04/02/2026
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 🇱🇰 78ஆம் சுதந்திர தின நிகழ்வு – 2026
______________________________________________
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78ஆம் சுதந்திர தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாகவும் எளிமையான முறையிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தன. அல்ஹம்துலில்லாஹ்!
கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் HM மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காஸிமிய்யா நிர்வாக சபை, முகாமைத்துவ சபை, ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர், புத்தளம் மாநகர சபை உறுப்பினர்கள், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர், கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள், புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்தினர், புத்தளம் ஜம்இய்யதுல் உலமா நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் விஷேட அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் NTM Thahir Marikkar அவர்கள் கலந்து கொண்டு விஷேட உரையாற்றினார்.
மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு காஸிமிய்யா நிர்வாக சபை தலைவர் அல்ஹாஜ் SRM முஸம்மில் அவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டதுடன், கல்லூரி அதிபர் அவர்களால் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவருக்கும், வருகை தந்து நிகழ்வை சிறப்பித்த அனைத்து அதிதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஸாகுமுல்லாஹு ஹைரன்!
04/02/2026
78th Independence Day Program @ Casimiyya Arabic College - Puttalam
18/01/2026
புதிய மாணவர்கள் வரவேற்பு மற்றும் பெற்றோர் சந்திப்பு நிகழ்வு - 2026
________________________________________________
எமது கல்லூரியில் புதிய மாணவர்கள் உள்வாங்கும் நிகழ்வு நேற்று (17.01.2026) மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! புதிய மாணவர்களின் பதிவு செயல்முறைகள் நிறைவுற்ற பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியும் பெற்றோர் சந்திப்பும் நடைபெற்றன.
நிகழ்வு 2ம் தர மாணவர்களின் அல்கிராஅத் பாராயணத்துடன் ஆரம்பமானது. அஷ்ஷெய்ஹ் பவாஸ் கபூரி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழிநடத்தினார். கல்லூரி மாணவர்களின் மத்ரஸா கீதம், வரவேற்பு கீதம் மற்றும் 2ம் தர மாணவரின் பாடல் நிகழ்ச்சி ஆகியவை நிகழ்வை மேலும் சிறப்பித்தன.
கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் HM மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரி நிர்வாக சபை உறுப்பினர்கள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அதிபர் அவர்கள் தனது தலைமை உரையில் மார்க்கக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், மாணவர்களும் பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் பற்றியும் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து, அஷ்ஷெய்ஹ் ஜுனைதீன் நூரி அவர்கள் மார்க்கக் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி விசேட உரையாற்றினார். பின்னர், “கல்லூரியின் பொது ஒழுங்குகள், சட்டங்கள் மற்றும் தேவைகள்” என்ற தலைப்பில் அஷ்ஷெய்ஹ் அம்மார் மஹ்மூத் (காஸிமி) அவர்கள் விளக்கமான Presentation மூலம் உரையாற்றினார்.
இறுதியாக, அஷ்ஷெய்ஹ் பாரிஸ் மதனி அவர்கள் நன்றியுரை வழங்க, நிகழ்வு இனிதே துஆவுடன் நிறைவடைந்தது.
06/01/2026
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர் அனுமதி – 2026.
இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை...
26/12/2025
2026ம் ஆண்டுக்கான நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களின் விபரம்
18/12/2025
புதிய மாணவர் அனுமதி - 2026
08/12/2025
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர்கள் அனுமதி - 2026
______________________________________________
புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவுக்கு 2026ம் புதிய கல்வி ஆண்டு ஷரீஆ பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை 2025/12/21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு காஸிமிய்யா வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2026ம் ஆண்டு பாடசாலை கல்வியில் 8ம் அல்லது 9ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் தேகாரோக்கியம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மௌலவி அல்ஆலிம், க.பொ.த சாதாரண தர, உயர் தர கல்விகளையும், கணணி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதியான திறமைச் சான்றிதழ்களைப் இன்ஷா அல்லாஹ் பெறுவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Formஐ நிரப்பவும் அல்லது தமது பெயர், முகவரி, பிறந்த திகதி, பாடசாலையில் இறுதியாக சித்தி அடைந்த தரம், தேக ஆரோக்கியம் ஆகிய விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை கீழ் கானும் முகவரி / மின்னஞ்சல் / WhatsApp அல்லது நேரில் சமர்பிக்கவும்.
https://forms.gle/EgBfaLiFuFU5gVoX8
மேலதிக் விபரங்களுக்கு 0756010034, 0788969384, 0774377788 எனும் இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளவும்.
அதிபர்
காஸிமிய்யா அரபுக்கல்லூரி
புத்தளம்.
25/11/2025
நேற்றைய நாள் (24.11.2025) மலேசியாவின் University Sultan Zainal Abidin (UNISZA) பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக இஸ்லாமிய, சமகால கற்கைகள் (Faculty of Islamic Contemporary Studies) பீட பிரதி பீடாதிபதி கலாநிதி அமான் தாய்மா முஹம்மது செய்ன் அவர்கள் எமது கல்லூரிக்கு வருகை தந்தனர். அவர்களை எமது அதிபர் தலைமையிலான ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.
நிகழ்வின் போது, பல்கலைக்கழக மாணவர்கள் எமது மாணவர்களுக்கு அல்-குர்ஆன் மனனம் மற்றும் அல்-குர்ஆனிய கலைகள் தொடர்பான விளக்கங்களை வழங்கினர். இதனுடன் இரு தரப்பினரும் பரஸ்பர கலந்துரையாடலில் ஈடுபட்டு தமது அனுபவங்களையும் அறிவையும் பகிர்ந்து கொண்டனர்.
பல்கலைக்கழக உபவேந்தர் அவர்கள் எமது கல்லூரி விரிவுரையாளர்களுடன் நட்புறவு கலந்துரையாடலில் ஈடுபட்டு, எமது கல்லூரியின் வரலாறு, கல்வி நடவடிக்கைகள் மற்றும் கற்றல்–கற்பித்தல் முறைமைகள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மேலும், அவர் எமது கல்லூரிக்கான தனது நினைவுப்பதிவையும் கையேட்டில் பதிவு செய்தார்.
இந்த அரிய சந்திப்பில் கலந்து கொண்ட எமது மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் சார்பாக E-Certificateம் வழங்கப்பட்டது.
வருகை தந்த இக்குழுவினருக்கு எமது கல்லூரியின் நினைவாக, மர்ஹூம் மஹ்மூத் ஆலிம் அவர்களின் முத்திரை பொறிக்கப்பட்ட எமது கல்லூரியின் முதல் நாள் உறையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் நிர்வாகத்தினருக்கும், இந்நிகழ்வை நெறிப்படுத்திய அஷ்ஷெய்ஹ் இஹ்ஸான் நவ்வி அவர்களுக்கும் எங்கள் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
28/10/2025
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரிக்கான புதிய மாணவர்கள் அனுமதி - 2026
______________________________________________
புத்தளம் காஸிமிய்யா மத்ரஸாவுக்கு 2026ம் புதிய கல்வி ஆண்டு ஷரீஆ பிரிவுக்கான நேர்முகப் பரீட்சை 2025/12/21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு காஸிமிய்யா வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
தெரிவு செய்யப்படும் மாணவர்கள் 2026ம் ஆண்டு பாடசாலை கல்வியில் 8ம் அல்லது 9ம் தரத்தில் கற்கக் கூடியோராகவும் அல் குர்ஆனைப் பார்த்து திருத்தமாக ஓதக் கூடியோராகவும் தேகாரோக்கியம் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.தெரிவு செய்யப்படும் மாணவர்கள் மௌலவி அல்ஆலிம், க.பொ.த சாதாரண தர, உயர் தர கல்விகளையும், கணணி அறிவையும் மத்ரஸாவிலேயே கற்று அரசாங்க பரீட்சைகளுக்கு தோற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புக்களை மேற்கொள்ள தகுதியான திறமைச் சான்றிதழ்களைப் இன்ஷா அல்லாஹ் பெறுவர்.
விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் 30/11/2025ம் திகதிக்கு முன்னர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Formஐ நிரப்பவும் அல்லது தமது பெயர், முகவரி, பிறந்த திகதி, பாடசாலையில் இறுதியாக சித்தி அடைந்த தரம், தேக ஆரோக்கியம் ஆகிய விபரங்களுடன் சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை கீழ் கானும் முகவரி / மின்னஞ்சல் / WhatsApp அல்லது நேரில் சமர்பிக்கவும்.
https://forms.gle/EgBfaLiFuFU5gVoX8
மேலதிக் விபரங்களுக்கு 0756010034, 0788969384, 0774377788 எனும் இலக்கங்களுடன் தொடர்புக் கொள்ளவும்.
அதிபர்
காஸிமிய்யா அரபுக்கல்லூரி
புத்தளம்.
15/10/2025
வாழ்த்துச் செய்தி
______________________________________________
புத்தளத்தின் முதல் ஜனாதிபதி சட்டத்தரணியாக (President’s Counsel) பதவி உயர்வு பெற்றுள்ள மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் அசார்ட் நவவி அவர்களுக்கு, புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் நம்பிக்கையாளர் சபை, முகாமைத்துவ சபை, அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் சார்பாக இதயம் கனிந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவரது சட்டப்பணிப் பயணத்தில் வெளிப்பட்ட இறையச்சம், உண்மை, நேர்மை, அறிவு, தொண்டுணர்வு, மும்மொழியாற்றல் மற்றும் சமூகநல ஆவல் ஆகியவை இன்று இந்த உயரிய பதவிக்கு காரணமாகியிருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.
அவரது இப் புதிய பதவி மூலம், புத்தளத்தினதும் நாட்டினதும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினதும் கண்ணியத்தை உயர்த்தும் ஒளிக்கதிராக சிறப்பான சேவைகளை வழங்குபவராகவும், இறையச்சம், நீதி மற்றும் உண்மையை நிலைநாட்டும் வீரராகவும் திகழ்வார் என்று எதிர்பார்க்கின்றோம்.
“அல்லாஹ் அவருக்கு மேலும் கௌரவமும் உயர்வும் அளித்து,
அவர் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே சமர்ப்பிப்பதாக ஆக்கி,
இந்த நாட்டிற்கும் சமூகத்திற்கும் இஸ்லாத்திற்கும் அவரின் மூலம் நன்மை அருள வேண்டும்” என பிரார்த்திக்கின்றோம்.
வஸ்ஸலாம்!
வாழ்த்துக்களுடன்,
அஷ்ஷெய்ஹ் HM மின்ஹாஜ் இஸ்லாஹி
அதிபர்
காஸிமிய்யா அரபுக் கல்லூரி - புத்தளம்
20/07/2025
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு
______________________________________________
17.07.2025 வியாழன் ஆகிய இன்று மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு கல்லூரியின் பிரதான கேட்போர் கூடமாகிய மஹ்மூத் ஆலிம் மண்டபத்தில் காலை 08:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை நடைபெற்றது.
கல்லூரி மாணவன் அல்ஹாபில் முஹம்மத் ரஸீப் அவர்களின் அழகிய அல்குர்ஆன் பாராயணத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதிபர் அஷ்ஷெய்ஹ் மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள் வரவேற்புரையையும் தலைமை உரையையும் நிகழ்த்தினார்கள். இவ்வுரையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமைக்கான நோக்கம், மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்கள் வழியுருத்தப்பட்டதோடு நிகழ்வின் பிரதம வளவாளரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இவ்வாரம்ப நிகழ்வில் ஷரீஆ பாட உஸ்தாத் மார்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதனைத்தொடர்ந்து எமது கல்லூரியின் பழைய மாணவர் அல்ஹாபில், அஷ்ஷெய்ஹ், சட்டத்தரணி M.M. சிபான் அவர்கள் முதலாவது பிரதம நிகழ்வின் வளவாளராக கலந்து கொண்டார். இவ்வமர்வு கல்வியின் முக்கியத்துவமும் கற்றல் நுட்பங்களும் எனும் கருப்பொருளை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது.
பின்னர் மாணவர்களுக்கான தேநீர் இடைவேளை வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது பிரதம நிகழ்வின் வளவாளராக பிரபல உளவியல் ஆலோசகர் MNNM ரமீஸ் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டார்கள். இவ்வமர்வு ஆரோக்கியமான உணவும், சுகாதாரமான கல்விச் சூழலும் எனும் கருப்பொருளில் அமைந்திருந்தது.
இந்நிகழ்வின் மேலதிக அமர்வாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கல்விச் சுற்றலா செல்லவுள்ள எமது மாணவர்களுக்கான வழிகாட்டல்களை ஓய்வுநிலை ஆசிரியர் நதீர் அவர்கள் வழங்கினார்கள்.
இறுதியாக நன்றியுரையை அஷ்ஷெய்ஹ் பஸ்லூன் காஸிமி நிழ்த்தியதோடு, அனைத்து நிகழ்ச்சிகளையும் அஷ்ஷெய்ஹ் அம்மார் மஹ்மூத் காஸிமி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
மாணவர்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.