27/10/2025
அல்-ஹிறா புத்தாக்க மாணவர்களுகு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு
அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் முயற்சியான எமது பாடசாலை இளம் கண்டுபிடிப்பாளர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் நோக்கில் கடந்த வாரம் கண்காட்சி ஒன்றை பாடசாலையில் நடத்தினர். இதில் பல மாணவர்கள் தங்களது சிந்தனையாற்றல் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் புத்தாக்க படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இக்கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் இன்று நடைபெற்ற காலைக் கூட்டத்தில் பாடசாலை அதிபர் Mr. MPM.றபீக் மற்றும் ஆசிரியர்களினால் வழங்கப்பட்டன.
Hira Media Unit
16/10/2025
Grade 11 Educational Tour Update
The day began with the Fajr prayer with Jamath at the Wellawaya Mosque, followed by morning tea served to all participants. After the short refreshment, the team resumed their journey towards Mattha Airport, continuing their educational tour with enthusiasm and unity.
15/10/2025
அல்-ஹிறா - தரம்11 மாணவர்களின் கல்விச் சுற்றுலா சற்று முன்னர் ஆரம்பமாகியது.
07/10/2025
அல்-ஹிறா மகா வித்யாலயாத்தின் ஆசிரியர் தின விழா பாசிக்குடா லயா வேல்ஸ் கோட்டலில்.
அல்-ஹிறா மகா வித்யாலய உலக ஆசிரியர் தின விழா அக்டோபர் 6, 2025 ஆம் திகதி, பாசிக்குடாவில் உள்ள லயா வேவ்ஸ் ஹோட்டலில் பிரமாண்டமாக பாடசாலை அதிபர் Mr.MPM.றபீக் சேர் தலைமையில் நடைபெற்றது.
ஆசிரியர்களிடையே உற்சாகம், அர்ப்பணிப்பு, தாராள மனப்பான்மை, ஆசிரியர் தொழிலை மதிக்கும் பண்பு போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதற்கா ஆசிரியர் தின விழா கொண்டாடப்படுகிறது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுகினங்க ஆசிரியர் தின விழாவிற்கான செலவு ஆசிரியர்களால் மட்டுமே நிதியளிக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடமிருந்தோ அவர்களின் பெற்றோரிடமிருந்தோ ஒரு சதம் கூட பெறப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்விக்கு பாதகம் ஏற்படாமலும் மாணவர்களின் பெற்றார்களுக்கு சுமையை ஏற்படுத்தாமலும் ஆசிரியர் தினம் இன்று பாடசாலை விடுமுறை நாளன்று கொண்டாடப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.
Hira Media Unit
06/10/2025
Teachers' Day Celebrations of Al-Hira Maha Vidyalaya's teachers is celebrated in Laya Wave hotel at Pasikkuda today .
அல்-ஹிறா மகா வித்தியாலய சர்வதேச ஆசிரியர் தினம் இன்று 6 ஆம் திகதி பாசிக்குடா லாயா வேவ் கோட்டலில் கொண்டாடப்படுகின்றது
24/09/2025
கடெட் அதிகாரியாக இராணுவப் பயிற்சியை முடித்த NMM நிஜா ஆசிரியர்
காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்யாலயத்தின் கணிதப் பாட ஆசிரியர் NMM நிஜா அவர்கள் கடெட் (Cadet probationary) பயிற்சியை முடித்து மீண்டும் பாடசாலைக்கு சமுகமளித்ததையிட்டு அதிபர், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் வரவேற்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
எமது பாடசாலை கணிதப் பாட ஆசிரியர் நிஜா சேர் அவர்கள் இலங்கை தியதலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரியில் 68 நாட்களும் ரத்தென்பே தேசிய கடெட் கோர்ப்ஸ் சென்ரரில் இரு வாரங்கள் கடெட் பயிற்சி பெற்று மீண்டும் பாடசாலையில் தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இராணுவ அகாடமியில் அவரது அனுபவம் அவரது கற்பித்தலில் மட்டுமல்லாமல் பாடசாலை மாணவர் கடெட் பிரிவுக்கான தலைமைத்துவம் வழங்கல், மாணவர் ஒழுக்கம், உடற்பயிற்சி, map reading, drill practice போன்ற வற்றிக்கும் பங்களிப்பு வழங்குவார்.
Hira Media Unit
10/09/2025
மீலாத் நபி நிகழ்வுகள்
கல்வி அமைச்சின் 28/2025 என்ற சுற்று நிரூபத்துக்கு அமைவாக இன்று 10.09.2025 புதன்கிழமை மீலாதுன் நபி நிகழ்வு மட்/மம/ அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் அதிபர் MPM. ரபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களின் ஹஸீதா பாடல்கள், அஸ்மாஹுல் ஹுஸ்னா, முஹம்மது நபி (ஸல்) பற்றிய சிங்கள உரை என்பன இடம்பெற்றன. எமது பாடசாலை ஆசிரியர் ஹாபிழ் SHM. றமீஸ் (ஜமாலி) அவர்கள் "நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்வில் மீலாத் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
08/09/2025
சேவையிலிருந்து ஓய்வு பெறும் Library Miss, திருமதி N. ராஜேந்திரன்
02.01.2001 ஆம் திகதி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் பாடசாலை ஆய்வுகூட பொறுப்பாளராக அரச சேவையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி N. ராஜேந்திரன் ஆறு வருடங்கள் அங்கு சிறப்பாக கடமையாற்றி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய
கல்லூரியில் தனது கடமையைத் தொடர்ந்தார். இரு முன்னணி பாடசாலைகளில் கடமையாற்றிய அனுபவத்துடன் காத்தான்குடி மட்/மம/அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் 09.07.2013 ஆம் திகதி முதல் சேவையில் இணைந்து கொண்ட திருமதி N. ராஜேந்திரன் ஆய்வுகூட உதவியாளராகவும் பின்னர் பாடசாலை நூலகப் பொறுப்பாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். எமது பாடசாலை மாணவர்களால் அன்று முதல் இன்று திருமதி ராஜேந்திரன் அவர்கள் Library Miss என்று தான் அழைக்கப்படுகின்றார். இவரது திறமையின் காரணமாக பாடசாலை நிர்வாக வேலைகளிலும் இணைந்து செயற்பட்டார். குறிப்பாக மாணவர்களுக்கு பாடசாலை விடுகை பத்திரம் வழங்குதல், தரம் 10, 11 மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்தல், உரிய பிறப்பு சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு அவற்றை பெற்றுக் கொடுத்தல் போன்ற பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிப்பார். மேலும் இப்பாடசாலையில் திருமதி N. ராஜேந்திரனிடம் முக்கியமான பணியொன்று வழங்கப்பட்டிருந்தது அதுதான் தரம் 6 வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பாகும். விண்ணப்பங்கள் விநியோகிப்பதிலிருந்து தெரிவுப் பரீட்சை நடாத்துதல், மாணவர்களை அனுமதித்தல், பெற்றோர் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் போன்ற முழு வேலைகளையும் இவரே செய்தார். இதனால் தரம் 6 இல் அனுமதி பெறும் எந்தவொரு மாணவருக்கும் library miss யை தெரியாதிருப்பதற்கு நியாயமில்லை. தற்போது 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்கின்றனர் இவர்களது அனுமதி இவரூடாகவே நடைபெற்றது. உயர்தர பரீட்சையின் பின்னர் விலகிய மாணவர்களோ சாதாரண பரீட்சையின் பின்னர் வெளியேறியவர்களோ library miss தான் அவர்கள் சேர்வதற்கும் விலகுவதற்கும் உதவியாக இருந்திருப்பார்.
தனக்கு 60 வயதாகுவதற்கு முன்னரே சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்காக விண்ணப்பித்து 29.07.2025 ஆம் திகதி முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார். திருமதி N. ராஜேந்திரன் அவர்கள்.
அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நாளை சேவை நலன் பாராட்டும் நிகழ்வொன்றை திருமதி N. ராஜேந்திரன் அவர்களுக்கு நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலைக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவர்களினதும் சார்பாக திருமதி N. ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றிகளையும் பாரட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஓய்வு காலத்தை ஆரோக்கியமாகவும் சந்தோஷமாக கழிப்பதற்கு இறைவனை பிரார்திக்கின்றோம்.