22/12/2022
பாடசாலை பரிசளிப்பு வைபவம்
எமது பாடசாலையில் கடந்த வாரம் ஆரம்பமான இரண்டாம் தவணை பரீட்சைகள் திங்கட்கிழமை நிறைவடைந்தது. இதில் சிறந்த பெறுபெறுகளை பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசு வழங்கும் வைபவம் இன்று பாடசாலையின் அதிபர் திரு AMM. சப்ருல்கான் அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் பங்கு பற்றலோடு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நடைபெற்று முடிந்த பரீட்சையில் 75 வீதத்துக்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற 43 மாணவ, மாணவிகள், மற்றும் வகுப்பு ரீதியாக முதல் 3 நிலைகளை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இப்பரீட்சையில் பாடசாலை மட்டத்தில் முதல் 3 இடங்களை பின்வரும் மாணவிகள் பெற்றனர்.
1. MM.அன்ஹா (89.4)
தரம் 11C
2. MI. ஜுமானியா (89.0)
தரம் 12
3. MR. ரீஹா (88.0)
தரம் 07 C
தகவல்
MM. மபாஹிர் VP
Exams Unit
க/அல் மனார் தேசிய பாடசாலை
கல்ஹின்னை.
19/11/2022
அல் மனார் மாணவி ஆங்கில மொழி மூல CURSIVE WRITING தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு
-------------------------------------------------
எமது பாடசாலையில் தரம் 13 கலைப் பிரிவில் கல்வி பயிலும் MNF. நிப்லா (NIFLA) 19.11.2022 நடைபெறவுள்ள தேசிய மட்ட ஆங்கில மொழி Cursive Writing போட்டியில் பங்குப்பற்றவுள்ளார் மேலும் இம்மாணவி மாகாண, மற்றும், கோட்ட (Divisional) மட்டத்தில் இடம் பெற்ற போட்டிகளில் முதலிடத்தை பெற்றுக்கொண்டார்.என்பது குறிப்பிடத்தக்கதாகும், இவர் பங்கு பற்றிய Copy Writing போட்டியில் மாகாண மட்டம் வரை பங்கு பற்றியிருந்தார்.
எமது பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் MZF.மயிமூனா (Maimoona) Cursive Writing போட்டியில் பாடசாலை, மற்றும் கோட்ட மட்ட போட்டிகளில் முதலிடத்தை பெற்று மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் பங்கு பற்றியிருந்தார், இம் மாணவிகளை பயிற்றுவித்த பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கும் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற MNF. Nifla வுக்கும் அதிபர், பிரதி அதிபர்கள், உதவி அதிபர் ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள்,பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
15/11/2022
*கல்ஹின்னை அல்மனார் மாணவனின் புதிய கண்டுபிடிப்புக்கள்!*
=====================
*கல்ஹின்ன அல் மனார் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் அப்துர் ரஹ்மான் ரிஸ்வி தனது இரண்டு* *கண்டுபிடிப்புக்களான,* *Bluetooth Speaker மற்றும்* *Table Lamp with Night Bulb*
*ஆகியவற்றை அறிமுகம் செய்து வைத்தார்,*
*2022 ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்பாளர்களின், கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்யும் போட்டி நிகழ்ச்சி ஓன்று கடந்த 04/11/2022 Gurudeniya Resco Central இல் நடைபெற்ற போட்டியில் இம்மாணவன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.*
15/11/2022
கடந்த வெள்ளிக் கிழமை 11.11.2022 பாடசாலையின் அதிபர் Mr. AMM. Safrulkan அவர்களின் தலைமையில் அங்கும்பர பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி திரு வீரகொடி அவர்களினால் பாடசாலையின் மாணவ தலைவர்கள் மற்றும் வகுப்பு தலைவர்களுக்கு விசேட கூட்டம் ஒன்று இடம் பெற்றது இதில் பாடசாலையின் வளர்ச்சியில் மாணவர்களின் பங்களிப்பு மற்றும் போதை பாவனை தடுப்பு போன்ற விடயங்கள் மாணவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது.
15/11/2022
நேற்று 14.11.2022 எமது பாடசாலையில் தரம் 11 மாணவர்களின் ஆங்கில பாட சித்தியை அதிகரிப்பதற்காக கட்டுகஸ்தோட்ட கல்வி வலய அதிகாரிகளினால் செயலமர்வு ஒன்று இடம் பெற்றது
இதில் மாணவர்களின் ஆங்கில அறிவை கூட்டுவதற்கான பல செயற்பாடுகள் எழுத்து பரீட்சை மற்றும் செயன் முறை பயிற்சிகள் மூலம் இடம்பெற்றது, மேலும் இந்த பயிற்சி பாசறையில் படகொல்லாதெனிய ஜமாலியா வித்யாலய மாணவர்களும் பங்கு கொண்டிருந்தனர்.