01/10/2021
R/Emb/Aigburth Tamil Maha Vidyalaya,Bulutota, Sooriyakanda
We are the leading Tamil medium school in Embilpitiya Zone
01/10/2021
24/09/2021
*கல்லூரி வளர்ச்சியின் அடுத்த மைல் கல்*
-------------------------------------
1942ல் தரம்:1 தொடக்கம் தரம்:5 வரையிலான வகுப்புகளையும்,12 மாணவர்களையும் கொண்டு ஆரம்ப பிரிவு பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இ/எம்பி/எக்பர்த் தமிழ் வித்தியாலயம் அன்று தொடக்கம் படிப்படியான வளர்ச்சியின் 1994 காலப் பகுதியில் இடைநிலை பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இடைநிலை பாடசாலையாக பல்வேறு துறைகளிலும் சாதனைகளை தன்னகத்தே கொண்டு இயங்கிய எமது கல்லூரி ஆண்டு 2017.05.12 அன்று எம்பிலிபிட்டிய கல்வி வலயத்தில் க.பொ.த (உ/த) பாடசாலையாக எழுச்சி பெற்றது.
எமது கல்லூரி இன்று வரை பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து சாதித்த இ/எம்பி/எக்பர்த் தமிழ் வித்தியாலயம் தனது பெயரினை "இ/எம்பி/எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம்" மெருகூட்டிக்கொண்டது.
2021ம் ஆண்டு 79வது வருடத்தில் கல்லூரி வளர்ச்சின் அடுத்த மைல் கல்லாக கடந்த வருடம் 2020ம் வருடம் கொரோனா எனும் கொடிய வைரஸின் பிடியில் சிக்குண்ட எமது கல்லூரி க.பொ.த (ச/த) மாணவர்கள் சாதித்து காட்டியதுடன் எமது கல்லூரின் தொடர்ச்சியான வளர்ச்சியில் கைகோர்த்துள்ளனர்.
கல்லூரியின் அதிபரின் வழிகாட்டலின் கீழ் வகுப்பாசிரியர் மற்றும் கணித ஆசானாகிய H.சுபைர் அவர்களின் வழிநடத்தலுடன் கல்லூரி வரலாற்றில் முதல் தடவையாக 8A 1B என்ற பெறுபேற்றினை செல்வி.S.கவிஷாயினி என்ற மாணவி பெற்று கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக(2018, 2019) க.பொ.த (ச/த) பரீட்சைக்கு தோற்றி க.பொ.த (உ/த) செல்லும் மாணவர்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாகும். அதே போல 2020ம் ஆண்டிலும் 28 மாணவர்கள் பரீட்சையை எதிர்கொண்டு 8A 1B என்ற பேறுபேற்றுடன் 18 மாணவர்கள் நேரடியாக க.பொ.த (உ/த) தெரிவாகியுள்ளனர். இது 64% பெறுபேற்று விகிதமாகும்.
இதற்காக மாணவர்களை வழிகாட்டிய எமது முன்னாள் அதிபர் திருவாளர் V.பாஸ்கரன் ஐயா அவர்களுக்கும் வகுப்பாசிரியர் H.சுபைர் அவர்களுக்கும் பாட ஆசிரியர்களுக்கும் அம்மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டல்களை வழங்கிய எமது கல்லூரியின் ஏனைய ஆசிரியர்களுக்கும், ஆசிரிய ஆலோசகர்களுக்கும், வெளியில் இருந்து வருகை தந்த வளவாலர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது இ/எம்பி/எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம்.
நன்றி.
S.குமுதினி,
அதிபர்.
_______________________________________
பாடங்களும் பெறுபேற்று விகிதமும்
சைவநெறி – 95%
கத்தோலிக்கம் – 100%
தமிழ் – 100%
ஆங்கிலம் – 96.43%
விஞ்ஞானம் – 21.43%
கணிதம் – 64.29%
வரலாறு – 50%
சிங்களம் – 100%
குடியியல் – 80%
வணிகம் – 83%
சித்திரம் – 100%
இலக்கிய நயம் – 100%
நடனம் – செயன்முறை பரீட்சையின் பின்னர் பெறுபேறு வெளியாகும்
ICT – 60%
சுகாதாரம் - 100%
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்......
20/11/2020
எதிர்வரும் 23ம் திகதி
3ம் தவணைக்காக பாடசாலை ஆரம்பமாகவுள்ளதால், தரம் 6 - 13 வரையிலான தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் அனைவரும் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (21,22) ஆகிய திகதிகளில் எமது கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிரமதானத்தில் பங்கு கொண்டு பாடசாலையை ஆரம்பிக்க தேவையான உதவிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
(குறிப்பு: நேற்றைய தினமே கல்வி அமைச்சினூடாக எதிர்வரும் 23.11.2020 அன்று பாடசாலை ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற முடிவு கிடைக்கப்பெற்றதினை அடுத்து சுவரொட்டிகள் மூலம் சிரமதானம் பற்றிய அறிவித்தல் வழங்க முடியவில்லை. எனவே அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்வதோடு அனைவருக்கும் இத்தகவலை பகிர்ந்து சிரமதானத்தை நடாத்தி பாடசாலை ஆரம்பிப்பதற்கு உதவிகளை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்).
நன்றி.
அதிபர்,
ஆசிரியர்கள்,
பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர்கள்.
20/11/2020
எதிர்வரும் 23ம் திகதி தரம் 6 - 13 வரையிலான தரங்களுக்கு 3ம் தவணைக்காக பாடசாலை ஆரம்பமாகவுள்ளது.
#எமது_கல்லூரி_வளர்ச்சியின்_அடுத்த_மைல்கல்...
இவ்வருடம் 2020 நடைபெற்ற தரம்:5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் அனைவருக்கும் எமது கல்லூரியில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இவர்களில்
#செல்வன்_செல்வகுமார்_பிரியதர்ஷன் :_164
புள்ளிகளையும்
#செல்வி_தம்பிராஜா_விஷ்மி_லோச்சனா : 162 புள்ளிகளையும்
#செல்வி_உதயகுமார்_ஹெப்சிபா_அமாஷா : 160 புள்ளிகளையும்
பெற்று 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இம்மாணர்களுக்கு கற்பித்த தரம்:5 வகுப்பாசிரியர் செல்வி.S.கலைவாணி அவர்களுக்கும் அம்மாணவச் செல்வங்களுக்கு கற்பித்த ஏனைய ஆசிரியர்களுக்கும் இம்மாணவர்களையும் ஆசிரியர்களையும் சிறந்த வழிகாட்டுதலின் ஊடாக உயர்வடையச் செய்த எமது கல்லூரியின் முதல்வர் திரு.V.பாஸ்கரன் ஐயா அவர்களுக்கும் இம் மாணவ செல்வங்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களைத்தெரிவித்துக் கொள்கின்றது எமது கல்லூரி.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 2021 ஜனவரி 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
26/10/2020
மாகாண கல்வி செயலாளரின் கடிதத்திற்கமைவாகவும்,அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் அமைவாகவும் அதிபரின் ஆலோசனையுடன் கடந்த 17.10.2020 அன்று எமது கல்லூரியில் நவராத்திரியின் முதல் நாள் நிகழ்வு எமது கல்லூரி இந்துமா மன்ற ஏற்பாட்டில் கும்பம் வைத்தல் நிகழ்வுடன் சிறப்பாக ஆரம்பமாகியது.
தொடர்ச்சியான பூஜைகள் எமது கல்லூரி ஆசிரியர்களான திரு.B.ரமேஷ், திரு.P. யுனோத் பிரசாந்த் மற்றும் திருமதி.S.ரெங்கம்மா ஆகியோரினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.
இந்நவராத்திரி பூஜைகளில் முதல் நாள் தொடக்கம் இன்று வரையிலான பூஜைகளில் பெற்றோர்கள் சார்பாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகிய திருமதி.ஜெயசித்ரா அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு உதவிகளையும் நல்கினார்.
இன்றைய தினம் இறுதி நாள் பூஜைகள் சூரியகந்த முத்துமாரியம்மன் தேவஸ்தான குருக்கள் மூலமாக சிறப்பாகவும் எளிமையாகவும் இடம்பெற்றது.
இடர் காலப்பகுதியிலும் எளிமையாகவும் சிறப்பாகவும் பூஜைகளை ஏற்பாடு செய்து நடாத்தி முடித்தமைக்காக அதிபர் தலைமையிலான பாடசாலை நிர்வாகமும், இந்துமா மன்றமும் எமது கல்லூரி ஆசிரியர்களான திரு.B.ரமேஷ், திரு.P. யுனோத் பிரசாந்த், திருமதி.S.ரெங்கம்மா மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திருமதி.ஜெயசித்ரா அவர்களும் நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு முப்பெரும் தேவிகளின் அருளும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.
_______________ஓம் சக்தி ________________
25/10/2020
1942ல் தரம்:1 தொடக்கம் தரம்:5 வரையிலான வகுப்புகளையும்,12 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருடன் அதிபர் அமரர் திரு.ஐயாத்துரை அவர்களின் தலைமையில் ஆரம்ப பிரிவு (Type:3)பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட
இ/எம்பி/எக்பர்த் தமிழ் வித்தியாலயம் அன்று தொடக்கம் படிப்படியான வளர்ச்சியின் மூலம் அதிபர் அமரர் திரு.S.மரியசூசை அவர்களின் காலப் பகுதியில் அதிபரின் முயற்சியால் 1994 காலப் பகுதியில் இடைநிலை பாடசாலையாக(type:2)தரமுயர்த்தப்பட்டது. இடைநிலை பாடசாலையாக பல்வேறு துறைகளிலும் சாதனைகளை தன்னகத்தே கொண்டு இயங்கிய எமது கல்லூரியை 2007ம் ஆண்டு தற்போதைய அதிபர் திரு.V.பாஸ்கரன் ஐயா அவர்கள் பொறுப்பேற்றார்.
இவரின் தலைமையின் கீழ் எமது கல்லூரி இன்று வரை பாரிய வளர்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இடைநிலை பாடசாலையாக திகழ்ந்த எமது கல்லூரி 75 வருட நிறைவின் நிமித்தம் பவள விழா கண்ட எமது கல்லூரி, எமது முதல்வர் திரு.V.பாஸ்கரன் ஐயா அவர்களின் முயற்சியின் பயனாக 2017.05.12 அன்று எம்பிலிபிட்டிய கல்வி வலயத்தில் க.பொ.த உ/த (1C) பாடசாலையாக எழுச்சி பெற்றது.
எமது கல்லூரி இன்று வரை பல்வேறு துறைகளிலும் தடம்பதித்து சாதித்து வருவதோடு துரித வளர்ச்சி பாதையில் செல்கின்றது.
இதன் மூலம் "இ/எம்பி/எக்பர்த் தமிழ் வித்தியாலயம்" என்ற தனது பெயரினை
"இ/எம்பி/எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம்" தனது மெருகூட்டிக்கொண்டது எமது கல்லூரி.
எமது கல்லூரியில் இ/எம்பி/எக்பர்த் தமிழ் வித்தியாலயம் என பொறிக்கப்பட்டிருந்த பெயரினை இ/எம்பி/எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம் என மாற்றி பொறிக்கப்பட வேண்டும் என தற்போதைய எமது கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகிய திருமதி.ஜெயசித்ரா அவர்களின் நிதி உதவியுடனும், எமது கல்லூரி முதல்வர் திரு.V.பாஸ்கரன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் கீழும் எமது கல்லூரியின் ஆசிரியர்களான திரு.B.ரமேஷ், திரு.P.யுனோத் பிரஷாந்த் மற்றும் திரு.S.பிரஷாந் ஆகியோரின் அயராத முயற்சியின் பயனாக எமது கல்லூரியின் பெயர் இ/எம்பி/எக்பர்த் தமிழ் மகா வித்தியாலயம் என பொறிக்கப்பட்டது. இப்பணியானது 15.10.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டு 20.10.2020 அன்றுடன் துரித கதியில் நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Sooriyakanda
Ratnapura
70346
Opening Hours
| Monday | 07:30 - 13:30 |
| Tuesday | 07:30 - 13:30 |
| Wednesday | 07:30 - 13:30 |
| Thursday | 07:30 - 13:30 |
| Friday | 07:30 - 13:30 |