26/04/2014
சமுதாயம் பின் தங்கிக் காணப்பட்ட காலங்களில் கல்வி அறிவில் முன்னணி வகித்து வந்த எமது பாடசாலைகள் நவீன வளர்ச்சியின் எழுச்சியில் இருந்து கொண்டும் முட்டாள்களை அறுவடை செய்யும் நிலைக்கு இன்று தள்ளப் பட்டு உள்ளது.ஏன் ?
இன்று மாணவன் என்றால் பையில் கொஞ்சம் பைசா,கையில் ஒரு போன்,உதட்டில் ஒரு சிக்கரட்,வாயில் கொஞ்சம் கஞ்சா, படிக்கும் போதே பொண்டாட்டி,இருந்தால் அவர் தான் பெரியவர் அவர் தான் பெரும் சாதனையாளர்.இதை எல்லாம் படிப்பரிறி வே இல்லாது மாடு மேய்ப்பவர் கூட (மன்னிக்கவும் )செய்து விடலாம் என்பதையும் ,.எது தேவை எது சரி எது பிழை என்பதை காலத்தின் ஓட்டத்துடன் வரக் கூடிய ஆசிரியர்களால் உணர்த்தப் பட வேண்டும்.
பல பாடசாலைகளில் அதிபர்களுக்கு #முதுகெலும்பு வாங்கிக் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை உள்ளது.ஆளுமை இல்லாமல் சந்திக்கு வந்து பந்திக்கு வரப் பயப்பட்டால் உங்கள் சம்பளம் கைகளில் கிடைக்கும் ,மாணவர்களின் வாழ்க்கை அம்பலத்தில் தவிக்கும் என்பதை மனதில் நினைத்து தனி முடிவெடுத்து பாடசாளையை வழி நடத்திட முதுகெலும்புடன் துணிந்திட வேண்டும்.
அடுத்து கற்பிக்கும் ஆசிரியர்கள் தற்பெருமைக்கு போடும் போராட்டம். நீ புதியவன் நான் பழையவன் நீ வெளி ஊரான் நான் உல் ஊர்காரன் அடங்கி இரு என்று ஒருவரை ஒருவர் அடக்கிடும் போராட்டம் இதிலும் நாசமாக்குவது மாணவர்களின் கல்வி மட்டுமே அல்லாமல் உங்கள் பிழைப்பும் வயிறும் அல்லவே ..
இதை எல்லாம் விட இன்னும் ஒரு சிலர தனது அழகினை மூலதனாமாய் வைத்து #விபச்சாரம் செய்யும் விபச்சாரியைப் போல் தமது அறிவினை மூலதனமாய் வைத்து #டியுசன் கிளாஸ் வந்தால் மாத்திரம் தான் கட்பிபேன் என்ற கொள்கையில் இருப்பார் இவர்கள் திருந்த வேண்டும்,திருத்தப் படவேண்டும் இல்லை என்றால் ஊரை விட்டு அடித்துத் துரத்தப் படவேண்டும்.
வெளி நாட்டில் வாழ்க்கை,கையில் பணம் இருந்தால் போதும், என்ற நிலை மாறி விட்டதை அழகாய் நிருபித்துக் காட்டுகிறது இன்றைய பாடசாலை நிர்வாகக் குழுக்கள்..எங்கோ ஒரு முதலாளியாய் இருந்து கொண்டு செய்யும் அட்டகாசம் உள்ளதே ...சரிந்து போன பாடசாலை மானத்தை நிமிர்த்தி விட விளையாட்டினை கை பிடிகிறார்கள் அதன் மூலம் பாடசாலையை பிரபல்யப் படுத்தலாமாம்..அல்லது கண்காட்சி கலைவிழா என்று பாடசாலையை கலை கட்டிட முயல்கிறார்கள் இதற்கு உடந்தையாக கூத்தடிக்கும் சில ஆசிரியர்கள் வேறு ..இது போன்ற பொறுப்பற்ற #குட்டிக்கழுதைகள் எட்டி உதைக்கப் படவேண்டும்.
ஒவ்வொரு மாணவனும் எனது ஊர் எனது பாடசாலை எனது எதிர்காலம் என்ற சிந்தனை வட்டத்துக்குள் தெளிவாக,தெளிவான ஆசிரியர்களால் கொண்டு வரப் படவேண்டும்.கல்வி முதல் நிலைப் படுத்தப் படவேண்டும் ,மாணவர்கள் ஆசிரியர்களால் சரியாக இனம் காணப் பட்டு அதற்கேற்றவாறு விளையாட்டு,கலை என்று அவர்களின் பாதையை காட்டி இயன்றவரை கல்வியுடன் அவர்கள் முன்னேற்றப் படவேண்டும் .மாறாக மாட்டு மந்தையை சந்தைக்கு கொண்டு போய் விற்பதைப் போல் அனைவரையும் ஒரே பாதையில் கொண்டு சென்று பொதுத் தேர்வில் பலி கொடுப்பதற்கு அல்ல உங்களுக்கு சம்பளம் வழங்கப் படுகிறது என்பது நினைவில் இருந்திடட்டும்.
அதிபர் என்றால் ,ஆசிரியர் என்றால் ஒரு ஆளுமை பேச்சில் உடையில்,நடத்தையில் இருந்திடவேண்டும்.திட்டமிட்டு கற்றுக் கொடுக்க,சட்டம் இட்டு மாணவனையும் அவன் பெற்றோரையும் கட்டுப் படுத்த துணிந்திருக்க வேண்டும்.அவருக் கென்று ஒரு சுய கௌரவத்தை உருவாக்கிட வேண்டும்.நீங்கள் கற்பிப்பது குக் கிராமத்தில் என்றாலும் சரியே நீங்கள் ஒரு ஆசிரியர்,நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்பது நினைவில் இருந்திட வேண்டும் .
இதற்கெல்லாம் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு #சொரணை என்ற ரோஷம் வரவேண்டும் ..தேவை அற்ற சக்திகள் பாடசாலையை விட்டு துரத்தப் படவேண்டும், பாடசாலையில் முதல் அதிகாரம் அதிபருக்கு அடுத்த அதிகாரம் ஆசிரியரிக்கு வர வேண்டும், .வெளி உதவியில் பாடசாலை இயங்க அது தனியார் நிறுவனம் அல்ல.அதையும் மீறி உதவி தேவைப் படின் பொறுப்புள்ளவர்கள் இது போன்ற பாடசாலைக்கு வெளி நிர்வாகமாய் தோல் கொடுக்க வரும் போது வெறுப்புல்லாம் கொண்டவர்களும் தோல் கொடுப்பார்கள்.அதன் வெளிப்பாடாய் மாணவர்களுக்கு திறமை ஊட்டப் பட்டு பட்டதாரிகள் அறுவடை செய்யப் படவேண்டும்.இது ஒவ்வொருவரினதும் கடமை.பொறுப்பு .அதுவரை உங்கள் சம்பாத்தியம் ஹலால் தானா நீங்களும் உங்கள் பிள்ளை குட்டிகளும் உண்பது ஹலாளைத் தானா என்பதையும் முடிவு செய்து கொள்ளுங்கள்
பி .கு **
#கடமை தவறாதவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்