01/10/2025
கல்முனை கல்வி வலயத்தில் நிந்தவூர் கோட்ட கமு/கமு ஜேர்மன் நட்புறவு ஆரம்பப் பாடசாலையில் இன்று 2025.10.01 புதன்கிழமை நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியும் மற்றும் மாணவர்கள் கௌரவிப்பும்
பாடசாலை முதல்வர் UM.Irfan (Sir) அவர்களின் தலைமையில் நடைபெற்றன.அதில் அதிபர், EPSI இணைப்பாளர் , ஆசிரியர்கள் , கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
05/02/2025
Nintavur KM/KM German friendship primary school இன் 2025 ம் ஆண்டு தரம் 1 புதிய மாணவர்களின் ஆரம்ப நிகழ்வு 2025.01.30 அன்று சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
02/10/2024
சர்வதேச சிறுவர் தினம்
2024/10/01 செவ்வாய்க்கிழமை எமது நிந்தவூர் கமு/கமு/ஜேர்மன் நட்புறவு ஆரம்பப் பாடசாலையில் "சர்வதேச சிறுவர் தினம் " கொண்டாடப்பட்டது. ஊர்வலம், சிறுவர் விளையாட்டுக்கள், பரிசளிப்பு, அனைத்து மாணவர்களுக்கும் குளிர்பானங்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு தாமாக முன்வந்து நன்கொடைகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் வழங்கிய தனவந்தர்கள், கழகங்கள், அமைப்புக்கள், அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை சமூகம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதிபர், ஆசிரியர்கள்
கமு/கமு/ ஜேர்மன் நட்புறவு ஆரம்பப் பாடசாலை
23/07/2024
அஸ்ஸலாமு அலைக்கும்
2025 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு புதிய மாணவர்கள் சேர்த்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலையில் வழங்கப்படுகிறது. உரிய மாணவர்களுக்கான பெற்றோர் பெற்றுக் கொண்டு பூரணப்படுத்தி ஒப்படைக்கவும்.
அதிபர்
29/04/2024
ஆசிரிய பணியிலிருந்து ஓய்வு
எமது பாடசாலையான கமு/கமு/ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலையின் முன்னாள் பதில் அதிபரும் தற்போதைய பிரதி அதிபருமாகிய ஜனாப் M. சஹீது 2024.04.30 ம் திகதி அன்று ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
இவர் முதல் நியமனமான
1992.06.25 இல் ஆரம்பக் கல்வி ஆசிரியராக நியமனம் பெற்று தனது ஆரம்ப நியமன முதல் இறுதி ஓய்வு பெறும் காலம் வரை தரம் 5 மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபட்டதும் சிறப்பம்சமாகும். இவருடைய கற்பித்தல் காலப் பகுதியில் பல கஷ்டப் பாடசாலைகளில் 12 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி அடைய காரணமாக இருந்ததும் விஷேட அம்சமாகும். இவருடைய சேவை காலப்பகுதியில் மாணவர்களின் கல்வி, இணைப் பாடவிதான செயற்பாடு, ஒழுக்க விழுமியங்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர். ஆசிரியப் பணியுடன் நின்றுவிடாது பாடசாலையின் ஆசிரியர் சங்கச் செயலாளராய், பகுதி தலைவராகவும் சிறந்த ஆலோசகராய், முகாமைத்துவக் குழு உறுப்பினராய், ஆசிரியர்- மாணவர் நலநோம்பல் குழு உறுப்பினராய் எனப் பல்வேறு வகிபாகங்களைக் கொண்டிருந்தார். இவர் ஜனநாயக ஆசிரிய தொழிற் சங்கத்தின் பிரதி தலைவராகவும், கல்முனை கல்வி வலயத்தின் இடமாற்ற சபை உறுப்பினராகவும் இருந்து பல ஆசிரியர்களின் இடமாற்ற பிரச்சினைக்கு தீர்வும் பெற்றுக் கொடுத்தவர்.
32 வருட சேவைக் காலத்தில் ஆசிரிய பணி செய்த பரடசாலை பின்வருமாறு 1)நிந்தவூர் மினா வித்தியாலயம், ( 5 வருடம் 8 மாதம்) 2) பதுறியா வித்தியாலயம்,(11 வருடம் 9 மாதம்) 3) மாவடிப்பள்ளி அஸ்றப் வித்தியாலயம் (2 வருடம் 1 மாதம்) 4) நிந்தவூர் அல் மினா வித்தியாலயம் (8 வருடம் 11 மாதம்) 5) நிந்தவூர் ஜேர்மன் வித்தியாலயம்( 3 வருடம் 3 மாதம்) போன்றவற்றில் சேவையாற்றிய M. சஹீது ஆசிரியர் இறுதியாக எங்கள் பாடசாலையான நிந்தவூர் ஜேர்மன் வித்தியாலயத்தில் இருந்து பதில் அதிபராக மற்றும் பிரதி அதிபராகவும் இருந்து பல கல்வி அதிகாரிகளின் சினேக உறவு கொண்டவர். இவரது ஓய்வு எமது பாடசாலையை பொறுத்தவரை பெறும் இழப்பாகும். இவரது வெற்றிடம் இவரைப் போன்ற ஒரு ஆசிரியருக்காகக் காத்துக்கிடக்கிறது.
கொடுக்கும் எந்த வேலைகளையும் செவ்வன செய்து முடிக்கும் திறனும், ஆளுமையும் கொண்டவராகவும் எவ்வாறான சந்தர்ப்பத்திலும் புன்னகையோடு கருமமாற்றும் பேரன்பும் கொண்ட M. சஹீது ஆசிரியரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய பாடசாலை சார்பாக வாழ்த்துகிறோம். இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அதிபர்,
பிரதி அதிபர்,
ஆசிரியர்கள்,
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,
மாணவர்கள்,
பாடசாலை அபிவிருத்திக் குழு,
பாடசாலை சமூகம்.
23/02/2024
தரம் 01 மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா
நிந்தவூர் கமு/கமு/ஜெர்மன் நட்புறவு ஆரம்பப் பாடசாலையில் தரம் 01 புதிய மாணவச் செல்வங்களுக்கான வித்தியாரம்ப விழா (2024/02/22) காலை 9.00 மணியளவில் அதிபர் திரு.UM. இர்பான் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இவ்விழாவில் Mr.MM. கலீல் (முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்-ஆங்கிலம், வலயக் கல்வி அலுவலகம், கல்முனை), Mr.MAM. றசீன் (ஆசிரிய ஆலோசகர், வலயக் கல்வி அலுவலகம், கல்முனை) Mr. UL. றிபாயுதீன் (ஆசிரிய ஆலோசகர் - இஸ்லாம்) ஆகியோர் முறையே பிரதம அதிதியாகவும், விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் இரண்டாம் வகுப்பு மாணவர்களால் புதிய மாணவர்கள் அன்போடு வரவேற்கப்பட்டு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் அதிதிகள் மூலமாக புதிய மாணவர்களுக்கு ஏடு துவங்கி கற்றல் செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டு மாணவர்களுக்கு உற்சாகமாகமளிக்கப்பட்டதோடு புதிய மாணவர்களுக்கு புத்தகப் பை மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்நிகழ்வுகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு பெறுவதற்கு உதவி புரிந்த அதிபர், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
09/02/2024
அட்டப்பளம், ஆபியா பண்ணை உரிமையாளர் அகமத் ஹனீப் அவர்களினால் ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் எமது பாடசாலை அதிபர் முஹம்மட் இர்பான் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
சிறு வயதிலேயே இவருடைய இந்த செயல் மிகவும் வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதுமாகும். இது போல் ஈருலக கல்வியிலும் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் உயரத்தை தொட வல்ல இறைவன் அருள்புரிய பாடசாலை சமூகம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.
07/02/2024
பொது நலன் சேவை விரும்பி ஒருவரினால் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
சேவை நலன் விரும்பி ஒருவரினால் எமது பாடசாலை மாணவர்களின் தேவை கருதி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவரின் இந்த செயற்பாடானது மாணவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளித்ததோடு, அவர்களது கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அமைந்துள்ளது.
இவரின் இந்த சேவையானது மேன் மேலும் தொடர வேண்டும் எனவும், அவரின் ஈருலக வாழ்கை சிறப்பாக அமைய வேண்டும் எனவும் பிரார்த்திப்பதோடு பாடசாலை சமூகம், பெற்றோர் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்♥️.
06/02/2024
நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர்களின் சமூக சேவை ஒன்றியம், கல்விக்கு உதவிக்கரம் 2.0 என்ற தொனிப் பொருளின் கீழ் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.
இவர்களின் சமூக சேவை பணிகளின் மூலம் கடந்த காலங்களிலும் எமது பாடசாலை மாணவர்களுக்கு உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களின் இப்பணிகள் மேன் மேலும் தொடர அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
05/02/2024
தரம் 01 மாணவர்களை இனம் காணும் செயற்பாடு அதிபர் முஹம்மட் இர்பான் அவர்களின் தலைமையில், ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ், பெற்றோர்களின் ஒத்துழைப்புடனும் இன்று விமர்சையாக முன்னெடுக்கப்பட்டது.
எமது பாடசாலையானது பின்தங்கிய பாடசாலையாக கருதப்படுகின்ற நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் எமது புது வருகை மாணவர்களின் உடல், உள ரீதியான மகிழ்ச்சிகரமானதும், திருப்திகரமானதுமான சூழலை ஏற்படுத்தி பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உதவி புரிந்த அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் 😍.
10/10/2023
எமது பாடசாலையான க/மு ஜேர்மன் நட்புறவு ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக ஆசிரியர் தினத்தன்று எமது பாடசாலையில் புதிய அதிபராக கடமையை ஏற்ற நாளன்று எங்களுக்கு ஆசிரியர் தினத்தினை கௌரவித்த எம் . ஷஹீது அதிபர் அவர்களின் சொந்த முயற்சி மற்றும் நிதியினைக் கொண்டு ஆசிரியர்களுக்கு நினைவு சின்னங்களும் பெறுமதியான பரிசுகளையும் வழங்கி வைத்தமைக்காக பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இன்றைய நிகழ்வில் கல்முனை வலயத்தின் சார்பாக இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் UL.றிபாயுதீன் மௌலவிஅவர்களும் கலந்து அதிபர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு இந்த நிகழ்வையும் பாராட்டியமையும் குறிப்பிடத்தக்கது.