09/12/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
நன்றி நவிலல்
---------------------
எமது 2019/2022 கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட உலர் உணவு மற்றும் நிவாரணப் பொருள் சேகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் உன்னதமான பங்களிப்புடன் தொடர்ந்து மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த உயரிய பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக,
★ இந்நிகழ்வை மேற்கொள்ள அனுமதி வழங்கிய பிரதேச செயலாளர் கனி Sir அவர்களுக்கும்,
★ எங்களுடன் இணைந்து ஆதரவு வழங்கிய நகர சபை தவிசாளர் மஹ்தி sir அவர்களுக்கும்,
★ கூடாரம் மற்றும் Focus Light வழங்கிய *கௌரவ நகர சபை உறுப்பினர் சனாஸ் முகமத் நானா* அவர்களுக்கும்,
★ ஊடக பங்களிப்பை வழங்கிய *சபீர் நானா மற்றும் கிண்ணியா* பாரிஸ் நானா* அவர்களுக்கும்,
★ எப்போதும் ஆலோசனைகளுடன் துணைநின்ற *ஜவுஹரி ஆசிரியர்* அவர்களுக்கும்,
★ மேலும் தொடர்ந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து வழங்கிய *பொதுமக்கள்* அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.
இந்த முயற்சியை சிறப்பாக நெறிப்படுத்திய எங்கள் சக மாணவர்களுக்கும் ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்காலத்திலும் எங்களால் இவ்வாறான நற்பணிகள் மேற்கொள்ளப்படும் போது இதே போன்ற ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என நம்புகிறோம்.
*நன்றி*.
*ஏற்பாட்டுக் குழு 2019/2022 பழைய மாணவர்கள் கிண்ணியா மத்திய கல்லூரி*