09/08/2026
சர்வதேச அரங்கில்; புனித மக்கமா நகரில் ஒலித்த இலங்கையின் இளம் குரல்.
சர்வதேச அல் குர்ஆன் போட்டியில் மாணவன் அல் ஹாபிழ் ஸயீத் முஹம்மத் இப்பத்!
புனித மக்கமா நகரில்; புனித மஸ்ஜிதுல் ஹராம் வளாகத்தில், சவூதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சின் ஒருங்கிணைப்பில் இத்தினங்களில் 46ஆவது சர்வதேச மன்னர் அப்துல் அஸீஸ் திருக்குர்ஆன் மனனப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
உலகளவில் 133 நாடுகளைச் சேர்ந்த 334 சிறந்த போட்டியாளர்கள் களம் கண்டுள்ள இம்மாபெரும் சர்வதேச அரங்கில், இலங்கையின் பிரதிநிதியாக நால்வர் பங்கேற்கின்றனர். அவர்களில் நேற்றைய தினம் அல் ஹாபிழ் ஸயீத் முஹம்மத் இப்பத் பங்கேற்று தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.