20/01/2024
உலக திருவள்ளுவர் தினம்
19/01/2024
கோலகங்சார் – ஜனவரி 19, சுங்கை பியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக திருவள்ளுவர் தினம் 2024, 1 கோலாகலமாக நடைபெற்றது. கோலகங்சார் மாவட்டத்தில் இயங்கி வரும் 12 தமிழ்ப்பள்ளிகளில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பள்ளிகளில் சவுக், சுங்கை பியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. ஒக்டைகர் குழுமத்தினரின் தத்துப்பள்ளியான இப்பள்ளியில் உலக அளவிலான திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது இதுவே மாவட்டத்திலேயே முதல் முயற்சியாகும். தமிழ்நாடு, சென்னை, குன்னூர் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, மலைவாழ் மகளிர் மேம்பாட்டுச் சங்கம், கோலகங்சார் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் இணைந்து நடத்தும் இந்த உலக திருவள்ளுவர் தினத்தில் பிரத்தியேகமாக திருவள்ளுவர் சித்திரப்படத்திற்கு வண்ணம் தீட்டும் போட்டி, திருவள்ளுவர் மாறுவேடப் போட்டி மற்றும் திருக்குறள் மனனப் போட்டி ஆகியவற்றில் மாவட்டத் தமிழ்ப்பள்ளி மாண்வர்கள் கலந்துகொண்டு வெற்றிபெற்றதோடு மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒக்டைகர் செயல் அலுவலர் மற்றும் அவரது குழுமத்தினர், நிகழ்வின் சிறப்பு விருந்தினர் மதிப்பிற்குரிய டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், மகப்பேரு மருத்துவ நிபுணர், மேலும் முன்னால் தலைமையாசிரியர்கள் போன்ற பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை அலங்கரித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிகோப்பைகள் வழங்கப்பட்டதோடு டாக்டர் அவர்களுக்குத் ‘திருக்குறள் சீலர்’ என்ற விருதும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.