15/07/2026
🏫புதிய பாடசாலை வகுப்பறைக்கட்டடங்கள் மாணவர் பாவனைக்காக கையளித்தல் மற்றும் அடிக்கல் நாட்டுதல்🏫
👉எமது வலயத்திற்குரிய PSDG நிதியொதுக்கீட்டின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைத்தல் மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள வகுப்பறைக்கட்டடத்திற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வு என்பன 10.07.2026 அன்றையதினம் நடைபெற்றது.
👉இந்நிகழ்வுகளில் கௌரவ கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க,கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன் மற்றும் திலகநாதன்,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,வடமாகாண கல்விப்பணிப்பாளர்,வடமாகாண பாடசாலைகள் வேலைப்பகுதி பொறியியலாளர்,எமது வலயக்கல்விப் பணிப்பாளர்,பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மேம்பாட்டுப் பிரதிநிதி ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
📌திறந்துவைக்கப்பட்ட பாடசாலை வகுப்பறைக்கட்டடங்கள்👇
1️⃣வ/நொச்சிக்குளம் இல.01 கனிஸ்ட உயர்தர வித்தியாலய பாடசாலையில் 60x25 அளவிலான வகுப்பறைக் கட்டடம்-01
2️⃣வ/ஒலுமடு தமிழ் மகா வித்தியாலயத்தில் 60x25 அளவிலான வகுப்பறைக் கட்டடம்-01
📌அடிக்கல் நாட்டப்பட்ட வகுப்பறைக்கட்டடம்👇
1️⃣வ/ஓமந்தை மத்திய கல்லூரியில் 100x25 அளவிலான வகுப்பறைக்கூடம்-01
இந்நிகழ்வுகளின் பதிவுகள்📸
15/07/2026
🎊மாணவர் கௌரவிப்பு🎊
👉மாகாணமட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய எமது வலயத்திற்குட்பட்ட வ/மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 09.07.2026 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
👉இந்நிகழ்வில் எமது வலயக்கல்வி பணிப்பாளர்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்(ஓமந்தை),பிரதிக்கல்விப் பணிப்பாளர்(உடற்கல்வி) மற்றும் ஆசிரிய ஆலோசகர்(உடற்கல்வி) ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் பதிவுகள்📸
15/07/2026
🎊மாணவர் கௌரவிப்பு🎊
👉மாகாணமட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய எமது வலயத்திற்குட்பட்ட வ/கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க.பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 06.07.2026 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
👉இந்நிகழ்வில் எமது வலயக்கல்வி பணிப்பாளர்,கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள்,பிரதிக்கல்விப் பணிப்பாளர்(உடற்கல்வி) மற்றும் ஆசிரிய ஆலோசகர்(உடற்கல்வி) ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வின் பதிவுகள்📸
19/06/2026
மாகாண மட்ட செயற்பட்டு மகிழ்வோம் 2026 போட்டி முடிவுகள்
2026 ம் ஆண்டிற்கான மாகாண மட்ட செயற்பட்டுமகிழ்வோம் போட்டிக்கு வவுனியா வடக்கு வலயம் சார்பாக சென்ற 9 அணிகளில் 7 அணிகள் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று தேசியப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
தரம் 3, 4, 5 ஆகிய வகுதிகளில் ஆண், பெண், கலப்பு அணிகள் என்றவாறாக இடம்பெறும் போட்டிகளில் ஒவ்வொரு வகையிலும் பங்குபற்றும் 13 அணிகளில் 4 அணிகளுக்கு முதலாமிடமும், 4 அணிகளுக்கு இரண்டாம் இடமும், 5 அணிகளுக்கு மூன்றாம் இடமும் வழங்கப்படுகின்றன.
இவ்வகையில் ஒரு முதலாம் இடத்துடனும், நான்று இரண்டாம் இடங்களுடனும் தன்னை நிலைநிறுத்திய புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலயத்துக்கும்,
ஒரு இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட தரணிக்குளம் ஆரம்ப பாடசாலைக்கும்
ஒரு இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்ட கிடாச்சூரி கருவேப்பங்குளம் அ.த.க.பாடசாலைக்கும்
மாகாணப்போட்டிக்கு தகுதிபெற்று இறுதிவரை நெருங்கிப் போராடிய நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலயம், சுந்தரபுரம் சரஸ்வதி வித்தியாலயம் ஆகியவற்றுக்கும்
வாழ்த்துக்கள்.
17/06/2026
Yarl Geek Challenge Season 15 வலய மட்ட வெற்றி அணியினர்
இவர்கள் மாவட்ட மட்ட போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.
10/06/2026
2 ம் தவணை பரீட்சை நேர அட்டவணை 2026
08/06/2026
மாகாண மட்ட கராத்தே போட்டி 16வயதுப் பிரிவு 2ஆம் இடம் புதுக்குளம் ம.வி
07/06/2026
வடமாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டி2026
1. Swimming
Un 12 Boys
50m Breast stroke style
P.Vinojan-V/Omanthai C C.
Gold medal.
2. Swimming
Un 12 Boys
50m backstroke style
P.Vinojan-V/Omanthai C.C
Silver medal.
3. Swimming
Un 12 Boys
50 m Free style
P.VinujanV/Omanthai C.C
Brownce medal
4. Karate provincial level
EVENT - Under 18 boys karate kg 57+ kumite
NAME - T.diloyan [3RD PLACE]
SCHOOL -Vavuniya kovil puliyankulam muththamil vidyalayam
07/06/2026
வடக்கு மாகாண தமிழ்மொழித்தினம் 2026 எழுத்தாக்கப்போட்டி முடிவுகள்
பன்றிக்கெய்தகுளம் அ.த.க.பா யை சேர்ந்த செல்வி திருக்குமார் அகிதா பிரிவு 3 கட்டுரை வரைதல் போட்டியில் 3 ம் இடத்தினையும்
புதுக்குளம் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த செல்வி அற்பிதராசா சதுர்வேதிகா பிரிவு 3 மொழிப்பிரயோகம் போட்டியில் 3ம் இடத்தினையும்
நெடுங்கேணி மகாவித்தியாலயத்தினை சேர்ந்த செல்வி சந்திரகாந்தன் பிறைமதி பிரிவு 4 சிறுகதை ஆக்கம் போட்டியில் 2 ம் இடத்தினையும்
பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
07/06/2026
சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபையும், வவுனியா பல்கலைக்கழக விஞ்ஞான பீடமும் இணைந்து நடாத்திய சித்திர மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றவர் விபரங்கள்.