01/05/2016
கடந்த இரு வருடமாக சாஹிரா முன்னேறி வருவதாக மார்தட்டிக்கொள்ளும் அதிபரின் சகாக்களாகிய பஸ் திருடர்கள் Zulfikar, Sabry Anas Zacky, Hisham & Faisal உங்கள் கண்களுக்கு பெயர் பலகை விளங்கவில்லையோ என்னமோ.
Tie கட்டி மார்தட்டுவதில் பயனில்லை பெயர்பலகையை நேராக நிமிர்த்துங்கள் இல்லையேல் செய்பவருக்கு வழி விட்டு ஒதுங்கி நில்லுங்கள் . சாஹிரா ஒரு தேசிய பாடசாலை என தெரிந்தும் அனுமதி கட்டணத்துக்காக கல்வியை வியாபாரமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் . நாளைய தலைமுறையை எண்ணி இவர்களை துரத்தாவிட்டால் LIVE IN LIGHT ஐ DARK IN LIGHT ஆக்கிவிடுவார்கள்
06/02/2016
சாஹிராவின் மீது அக்கறை கொண்ட பெற்றோர்களே, பழைய மாணவர்களே மற்றும் நலன் விரும்பிகளே இவர்கள் விடயத்தில் இன்னும் ஏன் மௌனம்???
06/02/2016
சாஹிரா தாயின் அழகுக்கு "அபசரணய்"
28/01/2016
"மாணவர்களோ போதைக்கு பின்னால் ஆசிரியர்களோ பேதைக்கு பின்னால்"!!!!!!!!!
சாஹிரா கல்லூரியின் அவல நிலை
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகதுஹு
இலங்கை கல்வி வரலாற்றில் ஒரு கால கட்டத்தில் கலங்கரை விளக்காக திகழ்ந்த மாத்தளை சாஹிர கல்லூரி, இன்று இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் ஒழுக்க சீர்கேடுகளும் ஆசிரியர்களின் காதல் சல்லாபங்களும் பாடசாலையின் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளன ஆறாம் வகுப்பு மாணவர்களோ போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளனர். மாவா ஹான்ஸ் தூள் உட்பட பல்வேறு போதைபொருட்களை பாடசாலை நேரங்களிலேயே மாணவர்கள் பயன்படுத்துகின்ற அவல நிலையை சாஹிரா கல்லூரியில் கண்கூடாகவே காண முடிகிறது. ஒருசில நல்ல ஆசிரியர்கள் மாணவர்களை திருத்த பகீரத முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் நிரவகதின் ஒத்துழையாமை காரணமாக பாடசாலை நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கி செல்கிறது . சில ஆசிரியர்களின் காதல் லீலைகள் பாடசாலைக்குள் அரங்கேறுவதை கண்ணுற்ற மாணவர்களை திருப்பி கேள்வி கேட்கும் தைரியத்தையும் பெற்றுள்ளனர். "ப்ளே போய்" ஆசிரியர்கள் இருவர் பாடசாலையின் இளம் ஆசிரியைகளுக்கும் உயர்தரம் கற்கவரும் மாணவிகளுக்கும் காதல் தூது விடும் போடு மாணவர்களின் பிழையை ஏனைய ஆசிரியர்கள் எவ்வாறு திருத்த முடியும்??? “எங்களை திருத்த முன்னர் ஆசிரியர்களை போய் திருத்துங்கள்” என மாணவர்கள் கூறும் அவல நிலைக்கு சில நல்ல ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்
முன்பொரு காலத்தில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தமது பிள்ளைகளை மாத்தளை சாஹிரா கல்லூரியில் இணைத்துக்கொள்வதற்காக பெற்றோர்கள் முன்டியடிப்பர். அனால் இன்று மாத்தளையில் உள்ளவர்கள் கூட ஏன் கல்லூரியின் பழைய மாணவர்கள் கூட தமது பிள்ளைகளை சாஹிரா கல்லூரியில் சேர்க்க பின்வாங்குகின்றனர் . அவர்கள் வேறு வழியில்லாது நகரிலுள்ள சர்வதேச ஆங்கில பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்க்கின்றனர். அந்த பாடசாலைகளின் நிலைமையோ அதல பாதாளங்களில் உள்ளது. சாஹிராவின் நிலைமை அதைவிட மோசமான மட்டத்தில் காணப்படுகிறது .இந்த நிலைமை நீடித்தால் மாத்தளை மண்ணில் முஸ்லிம் சமூகத்தின் நாளைய எதிர்காலம் கேள்விக்குறியாகவே காணப்படும். இது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நம் அனைவரதும் பொறுப்பாகும். இந்த கட்டுரை மூலம் எவரையும் பலி வாங்குவதோ அல்லது பாடசாலையை விமர்சிப்பதோ அதன் நன்மதிப்பிற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதோ எமது நோக்கமல்ல. நாம் சாஹிரா தாயிடம் கல்விப்பால் குடித்தவர்கள் என்ற பற்றுடனும், உணர்வுடனும் சமூகத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த கட்டுரையை எழுதுகின்றோம். மக்களே!!! கொஞ்ச நேரம் உங்களது பிள்ளையின் மற்றும் மாத்தளையின் நாளைய சமூகத்தின் நிலை குறித்து சிந்தியுங்கள்
குறிப்பு: இந்த கட்டுரையுடன் நாம் ஓய்ந்து விடப்போவதில்லை. சமூகத்திற்கு சிந்தனை ஏற்படுத்தும் எழுத்து ரீதியான போராட்டம் தொடர்ந்தும் நீடிக்கும். இந்த கட்டுரை ஊடக கல்லூரி ஆசிரியர்கள் இருவருடைய காம களியாட்டங்களின் ஒரு துளியையே சுட்டிக்காட்டியுள்ளோம். குறித்த ஆசிரியர்கள் இருவரும் சாஹிராவுக்கு தற்காலிகமாகவே இணைத்துகொள்ளப்பட்டவர்கள். அவர்கள் தம்மை திருத்தி கொள்ளாதவிடத்து, ஆசிரியர்கள் இருவரும் ஆசிரியைகள் சிலருடன் மேற்கொண்ட காதல் காமரசம் சொட்டும் தொலைபேசி உரையாடல்களையும் சில புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டிய நிர்பந்தத்திற்கு நாம் ஆளாகுவோம். குறித்த ஆசிரியர் ஒருவர் மற்றுமொரு ஆசிரியைக்கு முத்தம் கொடுத்த காட்சியை நேரில் கண்ட மாணவர்களின் குரல் ஒலிப்பதிவுகளும் எம் கைவசம் உள்ளன. அவற்றையும் வெளியிட வேண்டிய கட்டாய நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். ஒரு கூடை பழத்தில் ஒரு பழம் அழுகியிருந்தால் அதை எடுத்து வீச நாம் தயங்கப்போவதில்லை. எமது அனைத்து முயற்சிகளும் அல்லாஹ்வை முன்வைத்து நாளைய எமது சமூகத்தின் விடிவுக்காகவும் , ஒளிமயமான எதிர்காலதித்க்காகவும் நல்லெண்ணம் கொண்டதாகவே அமையும்.
வஸ்ஸலாம்