01/01/2026
மருதமுனை எம்.எம்.எம்.அனஸ், அல்-தாஜுன் வித்தியாலயத்தில் அதிபராக கடமையை பொறுப்பேற்றார்
மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி-பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவுகளுக்கு பொறுப்பாக (பிரதி) அதிபராக கடமையாற்றிய எம்.எம்.எம்.அனஸ் அவர்கள், (01.01.2026) சம்மாந்துறை வலய பாசாலையான, நாவிதன்வெளி - சொறிக்கல்முனை சது/அல்-தாஜுன் வித்தியாலயத்தில் அதிபராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், மருதமுனை அல்-மனாரில் பிரதி அதிபராக கடந்த எட்டு வருடங்களாக கடமையாற்றி மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கு முன்னின்று செயற்பட்ட ஒருவராவார்.