20/01/2024
கண்ணியம் நிறைந்த றஜப் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது. இம்மாதமானது இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் வாழ்வில் நடைபெற்ற மிகப்பெரும் அற்புதமொன்றாகிய இஸ்றாஉ, மிஃறாஜ் நிகழ்வு நடைபெற்ற மாதமாகும். மனித மற்றும் ஜின் பிறவிகளில் எவருக்கும் கிடைத்திராத இந்த முஃஜிஸத் எங்கள் தலைவர் முஹம்மத் صلى الله عليه وسلمஅவர்களுக்கே வழங்கப்பட்டது.
இந்த அற்புத நிகழ்வுகள் முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வின் உண்மையான தூதர்தான் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது.
மேற்குறித்த இந்த அதிசய பயணத்தின் போது எம் தலைவர் صلى الله عليه وسلم அவர்கள் பல ஆச்சரியமிக்க, அதிசயிக்கத்தக்க பல அற்புதங்களை கண்டார்கள். அது பற்றி பல ஹதீஸ்களில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அவ்வாறான தகவல்களை உள்ளடக்கிய ஒரு தமிழ் மொழி நூலொன்றை எமது ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி வெளியிட்டுள்ளது. இந்த நூல் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகிறது. பல வாசகர்கள் இதனை பெற்று வாசித்து பயன் பெற்று வருகின்றனர். வாசிக்க ஆசைப்படுவோர் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.
0760924614
21/12/2023
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் மஷாரீஇல் ஹைரிய்யஹ் அல் இஸ்லாமிய்யாவின் அனுசரனையுடன் 06.10.2023 அன்று காத்தான்குடியில் மௌலிதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
காத்தான்குடி பீச்வேய் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிற்பகல் 4.30 க்கு இந்நிகழ்வு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அஷ்ஷைய்க் ஸஃத், மற்றும் அஷ்ஷைய்க் முஸ்தபா ஆகியோர் கலந்து காதுக்கு இனிமையான அழகிய இஸ்லாமிய கஸீதாக்களை, நபி புகழ் பாடல்களை பாடி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தனர். இவர்களுடன் கொழும்பு இமாம் அல் அஷ்அரீ மற்றும் ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் கஸீதா குழுவினரும் இணைந்து கஸீதா பாடினர்.
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் அஷ்ஷேய்க் நதீர் இல்மீ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்கசொற்பொழிவுகள், இனிமையான கஸீதாக்கள் இடம்பெற்றதுடன், கௌரவ பணிப்பாளர் அவர்களினால் ஜமாலிய்யாவின் வரலாறு மற்றும் ஜம்இய்யாவின் மன்ஹஜ் பற்றிய தெளிவுரையும் இடம்பெற்றதுடன், ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி அதிபர் அஷ்ஷைய்க் ஸப்றாஸ் பஹ்ஜீ அவர்களின் கல்லூரியின் தற்போதைய பாடத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான உரையும் நடைபெற்றது.
இச் சங்கைமிகு நிகழ்வில் காத்தான்குடியின் அறபுக் கல்லூரி மற்றும் பாடசாலை அதிபர்கள், உஸ்தாத்மார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பேஷ் இமாம்கள், இஸ்லாமிய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை சிறப்புற நிறைவேற்ற பங்காற்றிய ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி நிர்வாகிகள், ஊர்மக்கள், நலன்விரும்பிகள், மாணவர்கள், பெற்றோர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் ஜம்இய்யா நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.
14/11/2023
Jamiathul Jamaliyya arabic college
Jamiathul Jamaliyya Arabic College Under of The Trust ash sheikh Raja Alim Waliyullah
Founder-Ash Sheikh Meeran Mubeen Alim (Gafoori ,mahthoomi, siddikiye)
waliyullah
13/11/2023
JAMIATHUL JAMALIYYA ARABIC COLLEGE
Regd No. MRCA/13/1/AC/74
Main Street, Kattankudy -06, Sri Lanka
TP : 065 2245405, 077 2328686
ஹிஜ்ரி 1445-2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் அனுமதி
பாடசாலையில் கற்கும் மாணவர்கள் மாலை வேளையில் பகுதி நேரமாக மௌலவி கற்கை நெறியைத் தொடர்வதற்கு எமது ஜாமிஅதுல் ஜமாலிய்யா அரபுக்கலாபீடத்தில் புதிய மாணவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் இக் கற்கை நெறியில் இணைய விரும்புவோர் விண்ணப்பப் படிவங்களை திங்கள் முதல் வியாழன் பி.ப. 4.00 மணி - பி.ப. 7.00 மணிவரை எமது ஜாமிஆ காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மத்ரசாக் கல்வி பி.ப 3.30 தொக்கம் பி.ப 8.00 மணி வரையும். பாடசாலை பாடங்கள் மத்ரசா நாட்களில் பிரபல்ய ஆசிரியர்களைக் கொண்டு பி.ப 8.00 தொடக்கம் பி.ப 9.00 மணி வரையும் கற்பிக்கப்படும்.
இக் கற்கை நெறியில் இணைந்து கொள்வதன் மூலம் O/L மற்றும் A/L பரீட்சைகளின் போது அரபு மற்றும் இஸ்லாம் போன்ற பாடங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைவதற்கான ஓர் அறிய வாய்ப்பு.
விண்ணப்ப முடிவுத் திகதி : 2024.01.15
தொடர்புகளுக்கு:
0760924614
அஷ்ஷெய்க் மெளலவி M.L.M ஸப்றாஸ் (பஹ்ஜி)
கொளரவ அதிபர் ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீடம், பிரதான வீதி, காத்தான்குடி-06
08/04/2023
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீட உத்தியோக பூர்வ இனையதளம் (website) மிக விரைவில்....
25/02/2023
அஃலூஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅஹ் என்போர் யார் ??
அஷ்அரீ அகீதாதான் உலகெங்கிலும் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களது கொள்கைக் கோட்பாடு என்பது பற்றிய விளக்கம்
பகுதி -01
الحمد لله رب العاملين وصلى الله وسلم على النبي وعلى آله وصحبه أما بعد فقال الله تعالى : ﴿يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ)
وقال رسول الله صلى الله عليه وسلم (( خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يفشو الكذب ألا لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان فمن أراد بحبوحة الجنة فليلزم الجماعة)).
மேற்குறித்த ஹதீஸின் தெளிவுரையின் படி, ஹிஜ்ரத் நடைபெற்றதிலிருந்து ஆரம்பித்து முதல் 100 ஆண்டுகளில் வாழ்ந்தோரே பின் வரும் இந்த உம்மத் அனைவரையும் விட மிக சிறப்புக்குரியவர்களாகும்.
அதனைத் தொடர்ந்து, அந்த 100 ஆண்டுகளை அடுத்து வந்த 100 ஆண்டுகளாகும். அதாவது தாபியீன்களது நூற்றாண்டாகும். அதனைத் தொடர்ந்து அதனை அடுத்து வந்த 100 ஆண்டுகளாகும். அது தபஉத் தாபியீன்களது காலமாகும். இந்த மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களே இந்த உம்மத்தின் மேன்மைக்குரியவர்களாகும்.
இதில் முதல் நூற்றாண்டென்பது, ஸஹாபாக்கள் வாழ்ந்த நூற்றாண்டாகும். இவர்கள் வாழ்ந்த இந்தக் காலப்பகுதியிலே அனைத்து ஸஹாபாக்களும் கொள்கை கோட்பாடுகளில் அழ்ழாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் அவர்களிடமிருந்து எதைக் கற்றுக் கொண்டார்களோ அதே கோட்பாடுகளிலேயே நிலைத்திருந்தனர். அவர்களிடையே ஈமான் ரீதியான எந்தக் குழப்பமும், கருத்து வேற்றுமையும் காணப்படவில்லை.
பின்பு அலீ றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே கொள்கைக் கோட்பாடுகள் ரீதியான மோசமான சிந்தனை கொண்டோராகிய ஷீயாக்கள், கவாரிஜ்கள் தோன்றினர்.
ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டின் காலப்பகுதியானது, அல்-குர்ஆன்,அல்-ஹதீஸுக்கு முரண்படும் சிந்தனைகளைக் கொண்ட பல பிரிவுகள் தோன்றிய காலப்பகுதியாகும்.
இந்நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இரு பெரும் இமாம்களை அழ்ழாஹ் ஏற்படுத்தி, சத்தியக் கொள்கையை பாதுகாக்கச் செய்தான். அவ்விருவரில் ஒருவர் இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களாகும். ஹிஜ்ரி 260 இல் பிறந்த இவர்கள் அறபி ஒருவராகும். இவர்கள் சிறப்புமிகு ஸஹாபியான அபூ மூஸா அல்-அஷ்அரி றழியழ்ழாஹு அன்ஹு அவர்களின் வரிசைமிகு வம்சாவழியைச் சேர்ந்தவர்களுமாகும்.
மற்றொருவர் இமாம் அபூ மன்ஸுர் அல் மாதுரீதி றஹிமஹுழ்ழாஹ் அவர்களாகும்.
இவர்கள் பாரசீக பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அஜமி ஒருவராகும்.
இந்த இரு பெரும் இமாம்களே அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅஹ்வின்
அனைத்து கொள்கைக் கோட்பாடுகளையும் அல்-குர்ஆன், அல்-குர்ஆன்,அல் ஹதீஸின் ஆதார அடிப்படையிலும், பகுத்தறிவு ரீதியான ஆதார அடிப்படையிலும் உறுதிப்படுத்தி,
நபிகளாரின் கொள்கையை மிகத் தெளிவாக
முன்வைத்தவர்களாகும்.
அத்தோடு அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினருக்கு மாறுபட்ட கொள்கை கொண்ட முஃதஸிலா' மற்றும் முஷப்பிஹா' போன்ற இன்னும் பல குழப்பவாதிகளுக்கு மறுப்புகளையும் வழங்கி இஸ்லாமிய தூய கொள்கைக் கோட்பாடுகளை பாதுகாக்க அடித்தளமிட்டவர்களுமாகும்.
இந்த இரு இமாம்களைத் தொடர்ந்து வந்த
அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினர் அனைவரும் இவ்விருவரையும் சார்ந்தோராகவே இருந்தனர். அதாவது இவ்விருவரும், இஸ்லாமிய கொள்கைக் கோட்பாடுகளை தெளிவுபடுத்திய அமைப்பிலேயே பின்வந்த அனைத்து முஸ்லிம்களும் நம்பிக்கை கொண்டனர்.
அதனால் தான் அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅத்தினருக்கு அஷ்அரிய்யாக்கள், மாதுரீதிய்யாக்கள் சொல்லப்படுகிறது.
தொடரும்…
அதிபர்,உஸ்தாத் மார்கள்
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி
பிரதான வீதி காத்தான்குடி -06
0652245405,0760924614
21/02/2023
அல்லாஹ்வே விசாரணை செய்யப் போதுமானவன்.
"நாங்கள் முஸ்லிம்களைச் சேர்ந்தவர்களே. நாம் புதுமையான ஒரு பாதையையோ அல்லது இன் எறைக்கு சுமார் 30 வருடங்களுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சைய்யித் குதுப் மற்றும் தகிய்யுத்தீன் அந்-நபஹானீ ஆகியோரின் சிந்தனைகளையோ அல்லது சுமார் 260 வருடங்களுக்கு முன் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாபினால் தோற்றுவிக்கப்பட்ட சிந்தனைகளையோ அல்லது 750 வருடங்களுக்கு முன்னதாக இப்னு தைமிய்யாவினால் உருவாக்கப்பட்ட நவீன கொள்கைகளையோ பின்பற்றுபவர்களல்ல. முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் தனது சிந்தனைகளில் பலதை இப்னு தைமிய்யாவின் வழிகேடான சிந்தனைகளிலிருந்து எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நமது பாதையானது, உலகின் பல நூறு இலட்ச முஸ்லிம்கள் பின்பற்றி வரும் பாதையாகும்.
நம்பிக்கைக் கோட்பாடுகளில் அல் இமாம் அபுல் ஹஸன் அல்- அஷ்அரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் கோட்பாடுகளின் பிரகாரமும், வணக்க வழிபாடுகள், இபாதாத் மற்றும் அமல் ரீதியான விடயங்களில் அல்-இமாம் முஹம்மத் இப்னு இத்ரீஸ் அஷ்-ஷாபிஈ றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் மத்ஹப் பிரகாரமும் பல கோடி முஸ்லிம்கள் செல்லும் பாதையே நம் பாதையாகும்.
நமது நாட்டிலும் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் நம்பிக்கை கோட்பாட்டில் இமாம் அபூல் ஹஸன் அஷ்அரி றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் மத்ஹபின் பிரகாரமும் ,மார்க்க பிக்ஹு சட்டக்கலையில் இமாம் ஷாபிஈ றஹிமஹுழ்ழாஹ் அவர்களின் மத்ஹபின் பிரகாரமும் பின்பற்றி வாழ்ந்து வந்துள்ளனர்.
இமாம் அபுல் ஹஸன் அல்-அஷ்அரீ றஹிமஹுழ்ழாஹ் அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னஹ் வல் ஜமாஅஹ்வின் இரு பெரு இமாம்களில் ஒருவராகும். அவர்கள் ஸஹாபாக்கள் மற்றும் தாபிஈன்களின் நம்பிக்கைக் கோட்பாட்டை ஒன்று திரட்டி ஆதாரங்கள் அடிப்படையில் தொகுத்தளித்தவராகும். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்கள் ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியில் மரணித்த அஸ் ஸலபுஸ்ஸாலிஹீன்களில் ஒருவருமாகும்.
ஷாபிஈ மத்ஹபனாது சுமார் 1250 வருடங்களுக்கு மேலாக உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் தொண்டு தொட்டும் கடைபிடித்து வரும் மிகப் பிரபல்யமடைந்த மத்ஹபாகும்.
நான்காம் கலீபாவான அலி றழியழ்ழாஹு அன்ஹு அவர்களை நபி என்றோ அல்லது அவர்கள்தான் அபூ பக்கர் றழியழ்ழாஹு அன்ஹு மற்றும் உமர் றழியழ்ழாஹு அன்ஹுஆகியோர்களை விட சிறந்தவர்கள் என்றோ கூறுபவர்களுமல்ல,
அத்துடன் வழிகெட்ட சிந்தனைப் பிரிவுகளான ஷீஆ, முஃதஸிலா, கவாரிஜ், முஜஸ்ஸிமா, முஷப்பிஹா, கதரிய்யா, காதியானியா, ஜஹ்மிய்யா, வஹாபிய்யா (அடிப்படைவாதம்), இஹ்வன்ஜிய்யா, தஹ்ரீரிய்யா, அத்வைதம் மற்றும் இவைகள் போன்ற வழி கெட்ட சிந்தனைகளை, நாம் பின் பிற்றுவபர்களோ, ஆதரிப்பவர்களோ அல்ல அவர்களை விட்டும் முற்றிலும் தூரமானவர்களே!.
ஒரு முஸ்லிமை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றி குப்ரில் வீழ்த்திவிடும் குப்ரிய்யத்தான வார்த்தைப்
பிரயோகங்கள், குப்ரிய்யத்தான நம்பிக்கைகள் மற்றும் குப்ரியத்தான செயல்கள் பொன்றவைகளை தெளிவுபடுத்தி முஸ்லிம்களை அவைகளை விட்டும் தூரப்படுத்துவதில் நாம் ஒன்றும் புதிய பாதையொன்றை வகுக்கவில்லை. மாறாக நாற்பெரும் மத்ஹபுகளைச் சார்ந்த இமாம்கள் தங்களது நூற்களில் எச்சரித்தைப் போன்றே நாமும் மக்களை அவற்றை விட்டும் எச்சரித்து வருகிறோம்.
இது தொடர்பாக அல்-இமாம் முர்தழா அஸ்-ஸபீதி றஹிமஹுழ்ழாஹ் அவர்கள் "இஹ்யாஹ் உலூமித்தீன்" என்ற கிரந்தத்தின் விரிவுரையில் பின்வருமாறு கூறியிருப்பது அதற்கானதொரு சான்றாகும்.
“நான்கு மத்ஹபுகளைச் சார்ந்த பல இமாம்கள் குப்ரை ஏற்படுத்தும் சிந்தனைகள், வார்த்தைப் பிரயோகங்கள் பலதை எச்சரிக்கும் விதமாக பல நூல்களை தொகுத்திருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்கள்.
நாம் எந்தவொரு அரசின் பண உதவி பெற்று அவர்களுக்கு இசைவாக கருமமாற்றிவருவோருமல்ல.
எந்தவொரு அரசின் பண உதவியை பெறுவோருமல்ல. அல்லாஹ்வே இதனை நன்கறிந்தவன்.
மேற்குறித்த நமது பாதையை விடுத்து, நம்மை வழிகேடான வேறு சிந்தனைகளைக் கொண்டவர்கள் என வாதிடுவோர், விசாரணை தினத்தின் அதிபயங்கரமான அல்லாஹ்வின் விசாரணையை மறந்து விடவேண்டாம்."
இயக்குனர் சபை தலைவர், மற்றும் அதிபர் உஸ்தாத்மார்கள்,
காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக்கல்லூரி
பிரதான வீதி காத்தான்குடி-06
16/11/2022
ஜாமிதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரி.
புதிய மாணவர் அனுமதி -2023
விண்ணப்பபடிவங்களை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்