01/06/2026
Islamic Daily Reminders
அல் குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ் வழியில் முழு நேர இஸ்லாமிய ஊடகம்.
01/06/2026
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ
உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை;
( 2:163)
Friday Jumma khutba live telecast from Masjid Babaker galvihara Road Dehiwala
As Sheikh Asky Al Qami
Title: is sins are trivial or little value.
Date: 29th May 2026
Eid ul Adha Khutba and Salah from Masjid Babaker galvihara Road Dehiwala
Conducted by As Sheikh Aslam Shafie
28th May 2026
تقبل الله منا ومنكم صالح الأعمال والطاعات
26/05/2026
ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளுடன் தொடர்பு பட்ட சில சட்டங்கள்:
1- இரு பெருநாட்கள்:
நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்த நேரத்தில் மதீனா வாசிகள் இரு நாட்களில் விளையாடி மகிழ்வதைப் பார்த்து அல்லாஹ் இதை விட சிறந்த இரு நாட்களை உங்களுக்குப் பகரமாக ஆக்கியிருக்கின்றான் அவைதான் நோன்புப் பெருநாளும் ஹஜ்ஜுப் பெருநாளும். " எனக் கூறினார்கள் (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நஸாயி 1556).
2- பெருநாளுடைய நாட்களில் தக்பீர் கூறுதல்:
وَاذْكُرُوا اللّٰهَ فِىْٓ اَيَّامٍ مَّعْدُوْدٰتٍؕ
"குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்" (அல்குர்ஆன் 2: 203)
இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கமளிக்கும் போது துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய நாட்களையை இது குறிக்கும்.
كَذٰلِكَ سَخَّرَهَا لَـكُمْ لِتُكَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْؕ وَبَشِّرِ الْمُحْسِنِيْنَ
"அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!" (அல்குர்ஆன் 22: 37).
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பெண்கள் (தொழும் திடலுக்குச் சென்று) ஆண்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு ஆண்கள் தக்பீர் சொல்லும்போது அவர்களும் தக்பீர் சொல்வார்கள்; ஆண்கள் பிரார்த்திக்கும்போது அவர்களும் பிரார்த்திப்பார்கள். அந்த நாளின் அருள் வளத்தையும் (பாவத்) தூய்மையையும் எதிர்பார்ப்பார்கள்." புஹாரி 971) ஹதீஸின் ஒரு பகுதி.
மினாவில் தனது குப்பாவிலிருந்து மஸ்ஜிதிலுள்ளவர்கள் கேட்குமளவுக்கு உமர் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள், அதைத் தொடர்ந்து மஸ்ஜிதிலுள்ள, ஏனைய அனைத்து மக்களுகம் மினா அதிருமளவுக்கு தக்பீர் கூறுவாகாள். (புஹாரி)
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவுடைய நாட்களில் தொழுகைக்குப் பின், சபைகளில், தனது விரிப்பில் நடந்து செல்லும் போது தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள். (புஹாரி)
3- புத்தாடை அணிதல்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில் விற்பனை செய்யப் பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலைபேச முற்பட்டார்கள். அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் (அணிந்து) அலங்கரித்துக்கொள்ளலாமே!” என்று கூறினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ் வுலக) ஆடையாகும்” என்று கூறினார்கள். (புஹாரி 948).
4- ஈதுல் அழ்ஹா பெருநாள் தினத்தில் முதலில் செய்ய வேண்டியது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுவ தாகும். பிறகு திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்பதாகும். யார் (இதைச்) செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறி னார்கள். (புஹாரி 951).
5- பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதன் அவசியம்:
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பெருநாளன்று (பெண்களாகிய) நாங்கள் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் செல்ல வேண்டுமெனவும் திரையினுள் இருக்கும் குமரிப் பெண்களையும் புறப் படச் செய்ய வேண்டுமெனவும் கட்டளை யிடப்பட்டிருந்தோம். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைக்கூடப் புறப்படச் செய்ய வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டோம்." (புஹாரி 971) ஹதீஸின் ஒரு பகுதி.
6- மாதவிடாய்ப் பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது?:
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: "மாத விடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கிருப்பார்கள்” (புஹாரி 974) ஹதீஸின் ஒரு பகுதி.
உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களோ முஸ்லிம்கள் கூடும் இடங்களிலும் அவர் களின் பிரார்த்தனையிலும் கலந்துகொள் வார்கள். ஆனால், அவர்கள் தொழும் இடத்தி-ருந்து ஒதுங்கியிருப்பார்கள்." (புஹாரி 981) ஹதீஸின் ஒரு பகுதி.
7- திடலில் பெருநாள் தெழுகை:
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திறந்தவெளித் திடல் தொழுகை நடைபெறும்போது) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (தடுப்பாக) ஒரு ஈட்டி நட்டு வைக்கப்படும். பிறகு நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித்) தொழு வார்கள். புஹாரி 972).
8- பெருநாள் தொழுகைக்கு முன் பின் எந்தத் தொழுகையும் இல்லை:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் (பெருநாள் தொழுகை) தொழுதார்கள். அதற்கு முன்பும் எதையும் தொழவில்லை; அதற்குப் பின்பும் எதையும் தொழவில்லை. அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். (புஹாரி 989).
9- பெருநாள் தொழுகைக்கு பாங்கு, இகாமத் இல்லை:
நான் நபி (ஸல்) அவர்களுடன் பல தடவை பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டிருக்கின்றேன். அந்தத் தொழுகையில் அதான் (பாங்கு) , இகாமத் இருக்கவில்லை. என ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், முஸ்லிம் 887)
இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது: "(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பொருநாளிலோ பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை. (புஹாரி 960).
10- தொழுகைக்குப் பின் உரை:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்புப் பெருநாளிலும் (முதலில்) தொழுவார்கள். தொழுகையை முடித்தபிறகே உரை (குத்பா) நிகழ்த்துவார்கள்." (புஹாரி 957
11- பெண்களுக்குத் தனியான உரை:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்கள் (கூடுதலாக எதையும்) தொழ வில்லை. (உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து (அறிவுரை கூறினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித் தார்கள். உடனே பெண்கள் (தம்மிடம் இருந் ததை பிலால் அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும் தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர். (புஹாரி 964).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "நான் (சிறுவனாக இருந்தபோது) ‘நோன்புப் பெருநாளிலோ’ அல்லது ‘ஹஜ்ஜுப் பெருநாளிலோ’ நபி (ஸல்) அவர்களுடன் (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்; (மறுமை குறித்து) அவர்களுக்கு நினைவூட்டிப் பேசினார்கள்; தர்மம் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். (புஹாரி 975)
12- வேறு பாதைகளில் செல்வதும், வருவதும்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "பெருநாள் வந்துவிட்டால், நபி (ஸல்) அவர்கள் (ஒரு பாதையில் தொழும் திடலுக்குச் சென்றுவிட்டு) வேறு பாதையில் திரும்பி வருவார்கள்" புஹாரி 986).
13- மார்க்கம் அனுமதித்த முறையில் பெருநாளைக் கொண்டாடுதல்:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘மினா’வின் நாட்களில் என் அருகில் (அன்சாரிச்) சிறுமியர் இருவர் (சலங்கை யில்லா) கஞ்சிராக்களை அடித்து (புஆஸ் போர் பரணிகளைப் பாடி)க்கொண்டி ருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்தி(ப் படுத்து)க்கொண்டி ருந்தார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்து அவ்விருவரையும் அதட்டினார்கள்.
உடனே நபி (ஸல்) அவர்கள் தமது முகத்திலிருந்து ஆடையை விலக்கி, “அவ்விருவரையும் விட்டுவிடுங்கள், அபூபக்ரே! (அவர்கள் பாடட்டும்.) ஏனெனில், இவை பண்டிகை நாட்களாகும்” என்று கூறினார்கள். அந்த நாட்கள் (துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) ‘மினா’வின் நாட்களாக அமைந்திருந்தன. (புஹாரி 987)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக்கொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், “நீ (இவர்களு டைய வீர விளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித் தேன்.
உடனே நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பி யர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு பார்த்து) சலிப் புற்றுவிட்டபோது ‘போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள். (புஹாரி 950).
✍நட்புடன்
அஸ்ஹர் யூஸுப்ஃ ஸீலானி
2022/07/08
➖➖➖➖➖➖➖➖➖➖➖
#தந்தை - மகன் உறவு
#இப்றாஹீம் (அலை) அவர்கள் ஒரு மகனாக தனது தந்தையுடன் நடந்து கொண்ட விதம்
#இப்றாஹீம் (அலை) அவர்கள் தான் ஒரு தந்தையாக தனது மகனுடன் நடந்த விதம்..💖
#இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாறு என்பது சிறந்த குடும்ப உருவாக்கத்திற்கும் சிறந்த குடும்ப கட்டமைப்பிற்கும் ஒரு முழுமையான வழிகாட்டியாக இருக்கின்றது. அல்குர்ஆன் அவர்களின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களை தெளிவாக விளங்கப்படுத்துகின்றது..
பல தலைமுறைகளைக் கடந்து ஆன்மீக மற்றும் ஒழுக்க விழுமியங்களை எவ்வாறு கடத்த வேண்டும் என்பதற்கு அவர்களின் வாழ்வு மிகச்சிறந்த வாழ்வியல் இலக்கணமாகும்.
#தன் தந்தை ஆஸரிடம் அவர்கள் காட்டிய மரியாதையும் பொறுமையும், தன் மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் அவர்கள் கையாண்ட நட்புணர்வும் கலந்தாலோசனையும் இன்றைய பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான படிப்பினை பெற வேண்டிய பாடங்களாகும்.
ஒவ்வொருவரும் இத்தகைய உயர்ந்த குணங்களை தன்னகத்தே வளர்த்துகொள்வது நல்ல சமூக மாற்றத்திற்கான அத்திவாரமுமாகும்.
இந்த இருவேறு பரிமாணங்களும் பலதரப்பட்ட வாழ்க்கைப்பாடத்தை மனிதசமூகத்திற்கு விட்டுச் செல்கின்றது..
1. தந்தை ஆஸருடன் இப்றாஹீம் (அலை) நடந்துகொண்ட முறை மரியாதையும் மென்மையும்
இப்றாஹீம் (அலை) அவர்களின் தந்தை ஆஸர் ஒரு சிலை வணங்கியாகவும், சிலைகளை செதுக்குபவராகவும் இருந்தார். கொள்கையால் முற்றிலும் மாறுபட்டிருந்த நிலையிலும், தன் தந்தையிடம் பேசும் போது இப்றாஹீம் (அலை) அவர்கள் கையாண்ட சொற்பிரயோகங்கள் மிகச் சிறந்தவை..
(42-45):
إِذْ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ لِمَ تَعْبُدُ مَا لَا يَسْمَعُ وَلَا يُبْصِرُ وَلَا يُغْنِي عَنْكَ شَيْئًا * يَا أَبَتِ إِنِّي قَدْ جَاءَنِي مِنَ الْعِلْمِ مَا لَمْ يَأْتِكَ فَاتَّبِعْنِي أَهْدِكَ صِرَاطًا سَوِيًّا * يَا أَبَتِ لَا تَعْبُدِ الشَّيْطَانَ... * يَا أَبَتِ إِنِّي أَخَافُ أَنْ يَمَسَّكَ عَذَابٌ مِنَ الرَّحْمَنِ...
அவர் தம் தந்தையிடம்: " #என்அருமைத் தந்தையே! கேட்காத, பார்க்காத, உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத ஒன்றை ஏன் வணங்குகிறீர்கள்?
#என் அருமைத் தந்தையே! உங்களிடம் வராத கல்வி எனக்கும் வந்துள்ளது; எனவே என்னைப் பின்பற்றுங்கள்...
#என் அருமைத் தந்தையே!
ஷைத்தானை வணங்காதீர்கள்...
#என்அருமைத் தந்தையே! அளவற்ற அருளாளனின் வேதனை உங்களைத் தீண்டிவிடுமோ என நான் அஞ்சுகிறேன்" என்று கூறியபோது...
📌 #பேச்சு முறையின் சிறப்பம்சங்கள்..
இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இந்த வசனங்களின் கீழ் இப்றாஹீம் (அலை) அவர்களின் பேச்சு நயத்தை இவ்வாறு விவரிக்கிறார்கள்:
' #யாஅபதி' - என் அருமைத் தந்தையே! அரபு மொழியில் இச்சொல் மிகக் கூடுதலான அன்பையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு சொல்லாகும். தந்தை தன்னை விரட்டினாலும், அடிக்க வந்தாலும் அவர்கள் இந்த நயவார்த்தையை கைவிடவில்லை.
📌 #அதிகாரத் தோரணை இன்மை..
தன் தந்தையை விட தனக்கு நற்போதனை (வஹி) கிடைத்துவிட்டதைச் சொல்லும் போது கூட, " #நான் உங்களை விட அறிவாளி" என்று கூறாமல், "உங்களிடம் வராத ஒரு கல்வி எனக்குக் கிடைத்துள்ளது, அதனால் என் பின்னால் வாருங்கள்" என்று மென்மையாக அழைக்கிறார்கள்.
📌 #தந்தையின் மீதான அக்கறை.. தண்டனையைப் பற்றி எச்சரிக்கும் போது கூட, ' #அல்-ஜப்பார்' - #அடக்கியாள்பவன் என்ற அல்லாஹ்வின் பெயரை பயன்படுத்தாமல், ' #அர்-ரஹ்மான்' அளவற்ற அருளாளன் என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள்.
அதாவது, " #அளவற்ற அருளாளனாகிய இறைவனின் கோபத்திற்கு நீங்கள் ஆளாகிவிடக் கூடாதே" என்ற பிள்ளையின் ஏக்கத்தை அது காட்டுகிறது.
தந்தை ஆஸர் கோபமடைந்து,
قَالَ اَرَاغِبٌ اَنْتَ عَنْ اٰلِهَتِىْ يٰۤاِبْرٰهِيْمُ لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ لَاَرْجُمَنَّكَ وَاهْجُرْنِىْ مَلِيًّا
அதற்கு அவருடைய தந்தை கூறினார்: “இப்ராஹீமே! நீ என்னுடைய தெய்வங்களை நிராகரித்து விட்டாயா? இதனை நீ தவிர்த்துக் கொள்ளாவிடில் நிச்சயம் உன்னை நான் கல்லால் அடிப்பேன்; நீ என்றென்றும் என்னை விட்டுப் பிரிந்து போய்விடு!”
( 19:46)
என்று மிரட்டிய போதும், இப்றாஹீம் (அலை) அவர்களின் பதில் மிக அமைதியாக இருந்தது..
قَالَ سَلَامٌ عَلَيْكَ سَأَسْتَغْفِرُ لَكَ رَبِّي ۖ إِنَّهُ كَانَ بِي حَفِيًّا
" #உங்களுக்கு ஸலாம் (சாந்தி உண்டாகட்டும்)! என் இறைவனிடம் உங்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவேன்" என்று கூறினார்.
( 19:47)
2. #தன் மகன் இஸ்மாயில் (அலை) அவர்களுடன் நடந்துகொண்ட முறைமை.
கலந்தாலோசனையுடனும் தோழமையுடனும் மகனை அரவனைத்தார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் தன் மகனை வளர்த்த விதம், ஒரு தந்தை தன் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய சுயமரியாதையையும், கருத்துச் சுதந்திரத்தையும் தெளிவாக காட்டுகின்றது.!
#இறைவன் இப்றாஹீம் (அலை) அவர்களுக்குத் தன் மகனை அறுத்துப் பலியிடுமாறு கனவின் மூலம் கட்டளையிடுகிறான். இது ஒரு நபியின் கனவு என்பதால் அது 'வஹி' (இறைக்கட்டளை) ஆகும். நினைத்திருந்தால் தந்தை என்ற அதிகாரத்திலோ, இறைத்தூதர் என்ற அடிப்படையிலோ மகனைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அவர்கள் கையாண்ட முறை முற்றிலும் மாறுபட்டது.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِنْ شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
#அவர் (மகன்) அவருடன் நடமாடும் (விவேக) வயதை அடைந்தபோது, அவர் (இப்றாஹீம்) கூறினார்: " #என் அருமை மகனே! நான் உன்னை அறுத்துப் பலியிடுவதாகக் கனவில் கண்டேன். எனவே, இதைப் பற்றி நீ என்ன கருதுகிறாய் என்று சிந்தித்துக் கூறு!" அதற்கு அவர் (மகன்): " #என் அருமைத் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்; இன்ஷா அல்லாஹ், என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள்" என்று கூறினார்.
பேச்சு முறையின் சிறப்பம்சங்கள்
தப்ஸீர் அத்தபரி இப்னு கஸீர் -
' #யா புனைய்ய' - என் செல்ல மகனே அரபியில் இச்சொல் பிள்ளையின் மீது பொழியும் எல்லையற்ற பாசத்தின் வெளிப்பாடாகும்.
#فَانْظُرْ مَاذَا تَرَىٰ
" #உன் கருத்து என்னவென்று சிந்தித்துக் கூறு"
இந்த இடம் தான் நவீன உளவியலே வியக்கும் ஒரு வளர்ப்பு முறை.
இமாம் அத்தபரி (ரஹ்) தங்களின் தப்ஸீரில் குறிப்பிடுகிறார்கள்: " #இப்றாஹீம் (அலை) அவர்கள் இந்த விவகாரத்தை மகனிடம் கலந்தாலோசனை செய்ததன் நோக்கம், மகனைக் #கட்டாயப்படுத்துவதற்கல்ல; மாறாக, #அல்லாஹ்வின் கட்டளையை மகன் #மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதற்கான நன்மையை அவனும் முழுமையாகப் பெற வேண்டும் என்பதற்காகவே."
#சுயசிந்தனைக்கு மதிப்பளித்தல்
ஒரு இக்கட்டான, உயிர்போகும் சூழலிலும் பிள்ளையின் மனநிலைக்குத் தந்தை மதிப்பளிக்கிறார். இந்தத் தோழமையான அணுகுமுறைதான், அந்த மகனை ஒரு நொடியில் " #தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்" என்று அடிபணிய வைத்தது.
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் தங்களின் ' #துஹ்ஃபதுல் மவ்தூத்'
#تحفة المودود بأحكام المولود
எனும் நூலில் இப்றாஹீம் (அலை) அவர்களின் குழந்தை வளர்ப்பு முறையைச் சுட்டிக்காட்டி எழுதுகிறார்கள்..
📌 " பிள்ளைகள் ஓடியாடித் திரியும் விவேக வயதை - البلوغ / السعي
அடையும் போது, பெற்றோர்கள் அவர்களிடம் கட்டளைகளைத் திணிப்பவர்களாக இருக்கக் கூடாது. மாறாக, அவர்களது அறிவிற்கும் சிந்தனைக்கும் வேலை கொடுத்து, அன்பான உரையாடல்கள் மூலம் உண்மையை புரிய வைக்க வேண்டும். இப்றாஹீம் (அலை) அவர்கள் தன் மகனிடம் காட்டிய அந்த மென்மையான அணுகுமுறைதான், அந்த மகனை வரலாற்றில் மிகச்சிறந்த கீழ்ப்படிதலுள்ள மகனாக மாற்றியது."
"...அதன் பிறகு (நீண்ட இடைவெளிக்குப் பின்) இப்றாஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஜம்ஜம் கிணற்றுக்கு அருகிலிருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து, தமக்காக அம்பு சீவிக் கொண்டிருந்தார்கள். (தன் தந்தை) இப்றாஹீமைக் கண்டதும் இஸ்மாயீல் எழுந்து அவரை நோக்கி ஓடினார். நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட ஒரு தந்தையும் மகனும், மகனும் தந்தையும் (பாசத்தோடு) எவ்விதம் நடந்து கொள்வார்களோ அவ்வாறு இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டனர்.
பிறகு இப்றாஹீம் (அலை),
"இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு கட்டளையிட்டுள்ளான்" என்றார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை), "உங்கள் இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை அவ்வாறே நிறைவேற்றுங்கள்" என்றார்.
இப்றாஹீம் (அலை), "நீ எனக்கு அதற்கு உதவுவாயா?" என்று கேட்டார்கள். அதற்கு இஸ்மாயீல், "ஆம், நான் உங்களுக்கு உதவுகிறேன்" என்றார்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் சூழவிருந்த பகுதிகளை விட சற்றே உயர்ந்திருந்த ஒரு மேட்டைக் காட்டி, "இங்கே ஓர் ஆலயத்தை (கஃபாவை) எழுப்புமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்" என்றார்கள்.
அதன் பின், அவர்கள் இருவரும் அவ்வாலயத்தின் அடித்தளத்தை உயர்த்திக் கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) கற்களைக் கொண்டுவந்து கொடுக்க, இப்றாஹீம் (அலை) அதனை வாங்கி சுவரை எழுப்பினார்கள்..."
இப்றாஹீம் (அலை) அவர்கள், தான் ஒரு தந்தை என்ற அதிகாரத்தோடு "இங்கே வா, எனக்கு கல்லை எடுத்துக் கொடு" என்று கட்டளையிடவில்லை. மாறாக, மிக நயமாக "நீ எனக்கு அதற்கு உதவுவாயா?" - وتعينني؟ என்று மகனிடம் விருப்பத்தைக் கேட்கிறார்கள். மகனும் மிகுந்த உவப்போடு, ஒரு தோழனைப் போல் தன் தந்தையோடு இணைந்து அந்தப் பணியைச் செய்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவு இணக்கமாகவும், தோழமையாகவும் இருந்துள்ளது..
தந்தை மகன் உறவு இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பதறாகான வாழ்வியல் பாடத்தை மிக அழகாக எடுத்துகாட்டுகின்றது.!
#பூரணமான ஹிஜாப் முறைமை ஒரு பெண்னை அனைத்துவிதமான தீங்கில் இருந்தும் பாதுகாக்கின்றது..
#ஆடைக்குறைப்பு என்பது
சமூக சீர்கேட்டின்
ஒழுக்க சீர்கேட்டின்
பெண்ணின் சீரழிவிற்கும் அச்சாணியாய் அத்திவாரமாய் அமைந்து விடுகின்றது..!
#தலையை மட்டும் மறைத்தால் போதும் என்ற நிலையில் இப்போது ஹிஜாபிலும் ஏகப்பட்ட பல குறைப்புகள் நடந்து கொண்டே இருக்கின்றன..
#உண்மையில் ஹிஜாப் என்பது
வெறும் கலாச்சார ஆடையோ அல்லது விருப்பத்தின் அடிப்படையில் அணியும் ஒன்றோ அல்ல..
மாறாக அது உலகை படைத்து வழிநடாத்தும் அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட கட்டாயக் கடமை என்பதில் ஸலஃபுகள் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்டும. தங்களுடைய வெட்கத் தலங்களப் பாதுகாக் கட்டும்; தங்களடைய அழகை வெளியருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும்.
( 24:31)
📌 #ஹிஜாபின் நிபந்தனைகள்..
ஸலஃபுகளின் விளக்கங்களின்படி, ஒரு ஆடை முறையான ஹிஜாபாகக் கருதப்பட சில அடிப்படை விதிகள் உள்ளன. அவை வெறும் #தலைமுடியை மட்டும் மறைப்பதை குறிப்பதல்ல..
#முழு உடலையும் மறைத்தலே ஹிஜாபாகும்.
பெண் தனது அழகை அந்நிய ஆடவர்களிடமிருந்து முழுமையாக மறைக்க வேண்டும்.
( #முகம் மற்றும் முன் கைகளை மறைப்பது கட்டாயமா என்பதில் இமாம்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அவை மறைக்கப்படுவதுதான் ஆகச்சிறந்தது என்பதில் ஒருமித்த கருத்து இருந்தது).
#ஆடை தடிமனாக இருத்தல் வேண்டும் ..
உள்ளே இருக்கும் உடல் உறுப்புகள் வெளியில் தெரியாத அளவுக்கு ஆடை தடிமனாக இருக்க வேண்டும்.
மெல்லிய ஆடைகள் ஹிஜாபாகாது.
#ஆடை தளர்வாக இருத்தல் வேண்டும்.. உடலின் வடிவத்தை - Body shape அப்பட்டமாகக் காட்டும் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும்.
தலைமுடியை முடியை மாத்திரம் மறைத்து உடலின் மற்ற பகுதிகளின் அழகை காட்டி ஆடை அணிந்துவிட்டு " #இதற்கு பெயர் ஹிஜாப்" என்ற சிந்தனையை விதைப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும்.
ஹிஜாப் என்பது அல்லாஹ் நமக்களித்த பாதுகாப்பு கேடயம்...
அதனை அதற்குரிய முறையில் அணிய வேண்டும்..
அது குறித்த விளக்கத்தையும் அல்குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் வழங்க வேண்டும்.
அதனை விடுத்து #ஆடை சுதந்திரம் நமக்கானது" என்ற அடிப்படையில் ஹிஜாபிற்கு வரைவிலக்கணம் கொடுத்தால் ஹிஜாபிலும் ஆடைகுறைப்புதான் ஏற்படும்..
அதன் விளைவை இன்று தாரளமாக காணக்கூடியதாக உள்ளது..
நாம் அழகை மறைக்க அணியும் ஹிஜாபே ஒரு அலங்காரமாக இருக்கக் கூடாது..
ஆடவர் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அதிகப்படியான ஜொலிஜொலிப்பு அல்லது கவர்ச்சியான வண்ணங்களிலும் இருக்கக் கூடாது.
📌 #நறுமணம் பூசக் கூடாது..
வெளியில் செல்லும் போது அந்நிய ஆண்கள் கவரும் வகையில் வாசனைத் திரவியங்கள் பூசுவதை ஸலஃபுகள் வன்மையாகக் கண்டித்தனர்.
#அகம்சார்ந்த ஒழுக்கம்..
ஸலஃபுகள் வெளிப்புற ஆடைக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை அகத்தின் ஒழுக்கத்திற்கும் கொடுத்துள்ளனர்..
📌. #பார்வையைப் பேணுதல்.. ஆடைக்குறைப்பு எவ்வாறு தீங்கிற்கு வழிவகுக்குமோ, அதேபோல தேவையற்ற பார்வைகளும், அந்நிய ஆண்களுடன் குழைந்து பேசுவதும் பயபக்தியற்ற பேச்சு சமூகச் சீர்கேட்டின் அஸ்திவாரம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
📌. #கண்ணியம்..
ஹிஜாப் என்பது ஒரு பெண்ணைச் சிறைப்படுத்துவதற்கல்ல; மாறாக அவளைச் சமூகத்தின் தவறான பார்வைகளிலிருந்தும் தீங்குகளிலிருந்தும் பாதுகாத்து, அவளுக்கான உயர்ந்த மரியாதையை வழங்குவதற்கே கடமையாக்கப்பட்ட ஒன்றாகும்..
முறையான ஹிஜாப் பெண்களின் ஒழுக்கத்திற்கும் சமூகத்தின் தூய்மைக்கும் ஒரு கேடயமாகத் திகழ்கிறது என்பதே உண்மை.
#எனவே ஹிஜாப் குறித்து சரியான புரிதலை ஏற்படுத்தி பிழையான விளக்கங்களை தவிர்த்து
ஹிஜாபை அதற்குரிய முறையில் அணிவதன் மூலம் எமக்கான கண்ணியத்தை பாதுகாப்போம்..
#தலைமுடியை சீலைத்துண்டால்
மறைத்து விட்டு
இதுவும் " #ஹிஜாப்" தான் என்று நவீனத்துவ விளக்கங்கள் பேசுவதிலிருந்து
அல்லாஹ் நம்மனைவரையும் பாதுகாப்பானாக.!
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Al Sad
Doha