06/06/2026
இம்முறை எமது பாடசாலையில் இருந்து வலய மட்ட போட்டியில் பங்குபற்றிய அனைத்து( 4 ) அணிகளும் மாகாண மட்ட போட்டியில் பங்கேற்க உள்ளன,
கடந்த 29.06.2026 அன்று வெற்றியீட்டிய அணிகளுக்கான வெற்றிக்கேடயங்கள் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றது.
1).வலைப்பந்து 16 வயது - 1ம் இடம்
2).வலைப்பந்து 18 வயது - 1ம் இடம்(கிடைக்கவில்லை)
3).கரப்பந்து 16 வயது ஆண் - 2ம் இடம்
4).உதைபந்து 16 வயது ஆண் - 2ம் இடம்
06/06/2026
பாராட்டி வாழ்த்துகின்றோம்..!!
இன்றையதினம்(06/06/2026) யா/ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற வலயமட்டத்திலான செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் எமது பாடசாலையின்
தரம் 4 பெண்கள் அணி 2ம் இடத்தினையும்
ஆண்கள் அணி 4ம் இடத்தினையும்
தரம் 5 கலப்பு அணி 5ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன் வெற்றிக்காக இணைந்து பங்காற்றிய ஆசிரியர்களான திருமதி.ச.கிரியாழினி,செல்வி.ப.சரணியா,செல்வி.இ.யாழினி,திருமதி.பி.சிந்திஜா மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு.சூ.ஒஸ்வேல்ட் ஆகியோருக்கு எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
05/06/2026
நடைபெற்று முடிந்த கோட்ட மட்ட ஆங்கில மொழித் தின எழுத்தாக்கப் போட்டிகளில் பங்குபற்றி எமது பாடசாலை மாணவர்கள் வெற்றி பெற்று எமது பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன் வெற்றிக்காக உழைத்த ஆங்கில பாட ஆசிரியை திருமதி சா.கவிதா அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வேலணைக் கோட்ட மட்டம்
Grade 06
Recitation - S.Paviththiran (2nd place)
Grade 11
Creative Writing - R.Abi (3rd place)
04/06/2026
பாராட்டி வாழ்த்துகின்றோம்..!!
02/06/2026 மற்றும் 03/06/2026 ஆம் திகதிகளில் யா/ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற வலயமட்டத்திலான மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகளில் எமது மாணவர்கள் பங்குபற்றி 1ம்,2ம்,3ம் இடங்களைப் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துவதுடன் வெற்றிக்காக இணைந்து பங்காற்றிய அனைவருக்கும் எமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வெற்றியாளர் விபரம்
A.F.அக்ரா - உயரம் பாய்தல் - முதலாம் இடம்
G. கௌதம் - உயரம் பாய்தல் - முதலாம் இடம்
A. அனட்ரிசா - உயரம் பாய்தல் - இரண்டாம் இடம்
S. டிலக்ஷன் - 60 m- இரண்டாம் இடம்
100 m- இரண்டாம் இடம்
T. பிரணவன் - ஈட்டி எறிதல் - மூன்றாம் இடம்
N. தினோசன் - 200 m - மூன்றாம் இடம்
29/05/2026
எமது பாடசாலை முதல்வர் திரு.நடராசா மயூரன் அவர்கள்
உங்கள் ஆத்மா செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் பாதத்தில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்...!!!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி...!!!
27/05/2026
இன்றைய நாளில் (27.5.2026)
எமது பாடசாலையில்....
இன்றைய தினம் எமது பாடசாலையில் சிறப்பான முறையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந் நிகழ்வின் ஊடாக மாணவர்கள்
ஜனநாயகப் பண்பு தலைமைத்துவம் பொறுப்பேற்றல் வாக்குரிமை என அனைத்தையும் கற்றுக்கொண்டார்கள்.
இந் நிகழ்வினை ஒழுங்கமைத்த எமது பாடசாலையின் குடியியல் மற்றும் வரலாறு பாட ஆசிரியை திருமதி
வ . கிஜாந்தி அவருடன் இணைந்து செயலாற்றிய ஆசிரியை ச. லிஷானி
அபிவிருத்தி உத்தியோகத்தர்
திரு. கு அமுதீசன் தேர்தல் ஆணையாளராக பணியாற்றிய பகுதி தலைவர் கனக ஜீவசீலன் Sir மற்றும் தேர்தல் கடமைகளை மிகவும் சிறப்பாக ஆற்றி ஒத்துழைப்பு நல்கிய எமது ஆசிரியர் குழாத்திற்கு மகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தொடர்க உங்கள் செயல் வளர்க உங்கள் பணி
26/05/2026
ஆற்றல் மேம்பாட்டின் ஓர் அங்கமாய்..
26.5.2026 அன்று எமது பாடசாலையின் தரம் 2 மாணவர்களால் பாடசாலையில் ஒழுங்கமைக்கப்பட்ட மாதிரிப் பழக் கடை தரம் 2 மாணவர்களுக்கும் ஆசியை திருமதி ஜெஸீமா முஜீப் ரகுமான் அவர்களுக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
25/05/2026
இன்றைய தினம் எமது பாடசாலை மாணவர்களுக்கு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்
யோகாக் கலைப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இந் நிகழ்வினை ஏற்பாடு செய்த இந்திய துணைத் தூதரகத்தினருக்கும் பயிற்சியை வழங்கிய யோகா கலைப் பயற்றிவிப்பாளர்களுக்கும் எமது பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
25/05/2026
நன்றி பகிர்கிறோம்..
அண்மையில் இறையடி இணைந்த அமரர்.சின்னத்துரை தங்கம்மா(ஆச்சி106)அவர்களின் நினைவாக இன்றைய தினம் எமது பாடசாலைமாணவர்களுக்கு ஆச்சியின் குடும்பத்தினரால் சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவை வழங்கிய அன்னாரது குடும்பத்தினருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆத்மா எல்லாம்வல்ல நாகபூஷணித் தாயின் பாதாரவிந்தங்களில் இளைப்பாற வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி
23/05/2026
யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்ட "அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" வேலைத்திட்டம்!!
"அழகான கடற்கரை - ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்" " என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்வு இன்று(23.05.2026) காலை 7.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு இலங்கையில் சம நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் 'Clean SriLanka' திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல், டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு ஆகிய செயற்றிட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில், கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இன்றைய தினம் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இச் செயற்திட்டத்தின் அங்கமாக நயினாதீவு கடற்கரைப் பகுதிகளை சுத்தம் செய்யும் வேலைத் திட்டத்தை எமது பாடசாலை மாணவர்கள் இன்று முன்னெடுத்தார்கள்.
இப் பணியில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் இம் மாணவர்களுக்குத் தேவையான உபசரணையை வழங்கி ஊக்குவித்த
பழைய மாணவர்களான நயினை M.குமரன், சு.விமலேசன்,நா.தில்லைராசா எமது பாடசாலை ஆசிரியை திருமதி ஜெசீமா முஜீப் ஆகியோருக்கும் எமது பாடசாலை சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.