01/11/2023
யாழ் மாவட்ட திரி சாரணர்களினால் 28.10.2023 - 29.10.2023 வரை நடாத்தபட்ட பாடசாலை சாரணர்களுக்கு இடையிலான கிரிக்கட் கிளித்தட்டு மற்றும் வலைபந்து போட்டிகளில் எமது பாடசாலை சாரணர்கள் பங்குபற்றி வெற்றிபெற்றுள்ளனர்
கிளித்தட்டு போட்டியில் முதலிடத்தினையும் பெற்றுள்ளனர் 🏆
அவர்களுக்கு பாடசாலை சாரணர் குழுசார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்⚜️
28/08/2023
நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்ச்சவம் -2023
8ம் உபயம் யா/பெரியபுலம் மகா வித்தியாலயம் 24 வது சாரணர் குழு ⚜️
31/07/2023
யா/பெரியபுலம் மகா வித்தியாலய 24வது சாரணர் குழுவின் 40 வது ஆண்டு நிறைவு விழாவின் முன்னோட்ட நிகழ்வாக(2023.07.30) நடாத்தபட்ட வீதியோட்ட நிகழ்வும் அதனை தொடர்ந்து இடம் பெற்ற வீரர்களுக்கான வெற்றி கேடயங்களும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் ⚜️🇳🇬
17/07/2023
எமது சாரணர் குழுவின் 40 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட முதலாவது சிரமதான பணி!
-pmv scout media unit
10/07/2023
எமது பாடசாலையின் 40வது சாரணர் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அச்சிடப்படவுள்ள கொசுவு சட்டையினை பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ள எமது பாடசாலையின் சாரணர்கள் மற்றும் பழைய சாரணர்கள் தொடர்பு கொள்ளவும்
Tp:-0775854822
08/07/2023
தேசிய சாரணர் சேவை மாதம் - 2023
நாடளாவிய ரீதியில் இலங்கை சாரணர் சங்கம் முன்னெடுக்கும் இந்த "தேசிய சாரணர் சேவை மாதம்" சமூகத்திடையே நட்புறவு மற்றும் சாரணர் சேவைகளை கொண்டு சேர்க்கும். இந்த செயற்பாடானது ஆனி மாதம் 1ம் திகதி தொடக்கம் 31 ம் திகதி வரை இடம்பெறும். அந்த வகையில் எமதுபாடசாலையிலும் சாரணர் சேவைமாதம் அதிபர் அவர்களினால் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.
27/06/2023
ஜனாதிபதி விருது பெற்ற சாரணிய, சுற்றாடல் முன்னோடியில் ஜனாதிபதி விருது பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு
யா/பெரியபுலம் மகா வித்தியாலய சாரணர் குழுவில் ஜனாதிபதி சாரணர் விருதுகளை வென்ற சாரணர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு (26.06.2023) திங்கட்கிழமை பாடசாலையின் முதல்வர் திரு. ம.பரமேஸ்வரனின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக மேலதிக அரச அதிபரும் யாழ் மாவட்ட சாரண ஆணையாளருமாகிய திரு. ம.பிரதீபனும் சிறப்பு விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட சாரண ஆணையாளர் திரு. இ.தவகோபால் (JP) கலந்து கொண்டனர்
ஜனாதிபதி விருதுகளை வென்ற சாரணர்களுக்கு மாலை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
இவர்களுக்கு வழிகாட்டிய சாரண ஆசிரியர் ந. மஞ்சுதனுக்கும் கெளரவிப்பு வழங்கப்பட்டது.
சுற்றாடல் முன்னோடி மாணவர்களும் ஜனாதிபதி விருதினை வென்று இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
💚⚜️
23/06/2023
எமது பாடசாலையில் இவ்வருடம் ஐனாதிபதி விருது பெற்ற சாரணர்கள் மற்றும் ஐனாதிபதி விருது பெற்ற சுற்றாடல் கழக மாணவர்களுக்கு கெளரவிப்பு விழா நடைபெறவுள்ளது
அவர்களுக்கு எமது துருப்பு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்⚜️
21/06/2023
எமது பாடசாலையைச்சேர்ந்த மூன்று சாரணர்கள் அ.சதுஸ்ரிபன்,பு.தேனுகன்,ப.லதுர்சன் ஆகியவர்கள் 02.06.2023 அன்று அவர்களின் ஜனாதிபதி விருது சான்றிதழைப்பெற்றுக்கொண்டனர்அவர்களுக்கு எமது பாடசாலை சாரணர் சமூகத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
-Pmv scout Media unit