17/12/2025
Inland Revenue Service - 1st Rank Result &
Cut out marks -215
இனியெல்லாம் நாடளாவிய ரீதியில அரச போட்டிப் பரிட்சையில முஸ்லிம், தமிழ் மாணவர்கள் பாஸ் பண்ணணும் என்றால் வளவாளர்கள் Update ஆகனும் Or மாணவர்கள் வளவாளர்களை போல Model paper உருவாக்கி சுயகற்றலில் ஈடுபடனும்..
வளவாளர்களின் முதுகில் ஏறி வழமை போல பயணிக்க வெளிக்கிட்டால் தமிழ் மொழி மூலத்தில மட்டும் நடைபெறும் வரையறுக்கப்பட்ட வெற்றிடங்களை கொண்ட போட்டிப்பரிட்சை தான் நியமனம் கிடைக்க வழியாக இருக்கும்
02/12/2025
மக்களின் தெளிவிற்காக - அதிகம் பகிரவும்
பேரிடரின் பின்னரான நிவாரண பணிகளுக்காக
27/11/2025
கால்கள் தரையிலே வைக்காதவர்களை போல பாவனை செய்த தமிழ் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களை தான் இவ்வளவு காலமும் கண்டிருக்கிறேன்.. மூஞ்சி புத்தகத்திலே நினைவு கூர்ந்து பதிவு போட்டவர்களை கண்டதில்லை.. புதுசா இருக்கே.. பிடித்திருக்கிறது...
இந்த நாட்டில் போராடிய ஒவ்வொருவரின் கனவும் ஒரே ஒன்று
சாதியவாதம் இல்லாமல், சமத்துவம் நிலவும் ஒரு ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
அவர்கள் கனவு கண்டது எதிர்கால சந்ததிக்கு பாதுகாப்பான, நியாயமான, சமத்துவமான ஒரு நாடு.
அந்தக் கனவை நாமே நிறைவேற்ற வேண்டும்.
அவர்களின் தியாகத்துக்கு பொருள் வரச் செய்ய வேண்டியது நமக்கே உரிய பொறுப்பு.
இன்று அவர்களை நினைவு கூரும் இந்த தருணத்தில்,
அவர்கள் விட்டுச் சென்ற வீரக் கனவை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம்.
இது நம்முக்காக மட்டுமல்ல.
இது எங்கள் பிள்ளைகளுக்காக,
அவர்களின் எதிர்காலத்திற்காக,
இந்த நாட்டின் புதிய பாதை அமைக்கப் போகும் தலைமுறைக்காக.
வீர காவியமாகிய வீர மறவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த வீர வணக்கத்தை தெரிவித்து,
அவர்கள் கனவு கண்ட சமத்துவமான நாட்டை உருவாக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
25/11/2025
ஒட்டுக்குழுக்கள், சொம்புகள், மாற்றத்துக்கான தோழர்கள் என்கிற பெயரில் எத்தனை கழுசடைகள் தமிழர் மத்தியில் வந்தாலும் அவன் உடலின் ரோமத்துக்கும் இணையாக மாட்டார்கள் வேறு எவரும்...
இனமானமே தன்மானம் என்று எழுந்து, சேரன், சோழன் , பாண்டியன் என இலக்கியத்தில் மட்டுமே படித்த தமிழர் வீர மரபை சமரசமே இல்லாமல் நாற்படை கட்டி நிரூபித்து, உலக சரித்திரத்தில் சமகாலத்திலும் தமிழரை தலைநிமிர வைத்த சரித்திர நாயகன் பிறந்த தினம் இன்று. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தின் தலைவன், காவலன், கரிகாலன் !
அவன் எங்கள் இறை !
#மேதகு71
09/11/2025
ஒரு Smart Phone, 100 ஓவா Data கார்டு வைச்சிட்டு மீடியா செஞ்சா இப்படித்தான் நியூஸ் வரும்.. அதை நம்பி எல்லாரும் செய்தியை பகிர்ந்து கொண்டாடுகின்றார்கள்..
தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் தான் இது என்று கடைசி வரை
குறிப்பிடுறாங்களே இல்லை...
இதுவரை கண்ணில் தென்பட்டவை
02/11/2025
வெற்றி பெற்றதை விட உன்னதமான தருணங்கள்..
நானும் ஒரு படி முன்னேறிட மாட்டேனா என ஏங்குபவர்களின் ஒட்டு மொத்த பிம்பம்.
Sapesh Sapesan
30/10/2025
சம்பந்தரின் பெருமிதங்கள் Vs
இலங்கை தமிழர்கள்
"சம்பந்தர் எண்டு ஒருத்தர் இருந்தார். பிறகு அவர் இறந்தார்"
இப்படித்தான் வரலாறு சொல்கிறது.
அதேபோலத்தான் பல தமிழ் அரசியல்வாதிகளின் "வாழ்க்கை வரலாறும்" எழுதப்படும்.
ஆக;
இருக்கும் வரை இருந்துவிட்டு நிம்மதியாக இறந்துபோங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
உங்களால் எங்கள் மக்களுக்கோ அல்லது மண்ணுக்கோ அஞ்சு சதத்துக்கு பிரயோசனமும் இல்லை...
சம்பந்தரைப்போல......!!!
#பொதுசனம்
29/10/2025
அண்மையில் இளங்குமரன் பற்றி பதிவு போட்டதும் திடீரென NPP யிட்ட காசு வாங்கிட்டார் என்று கொஞ்சபேர் பேச தொடங்கிட்டினம்.
நான் முகநூலில் எழுதுவதை குறைக்க நினைப்பதற்கான காரணம் இதுதான்.
இங்கே இருக்கும் அநேகமான வாசிப்பாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆர்வமில்லை .
தங்களுக்கு தேவையான பொய்களையும் , புரட்டுகளையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக பெரும்பாலானோர் மாறிவிட்ட சமூகமாகிவிட்டோம்.
இளங்குமரன் பற்றி நான் அவதானிப்பை வெளியிட்டேன். கட்சி அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து எடுக்கிறது என்று அவரது நடவடிக்கைகளை பார்த்து கூறி இருந்தேன்.
அதற்குப்பிறகு நடந்த ஒரு நேர்காணலில் இளங்குமரனே அதை ஒத்துக்கொண்டு உள்ளார். பாராளுமன்ற நாட்களில் இரவு 11 மணிவரை கூட வகுப்பு வைத்து கட்சி அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக சொல்லி உள்ளார்.
அந்த நேர்காணலில் கட்சி எப்படி வடகிழக்கில் கால் ஊன்றுகிறது என்று தெளிவாக சொல்லி இருந்தார்.
அது கூட நான் பல தடவை சொன்னதுதான். ஒவ்வொரு பிரதேச மட்டத்திலும் இணைப்பாளர்கள் உள்ளார்கள். அரசியலுக்கு அப்பால் கட்சியை வளர்ப்பதில் கபிலன் போன்றோர் கடுமையாக உழைக்கிறார்கள்.
இளங்குமரன் அந்த பேட்டியில் , "கபிலன் இங்கே இருந்து செயற்படுவதால் தான் எங்களால் ஓரளவு நிம்மதியாக கொழும்பிலே சென்று பாராளுமன்றத்தில் கலந்துகொள்ள முடிகிறது" என்று சொல்லியிருந்தார்.
தமிழ் எந்திரன் என்ற யூ டியூப் தளத்தில் அந்த பேட்டி உள்ளது . பாருங்கள் , ஆச்சரியப்படுவீர்கள், சில மாதங்களுக்கு முன் வாய் தடுமாறி உளறிக்கொட்டி ஊரெல்லாம் மீம்ஸ் ஆன ஒருத்தர் குறுகிய காலத்திற்குள் எப்படி இப்படி ஒரு பேட்டி கொடுக்க கூடிய ஆளாக மாற முடிந்தது ?
நான் ஒரு ஊகத்தில்தான் எழுதினேன் ஆனால் சத்தியமாக பாராளுமன்றத்தினுள்ளேயே எக்ஸ்ரா கிளாஸ் வச்சு வகுப்பு எடுக்கும் அளவுக்கு யோசிக்கவில்லை.
ஏதோ நான் எழுதுவதெல்லாம் உண்மை என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை.
எச்சரிக்கை மணிகளை புரிந்துகொள்ளுங்கள்.
சுமந்திரன் மாகாண சபை தேர்தலில் நின்றால் படு கேவலமாகத் தோற்பார்.
சைக்கிள் கட்சி தனித்து நின்றாலும் படு கேவலமாக தோற்கும்.
கஜேந்திரகுமார் மற்றும் மற்றைய கட்சிகள் , (மறைமுகமாக ) சிறிதரனின் ஆதரவுடன் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் போன்ற ஒருவரை முன் நிறுத்தினால் மட்டுமே மாகாண சபை தேர்தலில் வடக்கில் NPP நிறுத்துபவர் முதலமைச்சர் ஆவதை தடுக்க முடியும் என்று நான் எழுதியது போன வருசம்.
இளம்செழியனுக்கு கருத்து கணிப்பு நடத்தி ஆறு மாதம் ஆகிவிட்டது.
ஆனால் மாகாண சபை தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தமிழ் தலைவர்கள் யோசிக்கத் தொடங்க முன்னமே NPP ஒரு பல்கலைக்கழக விரிவுரைளாளரை மாகாண சபை முதல்வர் வேட்பாளராக முன் நிறுத்தி மக்கள் மத்தியில் நன்கு தெரியப்பட்ட ஆளாக வளர்த்து எடுத்துள்ளது.
இப்போதைய நிலைமையில் வடமாகாண சபை தேர்தலில் NPP யை தோற்கடிப்பது கடினமாகிவிட்டது.
கடைசி நேரத்தில் விக்னேஸ்வரன் போன்று ஒருத்தரை திடீரென ஃபேமஸ் ஆக்கி கைகாட்டினால் சனம் வாக்கு போடும் என்று சினிமா தன அரசியலையே நம்மட ஆட்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் NPP நேர்த்தியாக திட்டமிட்டு தன்னை வளர்த்தெடுத்து அரசியல் சித்தாந்த வகுப்பெடுக்கிறது.
ஜே.வி.பி என்ற சிங்கள கட்சி யாழ்ப்பாணத்தில் அலுவலகம் திறந்து அங்கே தமிழ் நூலகம் வச்சு இங்கே எந்தநாளும் எவரும் வந்து புத்தகத்தை எடுத்து போகலாம், இங்கே வேறு எந்த பாதுகாப்பும் இல்லை என்று சொல்லுகிறது என்பதைவிட அந்த கட்சியின் அரசியல் திட்டமிடலை விபரிக்க வேறு என்ன தேவை?
இப்போதைய நிலையில் NPP முன் நிறுத்தும் ஆள்தான் வட மாகாண முதலமைச்சர் .
கபிலனை விட இன்னும் அதிக தகுதியானவரை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்து நாங்கள் பதவிக்காக அரசியல் செய்பவர்கள் இல்லை என்று அதிரடி காட்டுவது பற்றியும் அந்த கட்சி யோசிக்கிறது.
தமிழ் தேசிய கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி கூட்டணி வச்சு பொது வேட்பாளரை நிறுத்தி , கணிசமான அளவு புதிய வேட்பாளர்களை நிறுத்துவது மட்டும்தான். அதுவும் இப்போதே செய்யவேண்டும். கடைசி நேரம் வரை காத்திருந்தால் அரோகரா தான்தான்.
சினிமா பாணியில் கடைசி நேரத்தில் திடீர் கூட்டணி அமைச்சு அதிரடி காட்டி, புதுசா ஒருத்தரை வேட்பாளராக காட்டி திடீர் முதல்வர் ஆக்கலாம் என்ற தேய்ந்து போன மக்களை முட்டாளாக்கும் அரசியல் இனி சரிவராது.
ஏனென்றால் உங்களுக்கு போட்டியாக இருப்பது சாதாரண ஆள் அல்ல!
NPP என்ற, வெளியே காட்டிக்கொள்ளாத அறிவு ஜீவிகளால் நடத்தப்படும் பெரிய அமைப்பு!
திரும்பவும் சொல்லுறன் ,
இது NPP யிற்கு சொம்பு தூக்கும் பதிவல்ல, தமிழ் அரசியலின் தற்போதைய நிலையை விளக்கும் பதிவு.
ஆறு மாதங்களுக்கு முன் நீதிபதி இளம்செழியனை முன் நிறுத்தி கருத்து கணிப்பு நடத்தியபோது பலர் திட்டி இருந்தார்கள். அப்போது அதை நான் செய்ய காரணம் இப்படி நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான்.
இன்னும் ஆறு மாதம் கழித்து இந்த பதிவை காட்டி நான் இதை அப்போதே சொல்லி விட்டேன் கேட்டீர்களா என்று எழுதும் நிலை வந்தால், வடமாகாணத்தில் NPP யின் முதலமைச்சரே இருப்பார்.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள் !