Pungudutivu Sithivinayagar MV OSA

Pungudutivu Sithivinayagar MV OSA புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்

புங்குடுதீவு சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம்

Pungudutivu Sithivinayagar Mahavidiyalayam Old Students Association

12/09/2023

புங்குடுதீவு ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய பாடசாலை சமூகத்தினால், பாடசாலைக்கான விருப்பு பக்கம் (Like Page) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பக்கம் எமது பாடசாலை மாணவச்செல்வங்களின் கல்வி, கல்விசாரா செயற்பாடுகள் மற்றும் எமது பாடசாலை தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் போன்ற தகவல்கள் பதிவிடப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.

எமது மாணவர்களின் நலன்களில் அக்கறை கொண்ட நீங்கள் அனைவரும் எமது விருப்பு பக்கத்தில் இணைந்து என்றும் எம்மோடு பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதை தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

https://www.facebook.com/profile.php?id=100089396419211&mibextid=LQQJ4d

College & university

எமது பாடசாலையின் ஆசிரியர்தின விழா கௌரவிப்பு
10/10/2017

எமது பாடசாலையின் ஆசிரியர்தின விழா கௌரவிப்பு

இன்று(22.09.2017) மாலை 2 மணியளவில் எமது பாடசாலையின் பழையமாணவர்சங்கக்கூட்டம் அதிபர் றீகன் தலைமையில்  நடைபெற்றது. சுமார் 3...
22/09/2017

இன்று(22.09.2017) மாலை 2 மணியளவில் எமது பாடசாலையின் பழையமாணவர்சங்கக்கூட்டம் அதிபர் றீகன் தலைமையில் நடைபெற்றது. சுமார் 35 பழையமாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்

சங்கத்தின் புதிய செயற்குழு தெரிவும் இடம்பெற்றது.
ஏகமனதாக பின்வரும் தெரிவுகள் இடம்பெற்றது

*தலைவர்: பதவி வழி அதிபர்
*உபதலைவர்: சு.நித்தியானந்தன்
*செயலாளர்: ஐ.பரமேஸ்வரன்
*உப செயலாளர்: த.தவரூபன்
*பொருளாளர்: ந.பிறேம்குமார்

நிர்வாக உறுப்பினர்கள்
--------------------------------------
1.ந.தினேஸ்
2.வை.சசிக்குமார்
3.ஓ.தர்சிகா
4.ஜீ.லெருசிகா
5.மு.தில்லையம்பலம்
6.ஞா.சரண்யா

அத்துடன் பாடசாலை அதிபரால் பாடசாலையின் தேவைகள் குறித்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

பின்வரும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன
1.பாடசாலையின் நுாற்றாண்டு விழாவின் போது அதன் பெயரில் சேகரிக்கப்பட்டு நிதியத்தில் தனியாக வைப்பிலிடப்பட்டுள்ள நிதியினை பழையமாணவர்சங்கத்தின் ஊடாக கையாள்வதற்குரிய ஏற்பாடுகளை செய்தல்.

5ம் 6ம் வடடாரத்தில் தற்போது ஒரே ஒரு பாடசாலையே உள்ளநிலையில் அதன் நன்மைகள் பாடசாலைக்கு முற்றிலுமாக கிடைக்க வழிசெய்யப்படவேண்டும்.

பாடசாலை பௌதீகமற்றும் கல்விசார் நடவடிக்கைகளில் நிதிப்பற்றாக்குறையில் உள்ளமையாலும் மாணவர்கள் வறுமை நிலையில் கல்வி கற்பதனாலும் அதற்கான செய்ற்திட்டங்களை பழையமாணவர்சங்கம் செய்ற்படுத்துவதற்கும் மேற்படி நிதியினை பெற்றுக்கொள்ள வழிசெய்யப்படவேண்டும்

2. பழையமாணவர்சங்கத்தினை மேலும் பலம்படுத்தும் முகமாக பொருத்தமான புதிய யாப்பினை வரைதல் உறுப்புரிமையினை அறிமுகப்படுத்தல்

3.பழையமாணவர்சங்கத்தினால் இணையத்தளம் உருவாக்கப்பட்டு அதில் பாடசாலைத்தேவைகள் பகிரப்படல்

4.பாடசாலைக்கு மேலும் காணிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்

5.பாடசாலைக்கு புதிய கட்டிடம் ஒன்றிற்கான முன்வரைபினை தயாரித்தல்

6.பாடசாலையின் மின்சார வசதியை பாதுகாப்பான முறையில் மீளக்கட்டியமைத்தல்

7. பாடசாலையின் நிறுவனர்தின விழா பரிசளிப்பு விழாவினை ஒருதினத்தில் நடாத்தல்

8.மாணவர்களுக்கு காலை நேர போசாக்கு உணவுக்கு உதவுதல்

9.பாடசாலை மாணவர்களின் விளையாட்டு மற்றும் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பழையமாணவர் சங்கம் தொடர்ந்து உதவுதல்

10. வெறுமனே கொப்பி மற்றும் ஆடைகள் வழங்கும் செயற்பாடுகளை விடுத்து ஆக்கபுர்வமான உதவிகளை பாடசாலைக்கு வழங்குதல்

ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நிர்வாக சபையினை மாதம் ஒருமுறை கூட்டுவதற்கும் முடிவெடுக்கப்பட்டது

செயலாளர்
பழையமாணவர் சங்கம்
புங்குடுதீவு சித்திவிநாயகர் மகாவித்தியாலயம்
22.09.2017.

18.1.2014 நடைபெற்ற எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா நிழற்படங்கள் எனது கமராவில் சிக்கியவை இவை. காலை நிகழ்வில் தீவகத்தினை ...
19/01/2014

18.1.2014 நடைபெற்ற எமது பாடசாலையின் நூற்றாண்டு விழா நிழற்படங்கள் எனது கமராவில் சிக்கியவை இவை.

காலை நிகழ்வில் தீவகத்தினை சேர்ந்த பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுனரின் செயலாளர் திரு இளங்கோவன் கலந்துகொண்டார் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சத்தியசீலன் உள்ளிட்ட பல மூத்த கல்வியதிகாரிகள் கலந்துகொண்டனர். மாலை நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை கலந்துகொண்டார் சிறப்பு விருந்தினராக பேராசிரியர் சிவலிங்கராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் கெளரவிப்புகள் இடம்பெற்றன. முன்னாள் அதிபர் திரு தர்மலிங்கம் மனைவியுடன் வருகைதந்திருந்தார்.

பல பழையமாணவர்கள் கிராமத்தவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து கலந்து சிறப்பித்து பழைய நினைவுகளை மீட்டனர்.

இறுதியாக மண்ணின் மைந்தனான எஸ் ஜி சாந்தனின் இசை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவுற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது.

படப்பிடிப்பாளரிடம் இருந்து படங்கள் கிடைத்ததும் மிகுதி தரவேற்றப்படும். - த.தவரூபன் [0094 777 563213]

பாடசாலையின் நுாற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி  18ம் திகதி காலை நடைபெறுகிறது மலரும் அன்று வெளியிடப்படுகிறது. அனைவரையும் க...
14/01/2014

பாடசாலையின் நுாற்றாண்டு விழா எதிர்வரும் சனவரி 18ம் திகதி காலை நடைபெறுகிறது மலரும் அன்று வெளியிடப்படுகிறது. அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் நுாற்றாண்டுவிழாக்குழுவினரும் பாடசாலைடி சமூகமும் கேட்டுக்கொண்டுள்ளனர். மாலை பாடகர் சாந்தனின் இசைக்கச்சேரியும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நூற்றாண்டு விழாவுக்காக (17.1.2014) பாடசாலை (புங்/சிறீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்) தயாராகி வருகின்றது அன்பளிப்பு செ...
22/11/2013

நூற்றாண்டு விழாவுக்காக (17.1.2014) பாடசாலை (புங்/சிறீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம்) தயாராகி வருகின்றது அன்பளிப்பு செய்யப்பட்ட காணிகளை இணைத்து மதில்கட்டுமானப்பணிகள் மற்றும் புனரமைப்பு வேலைகள் eநடைபெறுகின்றன .இன்றைய நிலையில் எடுக்கப்பட்ட படங்கள். நிறுவனர் விசுவலிங்கம் அவர்களுக்கு சொந்த செலவில் அவரது பேரனால் சிலை நிறுவப்பட உள்ளது. அதற்கு பொருத்தமான இடமும் இன்று அடையாளம் காணப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு -தவரூபன்

Old sub post office removed. School getting more land
17/10/2013

Old sub post office removed. School getting more land

02/10/2013

கடந்த ஞாயிறு 29.9.2013 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் யாழ் புங்குடுதீவு சித்திவிநாயர் மகா வித்தியாலயம் நூற்றாண்டு விழா சம்பந்தமான கூட்டம் தலைவர் பேராசிரியர் குகபாலன் தலைமையில் நடைபெற்றது

அதிபர் கலைநாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் மற்றும் பழையமாணவர்களான மீனாட்சி ஆசிரியை தவரூபன்( மலராசிரியர்), கமலநாயகி ஆசிரியை (செயலாளர்) , ஓய்வு பெற்ற தபாலதிபர் தங்கராஜா( பொருளாளர்) , ஆ.விசுவலிங்கம், நடராசா, பரமேஸ்வரன், தியாகராஜா(ஓய்வு பெற்ற ஆசிரியர்) தனபாலசிஜங்கம் , பிரேம்குமார் (மரணவிசாரணை அதிகாரி) ஆகியோர் கலந்து கருத்துக்களை பரிமாறினர்.

நன்கொடையாக கிடைத்த காணிகள் பற்றியும் வாங்கப்படவேண்டிய காணிகள் பற்றியும் பேசப்பட்டது.பழைய மாணமாணவர் குழுக்களின் ஊடாகவும் பழையமாணவர்கள் ஊடாகவும் கிடைத்த கிடைக்க இருக்கின்ற பண உதவிகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதில் கனடாவில் இருந்து 622000 ரூபா கிடைத்திருப்பதாகவும் பிரான்சில் இருந்து ஒருதொகைப்பணம் (550000) வர உள்ளதாகவும் , அதைவிட சில நபர்களால் சிறு சிறு தொகைகள் அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது கையினை இன்னும் வந்தடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. (அவை பற்றி இணையத்தளத்தில் முழுமையாக பின்னர் அறியத்தரப்படும்) எனினும் பௌதீக வளங்களை மேம்படுத்த திருத்த வேலைகள் மதில் வேலைகள் செய்து முடிக்க கிடைக்க உள்ள பணத்தொகையிலும் நிறைய தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.கனடாப்பணம் 3 இல் 1 பங்கினை மட்டுமே செலவழிக்க அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது இருப்பினும்

அவசியமான பல வேலைத்திட்டங்கள் செய்யப்படவேண்டியுள்ளது

மலசல கூட புனரமைப்பு
சுற்று மதில்
முகப்பு வளையி
தீந்தை பூசுதல்
நிலம் பூசுதல்
வளாகத்தினை அழகுபடுத்தல்

என்பன முக்கிய தேவைகளாகவும் , பாடசாலைத்தோற்றத்தினையும் வசதிகளையும் வழங்குவதற்கு அவசியமானதாகவும் உள்ளது. இருப்பினும் சில நாடுகளி்ல் இருந்து பணம் அனுப்ப விரும்புபவர்கள் நிலையான வைப்பில் இடுவது பற்றி வலியுறுத்துவதாக தெரிகிறது முதலில் நாம் பாடசாலையின் மேற்படி பௌதீக வளங்களை புனரமைக்கவேண்டும் அதன் பின்னர் நிலையான வைப்பிட்டு அதனை சிறிது சிறிதாக பயன்படுத்துவது பற்றி சிந்திக்கலாம்.என கரத்து பரிமாறப்பட்டது.

பணத்தினை இனிவரும் நிர்வாகங்கள் சரிவர பயன்படுத்தாத பட்சத்தில் அதனது இலக்கு பொய்த்துவிடவும் வாய்ப்புள்ளது எனவே தற்போது செய்யக்கூடிய வேலைத்திட்டங்களை செய்து ஒரு கட்டுக்கோப்பான வளங்களுடன் கூடிய பாடசாலையினை நுாற்றாண்டு விழாவுக்கு முன்னதாக ஏற்படுத்தவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது

நூற்றாண்டு விழா தை மாதம் 20 அளவில் திட்டமிடப்படுகிறது. நிதி கையாளுகைகள் பற்றி கவலைப்படத்தேவையில்லை என்றும் சகல விடயங்களும் வங்கி ஊடாகவே செய்யப்படும் என்றும் கணக்கு வழக்குகள் நேர்மையாக பேணப்படும் என்றும் உறுதி கூறப்பட்டது.

நூற்றாண்டு விழாவுடன் பௌதீக வளங்களை கொஞ்சம் பெருக்கவேண்டியுள்ளது பின்னர் மற்ற உதவிகள் பற்றி சிந்திக்கலாம். மற்ற உதவிகளுக்கு நிலையான வைப்பில் இடவேண்டும தான் ஆனால் இப்போது முக்கியம் பாடசாலையினை வளமுள்ளதாகவும் வசதியுளள்தாகவும் மாற்றவேண்டும் . மாணவர்களிடத்தில் ஆர்வத்தினை இது ஏற்படுத்தும். அதிபர் எல்லாவற்றையும் பழையமாணவர்கள் ஊடாகவும் அந்த சங்கங்களின் ஊடாகவும் செய்யவே விரும்புகின்றார்..இருப்பினும் அவரது வழிகாட்டலிலேயே சகல நடவடிக்ககைகளும் நடைபெறும். நிதி வியடத்தில் அதிபர் அதனை நேரடியாக கையாள விரும்பவில்லை என்று தெரிகிறது. அது அவரது நிர்வாக நடைமுறைகளுக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்பதும் பல அரச விதிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவேண்டிய தேவை இருக்கும் என்றும் கூறப்பட்டது. எனவே தனது வழிகாட்டலில் சபையே சகலதையும் செய்யுமாறும் தான் அதனை மேற்பார்வை செய்வதாகவும் கூறினார்.

ஒருதொகுதி சுற்றுமதில் மற்றும் மலசல கூடத்தினை புனரமைக்கும் வேலைகளை உடனடியாக ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்ககிறது.

அத்துடன் மலர்க்குழு நுாற்றாண்டு விழா மலரை சிறப்புற ஒர ஆவணமாக வெளியிட தனது பணிக்களை இப்போதே ஆரம்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.மலராசிரியராக தவரூபன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

நுாற்றாண்டு விழா சபை சார்பாக
-தவரூபன்

Address

Pungudutivu

Telephone

0777563213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pungudutivu Sithivinayagar MV OSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category