22/10/2025
புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வகுப்பறை பற்றாக்குறையை கருத்தில் கொண்டு 2025/2027 மாணவர்களுக்கான தற்காலிக வகுப்பறையினை அமைத்து தந்த பெற்றோர்களும், நலன்விரும்பிகளுக்கும் பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
எமது பாடசாலையில் காணப்படும் கட்டிட பற்றாக்குறை காரணமாக உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள் இன்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கை சற்று தாமதமாகியது..
இதனை கருத்திற்கொண்டு பெற்றோர்களும் நலன்விரும்பிகளும் மற்றும் அதிரடி whatsapp குழுமத்தினரும் இணைந்து உயர்தர மாணவர்களுக்காக தற்காலிக கொட்டகை கையளிப்பு செய்தனர்.
மழை என்றும் பாராமல் கலந்துகொண்ட சலீம் நானா அவருக்கு பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதோடு, மாணவர்களுக்காக ஒரு சிறந்த உரையையும் நிகழ்த்தி விட்டு சென்றார் .
அவ்வைபவத்தில் சிறப்பு உரையை நிகழ்த்துவதற்காக ரத்மல்யாயா ஜும்மா மஸ்ஜித்தின் இமாம் அன்வர் மௌலவியும் கலந்து சிறப்பித்தார்கள் .
பின்பு மாணவர்களுக்காக A/L பாட அப்பியாச கொப்பிகளும் அதற்கான உபகரணங்களும் சகோதரர் பதாஹ் அவர்களின் உறவினரால் ஸதகதுல் ஜாரிய்யாவாக(அவர்கள் சுகயீனம் காரணமாக அவர்களுக்கான ஆபிய்யாவாகவும் பிரார்த்தனை செய்யுமாறும் கூறி) வழங்கி மாணவர்களை கௌரவித்தனர்.
இதற்காக உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அல்லாஹ் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை வழங்கி வைப்பானாக
இதனை ஒரு நிலையான தர்மமாக வழங்கி வைத்தார்கள்..
இதற்கு முன்னின்று உழைத்த சகோதரர் F.பதாஹ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..இவர் எமது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் மதிப்பிற்குரிய F.பஹிரா ஆசிரியையின் கணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் சேவைக்கு எமது பாடசாலை நிர்வாகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி
அதிபர்
16/10/2025
2025 மனநல வாரத்தை கொண்டாடும் முகமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று வியாழக்கிழமை 2025.10.16 அன்று எமது புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தின் அதிபர் தலைமையில் உளவளத் துணை அலகின் (Counseling Unit) மூலமாக எமது பாடசாலையின் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான "Good Touch and Bad Touch" எனும் தலைப்பில் விழிப்புணர்வு செயலமர்வு புத்தளம் பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உத்தியோகத்தர் CRPO அவர்களினால் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் மாணவர்கள் சமூகத்தில் நல்ல தொடுகை மற்றும் தீய தொடுகைகளை அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்குமான தெளிவு வழங்கப்பட்டது.
நன்றி
அதிபர்
14/10/2025
2025.10.13 தொடக்கம் 2025.10.17 வரை சர்வதேச மன நல வாரம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி எமது பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலய பாடசாலையின் உளவளத்துணை அலகின் மூலம் பல நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை மனநல வாரத்தை கொண்டாடும் முகமாக பதாகை தயாரிக்கப்பட்டு காலை கூட்டத்தில் அதிபர் தலைமையில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பாடசாலை உளவளத் துணையாளர் ஆகியோரால் இப் பதாகை அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் பாடசாலை நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஏற்பாடு செய்த பாடசாலை உளவளத்துணை அலகிற்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை சமூகத்திற்கும் மேலும் பதாகை வடிவமைப்பு அதற்கான நிதி உதவி ஆகியவற்றை வழங்கி வைத்த 2008 O/L மாணவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
அதிபர்
01/10/2025
தில்லையடி முஸ்லிம் மகா வித்யாலயத்தின் வருடாந்த சிறுவர் சந்தை 2025.09.24 அன்று வெகு விமர்சையாக பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் S.பர்ஜானா அவர்களின் தலைமையில் நடைபெற்றது....
12/09/2025
மர்ஹூம் A.L.M. முக்தார் அவர்களின் நினைவாக, அவரது குடும்பத்தினரால் மாணவர்களுக்கான 35 கதிரைகள் மற்றும் மேசைகள் எமது பாடசாலைக்கு ஸதகதுல் ஜாரியா ஆக வழங்கப்பட்டுள்ளன.
இந்த நற்செயல், மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அல்லாஹ் (ஸுப்ஹானஹூ வ தஆலா) அந்த மறைந்தவருக்கு மன்னிப்பும், உயர்ந்த சுவனத்தையும் வழங்குவானாக.
இந்த நன்மையான செயலை மேற்கொண்ட குடும்பத்தினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்நிகழ்வை சாத்தியமாக்கிய பாடசாலை நிர்வாகத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
04/09/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
இன்று நள்ளிரவு வெளியிடப்பட்ட *2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை* முடிவுகளின்படி இதுவரை எமது பாடசாலையில் இருந்து 09 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ் இவர்களுடைய வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்ட வகுப்பாசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், பெற்றார்கள், நலன் விரும்பிகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் எந்தெந்த வகைகளில் இந்த வெற்றிக்காக யார் யாரெல்லாம் உதவினார்களோ அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
அதிபர்
30/08/2025
SWOT கழகத்தின் முயற்சியில் CCTV கண்காணிப்பு திட்டம் கையளிப்பு
எமது பாடசாலையின் வளங்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்க விழுமியங்களை வழுப்படுத்துவதனை நோக்காக்கொண்ட இந்த திட்டம் எமது பாடசாலையின் 2010 O/L Batch பழைய மாணவர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டது.
இத்திட்டம் பாடசலையின் வளங்களை பாதுகாத்து மாணவர்களின் விருத்தியில் பங்களிக்கும் என நம்புகிறோம். இச்செயற்பாட்டிற்கு பங்களித்த SWOT கழகத்திற்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
SWOT - Social Wings Of Thillayadians
31/05/2025
2025 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சையில் முதல் மூன்று நிலைகளைப் பெற்றுக் கொண்ட ஆரம்பப்பிரிவு மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் 30.05.2025 இன்று நடைபெற்ற சின்னம் சூட்டுதல் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஆரம்ப பிரிவில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக அதிபர் S.Farjana அவர்களும் சிறப்பு அதிதிகளாக உதவி அதிபர் Rafeel, SDEC உறுப்பினர் Sufiyan, பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் R.Salfeer ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். பரீட்சையில் அதிகூடிய திறமையைக் காட்டிய மாணவர்களுக்கு நட்சத்திர சின்னங்கள் அணிவிக்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
PRINCIPAL
P/THILLAYIADI MMV
01/03/2025
பு/தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் ஒன்று 28.02.2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிபர் S. பர்ஜானா அவர்களின் தலைமையில் ஆசிரியர்S.H.M சாமித் அவர்களின் நெறிப்படுத்தலுடன் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதில் பெருந்திரளான பெற்றோர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்
வரவேற்பு உரையை அதிபர் S. பர்ஜானா அவர்கள் ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் நோக்கம் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட விருக்கும் ஒழுக்க நெறிமுறைகள் தொடர்பாக ஆசிரியர் S.H.M.சாமித் அவர்கள் தெளிவூட்டலை மேற்கொண்டார். இறுதியாக நன்றி உரையை பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் R.சல்பீர் அவர்கள் நிகழ்த்தினார். ஆசிரியை N.நிபியா அவர்கள் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.