for consideration.

Whether accepted or rejected, presenting them is my responsibility as a concerned Sri Lankan citizen.

Suggestions from others are welcome and will be included (with your email) in the official correspondence.

Thank you,
Abu Uckashah
08.12.2025












30/05/2025

Welcome to a fashioned outlet specialized for kids wear....

Shuraif Ahamed

🔴Live: கல்முனை மாநகரில் புதியதோர் உதயம் Coco Bell திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி...
📅30.05.2025 🕰️4.30 PM

அதிகம் பகிருங்கள்

Photos from Ifan Anaas's post 02/01/2025

Hon. PM Harini Amarasuriya,
We appreciate your consideration and response with regard to the suggestion.

We shall be expecting your nonfictional and resilient initiation on this significant matter ASAP.

Moreover, you could refer to the recent posts below clarifying the justifications on our demand.

BR

Anura Kumara Dissanayake
Athambawa Athambawa
Dr Rizvie Salih
Muneer Mulaffar official

23/11/2024

அமைச்சரவை Vs இலங்கையன்

நான் இலங்கையன்?

ஆம், அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!!
இந்த இலங்கையன் என்பவன் இந்த நாட்டில் வாழும் பன்மைத்துவ (plurality) கலாசாரத்திற்குச் சொந்தமானவன்.
இந்த நாட்டை நேசிப்பவன், நாட்டுக்காக வாழ்பவன்.
அதன் அடிப்படையில், அவனாலான பங்களிப்பை அவன் சமூகம் சார்ந்த விடயங்களை இந்த நாட்டின் நற்பிறஜை என்ற அடிப்படையில் நாட்டை ஆளும் நாடாளுமன்றத்திற்கு தன் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்படுபவன். (நாடாளுமன்ற உறுப்பினர்)

முஸ்லிம் அமைச்சர் எனப் பிரிக்காதீர்?

இங்கே முஸ்லிம் தமிழ் சிங்களம் கிறித்தவ என்ற சொல்லாடலில் தங்கியிருப்பது தான் பிரச்சினையே.
அவ்வாறல்லாமல் வேறு நாடுகளைப் போன்று State Base or Territory Base or Provincial Base ஆக எமது நாட்டிலும் அரச உச்ச பொறுப்புக்கள் (Cabinet) வழங்கப்படுமாக இருந்தால் நாம் இன மத ரீதியான சொல்லாடலில் தங்கியிருந்து பேச வேண்டிய அல்லது விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என நினைக்கிறேன்.
ஆனால், பண்டைய யாப்பின் பிரகாரம் இன ரீதியான பங்கீட்டின் அடிப்படையில் அந்த சொல்லாடலில் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆதலால் அது இனத்துவமோ துவேசமோ ஆகாது.

முன்னாள் அமைச்சர்கள் எதைத் சாதித்தார்கள்?

இந்தக் கேள்வியை நான்கு விதமாகத் தொடுக்கலாம். அதில் இறுதி இரண்டோடும் உங்கள் மனசாட்சி பதில் கூறும்.

1. அவர்களால் முடியுமானவற்றைச் சாதித்தார்கள். (வரலாறுகள் சில சான்று)

2. அவர்களால் சாதிக்காமல் கை நழுவப்பட்ட வியங்ஙளும் உண்டு (அதற்காக இன்னும் அந்த அவையில் யாரும் தேவையில்லை என்று பொருளாகாது)

3. இந்த அரசில் அமைச்சரவையில் அங்கம் வகிக்க முடியாதவர்களாக (தகுதியில்லாத) முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என‌க் காணக்கிடைக்கிறது. (நியமிக்கப்பட்ட அனைவரும் துறை சார்ந்த வல்லுனர்களா அல்லது எந்த அடிப்படை நியமனம்)

அப்படியென்றால், ஒரு வேளை தகுதிகளைக் கொண்ட முஸ்லிம்கள் அதிகமாகவும், தகுதியிருந்தும்/இல்லாத பெரும்பான்மையினர் சொற்பமாகவும் அடங்கும் ஒரு அமைச்சரவை அமையெப்பெற்றிருந்தால் 'நான் இலங்கையன்' என்ற தோரணையில் பயணித்தருப்பார்களா அல்லது ஏனைய அரசியல் சிவில் அமைப்புகள் தான் விட்டிருக்குமா?

கவலையான விடயம் என்னவென்றால், அவ்வாறு தகுதி இல்லாதவர்களையா இந்த NPP கட்சி களமிறக்கியது? விடை தெரிந்து வினாத்தாள் அடிப்பது போன்றுள்ளதே!!

4. முன்னாள் அமைச்சர்கள் எதையும் சாதிக்கவில்லை என்று எண்ணுகின்ற நீங்கள் தானே புதிய முகங்கள் ஆனால், அரசியலுக்குப் பழைய முகங்கள் என தெரிவு செய்தீர்கள்? அவ்வாறென்றால், நீங்கள் இன்னும் பழையவர்களில் ஏதோ முடியுமானதை செய்தார்கள் என்று விட்டிருக்க முடியுமே? அதை விடுத்து இந்நாள் உறுப்பினர்களைத் தகுதி கண்டு நாம் அனுப்பி விட்டு முன்னாள்களோடு இவர்களையும் தொடுப்பது என்ன அரசியல் சானக்கிய அறிவு என்று புரியவில்லை!! இவர்கள் தகுதி என்றால் முன்னால்களோடு ஒப்பிட்டு இவர்களுக்கும் கொடுக்காமல் விட்டதை நியாயம் கற்பிப்பது அரசியலில் 'மந்தைப் போக்கு' என்று‌ தான் கூறுவார்கள்.

இறுதியாக,
எல்லோருக்கும் விளங்கும் வகையில் கெபினட் அவையின் முக்கியத்துவம் பற்றிய சில குறிப்புக்கள்.

தொகுதி ரீதியான தேர்தல் முறைமையில் இன விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்புரிமைகள் அமையப் பெற்று வந்திருக்கிறது. (மாவட்ட விகிதாசார முறைமை)

கெபினட்டில் பல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கும் அவற்றில் பலவை நாம் அறியாதிருப்போம், சிலவை நாம் அறிந்திருப்போம்.

a. சாய்ந்தமருது நகர‌ சபை வர்த்தமானி கெபினட் முடிவில் இடைநிறுத்தம் என அறிவித்தார்கள் .
அந்த கெபினட்டில் அந்த வர்த்தமானி வருவதற்குக் காரணமாக இருந்த உறுப்பினர் அமைச்சராக இருந்திருந்தால் அதன் சரியான விளக்கத்தை கொடுத்து அதனை தடுத்திருக்க முடியும் அல்லவோ? ( நடந்திருக்குமா இல்லையா என்பது வேறு வாதம்)

b. மலையக தமிழர்கள் இன்னும் ஓரங்கட்டப்படுவதற்கான காரணம் யாரும் அறிந்திருந்தால், இந்த அமைச்சரவையின் பெறுமதி புரிந்திருக்கும்.
1948-இல் இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்ட்டது.
இலங்கைச் சிங்கள மக்களின் பொருளாதார மேலாதிக்கத்தை காக்க இந்தியத் தமிழர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதற்கான கேபினட் முடிவு.
இன்றுவரை இது நீங்காத வடுவாக வந்து நிற்கிறது.

c. 2019 COVID சட்டமூலம் எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் (Chapter 222) என்ற கெபினட் முடிவை சட்டத்திற்கு அப்பால் சென்று பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் (அமைச்சரவை செயலில் இல்லாத காலம்) அன்றைய அமைச்சரால் எரிக்கத்தான் வேண்டும் எனக் கொண்டு வரப்பட்ட வர்த்தமானி.
இந்நிலையில் யாரோ ஒரு முஸ்லிம் அமைச்சராக அந்த அவையில் இருந்திருந்தால் அந்த அமைச்சரின் சட்டத்தை மீறிய வர்த்தமானி வந்திருக்குமா? இதனால் எவ்வளவோ இன்னல்களைக் கண்டவர்கள் நாங்கள் தானே!!

இவ்வாறு பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

ஒரு அரசை நம்புவது நம்பாமல் இருப்பதும், அவர்கள் அநியாயம் செய்யமாட்டார்கள் என்பதல்ல இங்கு விடயம்.
வரலாற்று நெடுகிலும் சமூக ரீதியான அந்தஸ்து உரிய அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பின்தங்கிய ஒரு சமூகத்தை உள்வாங்காமை எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அல்லவா அமைந்துவிடும்?
எதிர்காலத்தில் அவர்களும் இவ்வாறு உதாசீனமாக இருந்தால், நிலமை என்னவாகும்? (காலாதிகாலமாக NPP தான் இருக்கும் என்ற நியதியும் இல்லையே)

இந்த நாட்டை வழுவான பாதையில் கொண்டு வந்ததில் முஸ்லிம்களுக்கும் பாரிய பங்குள்ளது, தான் சார்ந்ந சமூகத்தின் ஆழந்த அறிவுள்ளவர்கள் என்ற அடிப்படையில், அவர்களை எவ்வகையிலேனும் அமைச்சரைவையில் உள் வாங்க உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும்.

இந்த வரலாற்றுத் தவறை செய்து விடாதீர்கள்!!

Anura Kumara Dissanayake
Dr Rizvie Salih
Muneer Mulaffar official

20/11/2024

இது NPP அரசிற்கான அல்லது முஸ்லிம்களுக்கான குமுறல் மாத்திரமல்ல.
எதிர்காலத்தில் எந்த ஒரு அரசும் எந்த சமூகத்திற்கும் இவ்வாறு பராமுகமாக இருக்கக் கூடாது என்பதுவே ஆதங்கம்.

(மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி என்பார்கள்)

சமீபத்திய தேசிய மக்கள் சக்தி (NPP) தலைமையிலான இலங்கை அமைச்சரவை நியமனத்தில், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த ஒருவரும் இல்லாதது மிகுந்த கவலையைக் கிளப்புகிறது.
கம்யூனிஸ்ட் கொள்கையின் முக்கிய அடிப்படையாகப் பங்கேற்கும் ஜனநாயகம் இருந்தாலும், இந்த கொள்கை இங்கு செயல்படாமல் போனது ஏன்? இந்நிலையில், பங்குபற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையை மீறியதாகக் காணப்படுகிறது.

அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் போன்ற பூர்வாதார அணுகுமுறைகளில் கூட பங்கேற்கும் ஜனநாயகம் இடம் பெறுகிறது. இவை ஒவ்வொரு சமூகத்திற்கும் சமத்துவமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும். இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் அமைச்சரவை இடமின்மை இலங்கையில் சமத்துவ ஜனநாயகத்தின் குற்றவாளியாகப் பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை என்பது முக்கிய தீர்மானங்களை எடுக்கும் ஒரு மையமாகும். அதில் சமூகம் சார்ந்த பிரதிநிதித்துவம் இல்லாவிட்டால், அங்கு பாராளுமன்ற விவாதங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, ஆட்சிப் பொறுப்புகளில் சமூகத்தின் பிரதிநிதிகளின் பங்கு இனக்குழுக்களின் உரிமைகளை ஆலோசிக்க உதவும்.

கடந்த காலங்களில் கியூபா போன்ற நாடுகளில் பங்கேற்கும் ஜனநாயகம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை போன்ற பல்லின சமூகங்கள் கொண்ட நாடுகளில் இது மிக அவசியமானது. அதைப் போன்று, இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் பங்கேற்பும் அதே அளவில் முக்கியமானது.

இது சமத்துவத்தை முன்வைக்கும் அரசியலமைப்பு கொள்கைகளின் தேவை என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது. தேசிய அளவில் ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டியது அரசின் கட்டாய பொறுப்பாகும். இல்லையெனில், இது பின்தங்கிய சமூகங்களை மேலும் புறக்கணிக்கக் காரணமாக இருக்கும்.

இதை கம்யூனிஸ்ட கொள்கையோ, தனியார் அரசியல் எண்ணமோ என கடந்து செல்ல முடியாது. இது நியாயமான சுயமரியாதையுடன் கூடிய ஜனநாயகத்தின் மீதான உரிமையாகும். அனைவருக்கும் சமமான இடத்தை வழங்கும் நேரம் இது.

Photos from Ifan Anaas's post 19/11/2024

இப்போதைய NPP அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனங்கள் முஸ்லிம் சமூகத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் ஒரு முஸ்லிம் அமைச்சரின் இல்லாமை தெரியும். இது, பங்கேற்கும் ஜனநாயகம் மற்றும் உண்மையான தேசியத்துவத்தின் முக்கியத்துவத்தை பற்றி சிந்திக்குமாறு தூண்டுகிறது.

#"பங்குபற்றல் ஜனநாயகம்" "participatory democracy" என்பது, அரசியல் மற்றும் சமூக நிர்வாகத்தில் மக்கள் நேரடியாக அல்லது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் செயலில் பங்குபெறுவதைக் குறிக்கிறது.

#இது ஒரு ஜனநாயக வடிவமாகும்.

#மக்கள் அரசின் முக்கிய முடிவுகள், சட்டங்கள் மற்றும் கொள்கை வரையறைகளில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகளைப் பெறுகிறார்கள்.

இலங்கையின் பன்மைத் தன்மையில் பல்வேறு இனங்கள், மதங்கள், மற்றும் பண்பாடுகள் ஒருங்கிணைந்திருந்தாலும், பங்கேற்கும் ஜனநாயகம் என்பது பிரதானம்.

#இது, அனைத்து சமூகங்களும், அவர்களின் அளவை பொருட்படுத்தாமல், நாடின் கொள்கைகளையும் முடிவுகளையும் வடிவமைப்பதில் பங்களிக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது.

#பிரதிநிதித்துவமின்றி, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் தேசிய முடிவெடுப்புகளில் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது.

"தேசியத்துவம்" "nationalism" என்றால் எந்த ஒரு குழுவையும் புறக்கணிக்கிறதல்ல. உண்மையான தேசியத்துவம் அனைவரையும் சேர்த்துக்கொண்டு, உள்ளடக்கத்தையும் சமத்துவத்தையும் நோக்கி செயல்படுவது ஆகும்.


#ஒரு முக்கியமான சமூகத்தின் பங்களிப்பை மறுக்குவதால் பிரிவு உணர்வுகளை உருவாக்கும் அபாயம் உள்ளது, இது ஒரு ஒன்றுபட்ட இலங்கையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறானது.

ஆகையால், இதனை மறுபரிசீலனை செய்து, முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒரு பிரதிநிதியை அமைச்சரவை நியமனத்தில் சேர்க்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். Anura Kumara Dissanayake

#பிரதிநிதித்துவம் என்பது வெறும் அரசியலின் பிரச்சினையல்ல; இது நியாயம், சமத்துவம் மற்றும் ஒவ்வொரு இலங்கையரும் நாட்டின் முன்னேற்ற பயணத்தில் ஒரு முக்கியப் பங்காக உள்ளனர் என்ற உணர்வை உறுதி செய்வது.

ஒவ்வொரு குரலும் முக்கியம் எனும் இலங்கைக்காக நாம் முயற்சி செய்ய வேண்டும்! 🇱🇰

05/12/2022

is not what you see
But
What you make others see

25/12/2021

உயிரோடு ஓர் மரணம்...
========================

ஆதியின் அன்புக் கட்டளை
வானவரின் கட்டாயக் கடமை
எம்மவரின் ஓர் ஒப்புதல்
மரணம் அது...

கண்கள் இமைக்காத நொடி கூட தோற்கும் மரணமிடத்தில்..
நீயும் நாங்களும் விதிவிலக்கல்ல நண்பா அஷ்பாக்...

இன்று உனக்கான தீர்ப்பு
நாளை யாரோ..

சதாவும் புன்னகை
சில்லறை போல் சிரிப்பு
சூறாவளி சுறுசுறுப்பு
அகிம்சை அடக்கம்-அஷ்பாக்
மறைந்தான் எம்மை விட்டு...

கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உன் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்து-நீ விண்நோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பாய்.

இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தாய்..
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..

என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்..

வார்த்தை தடுமாறுகின்றதே
இன்று கண்ட உனை நினைத்து
நெஞ்சம் உருமாறுகின்றதே!!
காந்தமாய் எமையீர்த்த உனை
வானவர் கவர்ந்து சென்றதேனோ?
காலமெல்லாம் உம் உறவு
நிலையாது எமைவிட்டு
சென்றதேனோ?
நாமே-இன்று
மங்காத உன் நினைவால்
மயங்கியே நிற்கின்றோம்.

மரணம் கூட மண்டியிடும் உன் மரணச் செய்தியில் குளமாகாத கண்களே இல்லை..

கவி எழுத கண்ணீர் குறுக்கே வடிகிறது நண்பா..
முடியவில்லை எங்களால் உன்னை இன்னொரு முறை "மச்சான்" என்றழைக்க..

அவசரமான உலகம் இது
அவசரமாய் அசர வைத்துவிட்டாய் எங்களை..
காலங்கள் கடந்தாலும்
நேசங்கள் நொந்தாலும்
என்றுமே மறவா பேரிழப்பு உன் பிரிவு...

நல்லவர் பெயர் விளங்கும் அவனியிலே
அன்பானவனே உன்
பெயரும் விளங்கும்!!

சுவர்க்கம் பார்க்க சென்றுவிட்டாய்-என்ற அரும் திருப்தியில் முற்றும்...

அல்லாஹ் உனக்கு உயர்ந்த சுவனத்தை சுவைக்கும் பெரும் பாக்கியம் தந்து
கப்ருடைய வேதனை சுவைக்காத அடியானாக உன்னை அவன் பொருந்திக் கொள்ள பிரார்த்திக்கிறோம்...

ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்...
🤲🏼 🤲🏼 🤲🏼

24.12.2021
2013 ZCK Batch on the demise of Brother Ashfaq Azhar..

Want your school to be the top-listed School/college in Riyadh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Riyadh