Losmela

Losmela

Share

LOSMELA - LOgic and Scientific MEthod Learners Association

11/05/2013

முஹம்மது (ஸல்) அவர்கள்

பாலைவனத்தில் மலர்ந்து
பாரெங்கும் மனம்
வீசிய பாரிஜாதம்தான்
எங்கள் பயகம்பர் (ஸல்)
அவர்கள்...

அறியாமை
இருள் விரட்ட
அறிவொளி பாய்ச்சிய
அற்புத ஆதவன்
அவர்...
இரை பிடிக்க
வலை பிண்ணும்
சிலந்தி கூட
இவர் எதிரிகளிடம்
பிடியாதிருக்க
வலை பிண்ணியதன்றோ...?

ஒரெழுத்தும் படியாத
உம்மி நபிதான்
ஆனால்
உலகுக்கே உபாத்தியானாரே...

அண்ணல் அவர்கள்
மரணித்தாலும்
அவர் காட்டிய
வழிகள்
இன்னும் அகலமாய்த்தான்
கிடக்கிறது
வாருங்கள்
அண்ணல் வழி
செல்வோம்
அகிலத்திலும்
ஆகிரத்திலும்
ஆனந்தம் பெறுவோம்.

புத்தளம் எம். ஸாலிஹ் அஸீம் நவமணி 20.07.1997

லொஸ்மெலா ஆக்கத்திறன் விருது – 1998

புத்தளத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது அஸீம் அவர்கள் முஹம்மது ஸாலிஹ் – பவுசுல் ஹினாயா தம்பதிகளின் புதல்வராவார். கவி புனையும் ஆற்றலும் வளமான இலக்கிய பிரக்ஞ்சை யும் மிக்கவர். பள்ளிப் பருவம் முதல் பல்வேறு இலக்கிய முயற்சிகளில் அதீத உணர்திறனோடு செயற்ப்பட்டவர். பிரதேச வெளியீடுகளான ‘கலைத்என்றல்’ ‘பெளர்ணமி’ ஆகியவற்றின் உதவி ஆசிரியராகவும் ‘புத்தளம் டுடே,’ ‘கரும்பு’ சஞ்சிக்கைகளின் பிரதம ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். ‘முஸ்லிம் கலாசார இலக்கிய வட்டம்’ செயலாளராகவும் ‘புத்தளம் அலை கலை வட்டம் தலைவராகவும்’ செயற்பட்டு தமது இலக்கிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளார். புத்தளம் சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர் தமது இயற் பெயரில் தேசிய நாளிதழ்கள் மற்றும் சஞ்சிசகைகளில் 1994ம் ஆண்டு தொடக்கம் 2003 வரை ஆக்கங்களை கிரமமாக எழுதி வந்துள்ளார். 1998ம் ஆண்டு LOGIC AND SCIEYTIFIC METHOD LEANERS’ ASSOCIATION (LOSMELA) ‘LOSMELA’ ஆக்கத்திறன் விருது’ அளித்து அவரை கெளரவித்தது. சுமார் 50 கவிகள் வானொலியில் வாசிக்கப்பட்டுள்ளன. 2003ம் ஆண்டு வரை சிறிது பெரிதுமாக 495 ஆக்கங்கள் வெளிவந்துள்ளன அதில் கவிதை – 193 கட்டுரை - 53 சிறுகதை - 27 தொடர் கதை – 01
இவரது படைப்புக்கள் வெளிவந்த ஏடுகள் சில -
மித்திரன், நவமணி, வீரகேசரி, சுடாமணி, ஜனனி. தினகரன் , தினக்குரல் , சங்கமம் . இடி , தினமுரசு, ப்ரியா , தினத்தந்தி ,தினமணி , சுடரொளி , மின்மினி ,அல்-ஹசனாத் , அமுது ...
2003ம் ஆண்டு முற்பகுதியுடன் சாலிஹ் அஸீமின் இலக்கிய படைப்புக்கள் அருகிவிட்டன வாழ்சூழலும் வாழ்வாதாரமும் விலங்கிட்டுவிட்டன எனக் கருதுகிறேன் இவை மனிதனின் ஆக்கத்திறனையும் நகர்வினையும் உறிஞ்சிவிடும். பூலோக கிராமத்தில் தேசமெங்கும் பரந்திருக்கும் புத்தளம் முகநூல் அபிமானிகள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் அவரின் கவி ஆற்றலை செழுமைப் படுத்துவதற்கு கரம் கோற்பது காலத்தின் தேவையாகும். இது சாலிஹ் அஸீம் அவர்களின் இலக்கிய மீள்வருகைக்கு உந்துசக்தியாக அமையக்கூடும். அத்துடன் இவரின் கவிதைகள் தொகுத்து நூலுருவில் வெளியிடுதல் கவிதை இலக்கியத்திற்கு அணி சேர்க்கும், ஏனெனில், பேராசிரியர் கார்த்திகேச சிவதம்பி அவர்களின் வார்த்தையில் கூறுவதாயின் ‘சாலிஹ் அஸீம் ஒரு கவனிக்கப்படாத ஒரு கவிஞன்’

11/05/2013

மெளலவி தாஸின் (நத்வி)
(1932 – 1977 )
அறிவக நளீமிய்யாவின்
அற்றைய நாள் அதிபர் பற்றி
அறிமுகம் கோருவோரின்
அறிவினை என்ன சொல்வேன்
மறிகறை யுடைத் தெரிந்து
மடைத் திறந்தோடும் ஆறாய்
நெறிகலை வகைகள் தந்த
நேசனே தாஸின் ஐயா

(கவி எம்.எஸ்.எம். ஹரிஸ் – 1978 )

1933,07,27 ம் திகதி கம்மல்துறையில் பிறந்தார்கள். சன்மார்க கல்வியை பிரபல மத்ரசாக்களில் கற்று உயர்கல்வியை இந்தியாவிலும் எஹிப்திலும் நிறைவு செய்தார்கள். 1958 ல் ஆசிரியராக நியமனம் பெற்றர்கள். 1973 ல் வெண்டுகோளின் பேரில் பதவியை இராஜினாமா செய்து ‘ஜாமிய்யா நளீமிய்யா’ கலாபீடத்தில் தனது 41 ம் வயதில் ஸ்தாபக அதிபராகும் பாக்கியத்தைப் பெற்றார்கள். Al Al – Haj Moulavi U.M. Thaseen al – Azhari An Nadvi is the Rector of Jamiya Naleemiya. A Master of Arts of Al – Azhari a distnguished graduate of the Nadwatul - Ulama at Lacknow, he is a scholar whose acadamic talants a widly recognised in intellactual circle. He is assited by a band of zealous lecturers who were recruited on the basis of … என மவ்லவி தாஸின் நத்வி அவர்கள் பற்றி விதந்துரைக்கின்றது. (JAMIAH NALEEMIAH – An Introduction)
முற்போக்கு மிக்க சிந்தனையாளரான தாஸின் ( நத்வி ) அவர்கள் பன்முக ஆளுமை மிக்கவர், கவி பாடும் ஆற்றலை இயல்பூக்கமாக பெற்றவர், 99 விருத்தப்பாக்களைக் கொண்ட ‘‘குர் ஆனே கூறாயோ’ என்ற கவிதை சிறப்பு மிக்கதாகும். எனினும் அவரின் படைப்புகள் இளைய தலை முறையினருக்கு மத்தியில் அறிமுகமாகவில்லை, திறனாய்விற்கு உட்படுத்தப்படவில்லை, ‘ஈழத்து இலக்கியத்தில் கவிதைத் துறைக்கு பங்காற்றிய முஸ்லிம் கவிஞர்கள்’ (இஸ்லாமிய சிந்தனை, 2008 ஏப்ரில் – ஜூன்) கட்டுரை ஆதாரமாகும்,


‘கொழுத்திவிடு சத்தியத் தீ
கொழுந்து விட் டெரியட்டும்
அழுத்திச் சொல் அல்லாஹ்வே
அவனன்றி எவருக்கும் அஞ்சோம்
பழுத்த கலை ஞானங்கள்
பண்பு நிறை ஒழுக்கங்கள்
உள்ளத்தில் தூய ஈமான்;
உள்ளவரை அச்சமேனோ’
(‘மறைதாசன்’ தாஸின் நத்வி)

Photos 11/05/2013
விருது வழங்கும் வைபவம் 25/04/2013
25/04/2013

பாராட்டும் விருதும்

பாராட்டும் உற்சாகப்படுத்தலும் மனிதனை வினைத்திறனாக்கும். தண்டனையும் விமர்சனமும் நெறிப்படுத்தும். அடுத்தவரின் திறமைகளையும் சாதனைகளையும் பாராட்டுவதால் நமக்கொன்றும் குறைந்துவிடப்போவதில்லை. அது எமது ஆத்மபலத்தை அதிகரிக்கும். பாராட்டுக்கள்-உளத்தேவை; மனதுக்கு ஒத்தடம்; சமூகநகர்விற்கான
ஏணிப்படி; கௌரவித்தல்- பண்பாடு மிக்க சமூகத்தின் குறியீடு; விருதுகள்- பாரட்டுதலுக்கான நினைவுச்சின்னம்; மறைந்த பின்னும் உயிர்வாழவைக்கும்; பிறருக்கு நல்ல முன்மாதிரிகளை வெளிப்படுத்தத் தூண்டும்; உழைப்பிற்கான வெகுமதி; சமூக அங்கீகாரத்திற்கான அடையாள அட்டை. கஞ்சன் கையை விரிக்கதவன்; மகா கஞ்சன் பாராட்ட வாயை திறக்காதவன்.

தரமுகாமைக்கான சர்வதேச QC100 தங்க விருது ALUFIT ENGINEERS ஸ்தாபகர் மாவனளையைச் சேர்ந்தZ.J.M.Fazil அவர்களுக்கு 2012ல் ஜெனிவாவில் வைத்து வழங்கப்பட்டது. Fazil இப்படிச் சொல்கிறார்; விருதினை கைகளில் ஏந்திய தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. வியாபாரத்தில் ஒரு
விருதினைப் பெறுவது தான் ஒருவரது வியாபாரத்தில் இலாபத்தை விட உயர்ந்ததாக இருக்கும். அது எனக்கு கிடைத்திருக்கின்றது. நான் பட்ட கஷ்டத்திற்கு அல்லாஹ் எனக்கு தந்த பரிசாக இதனைக் கருதுகிறேன். (மீள்பார்வை 2012/நவம்பர் நேர்காணல்)

'அல்லாஹ் இப்ராஹீமை தனது உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான்' (4:125) என பாராட்டுப் பத்திரம் வழங்கவில்லையா? 'முஹம்மத் (ஸல்) அவர்கள் அகிலத்திற்கு ஓர் அருட்கொடை' என அல்லாஹ்வால் விதந்துரைக்கப்படவில்லையா? நபியவர்கள் தமது தோழர்களை 'உண்மைப் படுத்தியவர்'; 'உமரின் நாவில் அல்லாஹ் உண்மை பேசுகிறான்'; 'அல்லாஹ்வின் உருவப்பட்ட வாள்';.... என திறமை அறிந்து பாராட்டவில்லையா? கௌரவப்படுத்தவில்லையா? பரிசுகளை வழங்கி ஊக்குவிக்கவில்லையா? ஆம்
பாராட்டுதலும் உற்சாகப்படுத்தலும் இலக்கினை அடைந்துகொள்ள இஸ்லாம் காட்டும் அழகிய முன்மாதிரிகளாகும். நபி வழியாகும்.

இப்பின்புலத்தில்தான் இஸ்லாம் மார்க்கம் நல்ல விடயங்களை தூண்டுவதற்கு மனித இயல்பறிந்து உற்சாகப்படுத்துகிறது. 'நிலையான தருமங்கள்' (சதகத்துல் ஜாரியா) என்ற விடயத்தை பிரகடனப் படுத்தி நன்மையின் பால் ஆர்வம் ஊட்டுகிறது. மறந்து விட வேண்டாம் பாராட்டுதல்- 'சமூக அடைவுமட்டத்தை மேம்படுத்தும் நெம்புகோல்'. எனவே, 'அடுத்தவர்களை தகுதியறிந்து பாராட்டுவோம் ஆவணப்படுத்துவோம். அதற்கு தகுதியானவர்களாக எம்மை வளப்படுத்துவோம்'.

Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Puttalam
61300