10/04/2026
Master the Most Important Phrasal Verbs and take your English to the next level! 🚀
Speak more naturally, understand natives better, and boost your confidence every day. Practice a little, improve a lot! 💯📚
10/04/2026
விழுந்த இடத்தை பார்த்து அழாதே, எழுந்து நிற்கும் சக்தி உன்னுள் இருக்கிறது என்பதை நினை."
10/04/2026
"நிச்சயம் வாழ்க்கை உங்களை அடித்துக் கீழே தள்ளும் அப்போது மீண்டும் எழுந்து நிற்பவன் மட்டும் வெற்றியடைகின்றான்" - ஜாக்கி சான்
| |
10/04/2026
500 ரூபா சம்பளம், அம்மாவுக்கு டைனிங் டேபிள் -லிவிங்ஸ்டன்
10/04/2026
National College of Education - Interview List 2026
https://1teachmore.lk/interview-list-national-colleges.../
ජාතික අධ්යාපන විද්යාල සම්මුඛ පරීක්ෂණ ලැයිස්තුව
தேசிய கல்வியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்கான பட்டியல்
New List Released
17-Tamil Language & Literature
10/04/2026
கல்வியில் மகுடம் சூடிய வடபுலம்: உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் தேசிய மட்டத்தில் முதலிடம்!
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், இலங்கையின் வடக்கு மாகாணம் கல்வித்துறையில் மாபெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று வடபுலம் மீண்டும் தனது கல்விப் பாரம்பரியத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, வடக்கு மாகாணம் பல முக்கிய பிரிவுகளில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது.
வடக்கு மாகாணத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். மொத்தப் பரீட்சார்த்திகளில் 65.19% பேர் தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாகாண ரீதியான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் முதலிடத்தை (Rank 1) எட்டியுள்ளது.
உயிரியல் (Biology) மற்றும் கலை (Arts) பிரிவுகள் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளன.பௌதீக விஞ்ஞானம் (Maths) மற்றும் வர்த்தக (Commerce) பிரிவுகளில் தேசிய ரீதியில் ஐந்தாம் இடம் பெற்றுள்ளன.
அதிவிசேட சித்தி (3A): மாகாண ரீதியாக 534 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் 'A' சித்தியைப் பெற்றுள்ளனர். 3A சித்திகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்திலும் (3.79%) வடக்கு மாகாணமே தேசிய ரீதியில் முதலிடம் வகிக்கிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்த வடக்கு மாகாணம், இம்முறை தனது நிலையை உயர்த்தி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாடசாலைப் பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒப்பிடும்போது தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை வடக்கு மாகாணம் பெற்றுள்ளது.