Velanai Central College

Velanai Central College It was established in 1945 under the scheme “A Government Central College for each Electorate”

It was established in 1945 under the scheme “A Government Central College for each Electorate” introduced by the father of free education
Dr.C.W.W.Kannangara, then Minister of Education. In accordance with the scheme, Sir Waithilingam Duraiswamy, then speaker of parliament had chosen Velanai to establish the Government Central College for Kayts electorate. Initially, the college was housed in a

large cottage with partition, built in a private land adjoining to Saiva Pirahasa Vidyasalai. The students who came on scholarship from outside the main Islands and other places were housed in two houses, one for boys and the other for girls. Subsequently, a concrete building was constructed in the premises of Saiva Pirahasa Vidyasalai. On the request of Sir Waithialingam Duraiswamy, the College was officially declared opened by the Minister of Education in 1947. The foundation stone for the present building was laid down by Lord Soulbury, the first Governor General of Ceylon in 1952 and dedicated to the public by Sir John Kotalawela, the Prime Minister of Ceylon in 1954. Further, many wings of the building were constructed from time to time. Student hostels for boys and girls were also built simultaneously with the main building.

பவள விழா தொடர்பான கலந்துரையாடலின் அறிக்கை
14/03/2020

பவள விழா தொடர்பான கலந்துரையாடலின் அறிக்கை

கனடாவின் வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது
14/03/2020

கனடாவின் வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம்
பிற்போடப்பட்டுள்ளது

மிக அவசரமான, மிகவும் தீவிரமான, முக்கியமான தகவல் கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது என்று  பொதும...
12/03/2020

மிக அவசரமான, மிகவும் தீவிரமான, முக்கியமான தகவல்

கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது என்று பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சின் அவசர அறிவிப்பு பொதுமக்களுக்கு. நீங்கள் பாதிக்கப்பட்டால் எந்த சிகிச்சையும் இல்லை.
இது சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவுகிறது. இப்பொழுது பல நாடுகளுக்கு பரவியுள்ளது.

* தடுப்பு முறை உங்கள் தொண்டையில் ஈரப்பதமாக இருப்பது, உங்கள் தொண்டை வறண்டு போக விடாதீர்கள். தாகத்தைத் தாங்கிக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்கள் தொண்டையில் உள்ள சவ்வு காய்ந்தவுடன், வைரஸ் 10 நிமிடங்களுக்குள் உங்கள் உடலில் படையெடுக்கும்.

* வயதுக்கு ஏற்ப 50-80 சிசி வெதுவெதுப்பான நீரை, குழந்தைகளுக்கு 30-50 சிசி குடிக்கவும். ஒவ்வொரு முறையும் உங்கள் தொண்டை வறண்டு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், காத்திருக்க வேண்டாம், தண்ணீரை கையில் வைத்திருங்கள், பருகுங்கள், தொண்டையை ஈரப்பதமாக தொடரவும்.

* மார்ச் 2020 இறுதி வரை, நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம், குறிப்பாக ரயில் அல்லது பொதுப் போக்குவரத்தில் தேவைக்கேற்ப முகமூடி அணியவேண்டும்.. வறுத்த அல்லது காரமான உணவைத் தவிர்த்து, வைட்டமின் சி ஏற்றவும்.

அறிகுறிகள் / விளக்கம்
1. மீண்டும் மீண்டும் அதிக காய்ச்சல்
2. காய்ச்சலுக்குப் பிறகு நீடித்த இருமல்
3. குழந்தைகள் சுலபமாக பாதிக்கப்படுகின்றனர்.
4. பெரியவர்களுக்கு, தலைவலி மற்றும் முக்கியமாக சுவாச பிரச்சினை சம்பந்தப்பட்டதாக உணர்வீர்கள்
5: அதிக தொற்று

நீங்கள் மனிதர்களை நேசித்தால் தயவுசெய்து பகிரவும்!!

வேலணை மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு பவளவிழா தொடர்பானது.வேலணை மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு பவளவிழா தொடர்பான பழைய மாணவர...
08/03/2020

வேலணை மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு பவளவிழா தொடர்பானது.

வேலணை மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு பவளவிழா தொடர்பான பழைய மாணவர்களுடனான கலந்துரையாடலும் குழுக்கள் அமைத்தலும்

வேலணை மத்திய கல்லூரியின் பவளவிழாவானது இவ்வருடம் நடைபெற உள்ளமையால் அதன் முன்னோடியாக பழைய மாணவர்களின் கலந்துரையாடலானது இன்று 08/03/2020 காலை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் கல்லூரியின் முதல்வருமான திரு சிவசாமி கிருபாகரன் அவர்களின் தலமையில் நடைபெற்றது.
இதில் பவள விழாவினை நினைவுபடுத்தும் முகமாகவும் மாணவர்களின் கற்றல் செயல்ப்பாட்டிற்கு முக்கியமானதும் தேவையானதுமான வகுப்பறைக்கட்டடத் தொகுதி அமைப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.இத்துடன் அப்பெரும் பணிக்காக நிதிசேகரிப்பு செய்வது தொடர்பாகவும் வரலாற்று தொகுப்பை ஆவணப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் நாலு குழுக்கள் அமைக்கப்பட்டன
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரினது கருத்துக்களும் கேட்கப்பட்டது.

மேலும் இக் கலந்துரையாடலில் பழைய மாணவர்களுடன் புலம் பெயர் தேசத்திலுள்ள பிரான்ஸ் கிளையின் தலைவர் செ.ஸ்ரீபாஸ்கரன் அவர்களும் அதன் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டதுடன் கல்லூரியின் முன்னைநாள் முதல்வர் அருணகிரிநாதன் அவர்கள் மற்றும் முன்னைநாள் உப அதிபர்கள் சிலரும் பழைய மாணவர்களான பொறியியலாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இறுதியில் உலகெங்கும் உள்ள அனைத்து பழைய மாணவர்களையும் ஒன்றாக்கி அவர்களின் உதவிகளைப் பெற்று பவளவிழா ஆண்டு நிகழ்வை வெகு சிறப்பாக நடாத்துவதுடன் பாடசாலையின் 75ம் வருடத்தை நினைவுபடுத்தும் முகமாக இலங்கையில் அஞ்சல் முத்திரை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும்.தீர்மானிக்கப்பட்டது.

அன்பான பழைய மாணவ உறவுகளே
கல்லூரியின் வரலாறு அல்லது கல்லூரி தொடர்பான விடையங்களை ஆவணப்படுத்தும் உன்னத கைங்காரியத்தை இப்பவளவிழாவை முனனிட்டு செயல்படுத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .எனவே உங்களிடம் கல்லூரி தொடர்பான வெளியீடுகள் நூல்கள் கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் ஏதும் இருப்பின் அதனை தந்துதவினால் ஆவணப்படுத்தலுக்கு உதவியாக இருக்கும் .மேலும் ஏதும் வரலாற்று சம்பவங்கள் மற்றும் சாதனைகள் தெரிந்திருந்தால் அதனை ஆவணப்படுத்தல் குழுவுக்கு தெரியப்படுத்தினால் பெரும் உதவியாக இருக்கும்.மற்றும் இக்கல்லூரியின் ஆரம்ப காலத்து பழைய மாணவர்கள் யாராவது இருந்தாலோ அல்லது அவர்களைத் யாருக்காவது தெரிந்திருந்தாலோ அறியத்தாருங்கள். என வேண்டுகின்றோம்.
மேலும் புலம்பெயர் தேசங்களிலுள்ளவர்கள் உங்கள் உங்கள் நாடுகளிலுள்ள பழைய மாணவர் சங்கங்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பகிர்ந்து கொள்ளூங்கள்.

மேலும் ஐரோப்பிய தேசங்களிலுள்ள (பிரித்தானியா தவிர்ந்த ) பழைய மாணவர்கள் மற்றும் முன்னைநாள் ஆசிரிய பெருந்தகைகள் பிரான்ஸ் பழைய மாணவர்சங்கத்தின் தலைவர் திரு.செல்லத்துரை ஸ்ரீபாஸ்கரன் அவர்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.
காலத்தின் தேவையையுணர்ந்து இப்பாரிய வேலைத்திட்டத்தில் பங்குதரராகுங்கள்.

தொடர்புகளுக்கு
♥கடித மூலமான தொடர்புகளுக்கு♥
தலைவர்
பவளவிழா பணிக்குழு அலுவலகம்
யாழ்/வேலணை மத்திய கல்லூரி
வேலணை.

♦தொலைபேசி மற்றும் ஏனைய மூலமான தொடர்புகளுக்கு ♦
திரு சி. கிருபாகரன் (தலைவர்)
♪♦0094774242591
viber
♪♦0094774242591

நன்றி
கல்லூரி சமூகம்
வேலணை மத்திய கல்லூரி

வேலணை மத்திய கல்லூரியின் பவள விழா தொடர்பான கந்துரையாடல்வேலணை மத்திய கல்லூரியின் பவள விழா ஆயத்தம்  தொடர்பான கந்துரையாடலான...
05/03/2020

வேலணை மத்திய கல்லூரியின் பவள விழா தொடர்பான கந்துரையாடல்

வேலணை மத்திய கல்லூரியின் பவள விழா ஆயத்தம் தொடர்பான கந்துரையாடலானது இன்று மதியம் 12.30 மணிக்கு கல்லூரி முதல்வர் தலமையில் நடைபெற்றது.
இதில் வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளும் அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டதுடன் பிரான்ஸ் நாட்டின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

அனைத்து பழைய மாணவர்களின் கவனத்திற்கும்
05/03/2020

அனைத்து பழைய மாணவர்களின் கவனத்திற்கும்

05/03/2020
07/02/2020

வேலணை கிழக்கு உறவுகளுக்குஅவசர அறிவித்தலும் வேண்டுகோளும்.

அன்புடன் வேலணை கிழக்கு உறவுகளே வணக்கம்.
வேலணை கிழக்கு அம்மன் கோவிலடியில் உள்ள 3ம் 4ம் வட்டாரங்களில் குடியிருப்பிற்காக வழங்கிய குடியேற்ற திட்ட காணிகள்பற்றியது.
பாரிய இடம்பெயர்வின் காரணமாக 1990ம்ஆண்டின் பின்னர் வேலணை கிழக்கு பகுதியிலுள்ள மக்கள் ஊரோட இடம்பெயர்ந்து வெளியேறியதுடன் அவர்களின் பலர் வெளிநாடுகளில் குடும்பங்களுடன் புலம்பெயர்ந்து வசிக்கின்றனர்.சிலர் இலங்கையின் பல பாகங்களிலும் குடியேறி வசிக்கின்றனர்.
சிலர் மரணித்துவிட்டனர்.

இதனால் பராமரிப்பின்றி பல வீடுகள் அழிவுற்ற நிலையிலும் தென்னை மரங்கள் அழிவுறும் நிலையிலும் காணிகள் புதர்மண்டி பராமரிப்பற்ற நிலையிலும் காணப்படுவதனாலும் நீண்ட காலமாக பலர் மீண்டும்இங்குவந்து குடியேறாமல் இருப்பதாலும் இக் காணிகளை அரசாங்கம் மீளஅரசுடமையாக்கி இக்காணிகளை காணியற்றவர்களுக்கு மீண்டும் காணிஅற்றவர்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் வேலணை பிரதேச செயலகம் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
எனவே உங்களின் பெயரிலுள்ள குடியேற்றக்காணிகள் அதிகமானவை காணி உறுதியற்ற அரச அனுமதிப்பத்திரங்களைக் கொண்டவையாகும்.எனவே அக்காணிகளை பெற்ற உரித்துடையவர்கள் அல்லது உரிமையாளர்கள் குடியிருக்காமல் அல்லது பயன்படுத்தாமல் இருந்தால் அக்காணிகளை மீளவும் பெறும் அதிகாரம் அரசங்கத்துக்கு உள்ளது.
எனவே தங்கள் தங்கள் காணிகளை துப்பரவு செய்து வேலிகளை அடைத்து பராமரிக்குமாறு கேட்கப்படுகின்றீர்கள். உடனடியாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாது விட்டால் உங்கள் நிலங்கள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட வாய்ப்புண்டு.மேலதிக விபரங்களைப்பெற்றுக்கொள்ள தேவி கோட்டம் அபிவிருத்தி சங்கத்தினருடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்.

குறிப்பு." இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

27/01/2020

2019-nCoV outbreak of novel coronavirus. Novel coronavirus, denoted 2019-nCoV by the WHO and also known as Wuhan coronavirus, Wuhan flu, Wuhan seafood market...

கண்ணீர் அஞ்சலி அமரர் திருநாமம்  அவர்கள்மண்டதீவைச்  சேர்ந்த  திருநாமம் அவர்கள்நேற்றைய தினம் 03/11/2019 சுகயீனம் காரணமாக ச...
05/11/2019

கண்ணீர் அஞ்சலி
அமரர் திருநாமம் அவர்கள்
மண்டதீவைச் சேர்ந்த திருநாமம் அவர்கள்நேற்றைய தினம் 03/11/2019 சுகயீனம் காரணமாக சாவடைந்துள்ளார்.
அன்னார் வேலணை மத்திய கல்லூரியின் விஞ்ஞான ஆய்வுகூடத்தின் உதவியாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்று தனது சகோதரியுடன் இறுதிக்காலம் வரைக்கும் மண்டதீவில் வாழ்ந்து வந்தவர் .
அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுவதுடன் .அன்னாரின் இழப்பால் துயருற்று இருக்கும் குடும்பந்தின் துயரிலும் பங்கெடுக்கின்றோம்....
கல்லூரி சமூகம்

Address

Velanai
4004

Alerts

Be the first to know and let us send you an email when Velanai Central College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category