31/03/2026
#வளர்பிறை #சஞ்சிகை #வெளியீடு
==============================
எமது பாடசாலையின் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களின் இலக்கியத் திறனை வெளிப்படுத்தும் விதமான ஆக்கங்களை சுமந்து வரும் முதல் சஞ்சிகையாக "வளர்பிறை" சஞ்சிகை 2026.03.26 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அதிபர் திரு. A.G.A . ஹபீழ் அவர்களின் தலைமையின் சஞ்சிகை வெளியீட்டு விழா பாடசாலை பிரதான மண்டபத்தில் விமரிசையாக இடம்பெற்றது.
தெல்தோட்டை மனால் ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. M.L.M.நதீர் அவர்கள் சஞ்சிகை வெளியீட்டிற்கான பிரதான அனுசரணை வழங்கியதோடு நிகழ்வின் பிரதம அதிதியாகவும் கலந்து சிறப்பித்திருந்தார்.
நிகழ்வின் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஆசிரிய கல்வியியலாளர் மற்றும் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் திரு. M.A.C.M. நவ்சாத் அவர்கள் சஞ்சிகை வெளியீட்டுக்கான வாழ்த்துரை நிகழ்த்தியிருந்தார். வாழ்த்துரையில் எமது பாடசாலையின் ஆரம்ப கால சஞ்சிகையான " #சுனை" சஞ்சிகை கையெழுத்துப்பிரதியாக வெளியிடப்பட்ட வரலாற்றுத் தடங்களை மீட்டியமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் கண்டி வலயக்கல்வி காரியாலயம் சார்பாக ஆரம்பப்பிரிவு வளவாளர் திரு. S.சபாரத்தினம் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச்சஞ்சிகை வெளியீட்டின் வெற்றியில் ஆணி வேராய் மறைந்திருக்கும் பாடசாலையின் சகல ஆசிரியர்களதும் அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் தமது கடமை நேரத்தையும் விஞ்சிய பணிகள் இவ்விடம் விசேடமாக குறிப்பிடப்பட வேண்டியவை.
இப்பணியை சிறக்கச் செய்த ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். சஞ்சிகையின் அட்டைப்படத்திற்கான பாடசாலை நிழற்படத்தினை வடிவமைத்த பாடசாலை முந்நாள் ஆசிரியை திருமதி S.F.ஸர்மிளா ஆசிரியை அவர்களுக்கு சஞ்சிகை குழு சார்பாக நன்றி தெரிவிக்கின்றோம்.
சஞ்சிகை வெளியீட்டிற்கு சகல வழிகளிலும் பங்களிப்பு வழங்கிய பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சகலரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.
எதிர்வரும் காலங்களில் வளர்பிறை சஞ்சிகை மென்மேலும் சிறப்புடன் தொடர்சஞ்சிகையாக வெளிவரவும், எமது மாணவர்களின் இலக்கிய ஆற்றல் வெளிப்படும் சிறந்த ஒரு தளமாக அமையவும் வாழ்த்துக்கள்.
14/03/2026
க/உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு.
எமது பாடசாலையின் வருடாந்த இப்தார் மூன்றாவது முறையாக இவ்வருடமும் 13.03.2026 வெள்ளிக்கிழமை பாடாசாலை பிராதான மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
அதிபர் A.G.A. ஹபீழ் அவர்களின் வழிகாட்டலில் பாடசாலை ஆசிரியர் குழாம் , அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர், மாணவியர் சங்கம் ஆகியோரின் பூரண பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பில் இந்நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
பாடசாலை மாணவர்கள் உட்பட அதிபர் , ஆசிரியர்கள், பாடசாலை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் , மஸ்ஜிதுத் தக்வா இமாம்கள், நிர்வாகத்தினர் ஆகியோர் இவ் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஒத்துழைப்பு வழங்கிய மற்றும் கலந்து சிறப்பித்த சகலருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றி தெரிவிக்கின்றோம்.
02/02/2026
வித்தியாரம்ப விழா
க/உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று மாணவர்களை உள்வாங்கும் வித்தியாரம்ப விழா 29.01.2026 ஆம் திகதி அதிபர் A.G.A. ஹபீ்ல் அவர்களின் தலைமையில் வகுப்பாசிரியை திருமதி A.M.F. அஸ்ரா அவர்களின் ஒருங்கிணைப்பில் பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதான அதிதியாக எமது பாடசாலைக்கு பொறுப்பாக கல்விக்காரியாலயத்தினால் நியமிக்கப்பட்டுள்ள வளவாளர் கலாநிதி க. பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.
சிறப்பு அதிதியாக உடுதெனியைச் சேர்ந்த எமது பாடசாலை பழைய மாணவரும் டயமன்ட் நிறுவன முகாமையாளருமான சகோதரர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இச்சந்தர்ப்பத்தில் மாணவர்களுக்கு அன்பளிப்பாக குடைகள் வழங்கி மகிழ்வித்தமைக்கு எமது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தமது முறையான பாடசாலைக் கல்விக்கான முதற்தடத்தை எடுத்து வைத்த எமது சிறார்களின் எதிர்காலம் சிறக்க கல்வியில் சாதனைகள் புரிந்து பண்பில் சிறந்து மிளிர இறைவன் அருள்வானாக.
அதிபர் , ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திக்குழு, பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக தமது பாடசாலைக்கல்வியை ஆரம்பிக்கும் மாணவர்களின் கல்வி, வாழ்வு சிறக்க பிரார்த்திப்பதோடு நிகழ்வு சிறப்பாக அமைய உதவிய சகலருக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.
16/11/2025
எமது பாடசாலையின் ஒரே பிரவேசப்பாதையான படித்தொகுதி சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.
அதனை புணரமைக்கும் செயற்பாடுகள் அதிபர் திரு. A.G.A. ஹபீல் அவர்களின் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதற்கட்ட புணரமைப்பு பணி கடந்த வருடம் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நுழைவாயில் முதல் நூலகம் வரை ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை. குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட புணரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நூலகம் முதல் பிரதான மண்டபம் வரையிலான படிகளை புணரமைக்கும் பணி இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை அபிவிருத்திக் குழுவினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.
25/10/2025
24.10.2025
*3 DAY ENGLISH CAMP*
*2025*
*K/ Ududeniya Muslim*
*Maha Vidyalaya*
🔰🤝🔰🤝🔰🤝🔰🤝
We are pleased to inform you that a 3-Day English Language Camp has been organized for Grades 5, 6, and 7 as follows:
*1st Day:*
24.10.2025
3.00 p.m. to 6.00 p.m.
*2nd Day:*
25.10.2025
8.00 a.m. to 10.00 p.m.
*3rd Day:*
26.10.2025
8.00 a.m. to 1.00 p.m.
📒இன்று உடுதெனிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் தரம் 5 ,6 மற்றும் 7 மாணவர்களுக்கான இலவச மூன்று நாள் ஆங்கில முகாம் ஆரம்பிக்கப்படுகிறது.
Our Language Camp will officially commence today at 3.00 p.m., under the presidency of our Principal, Mr. A. G. A. Hafeel.
This camp has been specially designed to enhance English language skills through fun-filled activities and games.
We kindly request you to remember us in your prayers for the success of this English Language Camp.
Thank you.
🖊️A. R. I. Yakoob
Camp In-Charge
19/10/2025
18.10.2025
*க/ உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தனிநபர் செயற்றிட்டம்*
👏👏👏👏👏👏👏👏
க/ உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சேவையாற்றுகின்ற கௌரவத்துக்குரிய ஆசிரியை *G.G.M.F.K பஹ்மியா (B.A.)* அவர்கள், கற்பித்தல் மற்றும் மாணவர் வழிகாட்டலில் சிறந்த பங்களிப்பைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை G.G.M.F.K. பஹ்மியா அவர்கள் பாடசாலையின் சுற்றுச்சூழலை அழகப்படுத்துவதிலும், மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை உருவாக்குவதிலும் ஆக்கபூர்வமான திட்டத்துடன் செயல்பட்டு வருகின்றார்.
2025 ஆம் ஆண்டுக்கான முக்கியமான மூன்று வேலைத் திட்டங்களை அவர் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவது பாராட்டத்தக்கது:
01) *Class Sign Boards* (வகுப்புப் பெயர்ப்பலகைகள்)
*02)Flower pots*
(மலர் / பூத்தொட்டிகள்)
03) *Planting Fruit Trees*
(பழ மரங்கள் நடுதல்)
முன்மாதிரி மிக்க மேற்குறிப்பிட்ட ஆசிரியையின் மூன்று வேலைத் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் மாணவர்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் சிறப்பாகவே காணப்படுகின்றன.
மேலும், உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் ஏனைய ஆசிரியர்களும் கௌரவ அதிபர் A.G.A. ஹபீழ் அவர்களின் வழிகாட்டுதலில் வகுப்பறையில் கற்பித்தலில் போலவே பாடசாலையின் சுற்றுச்சூழலை அழகுபடுத்துவதிலும் வளப்படுத்துவதிலும் தமது பங்களிப்பைச் செய்து வருகின்றமை முக்கியமான ஒரு அம்சமாகும்.
*WALL SIGN BOARD (சுவர் பெயர்ப்பலகை)*
🔻🔻🔻🔻🔻🔻🔻
க/ உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவன் *இஃப்ராஸ் அஹ்மத்* , பாடசாலையின் பிரதான மண்டபத்திற்குத் தேவையான ஒரு அழகிய *Wall Sign Board-* ஐ அதிபரிடம் கையளித்திருக்கின்றார். மாணவனின் முன்மாதிரியான இச்செயல் அனைவராலும் பாராட்டப்பட்டது.
🖊️ ஏ.ஆர்.ஐ. யாகூப்
09/10/2025
*ஆசிரியர் தினம் 2025*
K/ Ududeniya Muslim Maha Vidyalaya
🔰🔰🔰🔰🔰🔰🔰
🌎உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயம்
ஆசிரியர் தினத்தையொட்டிய சிறப்பு நிகழ்வுகள்
2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தினத்தை முன்னிட்டு உடுதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இரண்டு சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடை பெற்றன.
*(01)முதல் நிகழ்வு:*
🚘🚘🚘🚘🚘🚘🚘🚘
கௌரவ அதிபர் A.G.A.ஹபிழ் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆசிரியர்கள் தெல்தோட்டை , லூல்கந்துர பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜேம்ஸ் டெய்லர் சுற்றுலா பிரதேசத்தை பார்வையிட்டனர். அன்றைய நிகழ்வில் ஆசிரியர்களுக்காக பகல் உணவு கௌரவ அதிபர் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக தயார் செய்து பரிமாறப்பட்டது.
*(02)இரண்டாவது நிகழ்வு:*
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
ஆசிரியர் தினத்தை நினைவுகூரும் விதமாக பாடசாலை வளாகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர் இணைந்து மரக்கன்றுகளை நட்டனர். இந்நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியதுடன், ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
இவ்விரு நிகழ்வுகளும் ஆசிரியர்களின் ஒற்றுமையையும், பாடசாலையின் சமூகப் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்
🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
🖊️ஏ.ஆர்.ஐ. யாகூப்