AFA education Foundation

AFA education Foundation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AFA education Foundation, Education, 103/1 Aalim Road, kinniya/03, Trincomalee.

The mission of the AFA FOUNDATION - EDUCATION is to contribute to society through the pursuit of education, learning and research at the highest international levels of excellence .

14/06/2023

*பொது அறிவுத் தகவல்கள்*

💥2019 ம் ஆண்டின் இணையம் மீதான சுதந்திரம் அறிக்கையில் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக இணைய சுதந்திரத்தை உலகில் மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்த நாடாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு எது?
🔴சீனா

💥10வது ஆசிய அவசர மருத்துவ நாடு எங்கே நடைபெற்றது?
🔴புது டில்லி, இந்தியா

💥100 பன்னாட்டு 120 போட்டிகளில் விளையாடிய முதலாவது இந்திய ஆண் கிரிக்கெட் வீரர் யார்?
🔴ரோகித் சர்மா

💥பன்னாட்டு பயண சந்தை (WTM) எங்கே நடைபெற்றது?
🔴லண்டன்

💥காசநோயை முற்றாக ஒழிப்பதற்கான ஆண்டாக உலக நாடுகள் நிர்ணயித்த ஆண்டு எது?
🔴2030

💥தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் 15 ஆவது ஆளும் குழுக்கூட்டம்
எங்கே நடைபெற்றது?
🔴 பங்களாதேஷ்

💥தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் எவை?
🔴ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா, இலங்கை, மாலைதீவு, பூட்டான், நேபாளம், பாகிஸ்தான்

💥தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
🔴1982

💥அண்மையில் தனது பக்கத்தில் அனைத்துவிதமான அரசியல் விளம்பரங்களையும் தடைசெய்த சமூக வலைத்தளம் எது?
🔴டுவிட்டர்

💥நிதிப்பிரச்சினைகள் காரணமாக 2020 ற்குள் ஓபெக் அமைப்பிலிருந்து வெளியேறவுள்ள நாடு எது?
🔴ஈக்குவடோர்

💥2023ம் ஆண்டில் ஆண்கள் பன்னாட்டு ஹொக்கி கிண்ணப்போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
🔴இந்தியா

💥அண்மையில் விண்ணில் ஏவப்பட்ட சூடான் நாட்டின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?🔴SRSS-1

💥சீனா தனது 50க்கு மேற்பட்ட நகரங்களில் 5G இணையச்சேவையை எப்போது முதல் தொடங்கியது?
🔴11/ 01/ 2019

💥பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியை வெளியிடும் கம்பனி எது?
🔴TRCE Bribery Risk Matrix

💥 பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் இறுதியாக உள்ள நாடு எது?
🔴சோமாலியா

💥பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் முதலில் உள்ள நாடு எது?
🔴நியூசிலாந்து

💥பன்னாட்டு இலஞ்ச அபாய சுட்டியில் தெற்காசியாவில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு எது?🔴 பங்களாதேஷ்

💥.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியை நடத்தவுள்ள இந்திய மாநிலம் எது?
🔴பஞ்சாப்

💥.2019ம் ஆண்டு பன்னாட்டு கபடி போட்டியில் எத்தனை நாடுகள் பங்கேற்க உள்ளன?
🔴9

💥யுனெஸ்கோவின் கல்வி ஆணைக்குழுவின் தலைவராக அண்மையில் தெரிவு செய்யப்பட்டவர் யார்?
🔴சவ்ப்காத் மெஹ்மூத்

By: Casim Rihana,
University of Jaffna,
From: Anuradhapura, Horowpothana.

25/06/2022

*🤔 மாணவன் எப்படி இருக்கனும் 🤔*
*___________________________♥️
*மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?*
*தத்துவஞானி சாக்ரடீஸ் சொன்ன விளக்கம்.*
*______________________________*

ஒரு மாணவன் சாக்ரடீஸிடம் வந்தான்.

“ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?’’ என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ், “மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’’ என்றான்.

“கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.

“கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான் மாணவன்.

“கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.

“அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…’’

“ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.

அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.

“எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டான்.

“மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத்தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் என சொன்னேன்’’ என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ். அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

07/03/2022

__நான் கண்ட தனிமை__

ஒற்றை நட்பு கூட இல்லாத
தனிமையும் கடந்தது
பழகும் உறவும்
பழக்கமாக்கிய உறவும்
நட்புக்களென நம்பிய
ஏமாற்றங்களுங்கூட நகர்ந்தது

வெறும் வாய் வார்த்தைகளாயேனும்
நம்பிக்கை கொடுக்கும்
நட்புக்களாய் கூட தொடர்புகளானது
உண்மையான அன்பும்
நீடிக்க முடியாமல்
பிரிவையும் தொட்டது

நான் வசிப்பதென்னவோ
தனிமையிலான மௌனங்களில் தான்
இருந்தாலுமென் புரிதலுடனான
சிந்தனைகளின் பரவல்களோ
அமைதியையும் தனிமையையும்
மறக்கடிக்கும் சலசலப்புக்களிலுள்ளது

தனிமை ஒன்றும் புதிதல்ல
ஏமாற்றங்கள் என்றும் எனக்கல்ல
ஏமாற்றங்கள் அழித்ததென்
எதிர்பார்ப்புக்களையாகலாம்
ஆனால், தனிமை கொடுத்தெனக்கு
உறுதியான வைராக்கியங்களை

__அப்துல் வஹாப் சப்றினா_
__அட்டாளைச்சேனை_

03/03/2022

◇•••••••••••••••••••••••••••◇
💁‍♂️ *அறிந்து 🌹*
*கொள்வோம் 😍*


*அய்யா*-வுக்கும் *ஐயா*-வுக்கும்
*வேறுபாடு*
என்ன தெரியுமா*?

படித்ததில் பிடித்தது.

தமிழில் எழுதும் போது
'ஐயா', 'அய்யா' எது சரி?

சிலர், "ஐயா"என்று எழுதுகின்றனர்.

ஆனால், சிலர் "அய்யா"
என்று எழுதுகின்றனர்.

எப்படியும் எழுதலாம் என்பது ஒருமுறை.

இலக்கணம் இப்படித்தான் எழுத வேண்டும் என கூறுகிறது,

எனவே, இலக்கணப்படித்தான் எழுத வேண்டும் என்பது ஒருமுறை.

எது சரி?

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைந்த அய்யனரா? ஐயனரா? என்று படித்த கட்டுரையின் ஒரு பகுதியை பதிவு செய்கிறேன்,

*கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி"தமிழ்க்குடியாகும்* !!

*உயிர், உடல், ஆயுதம் இவற்றோடு தோன்றிய தமிழர்
தாம்பேசும் தமிழ் மொழியிலும்

*உயிர் எழுத்துக்களையும்*, *மெய்யெழுத்துக்களையும்*,
*ஆயுத எழுத்துக்களையும்*
*உருவாக்கிச் சங்கம் வைத்து ஆராய்ந்து தமிழ் மொழியை வளர்த்துள்ளனர்*,

*ஓர் இயந்திரத்தைத் தயாரித்தவர், அதற்கான Operation Manual கொடுப்பது போன்று, சங்கத்தமிழர் தமிழுக்கு இலக்கணம் ஏற்படுத்திக்
கொடுத்துள்ளனர்*,

*தமிழில் எழுத்துக்களைக்*

*குறில் எழுத்துக்கள் என்றும்*
*நெடில் எழுத்துக்கள்என்றும்
*மெய்யெழுத்துக்கள் என்றும் பிரித்துள்ளனர்* !!

*குறில் எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு
நேரம் ஒலிக்கும்*.

*நெடில் எழுத்துக்கள் இரண்டு மாத்திரைஅளவு நேரம் ஒலிக்கும்*.

*மெய்யெழுத்துக்கள் அரைமாத்திரை அளவு
நேரம் ஒலிக்கும்*.

*எனவே தமிழில் ஒவ்வொரு சொல்லும் மிகவும் சிறப்புப் பெற்றனவாகத் திகழ்கின்றன*.

உதாரணமாக *மகன்* என்று சொல்லுக்கும் *மகான்*
என்ற சொல்லுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.

*பகவனுக்கும் பகவானுக்கும் வேறுபாடு உண்டு*.

இவ்வாறாகப் பல உதாரணங்களைக் கூறலாம்.

எனவே சொல்லில் உள்ள எழுத்துக்களின் *ஒலி அளவை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ பொருள் மாறுபடும்* !!

சிலர், *ஐயா* என்று எழுதுகின்றனர்.

ஆனால், சிலர் *அய்யா* என்று எழுதுகின்றனர்.

*ஐயா என்ற சொல்லில் "ஐ" என்பது நெடில் எழுத்தாகும். இரண்டு மாத்திரை அளவு உள்ளது*.

*ஆனால், அய்யா என்ற சொல்லில்"அ" என்பது குறில் எழுத்தாகும்*.

*ஒரு மாத்திரை அளவு உள்ளதாகும்* !!

"ய்" என்பது மெய் யெழுத்து அரை மாத்திரை அளவு உள்ளதாகும்.

எனவே "அய்" என்று எழுதினால் ஒன்றரை மாத்திரை அளவு தான் ஒலிக்கும்.

ஐ நெடில் = 2 அளவு

அ குறில் = 1 அளவு

ய் ஒற்று = ½ அளவு

அய் = 1+½ = 1 ½ அளவு

*ஐ* *என்றால் தமிழில் தலைவன் என்று பொருள்*. *ஐயா* *என்றால்* *தலைவா* *என்று*
*மரியாதை நிமித்தமாக அழைப்பது என்று பொருள்* !!

"அய்" என்றால் பொருள் ஏதும் இல்லை. "அய்யா" என்றாலும் பொருள் ஏதும் இல்லை!

*எனவே மரியாதை நிமித்தமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்லைக் குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும்* !!

*நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும்*.

*எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும்*.

*"அய்யா" என்ற பொருளற்ற சொல்லைத் தவிர்க்கலாம்* !!
❤️ 🧡 💛 💚 💙 💜 🖤 🤍 🤎

01/03/2022

தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
சிந்தனைக்காக சில நிமிடம்

24/02/2022

அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்...😃
சிந்தனைக்காக சில நிமிடம்

22/02/2022

🥰 ஹிஜாப்

பெண்ணின் பாதுகாப்புக் கேடயம்..
பெண்ணுக்கு அதுவே கேடயம்..

பார்ப்பதற்கு ஒரு அழகு..
படைத்தவனுக்கு அது அழகு..

கண்டவனிடமிருந்து கண்ணியம்..
கற்புக்கும் அதுவே கண்ணியம்..

மயக்கினால் சிலருக்கு தான் பிடிக்கும்..
மறைத்தால் யாவருக்கும் பிடிக்கும்..

பணிந்தாள் அவள் அன்பு தேவதை..
அணிந்தாள் அவள் அழகு தேவதை..

கனவுலகின் போராளிகளின் உரிமை..
கண்ணான சமூகத்தை காக்கும் உரிமை..

எழுத்துக்களுக்கு கற்பனை சிறப்பு..
பெண்களுக்கு ஹிஜாப் தான் சிறப்பு..♥️

10/02/2022

என் ஆடை மீது உனக்கேன் இந்த கோபம்!
என் ஆடையில் நீ கண்ட குறையை கூறு!
என் ஆடை மீது நீ கொண்ட ஐயங்கள் நூறு!
என் ஆடையில் பெண்ணுக்கு எது கேடு!

நீ கூறுகிறாய் என் ஆடை அடிமைத்தனமென்று!
நீ அறியவில்லை என் ஆடையின் உண்மை என்வென்று !
நீ நினைக்கவில்லை ஹிஜாப் என் அடையாளமென்று!
நீ அறிந்துக்கொள் என் ஆடையின் மகத்துவம் என்னவென்று!

நான் தலைமூட பெருமைப்படுகிறேன்!
பெண்ணாக நான் பாதுகாக்கப்படுகிறேன்!
இவ்வாடை அணிகையிலே நான் மதி்க்கப்படுகிறேன்!
முகமூடி மறைவினிலே நான் கௌரவிக்க படுகிறேன்!

சமூகமே அறிந்துக்கொள்!
நான் அணிகிறேன் எனக்காக!
சமூகமே தெரிந்துக்கொள்!
முழுமையானேன் என் ஆடையில்!
சமூகமே உணர்ந்துக்கொள்!
நான் அடிமை இல்லை!
சமூகமே சொல்கிறேன்
ஹிஜாப் என் உரிமை!

என்னை அணியவண்டாம் என சொல்ல நீ யார்?
என்னை கட்டுப்படுத்தும் ரிமை உனக்களித்தது யார்?
ஹிஜாப் என் உரிமை!
ஹிஜாப் என் வாழ்க்கை!
நீ தடுத்த போதும் நான் அணிவேன் ஹிஜாப்!

ஹிஜாப் அணிய வேண்டாம் என நீ சொன்னால் கேட்பதற்கு நான் அடிமையல்ல , சுதந்திரப்பெண்!
நீ என்னை கல்லால் அடித்தாலும் என் கால்கள் மடியாது !
நீ என்னை தூக்கிலிட்டாலும் என் தலை உன்னை வணங்காது!

03/02/2022

*உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ?*

👌பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்lதை பள்ளிக்குச் செல்லத்
தொடங்குகிறது...

😰ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல்.., இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி.., மூன்று வயதில் எல்.கே.ஜி., நான்கு வயதில் யு.கே.ஜி என்ற சித்ரவதை அங்கே இல்லை...

😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை...

👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான்...

👊இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை...

👏ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம் செல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை...

👌ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவு தான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் பிற கலைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு...

👍 ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்...

👌முக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது...
பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது...

👊தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்...

👌கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை...

💪சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை...

👏இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை...

👌மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்...

👍ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்...

👌ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது...

👍முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம்...

👏கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும்...
‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது...

👍அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி என்ற உத்தரவாதம் உள்ளது...

👌அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்...

👊அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர்... ‘டியூஷன்’என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை...

👍தேர்வுகளை அடிப்படை முறைகளாக இல்லாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர்...

😳 *"இது எப்படி?" என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர்...*

✅அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது...

😀உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது...

👌மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை...

👍பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்...

👍உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர்...

👍நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது...

👊ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை...

அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், "‘பின்லாந்து கல்வி முறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது... ஏனெனில் "OCED" அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது...
எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது"’ என்கிறார்கள்...

👏இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை...

👏மதிக்கத்தக்க மனநிலை.

👍பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எஸ் ., ஐ.பி.எஸ் போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது...

👌அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு...

👍மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ் நாள் லட்சியம்...

அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல!..

👌மேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்...

👌ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும்...

👌பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி...

👌ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி...

👌ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட்...
குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது...
நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ்...
தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்...

👍இப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது!...

👏👏👏👏👏👏👏👏

இப்போது நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது...

பெற்றோர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், ஆட்சியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது...

குழந்தைகள் வளர்ப்பில் நாம் தான் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் இருக்கிறது...

முதலில், பிள்ளைகளுக்கு நல்ல சிந்தனைகளை ஏற்படுத்துங்கள்!...

ஒரு குழந்தையைவிட நாம் உயர்ந்தவர் என்று நினைக்காதீர்கள்….

01. பிள்ளைகள் எதாவது செய்தால் எப்போதும் குறை கூறுதல், அவர்கள் பாராட்டும்படி செய்தாலும் கண்டு கொள்ளாதிருத்தல் போன்ற செயல்களை பலர் செய்கிறார்கள் இதனால் பிள்ளைகளின் மன வளர்ச்சி குன்றும்.

02. எந்தக் குழந்தையும் பின்னால் எப்படி ஆகுமென எவருமே கூற முடியாது. மூடன், அறிவாளியாகலாம்... பைத்தியம், தெளிந்த சித்தமுடையவனாகலாம்... ஆகவே பிள்ளைகளை ஒருகாலமும் தப்பாக மட்டும்கட்டி அலட்சியம் செய்யக் கூடாது.

03. தாமஸ் ஆல்வா எடிசனை மரமண்டை என்று பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர் பின்னாளில் ஆயிரம் கண்டு பிடிப்புக்களுக்கு அவரே அதிபதி.

04. லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாக பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

05. ஆல்பிரட் ஐன்ஸ்டைனை, அவர் ஆசிரியர், "இவனை போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை" என்றார் அவர் ஆசிரியர் ஆனால் அவரே 20 ம் நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

06. குழந்தைகளுடன் ஒரு நாளில் சிறிது நேரமாவது பேசுங்கள், நல்லதைப் பேசுங்கள் கனிவுடன் பேசுங்கள். அவர்கள் குறைகளைப் பற்றி அதிக நேரம் பேசாதீர்கள் நிறைகளை பற்றிப் பேசுங்கள்.

07. பிள்ளைகளுடன் யாரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள், அவன் அவனே.. நீங்கள் நீங்களே.. நீங்களே முன்னுதாரணமாக இருங்கள். உங்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள்.

08. வாழ்வில் வெற்றிபெற்றவரைப்பற்றி பேசுங்கள், ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களைப்பற்றி பேசுங்கள்.

09. எப்படி இருக்கக் கூடாது என்று ஒப்பிட்டு பேசுவதைவிட எப்படி இருக்க வேண்டுமென ஒரு முன்னுதாரண மனிதரைப்பற்றிப் பேசுங்கள்.

10. பிள்ளைகளுக்கு வீட்டுக்குள் விலங்கிடாதீர்கள் வீடு ஒரு சிறைச்சாலைக் கூடமல்ல மனிதர்களை தோற்றுவிக்கும் கோயில்.

11. நல்ல மேற்கோள்களை கொடுங்கள், சுதந்திரம் கொடுத்து, கட்டாயப்படுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்.

12. மலர் தூவியுள்ள பாதையைப்பற்றி பிள்ளைகளுக்கு சொன்னால் அவர்கள் முள் நிறைந்த பாதையை புரிந்து கொள்வார்கள்.

13. உழைப்பைப்பற்றி சொல்லிக் கொடுங்கள் அவர்கள் உழைப்பில்லாத கேடுகளை புரிந்துகொள்வார்கள்.

14. வெற்றி பெற்றவர்களை சொல்லும்போது தோல்வியின் காரணங்களை அவன் அறிந்து கொள்வான்.

15. சுறு சுறுப்பை சொல்லிக் கொடுத்தால் அவன் சோம்பலை அடையாளம் காண்பான், விதியை வென்றவர்களை சொல்லும்போது அவன் வேதனையில் நொந்து அழிந்தவர்களை கண்டு கொள்வான் – இது போதும்...

முதலில் நாம் மாற வேண்டும்.

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

மாற்றம் ஒன்றே மாறாதது...

நல்ல மாற்றம் தான் வளர்ச்சியை தரும்.

பின்லாந்தின் கல்விமுறையிலிருந்து நாம் கற்றுக் கொண்டு மாறுவோம்!.

குழந்தைகளின் எதிர்காலத்தைப் சிறப்பாக மாற்றுவோம்!

*(பிறரும் பயனடைய அதிகமாக Share செய்யுங்கள்)*

◇•••••••••••••••••••••••••••••◇

Want your school to be the top-listed School/college in Trincomalee?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


103/1 Aalim Road, Kinniya/03
Trincomalee
31100