Aadil Assoory

Aadil Assoory I would like to present Al-Qur'an,Qaseedha and Islamic thoughts. Pray for my successful service in this precious task. Thanks for your support
MHM.

Aathil Assoory (Sahwi,Madeny)

20/10/2024

السلام عليكم ورحمة الله وبركاته
முஸ்லிம்களில் சிறந்தவர் யார் ?

இந்த சூழ்நிலையில் இந்த ஆன்மீக பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக இருப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

எனது அன்பு உறவுகளே!

எமது நாட்டில் எதிர்வரும் நவம்பர் 14ல் பாராளுமன்றத் தேர்தல் நடைபறப்போகிறது என்பது நாம் அறிந்த விடையமாகும். இந்த தேர்தலில் சிலர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் தாம் ஆதரிக்கின்ற மற்றும் ஆதரிக்காதவர்களும் அடங்குகின்றனர். தேர்தல் வருவதற்கு முதல் இந்த தேர்தல் காலத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எமது தாய், தந்தை, உறவினர்கள் , நாம் ஆதரிக்கின்ற வேட்பாளர்கள் உட்பட எல்லோரையும் விடவும் நாம் நேசிக்கின்ற எமது உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளை நாம் எமது நினைவில் கொண்டு வருவோம்.

குறிப்பாக தேர்தல் காலங்கள் வந்தால் எம்மில் சிலர் நாவையும், கரத்தையும் எமது சில முஸ்லிம் சகோதரர்களின் உள்ளங்களை நோவினைப் படுத்துவதற்காக பயன்படுத்துகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் எம்மை சைத்தான் அல்லாஹ்வின் ஞாபகத்தை இல்லாமல் செய்கின்றான். மற்றும் அவன் இந்த தீய செயலை செய்வதில் ஆர்வத்தை தூன்டுகிறான். எமக்கு அல்லாஹ் ஹறாமாக்கிய எமது சகோதரனின் மானத்திலும் விளையாடுவதற்கு இது அல்லாஹ் தடுத்த விடையம் என்பதை நாம் கொஞ்சமும் சிந்திக்காமல் அதில் மேலும் அவன் ஆசையை அதிகரிக்கச் செய்கிறான்.

எனது அன்பு உறவுகளே!

وعن عبدالله بن عمرو بن العاص - رضي الله عنهما - يقول: إن رجلًا سأل رسول الله صلى الله عليه وسلم: أي المسلمين خيرٌ؟ قال:((من سلم المسلمون من لسانه ويده)) رواه البخاري ومسلم

முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே சிறந்தவர்; (அவரது இஸ்லாமே சிறந்தது)” என்று பதிலளித்தார்கள் (புகாரி,முஸ்லிம்).
பல மார்க்க அறிஞர்கள் இந்த செய்தியிலிருந்து மிக முக்கியமான ஒரு விளக்கத்தைச் சொல்கிறார்கள் அதாவது ஒரு முஸ்லிமை இவ்வாறு நோவினை செய்யக் கூடியவன் பூரணமான முஸ்லிமாக மாட்டான்.

அதே போன்று நாம் பேசக் கூடிய மற்றும் முக நூலில் பதிவிடக் கூடிய விடயங்கள் அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அதே போன்று றகீப்,அதீத் என்ற மலக்குமார்கள் நாம் பேசக் கூடிய வார்த்தைகளை பதிவு செய்கிறார்கள். (ஸூறா காப் வசனம் 18ல் مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ)

எல்லாம் நாளை மறுமை நாளில் எம் முன் கொண்டு வரப்படும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அதே போன்று இந்த தீய செயல்களால் நோவினைக்கு உள்ளா கின்ற எமது சகோதரன் நாளை மறுமை நாளில் அவனது பாவங்களை எமக்கு தந்துவிட்டு எமது நன்மைகளை எடுத்துக் கொண்டு அவன் இலகுவாக சுவனம் நுழைந்து விடுவான். நாம் செய்யக் கூடிய நன்மைகளே மிகக் குறைவு அதையும் அந்த சகோதரன் பறித்து விட்டால் எமது நிலைமை என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

எனவே முடியுமான வரை இந்தக்காலத்தில் மட்டுமல்லாமல் எல்லா நிலைகளிலும் நாம் எமது நாவையும் கரத்தையும் பாதுகாப்பதற்கு முயற்சிப்போமாக!

வல்ல அல்லாஹ் எம் அனைவருடைய பாவங்களை மன்னித்து அவன் தயாரித்து வைத்திருக்கக் கூடிய சுவனத்தில் நபி (ஸல்) அவர்களோடு நுழைவிக்கச் செய்வானாக.
هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم

MHM. ஆதில் சூரி (ஸஹ்வி,மதனி)
2024.10.20

26/06/2024
23/11/2023

Please share it jazakkallahu khairen

01/11/2023
நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந...
09/08/2023

நபியே! இந்த விஷமிகளைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்) நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.)

17/06/2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ *

*உழ்ஹியா சம்பந்தமான மார்க்க விளக்க வகுப்பு**

இன்ஷா அல்லாஹ் நமது தானா அல்பு சைரி ஜும்ஆ பள்ளி வாசலில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின்னர் "உழ்ஹியாவும் அது தொடர்பான சட்டங்களும்" எனும் தலைப்பிலான மார்க்க விளக்க வகுப்பு ஒன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விளக்க வகுப்பில் கேள்வி பதிலுக்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆதலால், இம்முறை உழ்ஹியா கடமையை நிறைவேற்ற ஆவலோடு இருக்கின்ற சகோதரர்கள் இந்த வகுப்பில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம். ஆர்வம் உள்ள ஏனைய சகோதர்களும் இதில் கலந்து கொள்ள முடியும்.

17/05/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது தானா அல் புசைரி ஜும்ஆ பள்ளியில்
எதிர்வரும் வியாழக்கிழமை மஃரிப் தொழுகையை தொடர்ந்து மார்க்க வகுப்பும் இஷா தொழுகையை தொடர்ந்து பயான் நிகழ்வும் இடம்பெறும் எனவே அனைவரும் அதற்காக நேரத்தை ஒதுக்கி அதில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்

Dhawa Unit - Palamunai

12/04/2023

Surah Al Qiyama | سورة القيامة | Aadil Assoory | عادل الصوري

Address

Palamunai

Alerts

Be the first to know and let us send you an email when Aadil Assoory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Aadil Assoory:

Shortcuts

Share

Category