30/01/2025
இன்றைய தினம் (30.01.2025) தரம் 1 மாணவர்களிற்கான கால்கோள் விழா பிரதி அதிபர் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக J/126 கிராம சேவையாளர் செல்வி வே.சுகிர்தினி அவர்கள் கலந்து சிறப்பித்தார்.மேலும் பழைய மாணவர் சங்க செயலாளர்,வங்கி உத்தியோகத்தர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள்,பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
07/10/2024
இன்றைய தினம் மாணவர்களுக்கு விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அலுவலர் திரு.அ.பிரபாகரன் அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டது.
01/10/2024
எமது பாடசாலைக்கு கேட்காமலேயே எப்போதும் உதவி செய்பவர் லயன் ரொனிகஜன் அவர்கள். இன்றைய தினம் சிறுவர் தினத்தை முன்னிட்டு பிள்ளைகளுக்கு ரூபாய் 10000 பெறுமதியான பரிசில்களை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
01/10/2024
இன்றைய தினம் எமது பாடசாலையில் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி செல்வி அ.அபிலாசினி என்ற மாணவிக்கு எமது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி ஜெயராஸ் அவர்கள் ரூபாய் 30000/= வழங்கி வைத்தார்.
01/10/2024
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் அது கொடுக்கப்பட்டது என்றாகிவிடும்.
இன்றைய கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேற்ற பெற்ற மாணவிக்கு நிபந்தனைக்கு அப்பால் பெறுமதியான புத்தக பை ஒன்றை HNB திருநெல்வேலி முகாமையாளர் நண்பன் லயன் வசீகரன் வழங்கினார்.
01/10/2024
சிறுவர் தினம் 2024
இன்றைய தினம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் சிறுவர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவுஸ்திரேலியாவில் வாழும் பொறியிலாளர் திரு நடனகுமார் அவர்கள் உருவாக்கிய நாமகள் வித்தியாலய நம்பிக்கை நிதிய அனுசரனையில் மற்றும் அவரின் நிதிப்பங்களிப்பில்
அமரர் நமசிவாயம் தேவசகாயம், அமரர் மகேஸ்வரி தேவசகாயம் நினைவு ஞாபகார்த்தமாக வழங்கப்பட்ட நிதியுதவியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
30/09/2024
சிறுவர் தினம்
கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் மிகச்சிறப்பாக நடைபெற ஏற்பாடு.
29/09/2024
பாடசாலையின் மேடையை மறுசீரமைக்க நேர்வையைச் சேர்ந்த திரு சிவநேசன் தம்பதியினர் அனுசரணை வழங்கினர்.
(ரூபாய் ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதி).
இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
29/09/2024
கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயம் 100 வீதம் சித்தி. O/L பரீட்சை
29/09/2024
கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தின் மாணவி அபிசாலினிக்கு நல்வாழ்த்துகள்.
24/09/2024
PSDG 2024 செயற்திட்டத்தின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் கீழ் நல்லூர் கால் நடை வைத்திய நிலையம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தை தெரிவு செய்து பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பசும்பால் வழங்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் திரு இ.கணேசராஜா அவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.