14/07/2025
Darul Quran
(சிறார்களுக்கான அல்-குர்ஆன் கற்கை நிலையம்) ஸாஹிபு வீதி, கல்முனைக்குடி-06
14/07/2025
Darul Quran
15/03/2025
தாருல் குர்ஆன் அகடமியின் முதலாவது கெளரவிப்பு நிகழ்வு 13.03.2025
கல்முனை ஸாஹிபு வீதியில் இயங்கிவரும் தாருல் குர்ஆன் அகடமி ஆரம்பிக்கப்பட்டு 04 வருட பூர்த்தியினைத் தொடர்ந்து 30 ஜுஸ்உ குர்ஆனையும் தஜ்வீத் சட்டங்களோடு ஓதிமுடித்து வெளியாகிய மாணவ மாணவிகளை சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு மத்ரஸா அதிபர் ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி) அவர்களின் தலைமையில் கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 29 மாணவ மாணவிகள் கெளரவிக்கப்பட்டதோடு பிரதம அதிதிகளாக அஷ்ஷெய்க்:- AC. தஸ்தீக் மதனி அவர்களும், கலாநிதி :- MMM. பஷீர் மக்கி அவர்களும், AMA. ஷாமில் ஹாமி அவர்களும், ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபையினர், முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகத்தினர், உலமாக்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
நிர்வாகம், தாருல் குர்ஆன் அகடமி-கல்முனை.
12/03/2025
முதலாவது கொளரவிப்பு நிகழ்வு இன்ஷா அழ்ழாஹ் நாளை 13.03.2025.
கடந்த நான்கு வருடங்களுக்குள் 30 ஜுஸ்உ குர்ஆனையும் முழுமையாக தஜ்வீத் சட்டங்களுடன் ஓதிமுடித்து இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்த 29 மாணவ மாணவிகளை சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கி கொளரவிக்கும் நிகழ்வு நாளை கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.
12/01/2025
Darul Quran Academy
கல்முனை ஸாஹிபு வீதியில் அமைந்துள்ள தாருல் குர்ஆன் மத்ரஸாவிற்கு 2025 ஆம் புதிய ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
04 வயது பூர்த்தியான ஆண், பெண் மாணவ, மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அல்-குர்ஆனை தஜ்வீத் முறைப்படி சரளமாக ஓதக்கூடிய குழந்தைகளை உறுவாக்கிவரும் இக் கற்கை நிலையமானது தனது கற்ப்பித்தல் பாடத்திட்டமாக
01-தஃலீமுல் குர்ஆன்-01 (எழுத்துக்களை மனனமிட்டு உச்சரித்தல்)
02-தஃலீமுல் குர்ஆன் - 02 (எழுத்துக்களை கூட்டி ஓதல் பயிற்ச்சி)
03- ஒரு ஜுஸ்உ குர்ஆன் ஓதல் பயிற்சி
04- ஐந்து ஜுஸ்உ குர்ஆனை சரளமாக ஓதல்.
05- தஜ்வீத் கற்கையோடு தஜ்வீத் முறைப்படி 30 ஜுஸ்உ குர்ஆனை முழுமையாக சரளமாக ஓதி முடித்தல்.
என்ற பாடத்திட்டத்தை இரண்டரை வருடங்களை மைய்யப்படுத்தியதாக சிறந்த ஆலிம், ஆலிமாக்களைக் கொண்டு ஒரு குழந்தையை சரியான உச்சரிப்போடு தஜ்வீத் முறையை பேணி ஓதும் குழந்தையாக மாற்றுவதே எமது கற்கை நிலையத்தின் நோக்கமாகும்.
உங்கள் குழந்தைகளையும் எமது தாருல் குர்ஆன் கற்கை நிலையத்தில் இணைத்திட விரும்பினால் கல்முனை ஸாஹிப் வீதியில் EFIC கல்வி நிலையத்திற்கு முன்பாக உள்ள எமது மத்ரஸாவிற்க்கு நேரடியாக மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணிவரை விஜயம் செய்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது மத்ரஸா அதிபர் மெளலவி:- ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி) அவர்களின் 0771336317 என்ற இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துங்கள்.
08/01/2025
#முஅல்லிமா_தேவை
கல்முனை சாஹிபு வீதியில் இயங்கிவரும் எமது தாருல் குர்ஆன் மத்ரஸாவிற்க்கு 2025 புதிய ஆண்டிற்கு முஅல்லிமா (ஆசிரியை) ஒருவர் தேவை.
#நிபந்தனைகள்
01- இலங்கையின் ஏதாவது ஓர் அறபுக்கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
02- குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி, கற்றுக்கொடுக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும்.
03- கல்முனையை வசிப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:- வெள்ளி, சனி தவிர்த்து மத்ரஸா நடைபெறும் நாட்கள் வாரத்தில் ஞாயிறு தொடக்கம் வியாழன் வரை 05 நாட்களாகும். (அரச விடுமுறை தினங்களிலும் மத்ரஸா விடுமுறையாகும்)
(தகுந்த சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும்)
தகுதிபெற்றோர் உடனே தொடர்பு கொள்ளவும் :-
பணிப்பாளர், தாருல் குர்ஆன்,
ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி)
Tel:- 0771336317
05/11/2024
#தர்த்தீளுள்_குர்ஆன்_போட்டியும்_வெற்றியாளர்களும்
கல்முனை சாஹிபு வீதியில் இயங்கி வரும் எமது தாருல் குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற தர்தீளுள் குர்ஆன் போட்டியில் மொத்தமாக 58 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்
அந்தப் போட்டியில் மிகத் திறமையாக தமது ஓதல்களை வெளிக்காட்டிய மூன்று மாணவர்கள் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்களுக்கான பரிசில்களை மத்ரஸா அதிபர் மெளலவி:- ஜே.எம்.சாபித் (ஷரயி, ரியாதி) அவர்கள வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்
♦️முதலாம் வெற்றியாளர்:- 🎙️HF. ஆயிஷா ரஹத்
♦️இரண்டாம் வெற்றியாளர்:- 🎙️MNF.நப்கா
♦️மூன்றாம் வெற்றியாளர்:- 🎙️AF. ஷைனப் சுஹா
ஆறுதல் பரிசீல்களை பெறக்கூடிய எட்டு பேர்
♦️♦️♦️♦️♦️♦️♦️
🎙️01-MAM. ஆபிக்
🎙️02-RF. லீதா அப்ஸீன்
🎙️03-MNM. நாஸீப்
🎙️04-NM.அத்நான்
🎙️05-MF. முஹம்மட்
🎙️06-MR. ஹபீப் அப்துல்லாஹ்
🎙️07-MJF. பதீன்
🎙️08-ARM. சரப்ஃ
🔰நிர்வாகம் தாருல் குர்ஆன்-கல்முனை
01/09/2024
#முஅல்லிமா_தேவை
கல்முனை சாஹிபு வீதியில் இயங்கிவரும் எமது தாருல் குர்ஆன் மத்ரஸாவிற்க்கு முஅல்லிமா (ஆசிரியை) ஒருவர் தேவை.
#நிபந்தனைகள்
01- இலங்கையின் ஏதாவது ஓர் அறபுக்கல்லூரியில் ஆலிமா பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
02- குர்ஆனை தஜ்வீத் முறைப்படி ஓதி, கற்றுக்கொடுக்கக் கூடியவராக இருத்தல் வேண்டும்.
03- கல்முனையை வசிப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.
குறிப்பு:- வெள்ளி, சனி தவிர்த்து மத்ரஸா நடைபெறும் நாட்கள் வாரத்தில் ஞாயிறு தொடக்கம் வியாழன் வரை 05 நாட்களாகும். (அரச விடுமுறை தினங்களிலும் மத்ரஸா விடுமுறையாகும்)
தகுதிபெற்றோர் உடனே தொடர்பு கொள்ளவும் :- பணிப்பாளர், தாருல் குர்ஆன்,
ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி)
Tel:- 0771336317
11/12/2023
#தாருல்_குர்ஆன் (சிறார்களுக்கான அல்குர்ஆன் கற்கை நிலையம்)
கல்முனை ஸாஹிபு வீதியில் அமைந்துள்ள தாருல் குர்ஆன் மத்ரஸாவின் 2024 ஆம் புதிய ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
04 வயது பூர்த்தியான ஆண், பெண் மாணவ, மாணவிகள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அல்-குர்ஆனை தஜ்வீத் முறைப்படி சரளமாக ஓதக்கூடிய குழந்தைகளை உறுவாக்கி வரும் இக் கற்கை நிலையமானது தனது கற்ப்பித்தல் பாடத்திட்டமாக
01-தஃலீமுல் குர்ஆன்-01 (எழுத்துக்களை மனனமிட்டு உச்சரித்தல்)
02-தஃலீமுல் குர்ஆன் - 02 (எழுத்துக்களை கூட்டி ஓதல் பயிற்ச்சி)
03- ஒரு ஜுஸ்உ குர்ஆன் ஓதல் பயிற்சி
04- ஐந்து ஜுஸ்உ குர்ஆனை சரளமாக ஓதல்.
05- தஜ்வீத் கற்கையோடு தஜ்வீத் முறைப்படி 30 ஜுஸ்உ குர்ஆனை முழுமையாக சரளமாக ஓதி முடித்தல்.
என்ற பாடத்திட்டத்தை இரண்டரை வருடங்களை மைய்யப்படுத்தியாக சிறந்த ஆலிம், ஆலிமாக்களைக் கொண்டு ஒரு குழந்தையை சரியான உச்சரிப்போடு தஜ்வீத் முறையை பேணி ஓதும் குழந்தையாக மாற்றுவதே எமது கற்கை நிலையத்தின் நோக்கமாகும்.
உங்கள் குழந்தைகளையும் எமது தாருல் குர்ஆன் கற்கை நிலையத்தில் இணைத்திட விரும்பினால் கல்முனை ஸாஹிப் வீதியில் EFIC கல்வி நிலையத்திற்கு முன்பாக உள்ள எமது மத்ரஸாவிற்க்கு நேரடியாக மாலை 04.00 மணி முதல் இரவு 07.00 மணிவரை விஜயம் செய்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் அல்லது மத்ரஸா அதிபர் மெளலவி:- ஜே.எம். சாபித் (ஷரயி, ரியாதி) அவர்களின் 0771336317 என்ற இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்துங்கள்.
02/10/2023
#விசேட_மார்க்க_ஒன்றுகூடல்
இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 06.10.2023 பல முக்கிய தலைப்புக்களில் சிறந்த உலமாக்கள் கலந்து கொள்ளும் இந் நிகழ்வில் நீங்களும் குடும்ப சகிதம் கலந்து பயன்பெற்றிடுங்கள். ஹூதா ஜும்ஆ பள்ளிவாசல் கல்முனை.
09/09/2023
உம்ததுல் அஹ்காம் பிஃக்ஹ் வகுப்புத் தொடர் - 22 (ஆரம்ப தக்பீரின் பின் ஓத வேண்டிய ஸஹீஹான துஆக்கள்)
23/08/2023
இன்ஷா அழ்ழாஹ் 25 வெள்ளிக்கிழமை தவறாது கலந்து பயன்பெற்றிடுங்கள்.
08/02/2023
#அல்ஹம்துலில்லாஹ்
கல்முனை ஸாஹிப் வீதியில் இயங்கிவரும் தாருல் குர்ஆன் (சிறார்களுக்கான அல்குர்ஆன் கற்கை நிலையம்) அல்லாஹ்வின் உதவியினால் நேற்றோடு (07.02.2023) இரண்டு வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இக் கற்கை நிலையமானது அஷ்ஷெய்க்: ஜே.எம்.சாபித் ஷரயி ரியாதி அவர்களின் நெரிப்படுத்தலில் சிறந்த கற்றல் கற்பித்தல் வழிகாட்டலோடும், குறுகிய காலத்தில் குர்ஆனை ஓதி முடித்திடும் சிறந்த பாடத்திட்டத்தோடும், ஆண்களுக்கு ஆண் உஸதாத்மார்கள் பெண்களுக்கு பெண் உஸ்தாதாக்களை கொண்டு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிகமாக துஆக்கள் மனனமிடல், தஜ்வீத் வகுப்புக்கள், இராகமாக கிராத் ஓதல் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றது.
இரண்டு வருடத்திற்குள் பல மாணவர்கள் தஜ்வீத் சட்டங்களோடு 30 ஜுஸ்உ குர்ஆனையும் முழுமையாக ஓதி முடித்து வெளியேறி இருக்கின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
நிர்வாகம் தாருல் குர்ஆன்
| Monday | 16:00 - 20:00 |
| Tuesday | 16:00 - 20:00 |
| Wednesday | 16:00 - 20:00 |
| Thursday | 16:00 - 20:00 |
| Sunday | 16:00 - 20:00 |