25/05/2022
*நன்றி நவிலல்*
*யாழ்/ மகாஜனாக் கல்லூரியின் '87 O/L '90 A/L* அணியினரின் 'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் உன்னதமான செயற்பாட்டின் மூலம்
*இராஜகிரிய ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலயத்தின்*
மிக நீண்ட கால குறைபாடுகளுள் ஒன்றான போட்டோ பிரதி அச்சு இயந்திர கனவு இன்று நனவாகியுள்ளதை இட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
யாழ்/ மகாஜனாக் கல்லூரியின் '87 O/L '90 A/L அணி மைந்தர்களால் வழங்கி வைக்கப்பட்ட ரூபா 248,400/- பெறுமதியான நிதியுதவியின் மூலம்
JOHN KEELS நிறுவனத்தில் இருந்து
TOSHIBA DIGITAL PHOTO COPIER
E- STUDIO 2329 A வகை இயந்திரம் கொள்வனவு செய்யப் பட்டது.
அதன் மூலம்
எமது பாடசாலையின் கற்றல் - கற்பித்தல் மற்றும் நிர்வாக செயற்பாடுகளை செவ்வனே முன்னெடுக்கத் துணை புரிந்த யாழ்/ மகாஜனாக் கல்லூரியின்
'87 O/L '90 A/L அணி மைந்தர்கள் ஒவ்வொருவருக்கும்
அத்துடன் இப்பணியை சுயமாக முன்வந்து செவ்வனே நிறைவேற்றிய எமது பாடசாலையின் சிரேஸ்ட பிரிவுத்தலைவரும்,
கணித பாட ஆசிரியருமான திரு K.சீராளன் அவர்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பாக இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இராஜகிரிய ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய வரலாற்றில்
இவ் உன்னத பணி என்றும் அழியாச் சுடராக நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.🙏🏻🙏🏻🙏🏻
01/03/2021
எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின்
உறுப்பினர்கள் (2010 சா/த அணி) வழங்கிய நிதியுதவியினை திருப்தியான முறையில் பயன்படுத்தினோம் என்பதனை மிக்க நன்றியுடன் அறியத் தருகிறேன்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் வரையில் பாடசாலை நடந்த நாட்களில்
2020 (சா/த) மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் மாலை 4.00 மணி வரையில் மேலதிக வகுப்புக்களில் உற்சாகத்துடனும் மனநிறைவோடும்கற்றலில் ஈடுபட்டனர்.
அம் மாணவர்கள் சார்பாகவும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உப அதிபர்,
K.S.Krishnan.
15/09/2020
எமது பாடசாலையில் இவ்வருடம் 2020/OL பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நடைபெறும் மாலை நேர வகுப்பை முன்னிட்டு வழங்கவிருக்கும் மதிய உணவுச் செலவுகளுக்காக ரூபா 25 000 ஐ எமது அதிபர் அருட்சகோதரி றொஸ்லின் அவர்களிடம் 2010 / OL பிரிவு மாணவர்கள் சார்பாக அப்பிரிவு பழைய மாணவர் அன்டனி இன்று (15.09.2020) வழங்கி வைத்தார். இப்பிரிவு மாணவர்களை எமது பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டி வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கின்றோம் இவ்வாறான செயற்பாட்டை முன்மாதிரியாகக்கொண்டு மற்றய பிரிவு மாணவர்களும் இனி வருங்காலங்களில் பின்பற்றுவார்கள் என நம்புகின்றோம்.
08/09/2020
1957 ஆம் ஆண்டு மாசித்திங்கள் ஆறாம் நாள் தனது கல்விப்பணியினை ஆரம்பித்த இராஜகிரிய றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத் தாய் இன்று வரை பிரசவித்த கல்விச் செல்வங்களோ ஏராளம். மிகவும் குறைவான பௌதீக வளங்களுடன் இன்று வரை சளைக்காது அனைத்து சவால்களையும் வெற்றி கண்ட இத்தாயின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று புதிய கட்டடமே. வைர விழா கண்டும் நிறைவேறாத இக்கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கின்றது. புதிய நான்கு மாடிக் கட்டடத்துக்கான பூர்வாங்க வேலைகளில் ஒன்றாக மண் பரிசோதனை (Soil Test) நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களைப் பூரிப்புடன் பதிவேற்றுகிறேன்.
29/04/2020
2019 O/L பரீட்சையில் எமது பாடசாலையின் சிறந்த பெறுபேற்றை R.மனுசிகா 5 A, 3B, 1C ஐ பெற்றுள்ளார். மற்றும் பரீட்சையில் சித்தி பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டி வாழ்த்துவதோடு இவற்றுக்கு காரணகர்த்தாவாக விளங்கும் அதிபர், உபஅதிபர், ஆசிரியர்கள் அனைவரையும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுவதில் பெருமையடைகின்றோம்.
19/12/2019
அகில இலங்கை தேசியமட்டம் இரண்டாம் மொழி சிங்களம் வாசிப்புப் போட்டி முதலாமிடம் செல்வி ர.வினுசியா (தரம் 7)
13/11/2019
அகில இலங்கை தேசியமட்ட இரண்டாம் மொழி சிங்களப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்ற எமது பாடசாலை மாணவி ர.வினுசியா பாடசாலையில் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டார் அவ் மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர் முகித்தா அவர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுவதில் பெருமையடைகின்றோம்