04/11/2025
கல்ஹின்னை YMMA அமைப்பின் ஏற்பாட்டில் சகோதர பாடசாலையான கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையின் கெளரவ அதிபர் AMM Safarulkhan அவர்கள் இருபாடசாலைகளுக்குமிடையில் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் செவ்வாய் கிழமை (04.11.2025) எமது பாடசாலைக்கு வருகை தந்திருந்தார்.
இதன் போது பாடசாலை நிர்வாகம் அவருடன் விஷேட கலந்துரையாடலை நடாத்தியது டன்
காலை ஆராதனை நிகழ்வில் மாணவர்களுக்கு விஷேட உரை நிகழ்த்தினார்.
மேலும் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் மாணவத் தலைவர்களுக்கு தலைமைத்துவம் தொடர்பாக வழிகாட்டினார்.
இந்நிகழ்வில் Y-Galhinna அமைப்பின் தலைவர் ஜனாப் km Mafas அவர்களும் கலந்து கொண்டார்.
இச்சந்திப்பை ஏற்படுத்தி தந்த Y-Galhinna அமைப்பிற்கும் அல்மனார் தேசிய பாடசாலையின் அதிபர் அவர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.