Jaamiathul Falah - Kattankudy -
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaamiathul Falah - Kattankudy -, Education, Kattankudi.
14/07/2021
JULY 2021
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
நமது ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் ஹாபிழ் பட்டம் பெற்று மற்றும் மௌலவி பட்டம் பெற்று வெளியேறியவர்களிடமிருந்து தற்போதைய தகவல்களை அறிந்து கொள்வதற்காக நமது பழைய மாணவர்கள் அமைப்பான மஜ்லிஸுல் பலாஹிய்யீன் நிர்வாகம் தகவல்களை திரட்டிக் கொண்டிருக்கிறது
தங்களது தகவல்கள் அவசரமாக தேவைப்படுவதால் உள்ளூர் வெளியூர் பலாஹிய்யீன்கள் அனைவர்களும் கீழுள்ள லிங்க் ஊடாகச் சென்று தங்களது தகவல்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்..
*குறிப்பு : வாட்ஸ்அப் ஊடாக தகவல்களை அனுப்பியவர்களும் கீழுள்ள லிங்க் ஊடாக மீண்டும் தங்களது தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம்.*
நிருவாகம்
மஜ்லிஸுல் பலாஹிய்யீன்
ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரி, காத்தான்குடி, பட்டம் பெற்ற ஹாபிழ்கள் மற்றும் மெளலவிமார்களி
புனித தஃவா பணியில் இந்திய
மண்ணிலிருந்து இலங்கை
மண்னின் சமூகசேவையில்
இறுதி மூச்சிவரை
தனது வாழ்வை அற்பணித்த சமூகசேவையாளரும் சமாதானத்தின் தந்தையுமான
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்
அறபுக்கலாசாலையின் ஆயுழ்கால கால அதிபர் சங்கைக்குரிய மர்ஹூம் செய்குல்
பலாஹ் அப்துல்லாஹ் றகுமானி
அவர்கள் எம்மைவிட்டு
நிரந்தரபிரியாவிடைபெற்று நாளையுடன் ( 01.10.2017)
ஒரு வருடம் பூர்த்தியாகின்றது .இவ்வேளை அல்லாஹ் அவர்களுக்கு நாளை
மறுமையில்
உயர்ந்த ஜன்னதுல்
பிர்தவ்ஸ் என்ற சுவர்கத்தை வழங்கவேண்டும் என்ற பிராத்தனை முன்வைப்பதில்
சமூக சிந்தனையாளர்கள் இணையத்தளம் மகிழ்ச்சியடைகிறது.
*நான் கண்ட ஸைஹுல் பலாஹ் - தொடர் 10*
*===%%%===%%%===*
இறுதியாக எடுக்கப்பட்ட முடிவின் படி அடுத்த நாள் காலையில் சுமார் ஏழு மணியளவில் முதலாம் குறிச்சி ஸாவியா பள்ளி வாயலில் சந்திப்பதர்காக எங்கள் குழு ஸைஹுல் பலாஹ் தலமையில் அதற்கு முதல் நாள் புலிகளை சந்திக்கச்சென்ற அனைவருடனும் இன்னும் பலரும் சென்று இருந்தோம்.
அதன் பின்னர் பரிவாரங்களுடன் பாதுசா அவர்களும் அவரது மெய்பாதுகாப்பாளர்களோடு வந்து சேர்ந்தார், முதல் நாள் நடந்த சம்பவம்களை தெழிவாக விளக்கி கூறப்பட்டது, அவர்கள் ( பாதுசா குழுவினர் ) எந்த வகையிலும் எந்த ஒரு முடிவிற்கும் வரவில்லை பல மணி நேரம் பேசினோம் காலை உணவும் இல்லை பகல் உணவும் இல்லை தேனீர் உடன் பொறுமை காத்தோம் இறுதியில் எந்த ஒரு முடிவும் எட்டப்படாத நிலையில் சுமார் மூன்று மணியளவில் வெழியேறி ஜாமியதுல் பலாஹ் சென்றோம்.
மீண்டும் மசூறா ஆரம்பமானது அதில் இறுதியாக எடுக்கப்பட்ட முடிவு அனைத்து பொறுப்பையும் அல்லாஹ்வின் மீது வைத்து விட்டு அனைவரும் வீடு செல்வோம் புலிகளின் காலக்கெடு முடிந்ததும் அவர்கள் எதை செய்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் அதுதான் எண்று பொருந்திக்கொள்வோம், மறுநாள் காலையில் யார் யார் உயிர் தப்பி இருக்கின்றார்களோ அவர்கள் விரும்பினால் எதையாவது செய்யட்டும் எண்று வழமைக்கு மாற்றமாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் எமது கூட்டத்தை கலைத்துவிட முடிவு செய்தோம்.
அதற்கு முன்னர் நீண்டதொரு துஆ பிரார்தனை செய்யப்பட்டது ஒருவரை ஒருவர் இதுதான் நாம் சந்திக்கும் இறுதி தருணம் இன் ஸா அல்லாஹ் அவன் நாடினால் கியாமத் நாளில் சந்திப்போம் எண்று பிரியாவிடை பெற்று சென்றோம், வழமை போன்று சேர்மன் அஹ்மது லெப்பை அவர்களை எனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்று அவரின் வீட்டில் விட்டு விட்டு எனது வீடு திரும்பினேன்.
அப்போது மஃரிபு தொழுகைக்கான நேரம் நானும் வீட்டில் வுழு செய்து கொண்டு குலபா உற்றாஸிதீன் பள்ளிக்கு சென்று ஜமாஅத்துடன் தொழுவதர்காக கடைசி வரிசயில் தக்பிர் கட்டுவதற்கு கையை உயர்தும்போது ஒருவர் திடீர் என எனது கையை பிடித்து இழுத்தார் நெஞ்சில் சிலீர் எண்று இருந்தது, திரும்பினேன் நன்பர் அமீனுல்லாஹ் அவசரம் சற்று வெழியில் வாருங்கள் என்றார் வாசல் வரை வந்தேன் நீங்கள் அவசரமாக மீண்டும் சேர்மன் அஹ்மது லெப்பை அவர்களை ஏற்றிக்கொண்டு மதரசாவிர்கு வாருங்கள் நாம் மீண்டும் அவசரமாக கூட வேண்டியுள்ளது, புலிகள் நமக்கு மன்னிப்பு கொடுத்துள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது எண்று கூறினார்.
நானும் தொழுதுவிட்டு சேர்மனின் வீட்டிற்கு சென்ரு அவரை மீண்டும் பைக்கில் ஏற்றிக்கொண்டு மதரசாவிர்கு வந்தேன் அந்த நேரம் நன்பர் அமீனுல்லாஹ் அவர்கள் பலரின் உதவியோடு மீண்டும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார், இறுதியில் மீண்டும் பொது மக்களுக்கு அறிவிப்பு கொடுப்பதாக தீர்மானித்து அல்லாஹ்வின் உதவியால் இன்று புலிகளின் அச்சுறுத்தல் நீங்கி விட்டது மக்கள் கவலையின்றி நிம்மதியாக தூங்கலாம் என்பதுவே அந்த அறிவித்தல்.
இப்போது பலரும் பேசிக்கொண்டோம் புலிகள் ஏதோ நம் மீது இரக்கம் காட்டிவிட்டார்கள் எண்று ஆனால் அந்த எண்ணம் தவறானது என்பதை புரிவதற்கு கன காலம் தேவைப்படவில்லை, அரசங்கத்தின் புலனாய்வுப்பிரிவும், புலிகளின் புலனாய்வுப் பிரிவும் ஒண்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல என்பத புரிந்து கொள்ள முடிந்தது, அதிகாலை சுப்ஹு தொழுகைக்கு எழும்பும் போதே ஹெலிகளின் சப்தம் கேட்டது சுமார் ஐந்து ஆறு ஹெலிகள் ஆற்றை சுற்றியும் கடல் பகுதியை சுற்றியும் பறந்து கொண்டு இருந்தது.
துப்பாகிச்சத்தமும் கேட்ட வண்ணம் இருந்தது, காரணம் முதல் நாள் புலிகளுடன் முஸ்லிம்கள் நடாத்திய பேச்சு வார்தையின் பின் அவர்கள் கொடுத்த காலக்கெடுவும் அவர்கள் முஸ்லிம் பகுதியில் இருக்கும் ஆயுதம்களை சேகரிப்பதர்காக ஆரையம்பதியில் தங்கி இருக்கும் தகவல் அரச படைகளுக்கு எட்டி விட்டது ஆகவே ஆற்றையும் கடலையும் சுற்றி இவர்கள் தப்பிச்செல்லமுடியாமல் ஹெலியின் உதவியுடன் முழு தமிழ் பகுதியையும் சுற்றி வழைத்து தேடுதல் நடத்துவது எண்று எடுத்த முடிவு இவர்களுக்கு கிடைத்து விட்டது.
அதனால் தப்பினோம் பிளைத்தோம் எண்று ஓடி தப்புவதற்கு முன்னர் நாங்கள் முஸ்லிம்களை மன்னித்து விட்டோம் எண்று நல்ல பிள்ளைகளாக நடித்து விட்டு இரவோடு இரவாக எல்லோரும் படுவான்கரைக்கு தப்பி விட்டார்கள், அடுத்தநாள் பல நூறுபேருடனும் ஆயிரக்கணக்கில் துப்பாக்கி வேட்டு வைத்தும் நடத்திய தேடுதலில் யாரும் அகப்படவில்லை, ஆனால் நாங்கள் அன்று உருக்கமாக கேட்ட துஆ வை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் என்பதுதான் சுருக்கமாக இருந்தது.
இப்படியான சூழ் நிகைகளுக்கெல்லாம் முகம் கொடுத்த நாங்கள் முதலாவது தோல்வியாக நமது சேர்மன் அஹ்மது லெப்பை அவர்களை ஊரின் மத்திய பகுதியில் சந்தியில் வைத்து பலி கொடுத்தோம் இந்த படு கொலையில் புலிகள் அறவே சம்பந்தம் இல்லை நமது முஸ்லிம்சகோதர்களே அரசியல் வஞ்சம் தீர்தார்கள் அவர்களது அரசியல் வழர்சிக்கு இந்த அஹ்மது லெப்பையின் எதையும் பிரதி பலனாக எதிர்பாராத செயல் பாடு தடை எண்று கருதினார்கள், மிக குறுகிய காலத்தில் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் அல்லஹ் அழித்து விட்டான், அதில் சந்தேகிக்கப்பட்ட ஒருவரை புலிகள் பிடித்துக்கொண்டு வந்து அந்த மாமனிதர் சுடுபட்ட இடத்தில் வைத்து சுட்டுப்போட்டு இருந்தார்கள்.
ஊருக்காக உழைத்த அந்த மாமனிதனை ஊரின் நடு மத்தியில் வைத்து சுட்டுக்கொன்றார்கள், வழமையாக நான் தான் அவரை ஏற்றிச்செல்வேன் அன்று நானும் நன்பர்களான அமீனுல்லாஹ்வும் ஜவாத் ஸேர் அவர்களும்பேசிக்கொண்டு இருந்தோம் வேறு ஒருவர் ஏற்றிச்சென்றார் அவர் இந்த கொலைகாரர்களால் அவர்களுக்கு வேண்டியவர் என்ற ஒரு காரணத்திர்காக விடப்பட்டார், மாற்றமாக நான் சென்று இருந்தால் நிச்சயம் என்னையும் சேர்து சுட்டு இருப்பார்கள்.
ஆகவே இந்த நாளைக்குபின்னரான எனது வாழ்கை போனஸ் வாழ்கை என்றே நான் கருதினேன், பின்னர் 1990 புலிகளால் இரண்டு முறை கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டது இரண்டாவது போனஸ் எண்று கருதினேன் அதனால்தான் நான் எனது வாழ்கையை கொழும்பில் அமைத்துக்கொண்டேன். 1990 ஜனவரி முதல் நான் கொழும்பில் தங்கி விட்டேன் அதே வருடம் ஓகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி நமதூர் பள்ளிவாயல் களில் புலிகள் தங்கள் வீரத்தைக்காட்டினார்கள். 103 பேர் வீர மரணம்.
அந்த மாமனிதர் அஹ்மத் லெப்பை அவர்களின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை இருந்தும் சில இக்கட்டான கட்டத்தில் ஸைஹுல் பலாஹ் அவர்கள் முன் நிண்று வழி நடத்தினார்கள். இப்போது அவர்களும் எம்மை விட்டும் பிரிந்து விட்டார்கள் இந்த நிறப்ப முடியாத வெற்றிடத்தால் நமது ஊர் துடுப்பு இல்லாத தோணிபோல் காற்றடிக்கும் திசை எல்லாம் சுழன்று கொண்டு இருக்கின்றது தடி எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்பதுபோல் ஊர் ஆளப்படுகிறது இந்த நிலையில் போய்கொண்டு இருக்கிறது வாழ்கைச் சக்கரம்.
அல்லாஹ் நமது தூய எண்ணத்தையும் எம்மால் முடிந்த செய்கைகளையும் அங்கீகரிப்பானாக.
By : Al-haj moulavi Sayyath Ahmad ( falahi)
Seyed Ahmed.
நான் கண்ட ஸைஹுல் பலாஹ் 7
தீவிரவாதிகளின் தாக்குதலும், அதற்கு எதிரான அரசின் யுத்தமும் உச்சகட்டத்தில் இருந்த நேரம், இரவுப்பயணம் முற்றாகப்பதிக்கப்பட்டு மன்னம்பிட்டி சோதனை முகாமில் பல மணி நேர கெடு பிடியும், காத்தன்குடிக்கும் கதுருவெலைக்குமிடையில் முப்பதுக்கு மேற்பட்ட வீதித்தடையும் ஒவ்வொன்றிலும் இறங்கி தனது ஊடமைகளை சுமந்து வெய்யிலிலும் மழையிலும் நனைந்து நாம் செய்த பிரயானம் அதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் நமக்கு மனதைவிட்டும் அகலாத நிலையில் அன்று நடந்த ஒரு சம்பவம்.
ஒரு நாள் நோன்பு ஆரம்பிப்பதர்கு முதல் தினம் நான் கொழும்பு வருவதற்காக எனது வேனில் வரும்போது "ரெதிதேன்னை" யில் உள்ள ஒரு ஹோட்டலுக்குபோனேன் அப்போது அங்கு இருந்த ஒருவர் என்னிடம் உங்கள் ஹழரத் அவர்கள் கொழும்பு போக வந்து இருக்கின்றார்கள், இது காலை நேரம் இப்போது வுழு செய்வதற்காக பள்ளிக்கு சென்று இருக்கின்றார்கள், கூடவே பல ஹாfபிழ் மாணவர்களும் வந்துள்ளார்கள், ஆனால் அவர்கள் வந்த வாகனம் கருவாடு ஏற்றும் ஒரு லொறி இது எனக்கு பார்பதற்கு நண்றாக தெரியவில்லை என்பதாக.
இவரின் இந்த செய்தி எனக்கும் கவலையைகொடுத்தது அவர்கள் வுழு செய்து விட்டு வரு மட்டும் நான் அங்கே அவர்களை எதிர்பார்து இருந்தேன், நான் எப்போதும் அரைக்கை சேர்ட் உடனும் தலையில் தொப்பி இல்லாமலும் சைகுல் பலாஹ் அவர்களை சந்திப்பது இல்லை அது அவர்களுக்கு நான் கொடுத்த மரியாதை ஆனால் அன்று என்னிடம் தொப்பியும் இல்லை நீட்டுக்கை சட்டையும் இல்லை நீண்ட யோசனை இவர்களது முகத்தில் எப்படி சந்திப்பது அதனால் அவர்கள் வரமுன் நான் போய்விடுவதா? அப்படியானால் அவர்கள் கொழும்பு வரை கருவாட்டு லொறியில் போக வேண்டும்.
தர்ம சங்கடமான நிலமை நீண்ட யோசனையின் பின்னர் ஆபத்திற்கு பாவம் இல்லை என்பார்களே அதை மனதில் நினைத்துக்கொண்டு இருக்கும் போது சைகுல் பலாஹ் அவர்களும் ஆறு ஏழு ஹாfபில் களும் வந்தார்கள் நான் அவர்களை கண்டதும் மிகவும் சந்தோசத்தோடு அளவலாவினேன், எனக்கு தெரியும் அவர்கள் பல ஹாfபிழ் களை தறாவீஹ் தொழுகை நடத்துவதற்காக பல ஊர்களுக்கும் அண்மை நாடான மாலை தீவிர்கும் அனுப்பிவைப்பார்கள்.
எனது வேனில் நானும் எனது சாரதியும் மட்டுமே சென்று இருந்தோம் அப்போது கெடு பிடி காரணமாக நான் ஆட்கள் எற்றி செல்வதும் சீட் பூட்டி செல்வதும் இல்லை கொழும்பில் இருந்து வரும்போது எனது கடைக்குரிய சாமான்கள் ஏற்றி அனுப்புவேன், அதனால் வேனில் மடிக்கும் ஒரு சீட் மட்டும்தான் இருந்தது இப்போதும் நினைத்தேன் ஆபத்திற்கு பாவம் இல்லை கடையில் பேப்பர்களை எடுத்து விரித்து எனது சாரதி உட்பட ஹாபிழ்களையும் இருந்த சீட்டிலும், பேப்பரிலும் உட்காரவைத்து பிரயானத்தை ஆரம்பித்தேன்.
முன் சீட்டில் பக்கத்தில் வைத்து நிறைய விடம்களை பேசியவாறு எமது பயணம் தொடர்ந்தது இடையில் அவர்களையோ உள்ளே இருந்தவர்களையோ இறக்கி சோதனச்சாவடியில் இறங்கி நடக்க விடாமல் சைகுல் பலாஹ் அவர்கள் பற்றி நான் மட்டும் இறங்கி சென்று இவர்கள் யார் என்பதைக் கூறி கூட்டி சென்றேன், சிறிது நேரம் பேசிக்கொண்டு இருப்பார்கள் சிறிது நேரம் ஏதாவது ஓதிக்கொண்டு இருப்பார்கள், சிறிது நேரம் நfல் தொழுகை சீட்டில் இருந்தவாறு தொழுது கொண்டு இருப்பார்கள், இப்படி தம்புள்ளை, குருனாகலை பல பள்ளிகளில் நிர்பாட்டி ஹாfபில் களை இறக்கி விட்டு இரவு நேரம் கொழும்பை சென்று அடைந்தேன்.
அந்த நிகழ்வு எனக்கு அவர்கள் முன் அரைக்கை சட்டையுடனும், தலையில் தொப்பி இல்லாமலும் அவர்களை சந்திப்பதற்கு லைசென்ஸ் கொடுத்ததுபோல் ஆகிவிட்டது அவர்கள் எனது விடயத்தில் எந்த மன வருத்தமோ கோபமோ காட்ட வில்லை.
இதை நான் எழுதுவதற்கு காரணம் அண்றைய காலத்தில் புகையிரத சேவை இல்லை இரண்டொரு சிறிய பஸ்கள் சேவையில் இருந்த காலம், வேன் கூலிக்கு அமர்தினால் செலவு அதிகம் இதை யார் பொறுப்பு எடுப்பது இப்படியான ஒரு சூழலில் தனது சுய கவுரவத்தை கவனத்தில் எடுக்காது அடுத்த நாள் தறாவீஹ் தொழுகை நடத்த இவர்கள் வாக்களித்த பள்ளி வாயல்களுக்கு ஹாfபில் களை அனுப்பி ஆக வேண்டும் என்பதால்.
அவர்கள். செய்ய முன் வந்த தியாகம் ஒரு கருவாட்டு லொறியில் அந்த கருவாட்டு மணம் ஒரு புறம் சீட்டு இல்லை பலகையால் செய்யப்பட்ட சீட்டில் உட்கார்ந்து செல்லத்துணிந்த செய்குல் பலாஹ் அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவர்கள்.
தொடரும்...
04/11/2016
*நான் கண்ட ஸைஹுல் பலாஹ் தொடர் 5*
✍✍✍✍✍✍✍
அல்லாஹ்வின் உதவியால் ஸைகுல் பலாஹ் அவர்கள் தலமையில் சேர்மன் அஹ்மது லெப்பை ஹாஜியார் அவர்கள் பணம் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினார்கள், கொழும்பில் இருந்து கட்டிட ஆலோசனை பெறப்பட்டது புதிய கட்டிடம் அரம்பிக்க முன்னர், பைக்கீர் போடி ஹாஜியார் அவர்கள் முன் வந்து தனது கடைத்தொகுதியை மதரசா நடத்துவதற்கு கொடுத்தார்கள் ( இது மத்திய வீதி பழய ஊர் வீதி சந்தியில் ) அங்கு தற்காலிகமாக மதரசா மாற்றப்பட்டது.
முறைப்படி பயிற்றப்பட்ட பாஸ் மாமா கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்டு கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது முதலில் பழய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தும் வேலை.
இறுதி மூன்று வருட மானவர்களுடைய ஒத்துழைப்புடன் கட்டிடம் இடிக்கப்பட்டது இதன் கழிவுகள் அகற்றப்படும் தேவை இருந்தது அப்போது மதரசாவிர்கு சொந்தமாக தர்போதைய பரீத் நகர் பகுதியில் கோழிப்பன்னை என்ற பெயரில் ஒரு பெரிய நிலம் இருந்தது அங்கு கொண்டுபோய் கழிவுகள் கொட்டப்பட்டன.
பகல் முழுக்க மேசன் ஓடாவிமார் துணையுடன் இடிக்கப்பட்ட கட்டிடம் இரவில் உளவு இயந்திரத்தில் ஏற்றி அங்கு கொண்டுபோய் கொட்டுவோம், அப்போது M R M அரிசி ஆலை உரிமையாளர் அவர்களுக்கு சொந்தமான உளவு இயந்திரம் இனமாக கொடுக்கப்பட்டது அதன் இரவு நேர ஓட்டுனராக ஹயாத் முகம்மது ஹாஜியார் ( MPCS ) விடியும் வரை எங்களோடு வேலை செய்வார் மாணவர்களாகிய நாங்களே தலையில் சுமந்து கட்டிடம் இடித்த மண் கல்லு போன்றவற்றை ஏற்றுவோம் உளவு இயந்திர பெட்டியில் உட்கார்ந்து போய் கொட்டி விட்டு வந்து மீண்டும் ஏற்றுவோம் சுப்ஹு தொழுகைக்கு வரும் ஸைஹுல் பலாஹ் அவர்கள்தான் எங்களை வற்புறுத்தி தூங்க அனுப்புவார்கள்.
அந்த ஒரு வருடமும் நாங்கள் படிப்பில் கவனம் செலுத்தவில்ல முதலில் அத்திவாரம் போட முன்னர் பாரிய கிடங்கு ஒன்று வெட்டப்பட்டது கக்கூஸ் குழி போடுவதற்கு மிகவும் பெரிய மடு பல நாட்கள் வெட்டி எடுத்தோம் பாஸ் மாமா வயதானவர் ஆனால் நல்ல உறுசுறுப்பனவர் அவரே சமைத்து சாப்பிடுவார் இவர் கதிரையில் அமர்ந்து நாங்கள் மடு தோண்டுவதை அவதானித்துக்கொண்டு இருந்தார் எதிர்பாரத விதமாக மண் இடிந்து விழுந்தது பாஸ் மாமாவும் கூடவே தவளை பாய்வது மாதிரி சுமார் 7-8 அடி ஆழ குழிக்குள் வந்து விழுந்தார் பிடிக்க முயற்சித்தேன் பலன் இல்லை அவரது கையில் பாரிய முறிவு.
மிகவும் சிரமத்துடன் அவரை கல்லடி முறிவு வைத்தியரிடம் கொண்டு போய் பல மாதம்கள் வைத்தியம் செய்தோம் ஆனால் வேலை நிற்பாட்டவில்லை, மாணவர்கள் எடுத்துக்கொண்ட உர்சாகமும் பணம் வசூலிக்கப்பட்ட விதமும் அல்லாஹ்வின் உதவியால் ஒரு வருட காலத்தில் மூன்று மாடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது, இந்த கட்டிட வேலைகளுக்கு நமது ஊர் மட்டுமல்ல அனைத்து மக்களின் பங்களிப்பும் மறக்க முடியாதவை, தற்காலிகமாக தனது கட்டிடத்தை கொடுத்த பைக்கீர்போடியார் அவர்கள் கட்டிட கலையில் நங்கு தேர்சி பெற்றவர் அவர் முழு நேர சம்பளம் இல்லாத தொழிலாளி போல் செயல் பட்டார் எனக்கு நிறைய விடயம்களை சொல்லித்தந்தார் அவர் ஒரு நிருவாகி போன்று மேற்பார்வையாளராக தன்னை அர்பணித்து உதவி புரிந்தார்.
இந்த கட்டிட வேலைகளில் நான் மிகவும் மும்முரமாக ஈடு பட்டிருந்தேன் அதனால் அங்கு வைத்து கட்டிட அமசம்களில் நிறைய என்னால் அனுபவ படிப்பை பெற முடிந்தது நியுமுகிதீன் கடையில் இருந்த ஹனீபா அவர்கள் மின்சார வயரிங் செய்தார் நான் முழுநேர உதவியாளரகவும், ரேடியோ கடை அலியார் பைப் லைன் வேலையும் அவருக்கும் நானே உதவியளராக இருந்தேன் அதன் பிரதி பலிப்பு என்னால் எந்த ஒரு கட்டிடத்திர்கும் மின்சார பைப் லைன் வேலை செய்யும் அனுபவத்தை தந்தது, அது மட்டுமல்ல கட்டிடம் முடிந்து நான் மொளவியாக வெழியாகும் வரை அனைத்து பராமரிப்பு மின்சாரம் தன்னீரி உட்பட என்னால் கவனிக்கப்பட்டது.
எனது இடத்தை நிறப்புவதர்கு கீச்சாம்பள்ளம் மன்சூர் அவர்களை பயிற்சி கொடுத்து தயார்செய்து விட்டுத்தான் நான் வெளியேறினேன், அது மட்டுமல்ல எனக்கு அப்போது சிங்களம் அறவே தெரியாது கொழும்பிலிருந்து வந்த பாஸ்மார்களில் சில்வா என்ற ஓரளவு தமிழ் தெரிந்த ஒருவர் இருந்தார் அவரிடம் தினமும் சிங்களம் படிப்பேன் தமிழ் எழுத்தில் சிங்கள சொற்களை எழுதி தினமும் பாடம் செய்வேன் பின்னர் மற்றவர் என்னை பரிகாசம் செய்யும் போதும் அவரிடம் அறைகுறையாக பேசுவேன், எனது சிங்கள மொழி பேச்சுக்கு அவர்தான் குரு, பின்னர் நான் ஆசியர் தொழில் கிடைத்து பொலொன்னறுவையில் வேலை செய்யும் போது மாலை நேரத்தில் எமது பாடசலை சிங்கள அசிரியரிடம் படித்து எழுதவும் வாசிக்கவும் தேர்சி பெற்றேன்.
ஆக பல மாணவர்கள் எங்களோடு வேலை செய்தாலும் நான் பயன்படுத்திக்கொண்டது போன்று யாருமே பிரயோசனம் பெறவில்லை, என்னை ஒரு மேசனாக, ஓடவியாக,எலற்றீசியனாக, பிழம்பராக, சிங்களம் தெரிந்த ஒருவனாக வரும் வாய்பை அல்லாஹ் அந்த அரபிக்கல்லூரி காலத்தில் கொடுத்தான் அல் ஹம்து லில்லாஹ்.
நாங்கள் வேலை செய்யும் நேரங்களில் எங்களுக்கு ஒரு தந்தைபோல் இருந்து நேரத்துக்கு தேநீர் மற்றும் உணவுகளை சைகுல் பலாஹ் அவர்கள் தினமும் தருவார்கள் போய் தூங்கி எழும்பி வருமாறு துரத்தி அனுப்புவார்கள் எப்போம் எங்கள் நலனில் மிகவும் அக்கறையாக இருப்பார்கள்.
மாணவர்களின் உழைப்பு பல லட்சம் ரூபாய்களை மிச்சம் பிடிக்க வைத்தது மட்டுமல்லாமல் நான் அறிந்த வரை மிக மிக குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாரிய மூன்று மாடி கட்டிடம் நமது பகுதியில் அதுதான், இரவு பகல் மழை வெய்யில் இதில் எதுவும் எங்கள் வேலையை தடைசெய்யவில்லை.
இன்று கம்பீரமாக தோன்றும் இந்த கலாசாலையை ஆரம்பித்தவர்கள் பலர் அதில் யாரும் இப்போது உயிரோடு இல்லை, பின்னர் விஸ்தரிப்பு தேவப்பட்டபோது ஒரு ஆசிரியராக வந்து மக்கள் மனதில் தனது செயலால் நடத்தையால்,உள்ளத்தால் அனைத்து மக்களின் உள்ளம்களிலும் இடம்பிடித்த ஸைஹுல் பலாஹ் அவர்கள் உலகம் முடியும் மட்டும் மறக்கப்பட முடியாதவர்கள். மிகவும் எழிமையான வாழ்கை நோயாழிகளை சுகம் விசாரித்தல் ஒருவருடம் அல்லது இரு வருடம்களுக்கு ஒரு முறையே தனது பிறந்த ஊருக்கு செல்வார்கள், தன்னை ஒரு காத்தன்குடி மகனாகவே ஆக்கிகொண்ட அந்த மகானுக்கு காத்தன்குடி மட்டுமல்ல முழு இலங்கை மக்களும் அன்று தமது நன்றிக்கடனை முழுமையாக நிறைவேற்றினார்கள்.
அதேபோன்றுதான் சேவையின் செம்மல் அஹமது லெப்பை சேர்மன் அவர்களும் மறக்கப்பட முடியாதவர், இந்த கல்லூரி மட்டுமல்ல மெத்தைப்பள்ளி, முதலால் குறிச்சி பள்ளி போன்றவையும் அவர்களின் வளி காட்டலில் அவரும் கூடவே சென்று பணத்தை கொண்டு வருவார்கள் குறிப்பாக நளீம் ஹாஜியார அவர்கள் தனது சொந்த வீடு கட்டுவதற்கு செலவு செய்வது போல் பணத்தை கொடுத்தர்கள்.
மொத்தத்தில் பலரின் தியாகத்தில்,உழைப்பில், அர்பனிப்பில் உருவான இந்த மதர்சா இன்னும் இன்னும் சிறப்புடன் வளர வேண்டும் எண்று ஒவ்வொரு பட்டம் பெற்ற பலாஹி களும் பலாஹி ஹாபிழ் களும் முயர்சிக்கின்றார்கள், குறிப்பாக கடல் கடந்த நாடுகளில் வாழ்பவர்கள் குறிப்பாக கத்தார் நாட்டில் தொழில் புரிபவர்கள் தினமும் இந்த யோசனையில் இயங்குறார்கள், சில மாதம்களுக்கு முன்னர் நான் கத்தார் சென்ற போது மூன்று முறை மஜ்லிசுல் பலஹிய்யீன் நிருவாகத்தினரோடு கலந்துரையாடினேன், இங்குள்ள குறைகள் ஏர்படுத்தவேண்டிய மாற்றம்கள் உட்பட பல திட்டம்கள் உள்ளன.
முதலில் தர்போததைய தலைவருக்கு ஒத்துளைப்பு நல்கக்கூடிய நல்லதொரு இயக்குனர் சபை வேண்டும் இப்போது உள்ள போடு காய்கள், தலையாட்டிகள் நீக்கப்பட்டு பட்டதாரிகள் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டும், சத்தியமாக சொல்கிறேன் எனக்கு அந்த பதவி ஆசை கிடையாது ஆனால் எனது இரத்தமும் அந்த கட்டிட மண்ணில் கலந்து கட்டப்பட்டுள்ளது அதனால் அத்துணை உரிமையுடன் எழுதுகிறேன் விரைவில் நிருவாகத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
உலககல்வி மறுமை கல்வி என்ற மூட நம்பிக்கை நீக்கப்பட்டு உலகத்தில் தேடுவதுதான் மறுமைக்கு உரிய முதிலீடு என்ற அடிப்படையில்,வெளியேரும் மாணவர்கள் தற்கால பிரச்சினைக்களுக்கு முகம் கொடுக்க கூடிய பிறர் கையை எதிர்பார்து இருக்காமல் சொந்தக்காலில் நிற்கும் திறமை சாலிகளாக உருவாக்க வேண்டும்.
ஆக்கம் : அல்ஹாஜ் மெளலவி செய்யத் அஹ்மத் (பலாஹி)
தொடரும் இன்ஷா அல்லாஹ்
நான் கண்ட ஸைஹுல் பலாஹ் தொடர் 4
➖➖➖➖➖➖➖➖
நான் குறிப்பிட்ட பாரிய பிரச்சனை என்ன என்பதை முதலில் தெளிவு படுத்தவேண்டும், ஆம் 05-01-1955 ல் ஆரம்பிக்கப்பட்ட அந்த கல்லூரியில் 1963 இறிதியில் நான் மானவனாக சேர்ந்தேன் அன்று முதல் 1970 வரை கல்லூரி அமைந்து இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு தரிசு நிலத்தில்தால் எல்லா மாணவர்களும் சிறு நீர்கழிப்பதர்கும் விடுதி மாணவர்ளினதும் உஸ்தாது மார்களினதும் துணிகள் உலர வைப்பதற்கும் இன்னும் பல தேவகள் விறகு தேங்காய் போன்றவை வைப்பதற்கும் உபயோகப்படுத்தபட்டு வந்தது, சில வேளை அந்த காணி யாருடையது எண்று மாணவர்களோ அல்லது உஸ்தாது மார்களும் அறிந்து இருந்தார்கள் எண்று என்னால் கருத முடியவில்லை.
இந்த நிலையில் ஹிப்ழு பிரிவு ஆரம்பிப்பதற்காக கட்டப்பட்ட அந்த சிறிய கட்டிடத்தால் பக்கத்தில் இருந்த நிலத்திற்கு செல்லும் வளி மிகவும் சிறியதாக மாறி விட்டது சுமார் மூன்று அடி இருக்கும், இதனை அவதானித்த அந்த நிலத்தின் சொந்தக்காரர் அடுத்த ஒர் இரு தினங்களில் அந்த பகுதியை கல்லினால் கட்டி வளியை தடை செய்து விட்டார், இதனால் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் மோசமானது.
அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் உஸ்தாது மார்கள் சிற்றூளியர்கள் இப்படி அனைவருக்கும் ஒரே ஒரு வாழிக்ககூஸ் மட்டும், நிலமை மோசமானது அடுத்தவர் காணியை யாராய் இருந்தாலும் அபகரிக்க முடியாது ஆனால் சுமார் பதினைந்து ஆண்டுகள் உபயோகப்படுத்திய ஒரு இடத்தை இப்படி திடீர் என தடைசெய்வதால் ஏற்படும் நிலமை அந்த காணி உபயோகிக்கப்பட்ட காரணி அந்த கல்லூரியின் வழர்ச்சி முதலியவை கவனத்தில் எடுக்கப்பட்டு ஒரு மஸூரா அடிப்படையில் தீர்வு கண்டிருக்க வேண்டும், ஆனால் அந்த காணி சொந்தக்காரர் ஒரு பிடிவாதக்காறர் யார் சொல்லியும் கேட்கமாட்டாரென்பது எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் மேசன் மற்றும் தொழிலாளர்களோடு வந்து கட்டியதால்தான் அவர் அறியப்பட்டார்
இப்போதுதான் எங்களது மாணவர் புரட்சி ஆரம்பமானது நாங்கள் ஸைகுல் பலாஹ் அவர்களுக்கு தெரியாமல் இந்த புதிதாக காட்டப்பட்ட சுவரை உடைத்து விட முடிவு செய்தோம் சில மாணவர்களை பயன்படுத்தி அடுத்த நாள் பொழுது விடிவதர்கு முன்னர் உடைத்து விட்டோம் ( அவரும் அந்த சுவரை கட்டுவித்த நபர் ) சும்மாவாரா விடவே இல்லை பொலிஸ் வரை சென்றது விடயம் அப்போது மட்டக்களப்பில் தான் பொலிஸ் நிலையம் இருந்தது பொலிசார் அங்கு வந்து விசாரனை நடத்தினார்கள் மாணவர்கள் சார்பாக நாங்கள் விழக்கம் கொடுத்தோம் பொலிசாரும் இது ஒரு மனிதாபிமான பிரச்சினை அதனால் நாங்கள் இதற்கு தீர்பு கூற முடியாது நீங்கள் இரு சாராரும் ஒன்று சேர்ந்து ஒரு நல்ல முடிவிற்கு வாருங்கள் இல்லையேல் எங்களால் வழக்குதொடர்வதை தவிர வேறு வளி இல்லை என்பதாக கூறிவிட்டு சென்றார்கள்.
இப்போது மாணவர்கள் சிலர் முக்கியமாக ஜுனைத், கணுவெளி அப்துல் றாசிக், நர்பிட்டிமுனை அப்துல் கபூர்,உட்பட பலர் எப்போதும் முன் நின்று பாடுபடுபவர்கள் நண்பன் ஜுனைத் எங்கள் தலைவர்போல் செயல் படுவோம் இதனால் ஜுனைத் தனது தந்த மஹ்மூது ஹாஜியாரிடமும் நான் தலைவர் போஸ்ட்மாஸ்டர் SMM முஸ்தபா காழியாரிடமும் பேசி ஒரு சிறிய ஆலோசனைக்கூட்டத்திர்கு ஏற்பாடு செய்தோம் இதர்கு அஹமது லெப்பை சேர்மன் அவர்களையும் அழைத்து இருந்தோம், அதுவரை அவர்கள் மதர்சா நிருவாகத்தில் இருக்கவில்லை. அல்லது நான் அறிந்து இருக்கவில்லை.
பழய மதரசா வகுப்பு அறையில் முன் பக்கமாக நிருவாகிகளும் உஸ்தாது நாயகம் அவர்களும் எதிர்திசையில் மானவர்களில் முக்கியமான பலரும் அமர்ந்து இருந்தோம் ஆலோசனைக்கூட்டம் ஆரம்பமானது, எமது குறைபாடுகள் அல்லது தேவைகள் நாம் சொல்லி அவர்கள் தெரியும் அளவிர்கு யாரும் இருக்க வில்லை,
அதனால் இப்போது இதற்கு தீர்வு என்ன என்பதை ஆலோசித்தோம். நிர்வாக மட்டத்தில் அந்த காணி உரிமையாளரோடு கதைத்து ஒரு முடிவிற்கு வருவது ஒன்ரில் அதை விலை கொடுத்து வாங்குவது அல்லது குத்தகைக்கு சில காலம்களுக்கு எடுப்பது அதுவரை அருகில் இருக்கும் முஹிதீன் தைக்க பள்ளியை உபயோகிப்பது இப்படி பல ஆலோசனைகள் முன் வக்கப்பட்டது.
இவற்றில் எதை ஏற்றுக்கொண்டாலும் இது நிரந்தர தீர்வாக ஆகமாட்டாது என்பதில் நாங்கள் மாணவர்கள் மிகவும் பிடிவாதமாக இருந்தோம். இறுதியாக மாணவர்களால் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது அதுதான் தற்காலிகமாக கல்லூரியை வேறு ஒரு இடத்திற்கு மாற்றுவது, எங்கள் உஸ்தாத் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் தலமையில் இந்த கட்டிட விடயத்தை ஒப்படைப்பது, நிருவாக சட்டம் அரச சட்டம் மற்றும் நடைமுறை விடயம்களை நிருவாகிகள் கவனிப்பது, 6ம் 7ம் மற்றும் இறுதியாண்டு பாடம்களை ஒருவருடத்திர்கு ஒத்திவைப்பது நாங்கள் இரு குழுக்களாக பிரிந்து கட்டுமான வேலைகளில் ஈடுபடுவது, பெரிய ஹஸரத் சின்ன ஹஸரத் தலமையில் சில மாணவர்கள் நிதி வசூலிப்பில் ஈடுபடுவது போன்றவை.
கட்டி முடிந்த கட்டடத்தை மீண்டும் நிருவாகிகளிலிடம் ஒப்படைத்துவிட்டு எங்கள் கல்வியை தொடர்வது, இதர்க்கு பகரமாக ஆசிரியர்களோ, மாணவர்களோ நிருவாகத்தில் எந்த உரிமையோ உறுப்பு உரிமையோ கோரமாட்டோம் என்பதயும் தெழிவாக எடுத்துக்கூறினோம். அதற்கு தலைவர் அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள் ஏனையோரும் மாற்றுக்கருத்து சொல்லவில்ல, ஆனால் அங்கு எங்கள் அழைப்பில் வந்திருந்த அஹ்மத் லெப்பை சேர்மன் அவர்கள் இப்படி ஒரு ஆரோக்கியமான கருத்தை கூறினார்கள்.
அதில் அவர்கள் இங்கு நாங்கள் நீங்கள் நிருவாகம் மாணவர்கள் எண்று பிரிந்து இருக்காமல் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த நல்ல காரியத்தை செய்து முடிப்போம், இது உலக முடிவு நாள் வரை நீடித்து நிலைக்க வேண்டிய காரியம் என்பதை தெழிவு படுத்தியதும், மிகவும் சந்தோசம் அடைந்தவர்கள் மாணவர்களாகிய நாங்களே. ஸைகுல் பலாஹ் அவர்கள் அமைதியாக இருந்து விட்டு தங்கள் கருத்தை முன்வைக்கும் பழக்கம் உடையவர் ஆனால் அவர்கள் அன்று ஏதும் சொல்லாமலே நடந்த விடயம்களை அப்படியே அங்கீகரித்தார்கள்.
இப்போது நிதிவசூல் பொறுப்பை சேர்மன் அவர்கள் உஸ்தாது நாயகம் ஸைஹுல் பலாஹ் தலமையில் பொறுப்பு எடுத்தார்கள் நண்பன் ஜுனைத் அவர்களின் தந்தை உட்பட மாணவர்கள் கட்டுமான பணிகளை பொறுப்பேற்றோம்.
தொடரும்..... இன்ஷா அள்ளாஹ்
By : Al Haj, moulavi Sayyath Ahmad (falahi)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kattankudi