25/01/2023
மலேசிய தமிழ் இலக்கியக் கழகம்
மலேசிய தமிழ் இலக்கியக் கழகம் 1970
தமிழ் தொன்மையான மொழி, இலக்கிய, இலக்கண வளம் நிறைந்த மொழி. உலக முதன் மொழி. இத்தகைய பழமையும் பெருமையும் வாய்ந்த தமிழ் மொழியைத் தமிழர் அனைவரும் முறையாகப் பயின்று புலமை மிக்கவராகத் திகழ வேண்டும் என்பது தமிழ் இலக்கியக் கழகத்தின் எதிர்பார்ப்பு.
25/01/2023
17/06/2017
13/06/2017
முன்னாள் மலேசிய வானொலி அறிவிப்பாளரும், கவிஞரும்,மைதீன் அசாங்கனியின் தம்பியுமான தமிழ்த்திரு.மைதீன் சுல்தான் காலமானார். அன்னாரின் குடும்பத்தினருக்கு மலேசிய தமிழ் இலக்கியக் கழகம் கழிபேரிரங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மணிமன்றம் அவரது தளம்.
தமிழ் இலக்கியம் அவரது களம்.
நல்ல பேச்சாளர்,
பண்பாளர்,
அனைவரிடத்தும் அன்பாகப் பழகக்கூடியவர்.
சகோதரர் மைதீன் சுல்தான்,
அவரின் மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.
08/06/2017
நோய் நீங்கி வாழனுமா??? #பழைய_சோறு சாப்பிடுங்கள்...!
08/06/2017
வீரன் செண்பகராமன் பிள்ளை
வீரன் செண்பகராமன் எனும் பெயரை முதல் உலக யுத்தத்தின் போது கேட்டவர்கள் இருக்கிறார்கள். சென்னைக்கு வந்த “எம்டன்” எனும் ஜெர்மானிய கப்பலில் இருந்து குண்டு வீசித் தாக்கிய செய்தியில் செண்பகராமன் பிள்ளையின் பெயர் அடிபடலாயிற்று. இவரைப் பற்றிய ஒரு சில நூல்கள் வெளியாகியுள்ளன. சிலம்புச் செல்வர் ம.பொ.சியின் தமிழரசுக் கழகத்தில் ஒரு தலைவராக இருந்த கவிஞர் வானம்பாடி அவர்கள் வீரன் செண்பகராமன் பற்றிய ஒரு நூலையும் எழுதியிருக்கிறார். கவிஞர் வானம்பாடி தஞ்சை காசுக்கடைத்தெருவில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு “வானம்பாடி அச்சகம்” என்ற ஒரு அச்சகம் வைத்திருந்தார். ஒரு வகையில் ம.பொ.சி. அவர்கள்தான் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றியும், வ.உ.சிதம்பரம் பிள்ளையை ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அடைமொழி சேர்த்து பெருமை சேர்த்த வகையிலும், மேலும் பற்பல சுதந்திரப் போர் புரிந்த பலர் வரலாறுகளையும் வெளிக் கொணரக் காரணமாக இருந்தார். அதோடு அரசாங்கமே செய்ய வேண்டிய ஒரு வேலையையும் தனிமனிதனாக அந்த தூய கதராடைத் தியாகி செய்து முடித்தார். அதுதான் “விடுதலைப் போரில் தமிழகம்” எனும் இரு நூல்களாகும்.
இனி வீரன் செண்பகராமன் பற்றி பார்ப்போம். இவர் வாழ்ந்த காலம் 1891 முதல் 1934 வரை. அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்துக்குட்பட்ட பகுதியில் “எட்டு வீட்டுப் பிள்ளைமார்” எனப்படும் சீர்மிகுந்த குடியில் பிறந்தவர். இவர் திருவனந்தபுரத்தில் வசித்த காலத்தில் அங்கு வசித்த ஒரு ஜெர்மானியர் இவருக்குப் பழக்கமானார். அவருடைய அழைப்பின் பேரில் இவர் 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தனது பதினேழாம் வயதில் தாய் நாட்டை விட்டுப் புறப்பட்டு ஜெர்மனிக்குச் சென்றார்.
அன்றைய ஜெர்மனியில் அதிபராக இருந்தவர் வில்லியம் கெய்சர் என்பவர். தன்னுடைய அறிவுத் திறனாலும், ஆற்றல்மிக்க செயல்பாடுகளாலும் அதிபர் கெய்சரை இவர் கவர்ந்தார். அங்கு சென்ற பின் இவர் பல மொழிகளைக் கற்றார்; புலமை பெற்றார்; பல பத்திரிகைகளையும் நடத்தினார். டாக்டர் பட்டமும் பெற்றார். அப்போது இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் நாட்டு சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய நேரம். இவரோ வேறு விதமாகத் திட்டமிட்டார். ஜெர்மனியின் உதவியோடு இந்தியாவை ஆட்சி புரியும் ஆங்கிலேயர்களின் மீது போர் தொடுத்து அவர்களை விரட்டிவிட்டு இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்ய எண்ணமிட்டார். அதன் பொருட்டு இந்தியர்களைக் கொண்ட ஒரு அமைப்பை ஜெர்மனியில் அமைத்தார். அதன் பெயர் “Indian National Volunteers”. இவர்தான் முதன் முதலில் தாய்நாட்டை வணங்க “ஜெய் ஹிந்த்” எனும் கோஷத்தை உருவாக்கி முழங்கினார். இவரது அடிச்சுவட்டில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை அமைக்கவும், இவரது “ஜெய்ஹிந்த்” கோஷத்தை முழக்கமிடவும் தொடங்கினார்.
1914 தொடங்கி முதல் உலக மகா யுத்தம் நடைபெற்றது. உலகக் கடல் பகுதியெங்கும் ஜெர்மானியப் போர் கப்பல்கள் உலவிவந்தன. ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரின் கப்பல்களை உடைத்தெறியத் தொடங்கின. அப்படிப்பட்டதொரு கப்பல் “எம்டன்” எனும் பெயரில் சென்னை கடற்கரைக்கு வந்து சென்னை மீது குண்டுகளை வீசியது. இப்போதைய உயர்நீதி மன்ற வளாகத்தில்கூட ஒரு குண்டு விழுந்தது. அந்த கப்பலில் தலைமை இன்ஜினீயராக வந்தவர் செண்பகராமன் பிள்ளை. இவரைப் பற்றி கவிஞர் வானம்பாடி தனது நூலில் குறிப்பிடும் செய்தி:-
“யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் யுத்த கேந்திரத்தின் மீது விமானத்தில் பறந்து பிரிட்டிஷ் பட்டாளத்தில் இருந்த இந்திய சிப்பாய்களின் மத்தியில் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வீசி, பிரிட்டனுக்கு எதிராக அவர்களது துப்பாகி முனைகளைத் திருப்புமாறு கோரினார். ஜெர்மனியிடம் பிடிபட்ட ஆயிரக்கணக்கான இந்திய யுத்தக் கைதிகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தார்.”
“மெஸபடோமியா யுத்த கேந்திரத்தில் போராடிய சுதேசி இராணுவத்தைக் கொண்டு சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவிற்கு வரும் பிரிட்டிஷ் சப்ளைகளைத் துண்டித்து, மூன்று கடல்களிலும் முற்றுகையிட்டு உள்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் விடுதலைப் புரட்சிக்கு உதவி செய்வதன் மூலம் பிரிட்டனை செயலற்றதாக்கி, காபூலில் அமைத்த சுதந்திர அரசாங்கத்தை டில்லிக்கு மாற்றத் திட்டமிட்டிருந்தார்”
இவர் ஜெர்மனியில் இருந்த காலத்தில் இவரைப் பல இந்தியத் தலைவர்கள், குறிப்பாக மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் சந்தித்தனர். கெய்சர் அதிபராக இருந்த வரை வீரன் செண்பகராமன் பிள்ளைக்கு ஒரு தொல்லையுமில்லை. முதல் யுத்தத்துக்குப் பிறகு அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக ஆனபின்பு இவருக்குப் பல தொல்லைகள் விளைவதாயின. ஹிட்லர் இந்தியாவையும் இந்தியர்களையும் கேவலமாகப் பேசப்போக, அதனை வன்மையாகக் கண்டித்த செண்பகராமன் அவனை மன்னிப்பு கேட்க வைத்தார். விடுவான வஞ்சனையின் வடிவமான ஹிட்லர். இந்த இந்திய வீரனுக்குக் குழி பறிக்கத் தொடங்கினான். அதன் விளைவு 1936இல் வீரன் செண்பகராமன் மரணத்தைத் தழுவினார்.
செண்பகராமன் ரஷ்யாவுக்கும் சென்றார். அங்கு புதிய ரஷ்யாவை உருவாக்கிய லெனினைச் சந்தித்தார். இது குறித்து ஷவுகத் உஸ்மானி என்பார் எழுதியுள்ள ஆங்கில கட்டுரையின் சில பகுதிகள் இதோ:
“There were two other outstanding personalities who belonged to no group. They were Dr.Tarakanath Das and Dr.Chenbagaraman Pillai. The ashes of this renowned South Indian leader, Pillai, were very recently carried to their last resting place by the Indian Cruiser INS Delhi. This was indeed in fulfilment of a revolutionaries vow. As Free Press Journal of Bombay (Sep.12, 1966) put it, ” In early 1930’s Dr.Pillai incurred the wrath of Hi**er whose ominous rumblings were just beginning to be heard. In May 1934, Pillai died of suspected slow poisoning. His body was cremated in Berlin.”
அந்த மும்பை பத்திரிகை செண்பகராமன் பிள்ளையின் சபதம் என்ன என்பதையும் குறிப்பிடுகிறது. அது:-
“It was some years after the war (I World War of 1914-18) that he made a vow that he would one day return to the land of his birth in a powerful battleship flying the flag of the Indian Republic.”
1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னும் செண்பகராமன் பிள்ளையின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டு வர முடியவில்லை. அவருடைய மனைவி, மணிப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் அவரும் அலையாய் அலைந்தார் இதற்காக. இறுதியில் ஒரு நாள் அவரது மனோரதம் நிறைவேறியது. அந்த மாவீரனின் அஸ்தி இந்திய மண்ணில் ஐக்கியமானது. வாழ்க வீரன் செண்பகராமன் புகழ்!
08/06/2017
இர.ந. வீரப்பனார் பிறந்தநாள் இன்று (சூன் 8)
மலேசியத் தமிழ் அறிஞர், எழுத்தாளர், ஆசிரியர்.
1930 - 87 ஆண்டுகளுக்கு முன் - ஞாயிறு
உலகத் தமிழர் மேம்பாட்டுக்காக தன்னை உரித்தாக்கிக் கொண்டவர்.
இலங்கையில் பிறந்தவர். அங்கிருந்து தமிழகத்துக்கு புலம்பெயர்ந்து பின்னர் மலேசியாவில் குடியேறியவர். மலேசியாவை தாய்நாடாக மதித்தவர். தமிழ்ப்பள்ளி ஆசிரியர்.
‘உலகத்தமிழர் குரல்’ என்ற மாதிகை சிற்றிதழை வெளியிட்டு வந்தார். மலாய் தமிழ் ஆங்கில அகரமுதலி, மலேசியத் தமிழர்கள், உலகத் தமிழர், இலக்கிய இதயம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
சிறுகதை, ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆய்வுப் பணிகள், இலக்கிய நாடகம் நடத்துதல், மொழிப் போராட்டம், உலகளாவிய தமிழ்ப் பண்பாட்டுத் தொடர்புகள் என பல துறைகளில் தொண்டாற்றியவர்.
43 நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள தமிழர்களோடு தொடர்பு கொண்டு, ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார். 33 நூல்களை எழுதி வெளியிட்டு மலேசியத் தமிழர்களுக்கு பெருமை தேடிக் கொடுத்தார்.
40 நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழ் உயர்வுக்காக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தை தோற்றுவித்து, அதன் தலைவராக 25 ஆண்டுகாலம் இருந்து தொண்டாற்றினார். உலகத் தமிழர் - மலேசியத் தமிழர்கள் இடையே நல்ல அறிமுகத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தியவர்.
தமிழ் மண், இனம், மொழி, பண்பாடு காக்கப்பட வேண்டும் என்று காலமெல்லாம் முழங்கியதோடு அதற்குரிய பயன்மிகு பணிகளையும் மேற்கொண்டவர். மலேசியத் தமிழரின் நிலையை புள்ளி விளக்கங்கள், வரலாற்று எடுத்துக்காட்டுகளோடு தொகுத்து இவர் எழுதிய ‘மலேசியத் தமிழர்கள்’ என்ற புத்தகம் மிகவும் புகழ்மிக்கது.
பெண்மையைப் போற்றுதலே தமிழர் மரபு என்பதை வலியுறுத்திய இவர், தன் பெயருக்கு முன்னால், முதலில் தாயின் பெயரையும் (இரத்தினம்), பின்னர் தந்தையின் பெயரையும் (நடேசன்) முதலெழுத்துகளாக இணைத்துக் கொண்டார்.
தன் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டியதோடு அவர்களுக்குத் தமிழ் உணர்வையும் ஊட்டி வளர்த்தவர். இவரது மகள் வீ.முல்லை, சிறந்த எழுத்தாளராக, தமிழ்ச் சிந்தனையாளராக தமிழ்ப் பணி ஆற்றிவருகிறார்.
இவர் தொடங்கிய *மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தமிழ் இலக்கியக் கழகம்* ஆகிய அமைப்புகள், தமிழுக்கு பயன்மிகு பணிகளை இன்றும் அமைதியாக செய்துவருகிறது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உலகத் தமிழர் என்று போற்றப்பட்டவரும், புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றி பல ஆய்வு நூல்களை எழுதியவருமான இர.ந. வீரப்பனார் 69 அகவையில் (1999) மறைந்தார்.
உலகத்தின் மூத்த மொழிதான்
உலகத்தின் மூத்த குடிதான்
உலகத்தில் எங்கள் மொழிதான்
சங்கத் தமிழ்தான்...!
02/06/2017
#கவிகோ_அப்துல்_ரகுமான் இன்று 2 சூன் 2017 சென்னையில் காலாமானார். அப்துல் ரகுமான், நவம்பர் 9, 1937 ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kuala Lumpur
58000