12/01/2026
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பொறுப்பு அதிபராக எம்.பி.அஹமட் ராஜி கடமையேற்பு
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பொறுப்பு அதிபராக அப் பாடசாலையின் பிரதி அதிபராக கடமையாற்றிய எம்.பி.அஹமட் ராஜி (12) மாலை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பொறுப்பு அதிபராக கடமையாற்றிய எம்.எம்.ஹிர்பகான், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அதிபர் சேவை இடமாற்றத்தின் பிரகாரம் சாய்ந்தமருது அல்-ஜலால் மகா வித்தியாலயத்தில் பொறுப்பு அதிபராக (12) கடமையேற்றதால் ஷம்ஸ் மத்திய கல்லூரியில் ஏற்பட்ட அதிபர் வெற்றிடத்திற்கு பொறுப்பு அதிபராக எம்.பி.அஹமட் ராஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் கடமையை பொறுப்பேற்கும் நிகழ்வு (12) மாலை ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹூதுல் நஜீம், பாடசாலையின் EPSI இணைப்பாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான எம்.எல். எம். முதர்ரீஸ் மற்றும் பிரதி, உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரின் முன்னிலையில் எம்.பி. அஹமட் ராஜி பொறுப்பு அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடமையை பொறுப்பேற்கும் இந்த நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர், முன்னாள் அதிபரின் சேவையை பாராட்டி நன்றி தெரிவித்து உரையாற்றியதுடன், எதிர்காலத்தில் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கல்வி அபிவிருத்தி, இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஒழுக்க விழுமியங்கள் போன்ற பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். இந்த சவாலை வெற்றி கொள்ளும் அதிபராக தற்போது பொறுப்பேற்கும் அதிபர் செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார். முன்னாள் அதிபர் எம்.எம். ஹிர்பகான் தன்னுடைய சேவை காலத்தில் தன்னோடு இணைந்து பயணித்த அனைவருக்கும் இங்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார். இதேவேளை புதிய அதிபரும் தனது கருத்துக்களை தெரிவித்தார்.
எம்.பி.அஹமட் ராஜி அவர்கள், மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கல்வி கற்று 1988ம் ஆண்டு அப்பாடசாலையில் ஆசிரியர் சேவையில் இணைந்து சுமார் 36 ஆண்டுகள் இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்கு கணித பாட ஆசிரியராக பின்னர் உதவி அதிபராக, பிரதி அதிபராகவும் சேவையாற்றியுள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்களிப்பு செய்து வரும் ஒருவராவார்.
எதிர்காலத்தில் தனது அதிபர் கடமைகளையும் பொறுப்புக்களையும் சிறப்பாக மேற்கொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் உடல் - உள ஆரோக்கியத்தை நீடித்து வழங்க வேண்டும் என்று பிராத்தித்துக் கொள்கிறோம்
29/12/2025
ஷம்ஸ்யை விட்டு பிரிந்ததே.........
வரிகள் -
ஏ.எல்.எம். றியலஸ்
ஏ.எம்.யூஹான்
29/12/2025
ஜனாஸா அறிவித்தல் (29.12.2025)
மருதமுனை 5, காரியப்பர் வீதியைச் சேர்ந்த முஹம்மத் அபூபக்கர் ஜெஸீல் விஞ்ஞான பாட ஆசிரியர் (ஷம்ஸ் மத்திய கல்லூரி) அவர்கள் வபாத்தானார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் மர்ஹும் முஹம்மத் அபூபக்கர் கப்பல் நெய்னா சாவுறா தம்பதியினரின் புதல்வரும்
ஜலால்தீன் றிஸ்வினாவின் கணவரும்
தாதி உத்தியோகத்தர் சிம்தா, சிபியின் தந்தையும்
முஹம்மத் நஜ்முத்தீன் (நஜ்மி) அவர்களின் மச்சானும்
மர்ஹும் வதூத் அதிபர், முன்னாள் வலயக் கல்வி பணிப்பாளர் ஜெலீல், முஸம்மில் அதிபர், உவைஸ் ஆசிரியர் (botany) ஆகியோரின் மைத்துனரும்
ஹபீபுல்லாஹ் கணக்காளரின் சகலனும்
முன்னாள் மாநகர சபை உறுப்பினர் முஸ்தபாவின் சாச்சப்பாவும் அவர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்றுஜ(29) மாலை 5 மணிக்கு மஸ்ஜிதுல் கபீர் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டு மருதமுனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
20/11/2025
சாதனை
ஷம்ஸ் மத்திய கல்லூரி அகில இலங்கை ரீதியாக சித்திரப் போட்டியில் முதலாம் இடம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சித்திரப் போட்டியில் எமது கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் ANM.Shimar மாணவன் Object Drawing Pastel பிரிவில் முதலாம்(1st Place) இடத்தை வென்று எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ் அடைவிற்க்கு உறுதுணையாய் இருந்து ஆலோசனைகளை வழங்கிய எமது கல்லூரியின் அதிபர் M.M. Hirbahan அவர்களுக்கும் பிரதி, உதவி அதிபர்கள் , பயிற்சிகளை வழங்கிய சித்திரப் பாட ஆசிரியர் Mr.A.A.Musab Razeen அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, போட்டியில் பங்குபற்ற ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
26/10/2025
ජාතික මට්ටමේ විශිෂ්ට ජයග්රහණයකට සියලු සුභ පැතුම්!
13/10/2025
Congratulations to both students for their achievements at the Provincial Level English Day Competitions-2025
A. Fathima Anoof (Grade 9) for securing First Place in the Dictation competition.
M. M. Zaamin Shara (Grade 13) for securing First Place in the Handwriting competition.
Their success has brought great pride to the school and the community, and we wish them the very best as they prepare for the National Level Competitions!
A sincere thank you and appreciation goes out to the English Subject Coordinator Mrs. Majmila Haleem, and all the English Subject Teachers who trained, guided, and supported the students to achieve this excellent victory. The entire school community is grateful for your dedication.
MR.MM.HIRBAHAN
PRINCIPAL
11/10/2025
District Level
Samaposa football tournament
Under 14 CHAMPION
KM/KM Shams C C select to all island
03/10/2025
புதிய பழைய மாணவர் சங்க நிருவாக சபையை தெரிவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பழைய மாணவர் சங்கத்தில் சேர விரும்பும் பழைய மாணவர்கள் பிரதி அதிபர் காரியாலயத்தில் Mr. A.H.M. Shiyam (DO) விடம் விண்ணப்பப் படிவத்தினை பெற்று பூரணப் படுத்தி
2 வாரங்களுக்குள் ஒப்படைக்குமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
MM.HIRBAHAN
அதிபர்
KM/KM/SHAMS CENTRAL COLLEGE
MARUTHAMUNAI
01/10/2025
இன்று ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சிறுவர் தினத்தை முன்னிட்டு பல நிகழ்வுகள் அதிபர் தலைமையிலும் பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் பகுதிதலைவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வழிகாட்டலிலும் இடம் பெற்றது
30/09/2025
இன்று சிறுவர் தினத்தை கொண்டாடும் ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்