21/07/2026
🎓 க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா 🌸
இன்று தி/தி/புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில், அதிபர் S. சியானா அவர்களின் தலைமையில், க.பொ.த. (சாதாரண தரம்) 2025/2026 பரீட்சையில் உயர்தரம் கற்பதற்கான தகுதியைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
🌟 இவ்வாண்டு 9A சித்தியைப் பெற்ற பழில் முஹம்மது பஷீஹ் மாணவர் பொன்னாடை போர்த்தி, மாலை, பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி விசேடமாக கௌரவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்ற ஏனைய மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களால் மாலைகள் மற்றும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
💐 அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உங்கள் உயர்கல்விப் பயணம் சிறப்பாக அமையவும், எதிர்காலம் வெற்றிகளாலும் சாதனைகளாலும் நிரம்பியதாக அமையவும் வாழ்த்துகிறோம்.