21/11/2025
நூலக நிறுவனத்தினரின் (NOOLAHAM FOUNDATION) புத்தளம் விஜயம்
இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகள் போன்றவற்றை எண்ணிமப்படுத்தி அவற்றை அனைவரும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழியேற்படுத்திக்கொடுக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான நூலக நிறுவனத்தின் பணியாளர் குழுவொன்று புத்தளம் பிரதேசத்துக்கு விஜயம் செய்தது.
திருமதி றஞ்சுதமலர் நந்தகுமார் - பிரதம நிறைவேற்று அலுவலர், அவர்களின் தலைமையில் வந்த இக்குழுவில் திருமதி மியூரி கஜேந்திரன்- எண்ணிமப்படுத்தல் மற்றும் பாதுகாப்புத் துறைத் தலைவர், திருமதி தினுஷா கோகழிநாதன் - எண்ணிம நூலக அலுவலகர் மற்றும் திரு அரசரத்தினம் முகுந்தவாசன் - கள ஆய்வாளர் ஆகியோர் அடங்கியிருந்தனர். https://noolaham.foundation/wiki/index.php/Staff
புத்தளம் மாவட்டத்தில் இதுவரை காலமும் வெளிவந்த அனைத்து வெளியீடுகள் உட்பட நம்முன்னோர் பாவித்த ஏடுகள், புத்தகங்கள் போன்றவற்றுடன் வாய்மொழிவரலாற்றுப் பதிவுகள் போன்றவற்றையும் சேகரித்து எண்ணிமப்படுத்தி (Digitalize) அடுத்த தலைமுறையினருக்குக் கையளிக்கும் நோக்குடன் PILLARS அமைப்பினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று இருநாள் (19, 20 )விஜயம் ஒன்றை நூலக நிறுவனம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தமது விஜயத்தின்போது, புத்தளம் பிரதேசத்தில் உள்ள நூல் சேகரிப்பாளர்களை சந்தித்துடன் கல்பிட்டி, உடப்பு போன்ற பிரதேச சமூக ஆர்வலர்களுடனான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.
புத்தளத்தில் PILLARS அமைப்பினருடனும் சமூக ஆர்வலகளுடனும் கலந்துரையாடலை நிகழ்த்தியதுடன் புத்தளம் பிரதேசத்தில் இச்செயற்பாடுகளுக்கான ஆர்வலர் குழு ஒன்றினை (Puttalam Chapter) உருவாக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
அவர்களின் விஜயத்தின்போது, இப்பிரதேச ஆவணங்களை நூலக வலைத்தளத்தில் தனியாக ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்குக் கொள்கையளவில் இணங்கியமை குறிப்பிடத்தக்கது.
Noolaham Digital Library | www.noolaham.org
Noolaham Multimedia| www.noolaham.media
Noolaham School | www.noolaham.school
13. 11. 2025
15/11/2025
புத்தளம் பிரதேசத்தை ஆவணப்படுத்தல்
இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகள் (Heritage) போன்றவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாத்து அவற்றை அனைவரும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழியேற்படுத்திக்கொடுக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு 'நூலக நிறுவனம்' ஆகும்.
புத்தளம் மாவட்டத்தில் இதுவரை காலமும் வெளிவந்த அனைத்து வெளியீடுகள் உட்பட நம்முன்னோர் பாவித்த ஏடுகள், புத்தகங்கள் போன்றவற்றுடன் . . .
புத்தளம் பிரதேச நாட்டார் பாடல்கள், களிகம்புப் பாடல்கள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றின் குரல் பதிவுகளையும் சேகரித்து . . .
எண்ணிமப்படுத்தி (Digitalize) அடுத்த தலைமுறையினருக்குக் கையளிக்க நாம் மேற்கொண்ட முயற்சியை, நூலகம் நிறுவனம் பெருமனதுடன் ஏற்று, அதனை முன்னெடுக்க முன்வந்திருப்பதனை நன்றியுடன் தெரிவிக்கின்றோம்.
புத்தளம் பிரதேசத்தில் வெளிவந்த அனைத்துவகையான:
♦️புத்தகங்கள்
♦️சஞ்சிகைகள்
♦️பத்திரிகைகள்
♦️துண்டுப்பிரசுரங்கள்
♦️பாடசாலை வெளியீடுகள்
♦️ஓலைச் சுவடிகள்
♦️வாழ்த்துப் பத்திரங்கள்
♦️திருமணம், வரவேற்பு போன்றவற்றுக்கான பழைய அழைப்பிதழ்கள்
♦️குறிப்புப் புத்தகங்கள் (Diary)
♦️ஆலயங்கள் / பள்ளிவாசல்கள் / கோவில்கள் / சங்கங்கள்
வைத்திருந்த பழைய பதிவேடுகள்
♦️பழைய புகைப்படங்கள்
♦️நம் முன்னோர் பாவித்த அறபுத் தமிழ் நூல்கள்
(தலைப்பாதிஹா, ராத்தீபு, மௌலீது போன்றன)
♦️பழைய அகராதிகள்
♦️குடும்ப மரவரைபு (Family Tree)
♦️பழைய உயில் (Last will)
♦️தனியார் நூலக, ஆவண சேகரிப்புக்கள்
♦️பழைய கடிதங்கள் அல்லது குறிப்புகள்
♦️பழைய அறிவிப்புகள், அறிவுறுத்தல்கள், விதிமுறைகள்
போன்றவை இருப்பின் தயவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள். நூலகம் நிறுவனம் Noolaham Noolaham ஊடாக அவற்றை இணையத்தில் பதிவேற்றியபின்னர் அவை மீண்டும் உங்களுக்கு ஒப்படைக்கப்படும்.
அறியத்தரவேண்டிய இறுதித் தினம்: 18. 11. 2025 (செவ்வாய்க்கிழமை)
ஆவணங்களை சேகரிக்கும் தினம் பின்னர் அறிவிக்கப்படும்.
https://noolaham.org/
என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலும் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
PILLARS
தலைவர்: +94 777 48 49 12
செயலாளர்: +94 77 238 1286
PILLARS உறுப்பினர்களுடனும் தொடர்புகொள்ளலாம்.
15.11.2025
15/11/2025
புத்தளம் பிரதேசத்தை ஆவணப்படுத்தல்
இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் அறிவுத் தொகுதிகள், மரபுரிமைகள் (Heritage) போன்றவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாத்து அவற்றை அனைவரும் இலவசமாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வழியேற்படுத்திக்கொடுக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு 'நூலக நிறுவனம்' Noolaham Noolaham ஆகும்.
புத்தளம் மாவட்டத்தில் இதுவரை காலமும் வெளிவந்த அனைத்து வெளியீடுகள் உட்பட நம்முன்னோர் பாவித்த ஏடுகள், புத்தகங்கள் போன்றவற்றுடன் . . .
புத்தளம் பிரதேச நாட்டார் பாடல்கள், களிகம்புப் பாடல்கள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றின் குரல் பதிவுகளையும் சேகரித்து . . .
எண்ணிமப்படுத்தி (Digitalize) அடுத்த தலைமுறையினருக்குக் கையளிக்க நாம் மேற்கொண்ட முயற்சியை, நூலகம் நிறுவனம் பெருமனதுடன் ஏற்று, அதனை முன்னெடுக்க முன்வந்திருப்பதனை நன்றியுடன் தெரிவிக்கின்றோம்.
புத்தளம் பிரதேசத்தில் வெளிவந்த அனைத்துவகையான:
♦️புத்தகங்கள்
♦️சஞ்சிகைகள்
♦️பத்திரிகைகள்
♦️துண்டுப்பிரசுரங்கள்
♦️பாடசாலை வெளியீடுகள்
♦️ஓலைச் சுவடிகள்
♦️வாழ்த்துப் பத்திரங்கள்
♦️திருமணம், வரவேற்பு போன்றவற்றுக்கான பழைய அழைப்பிதழ்கள்
♦️குறிப்புப் புத்தகங்கள் (Diary)
♦️ஆலயங்கள் / பள்ளிவாசல்கள் / கோவில்கள் / சங்கங்கள்
வைத்திருந்த பழைய பதிவேடுகள்
♦️பழைய புகைப்படங்கள்
♦️நம் முன்னோர் பாவித்த அறபுத் தமிழ் நூல்கள்
(தலைப்பாதிஹா, ராத்தீபு, மௌலீது போன்றன)
♦️பழைய அகராதிகள்
♦️குடும்ப மரவரைபு (Family Tree)
♦️பழைய உயில் (Last will)
♦️தனியார் நூலக, ஆவண சேகரிப்புக்கள்
♦️பழைய கடிதங்கள் அல்லது குறிப்புகள்
♦️பழைய அறிவிப்புகள், அறிவுறுத்தல்கள், விதிமுறைகள்
போன்றவை இருப்பின் தயவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள். நூலகம் நிறுவனம் Noolaham Noolaham ஊடாக அவற்றை இணையத்தில் பதிவேற்றியபின்னர் அவை மீண்டும் உங்களுக்கு ஒப்படைக்கப்படும்.
அறியத்தரவேண்டிய இறுதித் தினம்: 18. 11. 2025 (செவ்வாய்க்கிழமை)
ஆவணங்களை சேகரிக்கும் தினம் பின்னர் அறிவிக்கப்படும்.
https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலும் விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
PILLARS
தலைவர்: +94 777 48 49 12
செயலாளர்: +94 77 238 1286
PILLARS உறுப்பினர்களுடனும் தொடர்புகொள்ளலாம்.
15.11.2025
நூலகம்
ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,30,233] பல்லூடக ஆவணங்கள் [47,357] ஈழத்துத் தமிழ்ச் சுவடி நூலகம் [752]
03/11/2025
வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..!
20/10/2025
மலேசியா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் (International Islamic University Malaysia) விரிவுரையாளராக கடமையேற்று இன்று (20.10.2025) மலேசிய பயணமாகவுள்ள எமது உறுப்பினர் கலாநிதி ஆஸாத் சிராஸை வழியனுப்பி வைத்த வேளை..
02/10/2025
petang yang indah
Under the LOI between Puttalam Islahiya Ladies College and Malaysia’s UniSZA university, a group of students from the UniSZA visited Islahiya.
A three-month internship program was designed and offered to them, focusing on learning and teaching experience sharing, interfaith and intercultural harmony, and resource sharing. As part of this program, they visited schools and institutions such as Puttalam Zahira Primary School, Andimunai T.M.V., Ulukkappallam M.M.V., Navatkadu R.C.T.M.V., MH School of Excellence, Mawanalla Aysha Siddiqua Women's Arabic College, Rawlathul Athfal Pre Scshool and the University of Peradeniya.
These students, together with their supervisor, Prof. Rahimah Embong of Malaysia’s Zainal Abidin University, met yesterday evening (01) with members of PILLARS (Puttalam Intellectuals Lobby for Literacy Advancement and Reforms). During this cordial meeting, discussions were held on the region’s educational activities and development initiatives.
புத்தளம் இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரிக்கும் மலேஷிய UniSZA பல்கலைக்கழகத்துக்கும் இடையில் இடம்பெற்றுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ், அப்பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு தொகுதி மாணவிகள் இஸ்லாஹிய்யாவுக்கு வருகைதந்திருந்தனர்.
கற்றல், கற்பித்தல் அனுபவப் பகிர்வு, சமய, சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம், வளப்பகிர்வு போன்றவற்றை அடிப்படியாக்காகக்கொண்ட மூன்றுமாதகாலப் பயிற்சிநெறியொன்று அவர்களுக்கு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதன் ஒரு அம்சமாக, அவர்கள் புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை, ஆண்டிமுனை த. ம. வி., உலுக்காப்பள்ளம் மு. ம. வி., நாவற்காடு றோ. க. த. வி., MH School.of Excellence, மாவனல்லை ஆயிஷா ஸித்தீக்கா பெண்கள் அறபுக் கல்லூரி, Rawlathul Athfal முன்பள்ளிக்கூடம், பேராதனைப் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கும் விஜயம் செய்தனர்.
இம் மாணவிகள் தமது மேற்பார்வையாளரான, மலேஷிய Zainal Abdin பல்கலைக்கழகப் பேராசிரியை Rahimah Embong அவர்களுடன், புத்தளத்தில் இயங்கும் கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான அமைப்பின் (PILLARS) உறுப்பினர்களைநேற்று மாலை (01) சந்தித்தனர். இப்பிரதேசத்தின் கல்விச் செயற்பாடுகள், கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்றன இச்சினேகபூர்வ சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.
02. 10. 2025
24/09/2025
Thrilled to have spent time with the incredible Mr. Asiff Hussein, a renowned archaeologist and author! Our conversation was a fascinating journey through history, culture, and more. His infectious passion and vast knowledge left a lasting impression. Thank you, Mr. Asiff Hussein, for the enriching experience!
A glance at his impressive bibliography reveals a diverse range of interests and expertise:
- Ethnology: "Sarandib: An Ethnological Study of the Muslims of Sri Lanka"
- Linguistics: "Zeylanica: A Study of the Peoples and Languages of Sri Lanka"
- Gastronomy: "Ivilly Pevilly: The Gastronome's Guide to the Culinary History & Heritage of Sri Lanka"
- Sociology: "Caste in Sri Lanka: From Ancient Times to the Present Day"
- History: "The Great Days of Colombo: A Journey of Colombo Through Time As Never Seen Before"
- Islamic Studies: "Tolerance in Islam" (also translated into Sinhala)
His work has garnered international recognition, with publications in esteemed journals like Hamdard Islamicus. Kudos to Mr. Asiff Hussein for sharing his expertise and passion with the world!
10/06/2025
PILLARS பெருநாள் ஒன்றுகூடல்
கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்கள் மன்றத்தின் (Puttalam Intellectuals Lobby for Literacy Advancement and Reforms - PILLARS) பெருநாள் ஒன்றுகூடல் இன்று (10.06.2025) பகல் 1.00 மணிக்கு, புத்தளம் Colombo Face இல் அமைந்துள்ள Blue Ripples இல் இடம்பெற்றது.
'புத்தளம் கற்றொழுகும் சமூகம்' என்ற தூரநோக்கைக் (Vision) கொண்டு, 'ஆதரித்து வாதிடல் (Advocacy), எடுத்துரைத்தல் (Lobbying), ஆற்றல் விருத்தி (Capacity Building), என்பனவற்றினூடாகத் தொடர்ச்சியாகக் கற்கவேண்டிய அவசியத்தை, சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் உணர்த்தித், தரமான கல்விமான்களையும் தலைவர்களையும் உருவாக்குதல்' என்ற பனிக்கூற்றின் (Mission)அடிப்படையில் செயலாற்றி வரும் அமைப்பே PILLARS ஆகும்.
இன்றைய எமது ஒன்றுகூடலின் கெளரவ அதிதியாக, சர்வதேச காலநிலை செயற்பாட்டாளரான (International Climate activist) நேபாள் நாட்டைச் சேர்ந்த அபிநவ் குமார் சௌதாரி கலந்து சிறப்பித்தார். நேபாள சுற்றுச்சூழல் அமைச்சில் பல வருடங்கள் பணியாற்றிய இவர், அந்நாட்டின் Land For Future organization இன் தலைவருமாவார். தென்னாசிய மக்களிடையே உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் செயலாற்றிவரும் குமார் சௌதாரி அவர்கள், இலங்கை நேபாள் - உறவை வலுப்படுத்தும் வகையிலான சில வேலைத்திட்டங்களை, மாணவர்கள் மத்தியில் முன்னெடுப்பதற்காக தற்போது அவர் இலங்கைக்கு விஜயம்செய்துள்ளார்.
புத்தளம், Blue Ripples இல் இன்று இடம்பெற்ற நிகழ்ச்சியின்போது அபிநவ் குமார் சௌதாரி அவர்கள் PILLARS இன் தலைவருக்கு ஓர் அன்பளிப்பை வழங்கி, தனது நட்பை வெளிப்படுத்தினார்.
'தொடர்ச்சியாகக் கற்றொழுகும் சமுதாயம்' ஒன்றை உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, PILLARS அமைப்பினால் கடந்த பெருநாள் காலங்களில், புத்தளம் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
PILLARS Eid Gathering
The Eid Gathering of PILLARS (Puttalam Intellectuals Lobby for Literacy Advancement and Reforms) was held today (10.06.2025) at 1:00 PM at Blue Ripples, located at Colombo Face in Puttalam.
PILLARS is an organization that functions with the vision of creating a “Puttalam Morally Educational Society”, and a mission focused on "Forming quality educationalists and leaders via means of advocacy, lobbying, capacity building and by the realization of the need of continuous learning among all levels of the society".
Today’s gathering was graced by the Special Guest, Mr. Abhinav Kumar Chaudhary, a renowned international climate activist from Nepal. Having served several years in Nepal’s Ministry of Environment, he currently chairs the Land For Future organization.
Mr. Chaudhary is actively involved in strengthening people-to-people relations across South Asia and is currently visiting Sri Lanka to initiate student-led programs that will help foster stronger ties between Sri Lanka and Nepal.
During the event at Blue Ripples, Puttalam, Mr. Abhinav Kumar Chaudhary presented a token of appreciation to the Chairperson of PILLARS, symbolizing his friendship and goodwill.
To emphasize the importance of building a lifelong learning society, PILLARS has previously distributed awareness pamphlets among the people of Puttalam during past Eid festivals. These materials are included herewith.
10.06.2025
15/09/2024
பன்முக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான N. சரவணன்
உடனான கலந்துரையாடல்.
நேற்று (14.9.2024) மாலை 4.30 மணிக்கு புத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையில் ஒரு கலந்துரையாடல் எமது அமைப்பினால் ஒருங்கமைக்கப்பட்டிருந்தது. இதில் எமது பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர். தோழர் சரவணன், உள்ளங்கள் உறவாட தனது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.
பதினேழாவது வயதில் தனது முதலாவது புத்தகமான '1000 Abbreviations' வெளிவந்தது முதல் இனி வெளிவரவிருக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்பு நூல் வரையிலான எழுத்தனுபவங்கள், சரிநிகர் பத்திரிகையில் அச்சாணியாக நின்று பணியாற்றியது முதல் இன்று தனது ஆக்கங்களுக்கு அவர் நெறிமுறை வழுவாது பயன்படுத்தும் AI தொழில்நுட்பம் வரை அவருடனான கலந்துரையாடல் நீண்டு சென்றது.
இந்த நிகழ்வில் கவிஞர் ப. கனகேஸ்வரன் (கேஜி ) அவர்கள் தோழர் சரவவனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு உதவிகளை செய்து தந்த ஸாஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் Mohamed Muhusi உட்பட ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகள்.
28/07/2024
கெளரவிப்பு நிகழ்வு
புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அதிபர்களாக சேவையாற்றி, இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு (SLEAS) உள்வாங்கப்பட்ட ஏ.எம்.ஜவாத், எம். நௌசாத் ஆகியோருக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று, இன்று (27/07) மாலை புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றத்தினால் (PILLARS) ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில், புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழிமூலப் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஓய்வுநிலை அதிபர்கள், அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உட்பட புத்தளம் நகர ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர், அதன் பிரதிநிதிகள் எனப் பல பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன் கெளரவிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
PILLARS அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் School of Excellence இன் அதிபருமான ஹிதாயத்துல்லாஹ் அஜ்மல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த கெளவிப்பு நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.எம். ஜவாத், எம். நௌசாத் ஆகியோருக்கு கெளரவிப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன. கல்விப் புலத்தில் அவர்களின் கடந்தகால சேவைகளை PILLARS இன் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எஸ்.ஏ.சீ.பீ மரைக்கார் சபையில் நினைவுகூர்ந்தார்.
நிகழ்வின் பிரதான உரையை PILLARS அமைப்பின் தலைவர் இஸட். ஏ. ஸன்ஹிர் நிகழ்த்தினார். புத்தளம் மாவட்டத்தில் 2500 சதுர கி.மீ. நிலப்பரப்பில் அமைத்துள்ள புத்தளம் கல்வி வலயம், மாவட்டத்தின் 80 சதவீத நிலப்பகுதியை உள்ளடக்கியுள்ளது. இக் கல்வி வலயத்தில் 213 பாடசாலைகள் காணப்படுகின்றன. சுமார் 90,000 மாணவர்கள் இங்கு கல்வி பயில்கின்றனர். 3000 ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். புத்தளம் வலயக் கல்விப் பணிமனையில் மிகக் கடுமையான ஆளணிப் பற்றாக்குறை நிலவுகின்றது. இப்பின்னணியில் அதிபர்களும் ஆசிரியர்களும் எதிர்நோக்கும் சிரமங்களை சுட்டிக்காட்டி, புத்தளம் கல்வி வலயம் ஆகக் குறைந்தது மூன்றாகப் பிரிக்கப்படல் வேண்டும் என்ற ஆலோசனை இங்கு முன்வைக்கப்பட்டது.
இந்த கெளரவிப்பு நிகழ்வு மாலை 6.30 மணியளவில் PILLARS அமைப்பின் செயலாளர் எம்.ரி. ரினாஸ் முகம்மத்தின் நன்றியுரையுடனும் துஆப் பிரார்தனையுடனும் இனிதே நிறைவுற்றது.
06/07/2024
PILLRS விடுக்கும் அனுதாபச்செய்தி
சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான அல் ஹாஜ் எம்.எம். இக்பால் அவர்கள் காலமானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சட்டத்தரணி இக்பால் அவர்கள் புத்தளம் சாஹிறாவின் பழைய மாணவர். புத்தளத்தின் மூத்த கல்விமான்களுள் ஒருவர். நமது நகர கல்வி எழுச்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றவரும் கூட.
புத்தளம் ஸாஹிறாவில் இறுதியாக இடம்பெற்ற பழைய மாணவர் சங்கத் தெரிவின்போது அதன் செயலாளர் பதவியைப் பொறுப்பெடுக்கத் தயாராக இருந்தார். வயது மூப்பைப் பொருட்படுத்தாது, தனது சக்தியைப் பிரயோகித்து, ஸாஹிறாவுக்கென சில செயற்திட்டங்களை முன்னெடுக்க ஆர்வமாக இருந்தார். எனினும் பின்னர், தாராள மனதுடன் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
எமது, கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றம் (PILLARS) தொடங்கப்பட்ட காலம் முதல், அதன் ஆலோசகராக இருந்து எமக்கு உதவுவதில் முன்னின்று உழைத்தவர் சட்டத்தரணி இக்பால் ஆவார். புத்தளத்தின் பிரபல பாடசாலைகளில் அவ்வப்போது ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதில் தனது அனுபவ வாயிலாக எமக்கு வழிகாட்டி எம்முடன் கைகோர்த்து உழைத்த பெருந்தகை அவர்.
சமூக விவகாரங்களில் ஆர்வம்கொண்ட துறைசார் நிபுணர்களின் சேவைகளை அவர்கள் வாழும் காலத்திலேயே, அவர்களை மதித்துப் பெற்றுக்கொள்ள சமூகம் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அவர்கள் விட்டுச் செல்லும் இடைவெளியை நிரப்புவதற்கான ஏற்படுகள் செய்யப்படுதல் வேண்டும். மறைந்த பின்னர் கைசேதப்படுவது பயனற்றது.
மெளலவி முனீர் அவர்களுக்குப் பின்னர், PILLARS மற்றுமொரு ஆளுமையை இழந்துள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக. அவரின் பிரிவால் துயருறும் அனைவருக்கும் மன சாந்தியை அளிப்பானாக.