15/06/2022
பாலு மகேந்திரா நூலகமானது இவ் வருடத்திற்கான ஒளிப்பதிவு தொடர்பான இலவச குறுங்கால பயிற்சிப்பட்டறையினை வார இறுதி நாட்களில் நடாத்த இருக்கிறது.
இப் பயிற்சிப்பட்டறையானது புனே திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவில் பட்டம் (Three Years PG Diploma In Cinematography) பெற்ற ஈழத்து ஒளிப்பதிவாளர் பிரதீபன் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற உள்ளது.
வார இறுதி நாட்களில் தொடர்ச்சியாக பத்து வாரங்கள் (02.07.2022 - 04.09.2022) நடைபெறவுள்ள இந்த கற்கைநெறிக்கான விண்ணப்பப்படிவ உள்வாங்கலானது ஜூன் மாதம் இருபத்திநான்காம் திகதி (24.06.2022) நள்ளிரவுடன் முடிவடையும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் இருபத்தேழாம் திகதிக்கு (27.06.2022) முன்னர் மின்னஞ்சல் ஊடாக மேலதிக விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்.
இப் பயிற்சிப்பட்டறைக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள் நேரடியாக பாலு மகேந்திரா நூலகத்திற்கு வருகை தந்து பயிற்சிப்பட்டறையில் கலந்துகொள்ளல் வேண்டும். கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இலவச தங்குமிட வசதி செய்துதரப்படும்.
பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க:
https://bml.world/dop
மேலதிக தொடர்புகளுக்கு:
www.balumahendralibrary.org
[email protected]
13/10/2021
வணக்கம்,
எழுத்தாளராக விரும்புவோருக்கான இணையவழி சிறப்புப் பயிற்சிப் பட்டறையாக நடைபெறவுள்ள பட்டறை 3 இற்கான விண்ணப்பப்படிவ உள்வாங்கல்கள் அனைத்தும் ஒக்டோபர் பத்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் (தாயக நேரம்) முடிவடைந்துள்ளது.
பட்டறை 3 இற்கு மொத்தம் 58 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். நாம் முன்னர் அறிவித்ததற்கமைய விண்ணப்பித்தவர்களில் 25 மாணவர்கள் இச்சிறப்புப் பயிற்சிப் பட்டறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இப் பட்டறைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், இம்முறை தெரிவு செய்யப்படாதவர்கள் உங்கள் முயற்சிகளில் தொடர்ந்து பயணிக்கவும் எதிர்வரும் பட்டறைகளில் இணைந்து பயணிப்போம் என்ற நம்பிக்கையைக் கூறிக்கொள்கிறோம்.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விதிமுறைகள் உட்பட்ட மேலதிக தகவல்கள் நேற்றைய தினம் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மொத்த விண்ணப்பதாரர்களில் 55% ஆண்கள், 43% பெண்கள் மற்றும் ஒருவர் இதர பாலினத்தைச் சேர்ந்தவர். இவர்களில், 45 வீதத்தினர் பாலு மகேந்திரா நூலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப்போட்டியில் கலந்துகொள்ளாத புதிய மாணவர்கள் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.
பட்டறை 3 ஆனது எதிர்வரும் ஒக்டோபர் 17, ஒக்டோபர் 24, ஒக்டோபர் 31, நவம்பர் 7 மற்றும் நவம்பர் 14 ஆகிய ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறவுள்ளதுடன், ஒவ்வொரு கிழமையும் ஈழத்து மற்றும் தமிழக எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் சிறப்பு வளவாளர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
பட்டறை 4 பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் இத்தருணத்தில் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
இவ்வண்ணம்,
பட்டறை நிர்வாகம்
13.10.2021
01/10/2021
பட்டறை 3 ஆனது, எழுத்தாளராக விரும்புவோருக்கான இணையவழி சிறப்புப் பயிற்சிப் பட்டறையாக நடைபெறவுள்ளது.
இப்பட்டறை எதிர்வரும் ஒக்டோபர் 17, ஒக்டோபர் 24, ஒக்டோபர் 31, நவம்பர் 7 மற்றும் நவம்பர் 14 ஆகிய ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை “கதையிலிருந்து சிறுகதையும் நாவலும் எப்படி வேறுபடுகின்றன”, “நவீன சிறுகதைகள்” போன்ற பல கருப்பொருள்களில் இணைய வாயிலாக நடைபெறும்.
இவ் இணையவழிச் சிறப்புப் பயிற்சிப் பட்டறையில் ஒவ்வொரு கிழமையும் ஈழத்து மற்றும் தமிழக எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் சிறப்பு வளவாளர்களாகக் கலந்து பயிற்றுவிப்பர்.
விண்ணப்பப்படிவ உள்வாங்கல்கள் அனைத்தும் ஒக்டோபர் பத்தாம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் (தாயக நேரம்) முடிவடைவதுடன், அதிகபட்சம் 25 மாணவர்களே இப் பட்டறைக்கு உள்வாங்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்க மற்றும் மேலதிக தகவல்களுக்கு👉 www.paddarai.org
இவ்வண்ணம்,
பட்டறை நிர்வாகம்
01.10.2021
30/09/2021
பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையத்தின் இரண்டு வருட (14.01.2022 - 31.12.2023) முழுநேர மற்றும் பகுதிநேர இலவசத் திரைப்படக் கற்கை மற்றும் பயிற்சியின் நுழைவுப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம்.
விண்ணப்பிக்க மற்றும் மேலதிக தகவல்களுக்கு👇
https://bml.world/2ndBatch
இவ்வண்ணம்,
நிர்வாகம்,
பாலு மகேந்திரா நூலகம்
28.09.2021
18/09/2021
பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு 26.09.2021 அன்று மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில், பாலு மகேந்திரா நூலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் நடுவர்களான எழுத்தாளர் கோகிலா மகேந்திரன், எழுத்தாளர் சயந்தன் மற்றும் திரைப்பட விமர்சகர் ரதன் ரகு ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன், சிறுகதைப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கான பரிசுத்தொகையும் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இணையவாயிலாக நடைபெறவுள்ள இந்நிகழ்வினைத் தொகுத்து வழங்கவுள்ளார் பிரபல வானொலி ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜென்.
இந்நிகழ்வில், கலந்துகொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் கீழ்வரும் வலைத்தள இணைப்பின் ஊடாக தங்கள் வரவினை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
www.bml.world/2nd
இவ்வண்ணம்,
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
16.09.2021
#எங்கட_கதைகள் #எங்கட_புத்தகங்கள்
03/09/2021
பாலு மகேந்திரா நூலகத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நடாத்தப்படும் சிறுகதைப்போட்டி நிகழ்விற்காக தங்கள் சிறுகதைகளை அனுப்பிவைத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
26/07/2021
பாலு மகேந்திரா நூலகத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சிறுகதைப் போட்டி ஒன்றினை நடாத்த முன்வந்துள்ளோம்.
பின்வரும் விதிகளுக்கு உட்பட்டு உங்கள் சுயவிபரக்கோவை மற்றும் சிறுகதைகளை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: [email protected]
போட்டி விபரங்கள் மற்றும் விதிகள்:
🔸ஒருவர் எத்தனை சிறுகதைகளையும் அனுப்பிவைக்கலாம்.
🔸சிறுகதைகள் உங்கள் சொந்த ஆக்கமாகவும், முன்னர் வெளிவராததாகவும், வேறு கதைகளைத் தழுவியதாகவும் இல்லாதிருத்தல் வேண்டும்.
🔸சிறுகதைகளை யுனிகோட் (Unicode) முறையில் தட்டச்சு செய்யப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
🔸சிறுகதைகள் 2000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருத்தல் வேண்டும்.
🔸சிறுகதைகள் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
🔸எமது தெரிவுக்குழுவினரால் சிறந்த 10 சிறுகதைகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை மூன்று பேர்கொண்ட நடுவர்களிடம் தனித்தனியாகக் கையளிக்கப்படும். நடுவர்களின் வரிசைப்படுத்தலின் அடிப்படையில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். இதில் நடுவர்களின் முடிவே இறுதியானது.
🔸நடுவர்களாக திருமதி. கோகிலா மகேந்திரன் (எழுத்தாளர்), திரு. சயந்தன் (எழுத்தாளர்) மற்றும் திரு. ரதன் (திரைப்பட விமர்சகர்) ஆகியோர் கடமையாற்றுவர்.
🔸வெற்றிபெறும் சிறுகதைகள் தொகுப்பாக வெளியிடப்படும்.
🔸சிறுகதை உரிமம் என்றும் எழுத்தாளருடையது.
🔸முடிவுகள் அறிவிக்கப்படும் நிகழ்வில், படைப்பாளர்களின் சிறுகதைகள் தொடர்பிலான பின்னூட்டங்கள் குறித்து நடுவர்களுடனான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
🔸முதலாம் பரிசு: 25 000 ரூபா
🔸இரண்டாம் பரிசு: 15 000 ரூபா
🔸மூன்றாம் பரிசு: 10 000 ரூபா
🔸10 ஆறுதல் பரிசுகள்: ஒவ்வொரு சிறுகதைக்கும் தலா 5 000 ரூபா
இச்சிறுகதைப் போட்டியினை இணைந்து நடாத்துவோர் எங்கட புத்தகங்கள் மற்றும் பட்டறை.
அனைத்துப் பங்குபற்றாளர்களுக்கும் முற்கூட்டிய வாழ்த்துக்கள்.
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
26.07.2021
#எங்கட_கதைகள் #எங்கட_புத்தகங்கள்
15/07/2021
பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்படும் வாராந்த திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் 100M Criminal Conviction, Roobha, கண்டம் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளரும், புலம்பெயர் ஈழத்தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருமான வரன் சின்னத்தம்பி அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.
விண்ணப்பிக்க👇
https://balumahendralibrary.org/ta/event/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்படும் வாராந்த திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் 100M Criminal Conviction, Roobha, கண்டம் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளரும், புலம்பெயர் ஈழத்தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருமான வரன் சின்னத்தம்பி அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.
ZOOM செயலி ஊடாக நடைபெறும இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இந்த திரைப்படப் பயிற்சிப்பட்டறை இணையவாயிலாக நடைபெறும்.
இதில், வாராந்தம் சர்வதேசப் புகழ்பெற்ற திரைத்துறை ஆளுமைகள் கலந்துகொண்டு உங்கள் திரைத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
திரைத்துறை ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இவ்வண்ணம்,
பாலு மகேந்திரா நூலகம்.
14.07.2021
விண்ணப்பிக்க👇
https://balumahendralibrary.org/ta/event/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
25/06/2021
பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்படும் வாராந்த திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் உரு, ஆறாம்நிலம் போன்ற ஈழத்துப் படைப்புக்களினதும், பிசாசு-2 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும், புலம்பெயர் ஈழத்தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளருமான சிவா சாந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.
விண்ணப்பிக்க👇
https://www.balumahendralibrary.org/ta/event/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்படும் வாராந்த திரைப்படப் பயிற்சிப் பட்டறையில் கடைசி தரிப்பிடம், உரு, ஆறாம்நிலம் போன்ற ஈழத்துப் படைப்புக்களினதும், பிசாசு-2 திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரும், புலம்பெயர் ஈழத்தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளருமான சிவா சாந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.
ZOOM செயலி ஊடாக நடைபெறும் இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இந்த திரைப்படப் பயிற்சிப்பட்டறை இணையவாயிலாக நடைபெறும்.
இதில், வாராந்தம் சர்வதேசப் புகழ்பெற்ற திரைத்துறை ஆளுமைகள் கலந்துகொண்டு உங்கள் திரைத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
திரைத்துறை ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலகம்
விண்ணப்பிக்க👇
https://www.balumahendralibrary.org/ta/event/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
18/06/2021
பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்படும் வாராந்த திரைப்படப் பயிற்சிப் பட்டறையில், சர்வதேச விருது பெற்ற புலம்பெயர் ஈழத்தமிழ்த் திரைப்பட இயக்குனர் ‘லெனின் எம்.சிவம்’ அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளார்.
ZOOM செயலி ஊடாக நடைபெறும் இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்துகொள்ள முடியும்.
பிரதி வெள்ளிக்கிழமை தோறும் இந்த திரைப்படப் பயிற்சிப்பட்டறை இணையவாயிலாக நடைபெறும்.
இதில், வாராந்தம் சர்வதேசப் புகழ்பெற்ற திரைத்துறை ஆளுமைகள் கலந்துகொண்டு உங்கள் திரைத்துறை சார்ந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
திரைத்துறை ஆர்வமுள்ளவர்கள் எமது உத்தியோகபூர்வ வலைத்தளம் ஊடாக விண்ணப்பித்து, உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலகம்
நிர்வாகம்
விண்ணப்பிக்க👇
https://www.balumahendralibrary.org/ta/event/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D