08/09/2021
VIDEO OUT NOW🔥👇👇👇
𝗟𝗶𝗸𝗲, 𝗦𝗵𝗮𝗿𝗲 & 𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲💖
OC Wi-Fi | Comedy | Ahamed Bhai | Jzero
Copyright content | JzeroTikTok fame Ahamed bhai, Who known as Ashwin bhai in social media,He did the main role of this short film,We thanking all who help a...
31/08/2021
MOVIE OUT NOW...(with subtitles👈👈👈)
Watch & Subscribe the YouTube channel ❤
Pudhayal Short Film | Ahamed Bhai | Jzero
Copyright content | JzeroSincere thanks to Mr. HNM. JAREEK (Jzero Production head) & Mr. AR. ARFEES (Creative head) who delivered dubbing to part of this...
26/06/2021
https://youtube.com/channel/UCMyjbfhDm1AmD8k_k1A3MTA
👆👆👆👆❤
Nagitimu SriLanka
Nagitimu SriLanka | எழுகதாய்நாடு | නැගිටිමු ශ්රී ලංකා𝐋𝐞𝐭'𝐬 𝐟𝐢𝐠𝐡𝐭 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐨𝐮𝐫 𝐧𝐚𝐭𝐢𝐨𝐧...''𝐒𝐭𝐚𝐲 𝐇𝐨𝐦𝐞''''𝐒𝐭𝐚𝐲 𝐒...
18/02/2016
வவுனியா விவசாயக் கல்லூரியின்
வெளிக்களக் கண்காட்சி இன்று முதல் ஆரம்பம்.
(வவுனியா)
18.02.2016
இலங்கை விவசாயக்கல்லூரிகளின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு வவுனியா விவசாயக்கல்லூரியில் இடம்பெறும் வெளிக்களக் கண்காட்சி இன்று முற்பகல் 10.30 மணிக்கு விரிவாக்கற் பயிற்சிப் பிரிவின் மேலதிக விவசாயப்பணிப்பாளர் திருமதி ரணதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரியின் அதிபரும் பிரதிவிவசாயப்பணிப்பாளருமான திருமதி குமுதினி சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும் இவ் வெளிக்களக் கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை நண்பகல் வரை கல்லூரி வளாகத்தினுள் இடம்பெறவுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடமாகாண விவாசாயப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், வவுனியா மாவட்ட விவசாயப்பணிப்பாளர் திருமதி எல்.பிருந்தாவஈஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஆகியோர் உட்பட விவசாயப் பணிப்பாளர்கள் பிரதி விவசாயப்பணிப்பாளர்கள் ஆகியோர் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கண்காட்சியை பார்வையிட்ட வடமாகாண விவசாயப்பணிப்பாளர் இக்கண்காட்சி விவசாயிகள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என்போரிற்கு பயனுள்ளதாய் அமையும் என நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
18/02/2016
வவுனியா விவசாயக் கல்லூரி மாணவர் ஒன்றியத்தின்,
'தூறல்' சிறப்புமலர் வெளியீடு.
(வவுனியா)
18.02.2016
இலங்கை விவசாயக்கல்லூரிகளின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு வவுனியா விவசாயக்கல்லூரியின் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட 'தூறல்' நூற்றாண்டு சிறப்புமலர் வெளியீட்டு நிகழ்வ இன்று(18.02.2016) காலை 8.30 மணிக்கு வவுனியா விவசாயக்கல்லூரியின் அதிபரும் பிரதி விவசாயப்பணிப்பாளருமான திருமதி குமுதினி சந்திரகாந்தன் தலைமையில் கல்லூரியின் அச்சுதன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக விரிவாக்கற் பயிற்சிப்பிரிவின் மேலதிக விவசாயப்பணிப்பாளர் திருமதி ரணதுங்க கலந்து கொண்டதுடன் நூலையும் வெளியிட்டு வைத்தார். நூலின் முதற்பிரதியை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண விவசாயப்பணிப்பாளர் எஸ்.சிவகுமார் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா மாவட்ட விவசாயப்பணிப்பாளர் திருமதி பிருந்தாவ ஈஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
நூல் வெளியீட்டு விழாவில் ஏனைய விவசாயப் பணிப்பாளர்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.