04/08/2026
சுவாமி விபுலானந்தர் நினைவுப்பேருரை.................. .........
முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தர் அவர்களின் ஞாபகார்த்த நினைவுப்பேருரை - 2026
“யாழ்ப்பாண சைவத்தமிழ்ச் சூழமைவில் காந்தியம்: அன்றும் இன்றும்” என்ற தொனிப்பொருளில் அமைந்த இவ் ஆண்டுக்குரிய நினைவுப்பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்துக்கற்கைகள் பீட சைவசிந்தாந்தத்துறைத் தலைவர் கலாநிதி தி.செல்வமனோகரன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
இவ் நிகழ்வை தமிழி அமைப்பு சார்பாக தமிழியின் பெருந்தலைவர் திரு யோகேந்திரன் நிவேதன் அவர்களும் யா/மானிப்பாய் இந்துக் கல்லூரிச் சமூகம் சார்பாக கல்லூரி அதிபர் திரு எம்.இந்திரபாலா அவர்களும் இணைந்து தலைமை தாங்கினார்கள்.
இந் நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னைநாள் அதிபர்கள், பழையமாணவர் சங்க உறுப்பினர்கள் தமிழி அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
#தமிழி #தமிழி_அமைப்பு fans