08/06/2022
கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் ஒவ்வொரு மாணவனும் பாடசாலை கழகங்களில் அங்கத்தவராதல் திட்டமும், பாடசாலை மாணவர் அமைப்புகள், கழகங்களுக்கான கூட்டமைப்பும் அங்குரார்ப்பணம்.
கல்முனை சாஹிரா கல்லூரியில் மாணவர்களின் மென், வன் திறன்களை விருத்தி செய்யும் நோக்கில் ஒவ்வொரு பாடசாலை மாணவனும் பாடசாலை கழகங்களில், அமைப்புகளில் அங்கத்தவராதல் திட்டம் இன்று 8-6-2022 பாடசாலை அதிபர் MI. ஜாபிர் அவர்களினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
பாடசாலையில் ஏற்கனவே இயங்கும் மற்றும் புதிதாக அமைக்கப்படும் மாணவர் கழகங்களை முறைப்படுத்துவதற்காக பாடசாலை கழகங்கள், அமைப்புகளின் கூட்டமைப்பு (School Clubs and Societies Consortium )ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. மேற்படி கூட்டமைப்பில் பாடசாலையின் அதிபர் தலைமை தாங்குவதோடு இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதி அதிபர் MH. அபூபக்கர், ஆசிரியர்களான ஷஃபி எச் இஸ்மாயில், AHM. ரிசான் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மாணவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அவர்களது ஓய்வு நேரங்களை சிறப்பாக பயனுள்ள வழிகளில் கழிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் பின்வரும் கழகங்கள், அமைப்புகள் பாடசாலையில் இக்கல்வியாண்டில் உருவாக்கப்படும் என பாடசாலை கழகங்கள், அமைப்புகளின் கூட்டமைப்பின் அங்குரார்ப்பண கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Art circle
Aesthetic Association
Agriculture society
Chemistry club
Computer society
Environment society
Debator's council
English literary association
History club
Library reader association
Young inventor club
Mathematics society
Student parliament
Non addict movement
Photographic and broadcasting association
Sinhala literary association
Tamil literary association
Science society
Young writers club
09/05/2022
அம்பாறை மாவட்ட 19 வயதிற்குட்பட்ட கடின பந்து அணிக்கான கல்முனை ஸாஹிரா கல்லூரி இருந்து 4 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் இம் மாதம் 8, 9ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெற இருக்கின்ற அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் நடைபெறவிருக்கும் 19 வயதிற்குட்பட்ட கடின பந்து சுற்றுப் போட்டியில் 4 வீரர்களும் அம்பாறை மாவட்ட அணி சார்பாக பங்குபற்ற உள்ளனர்.
மாவட்ட அணியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் திறமையாக விளையாடுவதற்கு, இம் மாணவர்களை பயிற்றுவித்து வழிகாட்டிய விளையாட்டுத்துறை ஆசிரியர் ்_அப்ராஜ் , #முஹம்மட் #றஜீப் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ்_ஜப்ரான் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்கள் பாராட்டுகளும்.
27/12/2021
கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி மர்ஜுனா காதர் காலமானார்.
=========================
இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜியூன்.
கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் வசித்தவரும் தற்போது தெஹிவலை பாத்தியா மாவத்தையில் வசிப்பவரும், ஹாஜியானி முகம்மது இஸ்மாயில் ஆலிம் சித்தி மர்ஜுனா காதர் B. A. Edu, M. A. Edu. அவர்கள் இன்று (27) இரவு தெஹிவலையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்ஹாஜ். எம். வை. எம். அப்துல் காதர் அவர்களின் அன்பு துணைவியாரும்,
சித்தி புர்கான் மாஹிதா B. Sc, யூசுப் றிகாஸ்(பொறியியலாளர்), றுஸ்தா பர்வின் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,
முகம்மட் முஸ்தாக், ஸீனத்துல் சஹ்னா, பிர்னாஸ் அஹமட் (திலீப்) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 28.12.2021 ந்திகதி காலையில் தெஹிவலை ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெறும்.
அன்னாரின் சிறப்பான மறுமை வாழ்வுக்காகப் பிரார்த்திப்போமாக
Board of discipline
Zahira College, Kalmunai
13/12/2021
பேராதனை பல்கலைக்கழகத்தினால் தேசியரீதியாக நடாத்தப்பட்ட புகைப்பட போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் முதலாமிடம்.
பேராதனை பல்கலைகழகத்தின் Rotaract Club யினால் தேசியரீதியாக நடத்தப்பட்ட புகைப்பட போட்டியில் மாணவர்களுக்கான பிரிவில் கல்முனை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞான பிரிவு மாணவன் Ilham Jazeel Ahamed Jazif அவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதற்கான இம் மாணவனுக்கு பணப்பரிசில்களும், புலமைப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.
பாடசாலையின் அதிபர் MI. ஜாபிர் அவர்கள் மாணவனை பாராட்டியதோடு மேற்படி நிகழ்வில் பாடசாலையில் புகைப்பட மற்றும் ஒளிபரப்பு கழகத்தின் பொறுப்பாசிரியர் ஷஃபி எச். இஸ்மாயில் உப பொறுப்பாசிரியர்களான MYM. ரகீப், MHM. முஸ்தன்சிர் போன்றோரும் கலந்து கொண்டனர்.
05/10/2021
இடர் காலத்திலும் இடையறாமல் சேவையாற்றிய ஆசிரிய பெருந்தகைகளுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
அதிபர், ஒழுக்காற்று சபை தலைவர் பாடசாலை மாணவத்தலைவர்கள் மற்றும் பழைய மாணவத்தலைவர்கள்...
16/08/2021
கல்முனை ஸாகிறா கல்லூரி, சம்மாந்துறை மத்திய கல்லூரி, நற்பிட்டிமுனை முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகக் கடமை புரிந்த, சாய்ந்தமருது HIKMAH INSTITUTE இன் ஸ்தாபகரும், ஓய்வு பெற்ற ஆங்கிலப் பாட ஆசிரியருமான, சாய்ந்தமருதைச் சேர்ந்த M.R.M .நஸீம் சேர் அவர்கள் இன்று (2021/08/16) காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
வல்ல இறைவன் அன்னாருக்கு மேலான சுவனத்தைப் பரிசளிப்பானாக!
10/08/2021
Prof. Rameez Aboobucker has assumed the duties as the Vice Chanceller of South Eastern University of Sri Lanka. Wish him all the best.