BT/Al-Hira Maha Vidyalaya Kattankudy

BT/Al-Hira Maha Vidyalaya Kattankudy

Share

BT/Al-Hira Maha Vidyalaya is one of the best boys school in Kattankudy. this page is created by Al-Hira students. { WE ARE PROUD TO BE AN AL-HIRA STUDENT}

SCHOOL HISTORY AND PRESENT SITUATION. This is the first Muslim school which was established on the 1st march, 1911 in the eastern province. It has classes from grade one to grade thirteen. We started A/L Arts stream in 2006 and the Commerce stream in 2010. In our educational division there are 28 schools which cater to the need of the 60,000 people of this area. Our people are delighted to know th

03/04/2020

இனிய காலை வணக்கங்கள் நண்பர்களே... எப்போது முடியும் இந்த கொரோனாவும், வரையறையற்ற ஊரடங்கு சட்டமும்?

தயவு செய்து இந்த பதிவினை உங்கள் பொண்ணான நேரத்தினை செலவு செய்து வாசிக்கவும்.

உலகளாவிய ரீதியில் தற்போது பேசப்பட்டு வரும் விடயம் தான் இந்த கொரோனா என்னும் கொடிய நோய். நான் ஒன்றும் புதிதாக சொல்ல வேண்டிய அவசியம் அல்ல. நாங்கள் சமூக வலைத்தளங்களில், தொலைக்காட்சிகளில், வானொலிகளில் என்று பல ஊடகங்கள் ஊடக அறிந்த விடயமே.

தற்போது இலங்கையில் இதன் பாதிப்பு உட்சத்தை எட்டிய நிலையில் இருந்தாலும், இதனை முற்று முழுதாக இல்லாமல் ஒழிக்க வைத்தியர்களும், பாதுகாப்பு படையினரும், சில தனியார் நிறுவனங்களும் முழு மூச்சாக பல தியாகங்கள் செய்து நம் நாட்டு மக்களின் நலனுக்காக செயற்பட்டு வருகின்றார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.

நம் இலங்கை நாட்டினை பொறுத்த வரையில் ஒரு சிறிய கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என நாம் அறிவோம். இங்கு சிங்களம், தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் என பல மதத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கொரோனா எனும் உயிர் கொல்லி நோய் நம் நாட்டு மக்கள் அனைவருக்குமே ஒரு மிகப் பெரிய சவாலாக தான் காணப்படுகின்றதே ஒழிய ஒரு தனி நபருக்கு மட்டும் சவாலாக அமையவில்லை. இதனை முற்றுமுழுதாக இல்லாமல் செய்து நாம் அனைவரும் வழமை போன்று நம் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்வதே அனைவரினதும் துஆ ஆக இருக்கின்றது.
நான் இக்கட்டுரையில் கூற வந்த விடயம் என்னவென்றால், இந்த நோயினை எவ்வாறு முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய முடியும் என்ற, என் மனதில் தோன்றிய சிறிய கருத்தை உங்களோடு பகிரவே இக்கட்டுரையை நான் எழுதுகின்றேன்.

நாம் அன்றாடம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சாவல்களை எதிர்கொள்கின்றோம். பல அன்றாட தேவைகளை நிறைவு செய்ய பல வழிகளில் போராடுகின்றோம். ஆனால் நாம் வாழும் தாய் நாட்டிற்கே பிரச்சினை என்ற பொழுது நாம் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றோம். நம் நாடு வல்லரசு இல்லை தான். ஆனால் கல்வியில், வசதியில் ஏதோ நாம் பல நம்மை விட பின்தங்கிய நாட்டைவிட நம் முன்னணியிலே தான் இருக்கின்றோம். இதுவே நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

இந்த கொரோனா நோயினால் மக்கள் பாதிக்கப்பட்டாலும், அதன் விளைவினால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்து வந்த பல குடும்பங்களின் அழுகுரல்கள் இன்னும் சில நம் செவிகளுக்கு கேட்கப்படமலேயே உள்ளன. இந்த கால வரையறையற்ற ஊரடங்கு சட்டத்தினால் என்ன பயன்? என்ன செய்கிறார்கள்? என்ற பல விதமான கேள்விகளும் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் விடயமே.

ஆம், உண்மையில் நாம் அனைவரும் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம்? எல்லோருக்கும் ஒரு தடவையாவது கேள்வி எழுந்ததுண்டா? இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன? எவ்வளவு காலத்திற்கு இவ்வாறு முடங்கி கிடப்பது? இன்று சோற்றுக்கு என்ன செய்வது? பிள்ளைகளின் பசியினை எவ்வாறு போக்கப்போகின்றோம்? இப்படியான பதிலே இல்லாத கேள்விகள் அனைத்தும் இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு ஏழையினதும் மனதில் அன்றாடம் எழும் கேள்வியாகும்.

நான் இந்த ஊரடங்கு சட்டம் பிழையான செயல் என்று கூறவில்லை. இந்த வரையறையற்ற ஊரடங்கு சட்டத்தினால் கொரோனாவினால் மக்கள் இறக்காவிட்டலும் பசியினால் பல உயிர்களை இழந்து விடுவமோ என்னும் அச்சத்தில் நானும் பல ஏழைகளும் உள்ளோம். இதற்கு என்ன தான் தீர்வு என்பதை தான் எனது அபிப்பிராயத்தை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். முதலில் இந்த நோயினை இல்லாதொழிக்க எல்லோரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைய வேண்டும்.

நாங்கள் பாடசாலையில் கற்ற அதே விடயத்தை தான் இங்கே பிரயோகிக்க இருக்கின்றோம். ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண நாங்கள் பின்பற்றும் 4 செயற்பாடுகள் ஆகும். (பிரச்சினையை இனங்காணல், கருதுகோளை உருவாக்குதல், கருதுகோளை பரிசோதித்தல், முடிவுக்கு வரல்) என்னும் 4 முக்கிய செயற்பாடுகளை தான் இங்கே செய்ய போகின்றோம்.

முதலாவது பிரச்சினையை இனங்காணுதல். இந்த செயற்பாடு தான் ஆரம்ப கட்டமாக செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயமாக இருந்தாலும் பல சிக்கல்களை சந்திக்க நேரும் முதற்படி ஆகும். முதலில் இந்த நாட்டில் வாழும் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதற்கு நான் யோசித்த உத்தியாக உதாரணத்திற்கு நம் நாட்டில் தேர்தல் நடைபெறும் போது கையாளும் உத்தியாக தமது பிரதேசித்தில் Blood Checking Booth களை நிறுவுதல். தமது கிராம சேவகர் பிரிவுகளாக பிரித்து, வைத்தியர், தாதிமார், இரத்த பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர், பாதுகாப்பு படையினர் ஆகியோரின் உதவியினைக் கொண்டு அந்த பிரதேசத்தில் வாழும் அனைவரினதும் இரத்த மாதிரிகளை பரிசோதித்து அந்த பிரதேசத்தில் ஒரு Blood Checking Lab ஒன்றினை நிறுவி இரத்த மாதிரிகளை பரிசோதித்தல். இதற்காக பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும். ஒரு குடும்பத்தில் காணப்படும் அனைவைரின் நலனிற்காகவும், இந்த நாட்டின் நன்மைக்காகவும் பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று அனைவருக்கும் இந்த செயற்திட்டத்தினை விளக்க வேண்டும். இதற்கு ஊடகங்களும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பதையும் கனிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

அடுத்த கட்டமாக இரத்த மாதிரிகளின் ஊடாக நோயாளிகளை இலகுவாக இனம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து குணப்படுத்துதல்.
அவ்வாறு பரிசோதனை நடைபெறும் காலகட்டத்தில் முற்று முழுதாக அந்த ஊரினை முடக்கி வைத்திருத்தல், பரிசோதனையின் பிற்பாடு அந்த ஊரிட்குள் நுழைய முன்பாக இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவர் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே அந்த ஊரிட்குள் அனுமதிக்கப்படுவார் என்ற தகவலையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகள் இந்த நாட்டில் வாழும் அனைரின் உதவியை கொண்டு செயட்படுவோமாக இருந்தால் இந்த கொரோனா எனும் உயிர் கொல்லி நோயினை முற்று முழுதாக விரட்டியடித்து நம் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடர முடியும் என்று பிரார்த்திக்கிறேன் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

இந்த பதிவினை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல் தங்கள் மனதில் இது சம்பந்தமாக கேள்விகள் இருக்கும் எனில் இதனை விட வேறு உத்தியினால் இந்த நோயினை முற்றுமுழுதாக விரட்டியடிக்க உங்களால் முடிந்த கருத்துக்களை பகிரவும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த விடயத்தை அதிகம் Share செய்து உயர் மட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டு எனது கட்டுரையை முடித்துக்கொள்கின்றேன்.

இந்த செய்தி Forward செய்யப்பட்ட கருத்து அல்ல, என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றிகள்.

05/05/2018
05/05/2018

😎

05/05/2018

05/05/2018

We All did

18/08/2017

மறக்க முடியாத பள்ளிக்கால வாழ்கை
1. முதன் முதலில்
பள்ளிக்கு செல்லும் முன்
அழுதது .
2. வாத்தியாருக்கு
வேணும்னே சீக்கி்ரம் உடைஞ்சு
போற மாதிரி குச்சி தர்றது.
3.காலண்டரில் இந்த மாதம் எத்தனை
அரசு விடுமுறை வருது என
மாதந்தோறும் பார்ப்பது.
4.பள்ளிக்கு செல்லும் முன் அப்பா
காசு கொடுப்பாரா இல்லையா
என எதிர் பார்த்தது.
5. பள்ளிக்கு
போக மாட்டேன் என்று
சொன்னதுக்காக அப்பா அடித்தது.
6. மாலையில் பள்ளி விட்டதும்
சத்தம் போட்டுகொண்டு ஓடியது.
7. திங்கள் கிழமை
காலையிலேயே அடுத்த சனி
கிழமை, ஞாயிறு கிழமை எப்ப
வரும் என்று காத்திருப்பது.
8.வீட்டு பாடம் எழுதாமல் மறுநாள்
ஆசிரியர் கிட்ட
அடிவாங்கினது.
9. வருசம்
முழுக்க படிக்காம ஊர
சுத்திட்டு, பரீட்ச்சைக்கு ஒரு நாள்
முன்னாடி அவசர அவசரமா எத
படிக்கிறதுன்னே தெரியாம
முழிச்சது .
10. இருக்குறதுலயே
அதிக பக்கங்கள் இருக்கிற புக்க
வெச்சு 'புக் கிரிக்கெட் '
விளையாடுறது .
11. பிறந்தநாள்
லீவு அன்னைக்கு வருதேன்னு
வருத்த பட்டது.
12. வட்டம் போட
காம்பஸ் இருந்தும் பக்கத்து
பெஞ்சுல இருக்க பொண்ணுகிட்ட
வளையல் வாங்குறது.
13.வாத்தியார் அடிக்கும் குச்சியை
ஒளித்து வைத்தது .
14.. சில்லறைக்
காசு கையளவில் ...சந்தோஷமோ
கடலளவில் .....
15. பரிச்சையில்
முதன்முதலில் பிட் அடித்தது.
16. முதன்முதலில் பள்ளியை கட்
அடித்துவிட்டு நண்பர்களோடு
ஊர் சுற்றியது .
17. முழுஆண்டு
தேர்வின் கடைசி பரிச்சை அன்று
சட்டையில் மை (இங்) அடித்து
மகிழ்ச்சியை வெளிபடுத்தியது.
18. ப்ளாக் போர்டுக்கு கரி பூசும்
நாளை திருவிழா போல
கொண்டாடியது .
19. கணக்கு டீச்சர்
லீவுன்னு சந்தோஷத்தில்
குதிச்சது..
20. யாராவது
பேசுனீங்க போர்ட்ல நேம் எழுதி
வெச்சிருவேன்னு மிரட்டுவது ..
21. நண்பர்களிடம் சாப்பாட்டை
பகிர்ந்து உண்பது.
22. முதல் லவ்
லெட்டர் எழுதியது...
23.சட்டையை டக் இன் செய்து,
அரைஞான் கயிற்றை பெல்ட்டா
யூஸ் செய்வது...
இப்படி ஒவ்வொன்றும், மறக்க
இயலா கவிதையாய்..
எல்லோரின்
மனமெனும் கல்வெட்டில் பதிந்து
இருக்கும்..
அசைபோடுங்கள்...
பகிருங்கள்......

Photos from BT/Al-Hira Maha Vidyalaya Kattankudy's post 27/04/2016

காத்தான்குடி அல் ஹிரா பாடசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு

மட்டக்களப்பு மத்திய கல்விவலயத்திற்குற்பட்ட காத்தான்குடி மட்/அல் ஹிரா வித்தியாலயத்தின் தேவைகளை கண்டறியும் நோக்குடன் கடந்த சில தினங்களுக்கு முன் பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டேன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், ஆசரிய ஆலோசகர் போன்றோரை சந்தித்து பாடசாலையின் அபிவிருத்தி, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள், மற்றும் பல தேவைகளை கேட்டறிந்து கொண்டேன்.

இதனடிப்படையில் சில உதவிகளை கிழக்கு மாகாணசபை மூலம் பெற்று தருவதாகவும் அரசின் 600 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்திற்குள் அல் ஹிரா பாடாசாலையினை இணைத்துக்கொள்வதட்கு முழுமையாக முயற்சிப்பதாகவும் கூறியிருந்தேன்.

600 பாடசாலைத்திட்டம் எனும்போது அது மிகப்பெரும் நிதியனை அபிவிருத்திக்காக கொண்டுவந்து சேர்க்கும் கிட்டத்தட்ட 250 மில்லியன் (25 கோடி) ரூபாய் நிதி பாடசாலை அபிவிருத்திக்காக செலவு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

இதற்கமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நசீர் அஹ்மட் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கிழக்கு மாகாண சபை மூலம் ஒரு மில்லியன் ரூபா நிதி மிக நீண்ட காலமாக சேதமடைந்த நிலையில் காணப்படும் அல் ஹிரா பாடசாலையின் கட்டிடங்களையும், அலுவலகத்தையும் புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இப்பாடசாலையை 600
பாடசாலத்திட்டத்தின்கீழ் உள்வாங்கப்பட்டதை இன்று அமைச்சில் உறுதி செய்தேன் அல்ஹம்துலில்லாஹ்.

சுமார் 100 வருட வரலாற்றை கொண்ட இப் பாடசாலையானது காத்தான்குடியில் கல்விச் சேவையினை திறம்பட வழங்குகின்ற முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகும். மேலும் மிகவும் குறுகியதொரு நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ளத இப் பாடசாலையில் சுமார் 700 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விகற்கின்றனர் என்பதும் குறிப்படத்தற்கது

Photos 25/06/2015

hahaha :p Fact......

Photos 05/05/2015

Can you remember this?

Photos 09/12/2014

Happy Wishes my dear friends. Do best your Ordinary Level Examination. Insha Allah All the students will get 100%

Photos 15/11/2014
25/10/2014

"HAPPY MUHARRAM TO ALL BROTHERS AND SISTERS"

Want your school to be the top-listed School/college in Kattankudi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Old Street Kattankudy/05
Kattankudi
30100