29/07/2026
(28/07/2026) எமது பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிந்து வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் MR.S.நந்தகுமார் ஆசிரியரை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு தற்போது பாடசாலை கடமைகளை பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் MR.A.சுமன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது அவர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு பாடசாலைக்கு ஆற்றிய சேவையினை பாராட்டி நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியருக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
26/07/2026
(10/07/2026) எமது பாடசாலையில் ஆசிரியர்களாக கடமை புரிந்து வேறு பாடசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் MRS.S.கணேஸ்வரன், Mrs.M.C.சாகீரா வேகம் மற்றும் Mrs.A.S.F.Y.நஸ்ரின் ஆசிரியர்களை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு தற்போது பாடசாலை கடமைகளை பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் MR.A.சுமன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின்போது அவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு பாடசாலைக்கு ஆற்றிய சேவையினை பாராட்டி நினைவுப் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வினை சிறப்பாக மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியருக்கு நன்றியையும் பாராட்டயும் தெரிவித்துக்கொள்கிறோம்.
22/07/2026
(12/07/2026) எமது பாடசாலையில் முன்னால் அதிபராக மிகவும் சிறப்பாக கடமை புரிந்த அருட்சகோதரர் S.E. ரெஜினோல்ட் fsc அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறுவதை முன்னிட்டு அவரின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு தற்போது பாடசாலை கடமைகளை பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் MR.A.சுமன் அவர்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் அவர் பிரதி அதிபர்களாலும் ஆசிரியர்களினாலும், மாணவர்களினாலும், மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவரை வாழ்த்தி வாழ்த்துப்பாமாலையும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் பிரதி வலய கல்வி பணிப்பாளர் Mrs..M.H.Riyasa அவர்களும், வடக்கு பிரதேச செயலாளர் Mr.J.Athisayaraj அவர்களும், பாடசாலையில் அவரது காலத்தில் பணி புரிந்து ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும், பாடசாலையின் பழைய மாணவர்களும், மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அவரின் சேவை தொடர்ச்சியாக சமூகத்திற்கு கிடைக்க வேண்டும் என பாடசாலைச் சமூகம் சார்பாக இறைவனை பிரார்த்தித்துக்கொள்கின்றோம்.
07/07/2026
க.பொ.த. உயர்தர மாணவர் - 2028 Batch இணைத்து கொள்ளும் நிகழ்வானது 2026 ஜூலை 6 திகதி தற்போது பாடசாலை கடமைகளை பொறுப்பேற்றுள்ள பிரதி அதிபர் MR.A.சுமன் தலைமையில் இடம்பெற்றது. இதில் Mrs.varaniya saantharupan [ பிரதி கல்வி பணிப்பாளர் திட்டமிடல் பிரிவு] கலந்து சிறப்பித்திருந்தார். மற்றும் உயர்தர மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் செயலமர்வு தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
01/07/2026
2026ம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர விண்ணப்பப்படிவம் கோரப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பப்படிவத்தை 01.07.2026 ம் திகதி தொடக்கம் பாடசாலை நேரத்தில் விண்ணப்பப்படிவங்களை பெற்று கொண்டு பூரணப்படுத்திய விண்ணப்பங்களை 03.07.2026 ம் திகதிக்கு முதல் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.