22/06/2026
2025 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படனர்
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
இன்று (22.06.2026 )பிரதான காலை ஆராதனையில் நடைபெற்று முடிந்த க.பொ.த சாதாரண தர 2025(2026)பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் (9A, 8A, 7A)பெற்ற 45 மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS) தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை (SDEC) செயலாளர் பொறியியளாலர் MIM. றியாஸ், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் (OBA) வைத்தியர் MK. சனூஸ் காரியப்பர், றிஸ்வான், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சபை உறுப்பினர் ஆசிரியர் இர்ஸாத் கான், பிரதி்அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது வெளிவந்த 2025 (2026) க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அதி விசேட சித்திகளைப் பெற்ற 45 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து கௌரவிக்கப்பட்டனர்.
சிறந்த முன்னேற்றகரமான பெறுபேறுகளைப் பெற அயராது உழைத்த கல்லூரி முதல்வர் MI. ஜாபிர் (SLEAS) தலைமையிலான கல்விசார் குழுவினரை பாடசாலை சமூகம் இணைந்து கௌரவித்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
-ஊடக பிரிவு ZCK🔰-
20/06/2026
Zahira College - Kalmunai Records Big Rise in O/L Results
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
Zahira College - Kalmunai has achieved excellent results in the recently released G.C.E. Ordinary Level examination showing a major improvement in student performance.
According to the official results released, the percentage of students who have qualified to follow G.C.E. Advanced Level (A/L) classes has reached an impressive 83.6%. This marks a clear increase from last year’s qualification rate, which stood at 79%.
With this 4.6% increase in the pass rate, a significantly higher number of students have now passed their O/Ls and are eligible to enter Grade 12 to pursue their A/L streams in Science, Commerce, Arts, and Technology.
-Media ZCK🔰-
17/06/2026
Qatar charity நிறுவனத்தின் அணுசரனையுடன் நீர் குளிரூட்டி இயந்திரம் அன்பளிப்பு
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
கல்லூரியின் மாணவர்கள் மற்றும் கல்விசார், கல்விசாரா ஊழியர்களின் தேவை கருதி qatar charity நிறுவனத்தின் அணுசரனையுடன் நீர் குளிரூட்டி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு (12.06.2026) அன்று அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். நிகழ்வில் "கட்டார் சரிட்டி" நிறுனத்தின் செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர்
எம். எப். எம். கப்ளீன் அவர்கள் கலந்து கொண்டு இரண்டு நீர் குளிரூட்டி இயந்திரங்களை கல்லூரியின் அதிபரிடம் கையளித்தார்.
இதனை வழங்கிய Qatar Charity நிறுவனத்திற்கும் பெற்றுக் கொடுப்பதில் முனைந்து செயற்பட்ட திருமதி நசீஹா சஹ்பி அவர்களுக்கும் பாடசாலை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல் - கல்லூரியின் ஊடகப்பிரிவு
05/06/2026
உலக சுற்றாடல் தினம்
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை குறைப்பதற்காக செயற்படுவோம் எனும் தொனிப் பொருளில் இவ்வருடம் உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் பிரதான அம்சமாக பூகோளம் வெப்பமடைவதை தடுத்து காலைநிலை மாற்றத்தை குறைப்பதற்கு செயற்படுவோம் என முக்கிய கருப்பொருளில் மே 30 தொடக்கம் ஜூன் 5 வரை உலக சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தப்படுகிறது.
அதன் ஒரு அங்கமாக இன்று கல்முனை சாஹிறா கல்லூரி சுற்றாடல் குழுவினால் "உலகம் வெப்பமடைவதை தடுக்க மரங்களை நடுவோம் சூழலை பாதுகாப்போம்" எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பாடசாலையின் அதிபர் Mr. M.I. Jabir sir,
இணைப்பாட விதானத்துக்கு பொறுப்பான உப அதிபர், Mr. S. Mubarak sir, சுற்றாடல் குழு ஆசிரியர்களான
Mr. A.L.M. Aseem
Mrs. AF Farwin
Mrs.MIF Roshen Jabeen
Mrs. AF Farwin
Mr.ULM Mufees
Mrs. ZMF Sameera
Mr. M.Hasan
Mrs. P.Puvineethan
Mr.N. Kisho
Mr. MMM. Mayas
Mrs. SF. SajeehaSahran,
Mr. AM. Aasir
Mrs. MAF Aska,
Mrs.AW, Raiza Farwin
ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊடகப்பிரிவு
சாஹிரா கல்லூரி - கல்முனை
31/05/2026
A.M. Waseem, Alumnus of Zahira College - Kalmunai, Presents Strategic Reform Plan to Prime Minister
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
A comprehensive strategic reform plan aimed at transforming Sri Lanka’s educational landscape was recently presented to Prime Minister and Education Minister Dr. Harini Amarasuriya at the Ministry of Education premises in Battaramulla. The policy blueprint, titled "Transforming Sri Lanka's Educational Landscape: A Comprehensive Strategic Reform Plan for a Sustainable Quality Education" was researched and compiled by independent researcher and author, A.M. Waseem.
The author, an alumnus of Zahira College - Kalmunai, designed the comprehensive book and accompanying strategic policy document to align closely with the government's present educational reform agenda. By highlighting the milestone of its former student, the school underscores its legacy of contributing to national-level policy development and academic excellence.
Operating under the vision of "A Quality Education, A Sustainable National Development" Waseem’s research advocates for a decisive pivot away from outdated teaching-learning methodologies. The document urges the immediate adoption of global best practices, technological innovation and lifelong learning frameworks tailored to meet 21st-century classroom demands across Sri Lanka.
Principals, Staff, SDEC and alumni of Zahira College - Kalmunai, expressed great pride in their past pupil’s achievement welcoming the detailed research and commending his efforts to contribute constructively to the country's ongoing national education development goals.
School Society
—————————————————
எங்கள் பழைய மாணவரான ஏ.எம். வசீம் (AM. WASEEM) அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அர்ப்பணிப்புடன் கற்ற மாணவராக இருந்த அவர், இன்று வெளியிடப்பட்ட நூலாசிரியராகவும் ஆய்வாளராகவும் உயர்ந்துள்ளார்.
தன்னிச்சையான முயற்சி மற்றும் தொலைநோக்குப் பார்வையின் சிறந்த வெளிப்பாடாக, இலங்கையின் கல்வி எதிர்காலத்திற்கான விரிவான செயற்திட்டத்தை வசீம் அவர்கள் ஒரு முழுமையான நூலாகவும், மூலோபாயக் கொள்கை ஆவணமாகவும் உருவாக்கியுள்ளார்.
அவரது “Transforming Sri Lanka's Educational Landscape: A Comprehensive Strategic Reform Plan for a Sustainable Quality Education” என்ற நூல், அண்மையில் கல்வி அமைச்சின் பத்தரமுல்லை அலுவலகத்தில், மாண்புமிகு பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தக் கொள்கையுடன் முழுமையாக ஒத்திசைவாக அமைந்துள்ள வசீம் அவர்களின் இப்பணி, “தரமான கல்வி – நிலையான தேசிய அபிவிருத்தி” என்ற வலுவான நோக்கத்தை முன்னிறுத்துகிறது. இலங்கை, காலாவதியான கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளிலிருந்து விலகி, உலகளாவிய சிறந்த நடைமுறைகள், புதுமைகள் மற்றும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றல் அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் அவரது ஆய்வு ஒரு முக்கியமான செயற்பாட்டு அழைப்பை முன்வைக்கிறது. இவை அனைத்தும் 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
“ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் வகுப்பறைகளில் வடிவமைக்கப்படுகிறது.” என்ற உண்மையை பிரதிபலிக்கும் வகையில், வசீம் அவர்களின் பணி இலங்கையின் குழந்தைகள் மற்றும் கல்வியாளர்களின் எதிர்காலம் ஒளிமிக்கதாகவும், நவீனமாகவும், நிலையானதாகவும் அமைய வழிகாட்டுகிறது.
அல்லாஹ்வின் அருளால், எமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த உயரிய பணியில் வசீம் அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறோம். அவருடைய இந்த முக்கியமான மைல்கல்லை அங்கீகரிப்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.
பாடசாலை சமூகம்
26/05/2026
2026ஆம் ஆண்டிற்கான கல்முனை வலயமட்ட பூப்பந்தாட்ட (Batminton ) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை சாதனை.
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
28.04.2026 ம் திகதி நிந்தவூர் MAC உள்ளக மைதானத்தில் நடைபெற்று முடிந்த வலயமட்ட பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலயமட்ட பூப்பந்தாட்ட (badminton) போட்டியில்18,20 வயது ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும்,16 வயது ஆண்கள் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்று கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவர்கள் மாகாண மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், மாணவர்களை வழிப்படுத்தி பயிற்றுவித்த ஆசிரியர்கள் AM. Afraj Rila , MHM.Musthanzir அவர்களுக்கும், கல்லூரியின் அதிபர் MI.ஜாபீர் (SLEAS), பிரதி அதிபர் S.Mubarak பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் மற்றும் பாடசாலை சமூகத்தால் பாராட்டப்படுகின்றனர்
- ஊடக பிரிவு ZCK -
18/05/2026
பாடசாலையின் இலட்சனை தொடர்பாக.
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
ஒரு பாடசாலையின் அல்லது அரச நிறுவனத்தின் இலட்சனை, பெயர்பலகை போன்றவை குறித்த நிறுவனங்களின் இறைமை, தனித்துவம் மற்றும் சட்ட ஒழுங்குடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயமாகும். இதன் பயன்பாடு, பொதுவான விதிகள் பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்படும் நிர்வாக கோவை விதிகளின் படி நிர்வகிக்கப்படுகின்றன.
எனவே அரச நிறுவனங்களின் இலட்சினைகளை எந்தவொரு தனிநபரும் சட்டத்திற்கு முரணாக பயன்படுத்துவது, மாற்றம் செய்வது சட்ட ரீதியான குற்றமாகும்.
கடந்த 07/05/2026 அன்று சாய்ந்தமருது நகரசபை தொடர்பாக உயர்நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து, எமது பாடசாலையின் அங்கீகரிக்கப்பட்ட இலட்சினையை மாற்றம் செய்து முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியீடு செய்யப்பட்ட நடவடிக்கைகள் முற்றிலும் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும். இது தொடர்பாக உரிய நபர்கள் சிலரை தொடர்பு கொண்டு அதனை நீக்குவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இச் செயற்பாடு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்வது, அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வது, அதற்கான பின்னூட்டல்களை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான சட்ட நடவடிக்கையினை பாடசாலை நிர்வாகம் மேற்கொள்ளும் என்பதனையும் அறியத்தருகிறோம்.
-பாடசாலை நிர்வாகம்-
29/04/2026
*கல்முனை ஸாஹிராக் கல்லூரி உதைப்பந்தாட்ட அணி வலயமட்டத்தில் இரண்டாமிடம் பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு*
மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த 2026.04.10 மற்றும் 11 ம் திகதிகளில் நடைபெற்ற கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 18 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கல்முனை ஸாஹிராக் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று மாகாணமட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கல்முனை ஸாஹிராக் கல்லூரி அணி முதலாவது போட்டியில் நிந்தவூர் அல்-அஸ்ரக் தேசிய பாடசாலை அணியை 3-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டி கால் இறுதிப் போட்டிக்கு தெரிவானது. காலிறுதி போட்டியில் மருதமுனை அல்-மனார் பாடசாலையை 1-0 எனும் கோல் அடிப்படையில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தெரிவானது, பின்னர் அரை இறுதி போட்டியில் நடப்பு சம்பியினான மருதமுனை அல்-ஹம்ரா பாடசாலையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மருதமுனை மதீனாவுடனான இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன் மாகாண மட்ட போட்டிக்கும் தெரிவானது. இச்சாதனை மாணவர்களை இனங்கண்டு, தெரிவு செய்து,சிறப்பாக பயிற்றுவித்து வழிகாட்டிய சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்கள் Mr SM.Ubaitheen, Mr.SM.Rajeef அவர்களுக்கும் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர் Mr.AM.Jabran அவர்களுக்கும் மற்றும் ஏனைய உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், அனைத்து பாடசாலை சமூகம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது. மேலும் இம்மாணவர்களுக்கு எல்லா வழிகளிலும் உதவி செய்து வசதிகள் செய்து கொடுத்து வழிகாட்டிய அதிபர் MR.MI.Jabir அவர்களுக்கும் பிரதி அதிபர் S.Mubarak அவர்களுக்கும் நன்றி கூறுகிறோம்.