13/07/2025
(அஷ்ரப் ஏ சமத்)
மருதுார் ஏ ஹஸன் எழுதிய அறிந்தும் அறியாமலும் (சம்பவங்கள் ) நுால் வெளியீட்டு விழா கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இன்று 12.07.2025 பி.பகல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் (பா.உ) கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்நூல் 112 பக்கங்களைக் கொண்ட இந் நூலில் நூலாசிரியர் மருதூர் ஏ ஹஸன் (07) தலைப்புக்களில் சம்பவங்களை எழுதியுள்ளார்.
01. அப்பா இல்லாத ஊரில் (2) எம்.எச்.எம். அஷ்ரப் (3) எம். அப்துல் மஜீத் (எஸ்.எஸ்.பி) (4) பஷீர் சேகு தாவூத் (5) டக்ளஸ் தேவானந்தா (06) மனித வெடிகுண்டு சஹ்ரான் (7) ரயில் பயணம் என்ற தலைப்புகளில் சம்பவங்கள் இந்நூலில் அடங்க பெற்றுள்ளன.
மருதுார் ஹசனின் 7வது நூல் இந்நூல் பற்றி ஆழமாக வாசித்து அதனை விரிவாகவும் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் -நாரஹேன்பிட்டி பைப் வீதியில் இருந்து கட்சி ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட தனது நினைவுப் பதிவுகள் நிசாம் காரியப்பர் விரிவாக பகிர்ந்து கொண்டார்.. மறைந்த தலைவரின் இலக்கியம், அரசியல் ஆளுமை, அவர் மக்களுக்காக அர்ப்பணிப்பு போன்றவைகள் ஆராச்சி செயப்படல் வேண்டும். என வேண்டிக் கொண்டார்.
ஆனால் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் அரசியல் மற்றும் தனிப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறுகள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆராயப்பட்டு அவைகள் நுாலக்கப்பட்டு எதிர்கால சமுகத்திற்கு தற்கால சமூகத்திற்கும் ஆவணப்படுத்தல் வேண்டும். என அதற்கு எழுத்தாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் முன்வருதல் வேண்டும் எனவும் நிசாம் காரியப்பர் வேண்டிக் கொண்டார்.