CP/Denu/Illukwatta Muslim maha Vidyalaya

CP/Denu/Illukwatta Muslim maha Vidyalaya Illukwatta Muslim Vidyalaya is one of the best schools in Kandy. we produce a good set of students.

07/10/2025
எமது பாடசாலையின் 2025 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்கான விஷேட மாணவர் பாராட்டு வைபவம் மாஷா அல்லாஹ் இன்றைய தினம் வெள்ளி...
19/09/2025

எமது பாடசாலையின் 2025 ஆம் கல்வியாண்டின் இரண்டாம் தவணைக்கான விஷேட மாணவர் பாராட்டு வைபவம் மாஷா அல்லாஹ் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19 செப்டம்பர் 2025) காலை 09:30 மணி தொடக்கம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. அனைத்து மாணவர்களும், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இவ்வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர்.

இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வுகளாவன:

1. வலய மட்டத்தில் தமிழ் மொழித் தினம், இரண்டாம் மொழி தினம் மற்றும் சமூக விஞ்ஞான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

2. இரண்டாம் தவணை பரீட்சையில் சிறப்பு அடைவு பெற்ற தரம் 02 தொடக்கம் தரம் 13 வரையான அனைத்து வகுப்பு மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

3. 2025 ஆம் ஆண்டு இரண்டாம் தவணை வகுப்பு ரீதியாக அதிகூடிய வரவு கொண்ட மாணவர்களைப் பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

4. இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சித்தியடைந்த மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் ரம்மலக்க மூன் நலன்புரி சங்கம் மூலம் இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்டி பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இன்றைய தினம் பிரதம அதிதியாக தெநுவர வலயக் கல்வி காரியாலய திட்டமிடல் பிரிவு கல்விப் பணிப்பாளர் திருமதி A.W.S.M வாஹிட் மற்றும் கௌரவ அதிதிகளாக தெநுவர வலயக் கல்வி காரியாலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி M.J.S நதீமா, கணித பாட ஆசிரிய ஆலோசகர் திரு Y.M வசூக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழு உறுப்பினர் மற்றும் செயலாளர் மூலமும் மூன் நலன்புரி சங்கம் சார்பில் அதன் தலைவர் மூலமும் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த மாணவிக்கு தங்கப்பதக்கம் மற்றும் பணப்பரிசும் பெற்று கௌரவிக்கப்பட்டது.

கல்வி அமைச்சு வழிகாட்டல் பிரகாரம் இன்றைய தினம் எமது பாடசாலையில் தேசிய மீலாதுந் நபி தினத்தை ஒட்டியதாக மரநடுகை, மாணவர்கள் ...
10/09/2025

கல்வி அமைச்சு வழிகாட்டல் பிரகாரம் இன்றைய தினம் எமது பாடசாலையில் தேசிய மீலாதுந் நபி தினத்தை ஒட்டியதாக மரநடுகை, மாணவர்கள் திறன்களை வெளிக்கொண்டு வந்த மாணவர் மன்றம் மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு கொண்ட வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன.
அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

எமது பாடசாலையின் கனணி கூடம் உயர் தர கலைப் பிரிவு மாணவிகளின் நிதி உதவியுடன் ஸ்மார்ட் போர்ட், ஃபோட்டோ கோப்பி மெஷின், லேமின...
10/09/2025

எமது பாடசாலையின் கனணி கூடம் உயர் தர கலைப் பிரிவு மாணவிகளின் நிதி உதவியுடன் ஸ்மார்ட் போர்ட், ஃபோட்டோ கோப்பி மெஷின், லேமினேடிங் மெஷின், தொலைக்காட்சி மற்றும் ஐந்து கனணிகள் (CPU With Monitor) பயன்படுத்தக் கூடியதாக மின்னிணைப்பு விரிவாக்கப்பட்டது.
நிதி உதவி செய்த அனைத்து மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
ஜஷாக்கல்லாஹு ஹைரன்.
வல்லவன் அல்லாஹ் அவர்களது இத்தகைய ஸதகத்துல் ஜாரியாவைப் பொருந்திக் கொண்டு அவர்களது அனைத்து விடயங்களிலும் பரக்கத் செய்வானாக.
ஆமீன்

2025 ம் ஆண்டு  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இலுக்குவத்தை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த M F Aaisha 143 புள்...
04/09/2025

2025 ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இலுக்குவத்தை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த M F Aaisha 143 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் ரம்மலக்கயை சேர்ந்த F சர்பானாவின் புதல்வியும் ஆவார்.இம்மாணவிக்கும் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் இதற்காகப் பாடுபட்ட வகுப்பாசிரியைக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
பாடசாலை நிர்வாகம்

எமது பாடசாலையின் முதலாவது அதிபர் அலுவலகம் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றைய தினம் வர்ணப் பூச்சு பூசி அழகுபடுத்தப்பட்டது.
03/09/2025

எமது பாடசாலையின் முதலாவது அதிபர் அலுவலகம் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்றைய தினம் வர்ணப் பூச்சு பூசி அழகுபடுத்தப்பட்டது.

B மண்டபத்தின் பின்னால் மாணவியர் மலசலகூடம் அமைந்துள்ள பகுதியில் கொங்கி ரீட் பாதை மற்றும் திண்ணை அமைத்தலின் இரண்டாம் கட்டம...
01/09/2025

B மண்டபத்தின் பின்னால் மாணவியர் மலசலகூடம் அமைந்துள்ள பகுதியில் கொங்கி ரீட் பாதை மற்றும் திண்ணை அமைத்தலின் இரண்டாம் கட்டம் இன்றைய தினம் நிறைவு பெறுகிறது.
இந்த வேலைத்திட்டத்தை சிறப்பாக செய்து முடிக்க நிதி உதவி செய்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் என்ற வகையில் எனது மனமார்ந்த நன்றிகள்.
வல்லவன் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் மேலான நற்கூலிகளைப் பெற்றுத் தருவானாக. ஆமீன்

24/08/2025

*ஒரு ஆசிரியரின் மௌன அழுகை*

பல வருடங்களாக அவர் சுமந்து வந்த அதே ஆர்வத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தார். சுண்ணாம்பு அவரது ஆயுதம், குரல் அவரது கருவி, மற்றும் ஓய்வின்றிய சேவை அவரது இதயம். கற்பிக்க வேண்டும் என்ற தீவிர ஆசையால் மட்டுமே நிரம்பியிருந்தது.

இந்த மனிதன் பணக்காரன் அல்ல, அவர் பிரபலமானவன் அல்ல. ஆனால் அவர் பணம் அல்லது புகழை விட சக்திவாய்ந்த ஒன்றைச் சுமந்து சென்றார்: அவர் அறிவைச் சுமந்தார். மேலும் அவர் விரும்பியதெல்லாம், தனக்கு முன் அமர்ந்திருப்பவர்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வதுதான், அதனால் அவர்கள் ஒரு நாள் தன்னை விட சிறந்தவர்களாக மாற முடியும்.

இந்த நாளில், அவர் தனது 12 ஆம் ஆண்டு மாணவர்கள் முன், தன்னால் முடிந்ததைச் செய்யத் தயாராக நின்றார். ஆனால் ஒரு சிறுவன் பின்னால் அமர்ந்து, நாற்காலியில் சாய்ந்து, தனது பேனாவை எடுக்க மறுத்தான்.

பல வருட தியாகத்தால் மட்டுமே கொடுக்கக்கூடிய பொறுமையுடன் ஆசிரியர் மெதுவாகச் சிரித்துவிட்டு,

"மகனே, தயவுசெய்து உட்கார். கவனம் செலுத்து. நீ கற்றுக்கொள்ளத் தகுதியானவன்."

சிறுவன் சத்தமாக பெருமூச்சு விட்டான், கண்களைச் சுழற்றி, அவனைப் புறக்கணித்தான். முழு வகுப்பும் சிரித்தது.
இன்னும் அமைதியாக, ஆசிரியர் அருகில் சென்று, சிறுவனின் கையை மெதுவாகத் தொட்டு, கெஞ்சினார்,

"தயவுசெய்து, எழுந்து உட்கார்ந்து கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் மகத்துவம் பெறத் தகுதியானவர்."

பின்னர் அது நடந்தது.

எச்சரிக்கை இல்லாமல், மரியாதை என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு வயதாகாத இந்த சிறுவன், ஆசிரியரை ஓங்கிக் குத்தினான். ஒரு முறை கூட மதிக்கவில்லை. அவர் சட்டையைப் பிடித்து, முழு வகுப்பினரும் சிரிக்க, அவரை வன்முறையில் குலுக்கினான்.

கற்பனை செய்து பாருங்கள்.

சுண்ணாம்பு மற்றும் பாடக் குறிப்புகளுக்காக தனது இளமையை தியாகம் செய்த ஒரு மனிதர்... தான் வழிநடத்த வந்த குழந்தைகளால் கேலி செய்யப்பட்டார்.

செல்வம் ஈட்டுவதற்காக அல்ல, எதிர்காலத்தை உருவாக்குவதற்காக... ஒவ்வொரு காலையிலும் தனது குடும்பத்தை விட்டு வெளியேறிய ஒரு மனிதர்.

அவர் பின்வாங்கவில்லை. அவரால் முடியவில்லை.

அவர் பலவீனமாக இருந்ததால் அல்ல - பலவீனமாக இருக்க வாழ்க்கையில் அதிகமாகத் தாங்கியிருந்தான். ஆனால் அவர் பணியாற்றிய அமைப்பின் உண்மை அவருக்குத் தெரிந்திருந்ததால்:

தன்னைத் தற்காத்துக் கொள்ளக் கூட கையை உயர்த்தினால், அவர் வேலையை இழப்பார்.

நிர்வாகம் மாணவனைப் பாதுகாத்து அவரைக் குறை கூறும்.

அவரது பல வருட சேவை அர்த்தமற்றது.

எனவே அவர் அமைதியாக நின்றார்.

அவர் எதுவும் சொல்லாததால் அமைதியாக இல்லை, ஆனால் அவர் வாழ்ந்த சமூகம் அவரது குரலை நசுக்கியதால்.

வகுப்பு சத்தமாக சிரித்தது. அவரது இதயம் ஆழமாக வெடித்தது.

அன்று அவர் வீட்டிற்குச் சென்றார், அவரது உடலில் காயங்களுடன் அல்ல, ஆனால் அவரது தோளில் காயங்களுடன். ஏனென்றால் பணிவை விட ஆழமானது எதுவும் இல்லை.
நீங்கள் வீட்டிற்கு வந்ததும் உங்கள் மனைவிக்கு இதை எப்படி விளக்குவீர்கள்?

வேறொரு ஆணின் குழந்தை உங்களை இவ்வளவு மோசமாக அவமதித்திருக்கும்போது, ​​உங்களை "அப்பா" என்று அழைக்கும் உங்கள் குழந்தைகளின் கண்களை எப்படிப் பார்ப்பீர்கள்?

மறுநாள் காலையில் எழுந்து, அதே சுண்ணாம்பைத் தூக்கிக்கொண்டு, எதுவும் நடக்காதது போல் அதே வகுப்பறைக்குள் எப்படி நடந்துகொள்வீர்கள்?
இன்று ஆசிரியராக இருப்பதன் உணர்வு இதுதான்.

ஒரு மாணவரின் தவறான நடத்தை மன்னிக்கப்படுகிறது, ஆனால் ஒரு ஆசிரியரின் கண்ணியம் புறக்கணிக்கப்படும் உலகம்.

ஆசிரியர்கள் சித்திரவதை, ஏமாற்றம், குறைந்த ஊதியம், குறைத்து மதிப்பிடப்படும் உலகம்... ஆனால் நாளைய தலைவர்களை உயர்த்த எதிர்பார்க்கப்படும் உலகம்.

கல்வி ஏன் என்று நாம் ஆச்சரியப்படுகிறோம்.
ஆசிரியர்கள் நாடுகளை கட்டியெழுப்புகிறார்கள், ஆனால் நாடுகள் ஆசிரியர்களை விட உயர்ந்தவர்கள்.

ஆசிரியர்கள் தங்கள் அனைத்தையும் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை.

ஆசிரியர்கள் விதைகளை விதைக்கிறார்கள், ஆனால் சமூகம் அவர்களுக்கு கற்களைக் கொடுக்கிறது.

உண்மை என்ன?

எத்தனை சட்டங்கள் இயற்றப்பட்டாலும், எத்தனை கொள்கைகள் எழுதப்பட்டாலும்... ஆசிரியர்களுக்கு கண்ணியத்தை மீட்டெடுக்கும் வரை, நம் கைகளால் கல்வியின் குறிக்கோள்களை தோண்டி எடுக்கிறோம்.

என்றும் ஒரு ஆசிரியரை மதிக்கவும்.

அவர்களின் வியர்வை, பொறுமை, தியாகம் ஆகியவற்றை மதிக்கவும்.

ஏனென்றால் ஒவ்வொரு வெற்றிகரமான மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், ஜனாதிபதி... ஆகியோருக்குப் பின்னால் ஒரு காலத்தில் எல்லாவற்றையும் கொடுத்து எதையும் பெறாத ஒரு ஆசிரியர் இருந்தார்.

எமது பாடசாலையில் பெண் பிள்ளைகள் மலசலகூடம் செல்லும் பாதை மூன்று நாட்களாக எமது பாடசாலையின் ஆசிரியர்களின் பண உதவியால் செப்ப...
10/07/2025

எமது பாடசாலையில் பெண் பிள்ளைகள் மலசலகூடம் செல்லும் பாதை மூன்று நாட்களாக எமது பாடசாலையின் ஆசிரியர்களின் பண உதவியால் செப்பனிடப்பட்டு வருகிறது

07/07/2025

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

23/05/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

எமது பாடசாலையின் 2025 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் தவணை விஷேட பாராட்டு விழா இன்றைய தினம் 2025 மே மாதம் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09:00 மணி முதல் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இவ்விழாவை சிறப்புற நடத்தி முடிப்பதற்கு உதவி செய்த வல்லவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்...

*இவ்விழாவில் நிறைவு செய்யப்பட்ட நிகழ்வுகள்*

1. நலன்விரும்பிகள் இருவர் மூலமாக பல்கலைக்கழகம் தெரிவான மாணவிக்கும், கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளை பெற்ற மாணவிக்கும் மடிக்கணினி (laptop) பெற்றுக் கொடுத்தல்.
2. எமது பாடசாலையின் கணினி பிரிவுக்கு ரம்மலக்க moons society மூலம் இரண்டு monitor களையும், பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழு அங்கத்தவர் மூலம் monitor ஒன்றும் பெற்றுக் கொடுத்தல்.

3. Sri Lanka insurance corporation மூலம் சுரக்ஷா காப்புறுதி நலன்கள் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக விளக்கம் பெற்றுக் கொடுத்தல்.

4. தரம் 03 தொடக்கம் தரம் 13 வரை உள்ள அனைத்து வகுப்பு மாணவர்களுக்கு மாணவர் முன்னேற்ற அறிக்கைகளை பெற்றுக் கொடுத்தல்.
5. தரம் 03 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்களில் சிறப்பான அடைவுகளை பெற்ற மாணவர்களுக்கு commended certificate பெற்றுக் கொடுத்தல்.
6. கடந்த வருடம் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற மீலாத் நபி தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பெற்றுக் கொடுத்தல்.
7. கடந்த வருடங்களில் வலய மட்ட இணைபாடவிதான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் பெற்றுக் கொடுத்தல்.
8. மாணவர் தலைவர் பதக்கம் அணிவித்தல்.
9. 2025 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் தவணையில் அதிகூடிய வரவுக்கான பரிசீல்கள் பெற்றுக் கொடுத்தல்

Address

Illukwatta
Kadugannawa
20300

Opening Hours

Monday 08:00 - 14:00
Tuesday 08:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 08:00 - 14:00
Friday 07:00 - 23:00

Telephone

+94762561320

Website

Alerts

Be the first to know and let us send you an email when CP/Denu/Illukwatta Muslim maha Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to CP/Denu/Illukwatta Muslim maha Vidyalaya:

Shortcuts

Share

Category