31/10/2025
மாணவர்கள் தங்களின் சுயகற்றலை (Self-learning) மேம்படுத்த கீழ்காணும் செயல்களை மேற்கொள்ளவது நல்லது.
1. தன்னிச்சையான ஆர்வத்தை வளர்த்தல்
புதிய அறிவை அறிய விரும்புதல்.
“ஏன்?” மற்றும் “எப்படி?” என்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்புதல்.
2. தன்னைத்தானே திட்டமிடுதல்
தினசரி, வாராந்த, மாதாந்த வகுப்புகள் மற்றும் படிப்பு நேர அட்டவணையை தயார் செய்தல்.
முக்கியப் புள்ளிகள், மேட்கோள்கள் தொகுத்து படிப்பதற்கு முன்னுரிமை கொடுத்தல்.
3. தனிப்பட்ட மதிப்பீடு செய்தல்
புத்தகங்கள், இணைய வளங்கள், கட்டுரைகள் மற்றும் வீடியோ மூலமாக மேலதிக அறிவைப் பெறுதல்.
தவிர்க்க வேண்டிய தவறான தகவல்களை எவ்வாறு உணர்வது என்பதை கற்றுக்கொள்வது.
4. குறிப்பெடுக்கும் பழக்கம்
படித்தவையை சுருக்கமாக குறிப்புகளில் எழுதுதல்.
முக்கிய கருத்துகளை விளக்கங்கள், வரைபடங்கள், அட்டவணைகள் மூலம் பதிவு செய்தல்.
5. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தல்
நிகழ்நிலை பாடங்கள், கல்வி செயலிகள், வீடியோக்கள், கற்றல் மென்பொருட்கள் பயன்படுத்துதல்.
6. சுய மதிப்பீடு மற்றும் மீளாய்வு
படித்ததைத் தானே பரிசோதனை செய்யல்.
தானே கேள்வி உருவாக்கி பதில் சொல்லுதல்.
தவறுகளை பரிசீலித்து திருத்துதல்.
7. பேச்சு மற்றும் விவாதம்
நண்பர்கள் அல்லது ஆசிரியர்களுடன் கருத்து பகிர்ந்து விளக்கம் கேட்டல்.
மற்றவர்களிடம் விளக்கும்போது அறிவு வலுவடையும்.
8. தொடர்ச்சி மற்றும் பொறுமை
சுயகற்றல் முறை ஒருநாள் முடிவடையாது.
தினமும் சிறிய முயற்சிகள், திரும்ப திரும்ப முயற்சித்தல் அவசியம்.
தொகுப்பு
க.மு நித்தி B.A, Tamil Orator
" மொழிதம் " தமிழ்க்கல்விச்சோலை
21/09/2025
31/03/2025
24/02/2025
23/01/2025
13/07/2024