11/05/2026
46 ஆவது தடவையாக நடைபெறவுள்ள "மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் குர்ஆன் மனனப்போட்டி" யில்; இம்முறை முதன்முதலாக பெண்களுக்கான வாய்ப்பினையும் சர்வதேச ரீதியாக வழங்குவதற்கான; மன்னர் சல்மான் (حفظه الله) அவர்களின் அனுமதி வெளியானதை; சவூதி அரேபிய இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
11/05/2026
نحمد الله تعالى على توفيقه ونعمائه، ونسأل الله لأبنائنا الخريجين مزيدا من التوفيق والنجاح.
09/05/2026
ஹஜ்ஜினை நெறிப்படுத்துவதில்; சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் வகிபாகம்.
---------------------------------------------
புனித ஹஜ் என்பது; இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஐந்தாவது கடமையாகும். ஹஜ்ஜினை எவ்வித மாசுபடுத்தலுமின்றி நிறைவேற்றும் ஒருவருக்கான கூலி; சுவனத்தினைத் தவிர வேறில்லை என கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். ஆகையினால்; புனித ஹஜ் கடமையினை மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பதற்கான அனைத்து வசதிவாய்ப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்; சவூதி அரேபிய அரச நிர்வாகங்களினால் யாத்திரீகர்களுக்கு மிகச் சிறப்பாக வழங்கப்படுகின்றன.
அந்தவகையில்; ஹஜ்ஜுக்காக தனது பூரண வளங்களையும் களத்தில் இறக்கி சேவைசெய்யும் அமைச்சகங்களில்; சவூதி அரேபிய இஸ்லாமிய விவகார அமைச்சகமும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஹஜ் கிரியைகள் நேர்த்தியாக நடைபெறுவதற்கான அதன் பங்களிப்புகளில் சிலவற்றினை இங்கே நோக்கலாம்.
- ஹாஜிகள் சஞ்சரிக்கும் பிரதேசங்களில் உள்ள பள்ளிவாயல்களை; ஹாஜிகளின் வசதிகளைக் கவனத்தில் கொண்டு தயார்படுத்துதல். குறிப்பாக ஹஜ் கிரியைகளுடன் சம்பந்தப்பட்ட; மினா, முஸ்தலிபா, அரபா பெருவெளிகளில் உள்ள பள்ளிவாயல்கள், மக்கா மதீனா என்ற இரு புனித நகரங்களுக்கிடையேயான பள்ளிவாயல்கள், இரு புனித நகரங்களிலும் உள்ள இதர பள்ளிவாயல்கள், மீகாதுகளில் உள்ள பள்ளிவாயல்கள் என நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்களை தயார் நிலையில் வைத்திருப்பதில் கரிசனையுடன் இவ்வமைச்சகம் செயற்படுகிறது. மேலும் அவற்றில் ஹாஜிகளுக்கான மார்க்க சட்டவிடயங்கள் சம்பந்தமான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளையும் பற்பல மொழிகளிலும் ஏற்பாடு செய்துள்ளது.
- ஹாஜிகள் சஞ்சரிக்கும் அனைத்து இடங்களிலும்; ஹாஜிகள் ஹஜ்ஜின் கிரியைகளை நேர்த்தியாக செய்துகொள்வதற்கான வழிகாட்டல்களை பற்பல மொழிகளில்; உரைகள், புத்தகங்கள், வீடியோக்கள், கையடக்கத் தொலைபேசி செயலிகள், செயற்கை நுண்ணறிவுடன் கேள்வி பதில் செயன்முறையில் இயங்கும் ரோபோக்கள் போன்ற சாதனங்களின் மூலமாக நவீன முறையில் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஒப்பீடாக பார்க்கும் பொழுது சென்ற வருட ஹஜ்ஜில் மாத்திரம்; சுமார் 121 ஆயிரம் ஹஜ் விளக்க செயலமர்வுகள், 98 ஆயிரம் ஹஜ் கேள்வி பதில் நிகழ்சிகள், 130,000 ஹஜ் விளக்க வெளியீடுகள். 1.4 மில்லியனுக்கும் அதிகமான ஹஜ் விளக்க குறுஞ்செய்திகள் என இவ்வமைச்சகத்தின் ஹஜ் விளக்க சேவைகள் பரந்தளவில் மேற்கொள்ளப்பட்டன.
-மன்னர் சல்மான் அவர்களின் ஹஜ்ஜுக்கான விஷேட விருந்தினர்கள் திட்டத்தினையும் இஸ்லாமிய விவகார அமைச்சகமே வருடாவருடம் நடைமுறைப்படுத்தி மேற்பார்வை செய்து வருகிறது. இரு புனிதஸ்தலங்களின் சேவகரின் ஹஜ்ஜுக்கான அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்ற இந்நிகழ்ச்சி நிரல் சுமார் 27 வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதனூடாக சுமார் 65 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் தமது ஹஜ் கடமையினை இலவசமாகவும் இலகுவாகவும் நிறைவேற்றியுள்ளனர். சென்ற வருடம் 1300 பாலஸ்தீனர்கள் உள்ளடங்களாக 100 நாடுகளைச் சேர்ந்த 2443 யாத்திரீகர்களுக்கு இவ்வாய்ப்புக் கிட்டியது.
அதில் இலங்கையிலிருந்து 20 யாத்திரிகர்கள் இவ்வவகாசத்தினைப் சென்ற வருடம் பெற்றனர். இவ்வருடமும் வழமைபோன்று இந்நிகழ்ச்சித்திட்டத்தினூடாக செல்பவர்களுக்கான ஏற்பாடுகளை கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக வரும் யாத்திரீகர்களை அவர்கள் வருகை தருவது தொடக்கம்; திரும்பிச் செல்லும் வரையிலான அனைத்து வசதிகளையும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் மிகச் சிறப்பாக மேற்கொள்கிறது.
- ஹாஜிகளுக்கான கடைசி அன்பளிப்பாக வழங்கப்படும்; சுமார் 2 மில்லியன் புனித அல்-குர்ஆன் பிரதிகளை விநியோகிக்கும் திட்டமும்; இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. புனித அல்-குர்ஆன் பிரதிகளை அச்சிடும் மன்னர் பஹத் அச்சகமும்; இஸ்லாமிய விவகார அமைச்சகத்தின் கீழேயே இயங்குவது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவ்வாறு புனித ஹஜ் கிரியைகளை யாத்திரிகர்கள் சிறப்பாகவும் நேர்த்தியாகவும், தவறுகள் இன்றியும் மேற்கொள்ளவேண்டும் என்ற முனைப்புடன் பல சேவைகளை மேற்கொள்ளும் சவூதி அரச அமைச்சகங்களில் இஸ்லாமிய விவகார அமைச்சகம் முக்கிய இடம் வகிக்கின்றது.
சவூதி மன்னர் மற்றும் முடிக்குரிய இளவரசர் ஆகியோரின் வழிகாட்டலில் பயணிக்கும்; இவ்வமைச்சகத்தின் மாண்புமிகு அமைச்சர் கலாநிதி அப்துல் லத்தீப் ஆளுஷ் ஷேய்க் அவர்களும், அமைச்சகத்தின் செயலாளர்களும், நிர்வாகிகளும், ஊழியர்களும் இங்கே நன்றியுடன் நினைவுகூரப்படவேண்டியவர்களாகும்.
06/05/2026
الحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه، وبعد.
فإنه يسعدني أن أرفع الشكر والامتنان إلى حكومة المملكة العربية السعودية، وذلك أصالة عن نفسي ونيابة عن زملائي ضيوف خادم الحرمين الشريفين لحج هذا العام من بلدنا سريلانكا .
ولا شك إنه لفخر كبير لنا بأن نكون من المحظوظين للفور بهذه المكرمة الملكية الكريمة؛ وباختيار كريم من قبل سعادة السفير خالد القحطاني (سلمه الله) لأداء مناسك الحج بكل يسر وسهولة ضمن ضيوف خادم الحرمين الشريفين أيده الله لأداء مناسك الحج.
وإننا لا نملك إلا أن نقدم الشكر والتقدير إلى مقام خادم الحرمين الشريفين الملك سلمان بن عبد العزيز آل سعود حفظه الله، وإلى سمو ولي عهده الأمين صاحب السمو الملكي الأمير محمد بن سلمان بن عبد العزيز آل سعود أيدهما الله، وإلى معالي وزير الشؤون الإسلامية الشيخ الدكتور/ عبد اللطيف آل الشيخ حفظه الله الذي يشرف على تنفيذ هذا البرنامج، وإلى سعادة سفير خادم الحرمين الشريفين في كولومبو السفير/ خالد حمود القحطاني سلمه الله.
ونقول للجميع: جزاكم الله خيرا وبارك الله في أعمالكم، وأعماركم، وضاعف أجركم وجزاكم الجنة. والسلام عليكم ورحمة الله وبركاته.
இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மான் (حفظه الله) அவர்களின் விருந்தினர்கள் என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்; அல்லாஹ்வின் விருந்தினர்களாக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றும் 16 இலங்கையர்களில் ஒருவராக செல்லும் பாக்கியம் கிடைத்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சித்திட்டத்தினை சுமார் 28 ஆண்டுகளாக உலகளாவிய ரீதியில் இலவசமாக முன்னெடுத்து வரும் சவூதி அரேபிய அரசிற்கும்; இரு புனிதஸ்தலங்களின் சேவகர் மன்னர் சல்மான் (أيده الله) அவர்களுக்கும், முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களுக்கும், இவ்வரிய வாய்ப்பினை எமக்குப் பெற்றுத்தர சிபாரிசு செய்த; இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் அல்- கஹ்தானி அவர்களுக்கும் என்றும் எமது நன்றிகளும் பிரார்த்தனைகளும் உரித்தாகும்.
27/04/2026
مركز الملك سلمان للإغاثة يوزّع 24.500 وجبة غذائية ساخنة في قطاع غزة. #واس
23/04/2026
His Excellency Ambassador Khalid bin Hamoud Alkahtani received His Excellency Dr. Hiniduma Sunil Senavi, Minister of Buddhasasana, Religious and Cultural Affairs today at the Embassy,During the meeting they discussed topics of common interest.
21/04/2026
https://colombotimes.net/saudi-arabia-a-pillar-of-stability-in-global-supply-chains-and-the-economy/
Saudi Arabia: A Pillar of Stability in Global Supply Chains and the Economy - Colombo Times
AMBASSADOR KHALID AL-KAHTANI COLOMBO ; In a world where crises are accelerating alongside trade, and where geopolitical challenges are intertwined with supply chain disruptions, the smooth flow of goods and energy is no longer merely an economic issue, but has become an integral part of global secur...
20/04/2026
نسأل الله العلي القدير أن يحفظ مملكتنا الغالية…
10/04/2026
மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் சுமார் 1.1 மில்லியன் இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் வேலைவாய்ப்பு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்த மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களுக்கும் அதன் அரசுகளுக்கும் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கம் நன்றியைத் தெரிவித்துள்ளது.
அதேவேளை மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்தும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கிலுள்ள அரபு நாடுகளை இலக்காகக் கொண்ட அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்துமாறு ஈரானை இந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நிலைத்தன்மையில் முக்கிய பங்காற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களையும் வேலைவாய்ப்பு வழங்குநர்களையும் பாதுகாப்பது மிக அவசியம் என அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Vidiyal.lk
24/03/2026
சவூதி அரேபியா, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை பாதிக்க முயலும் ஈரானின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கிறது – இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்.
---------------------------
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில்; இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் கெளரவ காலித் அல் கஹ்தானி அவர்கள் (Daily Miror) பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல்.
----------------------------
கேள்வி: மத்திய கிழக்கு நாடுகள் மீதான சமீபத்திய ஈரானிய தாக்குதல்களை சவூதி அரேபியா எவ்வாறு மதிப்பிடுகிறது?
“சவூதி அரேபியாவையும் அண்டை நாடுகளையும் குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட ஈரானிய தாக்குதல்களை சவூதி அரேபியா மிக வன்மையாக கண்டிக்கிறது. இத்தாக்குதல்கள் குடியிருப்பு பகுதிகளையும், பொதுமக்கள் பயன்பாட்டு கட்டமைப்புகளையும்—எண்ணெய் வசதிகள், உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் தூதரகங்களை—குறிவைத்தன.
இந்த தாக்குதல்கள் நாடுகளின் இறையாண்மையை வெளிப்படையாக மீறும் செயலும், சர்வதேச சட்டத்தினை மீறும் செயலுமாகும். இவை பிராந்தியத்தின் பாதுகாப்பும் நிலைத்தன்மையும் அச்சுறுத்தும் ஆபத்தான நகர்வுகளாகும். எக்காரணம் கொண்டும் இவற்றை நியாயப்படுத்தப்பட முடியாது.
இந்த நிலையில், இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டிய அவசியத்தை சவூதி அரேபியா வலியுறுத்துகிறது. 2026 மார்ச் 18 அன்று ரியாதில் இதுசம்பந்தமாக நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பல அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டறிக்கையில்; ஈரான் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை வேண்டுமென்றும், அச்சுறுத்தல்களைத் தவிர்த்து அண்டை நாடுகளுடன் நல்ல உறவுகளை பேணவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக ஹோர்முஸ் மற்றும் பாப் அல்-மந்தப் நீரிணைகளில் சர்வதேச கடற்பயண பாதுகாப்பை பாதிக்கும் நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், 2016 மார்ச் 11 அன்று வெளியிடப்பட்ட பாதுகாப்பு சபை தீர்மானம் 2817 உட்பட அனைத்து தீர்மானங்களையும் ஈரான் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதன் அனைத்து விரோத செயல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சவூதி வலியுறுத்துகிறது”.
கேள்வி: கல்ஃப் பிராந்தியத்தின் முக்கிய வசதிகளை குறிவைக்கும் ஈரானின் நடவடிக்கைகள் உலக பொருளாதார பாதுகாப்பிற்கு எவ்வளவு அச்சுறுத்தலாக உள்ளன?
“ஈரான் மேற்கொள்ளும் இத்தகைய தாக்குதல்கள், பிராந்திய மட்டத்தில் மட்டுமன்றி உலக பொருளாதார பாதுகாப்பிற்கே நேரடி அச்சுறுத்தலாகும். இது எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தி, உலகளாவிய விலைகளை உயர்த்துகிறது; இதனால் அனைத்து பொருளாதாரங்களும், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகள், கடுமையாக பாதிக்கப்படுகின்றன”.
கேள்வி: அரேபிய வளைகுடாவில் வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹோர்முஸ் நீரிணையில் கடற்பயணத்தை பாதிக்கும் ஈரானின் தாக்குதல்களை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்?
“சவூதி அரேபியா, வளைகுடாவில் வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹோர்முஸ் நீரிணையில் கடற்பயணத்தை பாதிக்கும் ஈரானின் தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. இத்தகைய செயல்கள் பிராந்திய பாதுகாப்பை பாதிப்பதோடு, உலக பொருளாதார நிலைத்தன்மை, சர்வதேச வர்த்தகம், கடற்பயண சுதந்திரம் மற்றும் விநியோக வழித்தடங்களின் பாதுகாப்பு ஆகியவற்றிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் சந்தை நிலைத்தன்மை பாதிக்கப்படுவதுடன், உலகளாவிய பொருளாதார அச்சமும் அதிகரிக்கிறது.
இந்த சூழலில், முக்கிய கடற்பாதைகளை பாதுகாப்பதும், கடற்பயண சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் சர்வதேச சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் மதிப்பதும் மிக முக்கியம் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம். இத்தகைய செயல்களைத் தடுக்கும் வகையில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்”.
கேள்வி: இந்த சவால்களை எதிர்கொள்ள சவூதி அரேபியா தனது பிராந்திய மற்றும் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து மேற்கொள்கிற முயற்சிகள் என்ன?
“சவூதி அரேபியா, சகோதர மற்றும் நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைந்து, சர்வதேச வழிமுறைகள் மூலம் தூதரக முயற்சிகளை வலுப்படுத்தல், பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளுக்கு ஊக்கமளித்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. பிராந்திய பாதுகாப்பு என்பது கூட்டு பொறுப்பு என்பதால், சர்வதேச ஒத்துழைப்பே நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் சிறந்த வழியாகும்”.
கேள்வி: தற்போதைய சவால்களின் பின்னணியில் எரிசக்தி பாதுகாப்பின் எதிர்காலத்தை சவூதி அரேபியா எவ்வாறு பார்க்கிறது?
“சவூதி அரேபியா உலக எரிசக்தி சந்தைகளில் நம்பகமான வழங்குநராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நிலையான வழங்கலையும் தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான சமநிலையையும் உறுதிப்படுத்துவதில் முக்கியத்துவம் அளிக்கிறது. OPEC கட்டமைப்பின் கீழ், சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்கவும், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் அதிர்வுகளை குறைக்கவும் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
மேலும், மறுசுழற்சி எரிசக்தி மற்றும் நவீன தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துகிறது”.
கேள்வி: சமீபத்திய முன்னேற்றங்களின் வெளிச்சத்தில், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்த புதிய அணுகுமுறைகள் அல்லது முயற்சிகளை சவூதி மேற்கொள்கிறதா?
“சவூதி அரேபியா, நிலைத்தன்மையை ஆதரிக்கும், அரசியல் தீர்வுகளை ஊக்குவிக்கும், நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் மற்றும் தலையீடு இல்லாத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அணுகுமுறைகளை தனது சர்வதேச தொடர்பாடல்களில் பின்பற்றுகிறது. அதே அடிப்படியில் தற்போதைய சூழ்நிலைகளும்; அதிக சர்வதேச ஒருங்கிணைப்பையும் கூட்டுச் செயல்பாடுகளின் தேவையினையும் உணர்த்துகின்றன”.
கேள்வி: இந்த முன்னேற்றங்களின் வெளிச்சத்தில் சர்வதேச சமூகத்திற்கு நீங்கள் வழங்கும் செய்தி என்ன?
“அண்டை நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களை நிறுத்துவதற்காக சர்வதேச சமூகம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இல்லையெனில், இத்தகைய செயல்கள் தொடர்ந்தால், சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதார நிலைத்தன்மைக்கு தீவிர விளைவுகள் ஏற்படும்”.