28/10/2025
தேசிய வாசிப்பு மாத விசேட நிகழ்வுகள்
----------------------------
"புத்தகங்கள் வாசிப்போம் உலகை வெல்வோம் "எனும் இவ் வருட தொனிப்பொருளினை கருவாகக் கொண்டு எமது பாடசாலை கமு/கமு /அல்- மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக இம்மாதம் முழுவதும் மாணவர்களுக்கான விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதன் ஒரு கட்டமாக இன்றும்(28/10/2025) எமது பாடசாலையில் மாணவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அன்பளிப்புடன் ஒரு தொகை நூல்கள் எமது பாடசாலை நூல் நிலையத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு எமது பாடசாலை நூலக பொருப்பாசிரியர் எம்.எம்.எம். பசில் மற்றும் வழிகாட்டல் ஆலோசனை பொறுப்பாசிரியர் எம்.எஸ். லிஸாம் ஸாலி ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றதுடன் நிகழ்வில் கல்லூரி அதிபர் திரு எம். ஐ.அப்துல் ரஸ்ஸாக், பிரதி அதிபர் எம்.வை. சாதிக் மற்றும் உதவி அதிபர்களான இஷட். ரீ,சியாம், எஸ். ஜூனைதீன் ஆகியோருடன் பாடசாலையின் பகுதி தலைவர்கள், தமிழ் மொழி பாட ஆசிரியர்களுடன் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
16/10/2025
கடந்த 10.10.2025 ஆம் திகதி எமது பாடசாலையில் நடைபெற்ற சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகளின் நிழல்ப்படங்கள்
16/10/2025
சர்வதேச உளநல தினம் 2025
++++++++++++++++++++++++++
" மனநல சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும்" எனும் இந்த வருடத்தின் தொனிப்பொருளுக்கமைய எமது பாடசாலை கமு/ கமு/ அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் (13/10/2025) இன்று நடைபெற்ற உளநல தின விசேட நிகழ்வானது எமது பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை பிரிவு ஆசிரியர் எம்.எஸ். எம்.லிஸாம் ஸாலி அவர்களின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் எம் ஐ அப்துல் ரஸ்ஸாக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம் வை. சாதிக் அவர்களும் உதவி அதிபர் இஸட் டீ. சியாம்,எஸ். ஜூனைத்தீன் மற்றும் பகுதி தலைவர்வர்கள்,ஆசிரியர்க ள்,மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
01/10/2025
உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள் எனும் தொனிப்பொருளின் கீழ் எமது பாடசாலையில் கொண்டாடப்பட்ட உலக சிறுவர்தின நிகழ்வுகளின் நிழல்கள்
21/09/2025
கடந்த 10.09.2025 ஆம் திகதி எமது பாடசாலையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் நபி விழா நிகழ்வுகள்.
21/09/2025
தேசிய மட்ட போட்டியில் சிறந்த வீரருக்கான சான்றிதழ் பெற்ற ஆகில் மிகா
========================================
Ritzbury நிறுவனத்தின் பூரண அனுசரனையில் தியகம, மகிந்த ராஜபக்ஸ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற (08.09.2025 - 11.09.2025) 93வது சேர் ஜோன் டார்பட் சிரேஸ்ட தேசிய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் (93rd Sir Jhon Tarbat Senior National Athletic Championship -2025) எமது பாடசாலை சார்பாக பங்குபற்றிய MMM. AAQIL MIKA எனும் மாணவன் 100m தடைதாண்டல் ஓட்டத்தினை 14.27 செக்கனில் ஓடி அதி சிறந்த திறமையை வெளிக் காட்டியவர்களுக்காக வழங்கப்படும் வர்ணச் சான்றிதழை (Colours Certificate) பெற்று எமது பாடசாலைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் கல்முனை கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இம் மாணவனுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்களான AJM. SASAN, ACM. ASLAM அவர்களுக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான AJM. SAFITH, MJM. MUFEETH மற்றும் JM. INSAAF (Colombo Royal international institute - Head coach) ஆகியோர்களுக்கும் வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து மாணவனை ஊக்கப்படுத்திய பாடசாலையின் அதிபர் MI. ABDUL RAZACK (SLPS 1), பிரதி அதிபர் MYM சாதிக், உதவி அதிபர்களான
ZT ஸியாம், S ஜுனைடீன் ஆகியோருக்கும் பகுதி தலைவர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர் ஆகியோருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
07/09/2025
கல்முனை அல் - மிஸ்பாஹ் மாணவன் MMM. ஆகில் மிகா புதிய போட்டிச்சாதனையுடன் தேசிய மட்டத்துக்கு தெரிவு
=============================
மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் 03.09.2025- 07.09.2025 வரை நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் எமது அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் MMM. ஆகில் மிகா எனும் மாணவன் 16 வயது ஆண்களுக்கான 100m தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சியை 14.15 செக்கனில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் 300m தடைதாண்டல் ஓட்ட நிகழ்ச்சில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளததோடு தேசியமட்ட போட்டிக்கும் தெரிவாகியுள்ளார்.
இம் மாணவன் கடந்த வருடம்(2024) நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் 100m தடைதாண்டல் ஓட்டத்தினை 14.78 செக்கனில் ஓடி புதிய போட்டி சாதனையை நிலைநாட்டி கிழக்கு மாகாணத்தின் 16 வயதுப் பிரிவின் சிறந்த விளையாட்டு வீரராக
( Best athlete - 2024) தெரிவு செய்யப்பட்டு விருது பெற்றிருந்தார். இவ்வருடம் அவருடைய முன்னைய சாதனையை அவரே முறியடித்து 14.15 செக். என்ற புதிய போட்டி சாதனையையும் பதிவு செய்துள்ளதோடு கடந்த மூன்று (2023, 2024, 2025) வருடங்களாக தடைதாண்டல் ஓட்டத்தில் மாகாண மட்டத்தில் தங்கப் பதக்கத்தை பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் இம் மாணவனுக்கும் பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்களான AJM. SASAN, ACM. ASLAM அவர்களுக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான AJM. SAFITH, MJM. MUFEETH மற்றும் JM. INSAAF (Colombo Royal international institute - Head coach) ஆகியோர்களுக்கும் வெற்றிக்காக உறுதுனையாய் இருந்து மாணவனை ஊக்கப்படுத்திய பாடசாலையின் அதிபர் MI. ABDUL RAZACK (SLPS 1), பிரதி அதிபர் MYM சாதிக், உதவி அதிபர்களான
ZT ஸியாம், S ஜுனைடீன் ஆகியோருக்கும் பகுதி தலைவர், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பெற்றோர் ஆகியோருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
10/08/2025
முதலாம்தர மாணவர் அனுமதிக்கான (2026) விண்ணப்பப்படிவங்கள் தற்போது வினியோகிக்கப்படுகின்றன
30/07/2025
நன்றி நவில்தல்
*******************
கமு/ கமு அல் - மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் இருந்து 23.07.2025 ஆம் திகதி இரு நாள் கல்வி சுற்றுலாவை மேற்கொண்ட மாணவர்களுக்கு இரண்டாம் நாள் மதிய உணவு வழங்கிய நற்பிட்டி முனையைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் சமாதான நீதவான் நீதிமன்ற உத்தியோகத்தர் எம் ஐ நிரோஸ் அவர்களுக்கு எமது பாடசாலை சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்
29/07/2025
*தேசிய கடற்கரை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் -2025*
***************************************
CLEAN SRI LANKA திட்டத்தின் கீழ்
"அழகான கடற்கரை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலா தலம்" எனும் தொனிப்பொருளுக்கமைய கடற்கரையை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இலங்கை இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (29.07.2025) கரையோரப் பகுதிகளில் நடைபெற்றது.
இவ்வேலைத்திட்டமானது சமூகப் பொறுப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நெறிமுறை நடத்தையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டு
14 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கி, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 8500 அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புக்களைச் சேர்ந்த பல அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தில் கல்முனையில் அமைந்துள்ள 18வது பட்டாலியன் விஜயபாகு இராணுவ படைப்பிரிவின் கோரிக்கைக்கமைவாக எமது அல் மிஸ்பாஹ் பாடசாலை மாணவர் குழுவினரும் கலந்து கொண்டு இலங்கை இராணுவத்துடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு, இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
16/07/2025
மாகாண மட்டத்திற்குத் தெரிவு
*************************************
கல்முனை வலயப் பாடசாலைகளுக்கிடையிலான சிங்கள வாசிப்புப்போட்டி இம்மாதம் 12,13 ஆம் திகதிகளில் இடம்பெற்றது இப்போட்டியில் பங்குபற்றிய எமது பாடசாலையின் தரம் 06 இல் கல்வி யிலும் RFF லீஸா என்ற மாணவி இரண்டாம் இடத்தைப் பெற்று மாகாணமட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார் அவருக்கும் இம்மாணவியை போட்டிக்குத் தயார்படுத்திய ஆரிரியர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
15/07/2025
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டு கழகத்தினால் உதைப்பந்தாட்ட உபகரணங்கள் அன்பளிப்பு
=========================
எமது அல் மிஸ்பாஹ் பாடசாலையில் உதைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் முகமாக அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவரும் இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுகுழு உறுப்பினரும் கல்முனை சனிமொண்ட் விளையாட்டு கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை அமைப்பாளருமான MIM. அப்துல் மனாப் (JP) அவர்களின் சொந்த நிதியில் இருந்து மூன்று உதைப்பந்தாட்ட பந்துகள் நேற்று (14.07.2025) பாடசாலையின் அதிபர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களிடம் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்கள், உடற்கல்வி ஆசிரியர் குழுவினர் மற்றும் சனிமொண்ட் விளையாட்டு கழகத்தின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன் நேற்று கையளிக்கப்பட்ட காற்பந்துகளை பயன்படுத்தி இன்று சிரேஸ்ட உடற்கல்வி ஆசிரியர் ஏ.சி.எம். அஸ்லம் அவர்களின் தலைமையில் காற்பந்தாட்ட பயிற்சி செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.