11/09/2025
இவ்வாண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக தோற்றிய விசேட தேவையுடைய மாணவர்கள் மத்தியில் எமது பாடசாலை சார்பாக தோற்றி சித்தி பெற்று எமது பாடசாலைக்கும் திருகோவில் கல்லி வலயத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும் அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்று எமது வித்தியாலய அதிபர் தலைமைவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் மெதடிஸ்த தேவாலய போதகர், திருகோவில் வலயக் கல்லி பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. A. நசீர் சேர்அவர்களும், எமது வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் தற்போது பொத்துவில் மத்திய கல்லூரியின் அதிபராக கடமையாற்றிவரும் திரு.நபீஸ் சேர் அவர்களும் பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.T.உதயகுமார் சேர் அவர்களும் விசேட கல்வி இணைப்பாளர் திரு.S.விவேகாநந்தராஜா சேர்அவர்களும், ஆரம்க் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.K.ஜெயந்த அவர்களும், Deaf Link அமைப்பின் எமது பிராந்திய இணைப்பாளர் திரு. ரொசான் அவர்களும், திகோ/விபுலானந்த வித்யாலய அதிபர், திகோ/ இன்ஸ்பெக்டர் ஏத்தம் அ. த. க. பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிதிகளால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று மூன்று மாணவர்களுக்கும் அவர்களை சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள வழிப்படுத்திய ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.