16/01/2025
அந்நஹ்லா அஹதிய்யாவின் பரிசளிப்பு
அனுராதபுர மாவட்ட இஹலப்புளியன்குளம் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு அண்மையில் அந்நஹ்லா கல்வி மத்திய நிலையத்தில் அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் அதிபர் தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ் மற்றும் அஹதிய்யா தலைவர் தேசமான்ய பீ.ஜாயிஸ் (உஸ்வி) ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இஹலப்புளியன்குளம் முஸ்லிம் வித்தியாலய அதிபர் எஸ்.எம்.தாரிக், ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.எம்.கெளஸ், அனுராதபுர செயலகத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சிபான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் அஹதிய்யா இறுதிச்சான்றிதழ் பரீட்சை - 2023 சித்தியடைந்த மாணவர்கள், அஹதிய்யா தேசிய சான்றிதழ் பரீட்சை 2024இல் சித்தியடைந்த மாணவர்களுக்கும், அஹதிய்யா இறுதிச்சான்றிதழ் பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கபப்பட்டதாக அதிபர் எம்.ஆர்.எம்.ரனீஸ் தெரிவித்தார்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், தரம் 05 மாணவர்களுக்கு அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சியும் இடம்பெற்றதுடன் அஹதிய்யா பாடசாலையில் தொடர்ச்சியாக சேவையாற்றிய ஆசிரியைகளான ஏ.ருக்ஸானா, ஏ.சாமிலா பானு, எம்.எப்.எப்.சஹ்னாஸ், ஏ.சீ.சானாஸ் பேகம், எம்.ஏ.ரம்சத் பேகம், எம்.ஏ.சானாஸ், எஸ்.சனுரா, ஜே.ஹஸ்னா பானு, கே.ரிகாஸா, யு.உமைமா,
வை.சஸ்னா ஆகியோருக்கும் தொடர்ச்சியாக 16 வருடங்கள் அதிபராக கடமையாற்றும் அதிபர் தேசமான்ய எம்.ஆர்.எம்.ரனீஸ் மற்றும் தலைவராக சேவையாற்றும் தேசமான்ய பீ.ஜாயிஸ் அவர்களுக்கும் அந்நஹ்லா அஹதிய்யாவின் பழைய மாணவர் சங்கத்தினால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
அந்நஹ்லா அஹதிய்யா பாடசாலை சார்பாக பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 2025ஆம் அஹதிய்யா கல்வி ஆண்டுக்கான தரம் 01 மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.