20/05/2025
#ஸஹ்ரிய்யா_கண்ட_மற்றுமொரு_அடைவு.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 17 ஆவது பட்டமளிப்பு விழா கடந்த (03/04.05.2025) சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் எமது ஸஹ்ரிய்யா அரபுக் கல்லூரி பட்டதாரிகளான #அல்ஹாபிழ்_அஷ்ஷேக்_பாரிஸ்_ஸஹ்ரி (திருகோணமலை) , #அல்ஹாபிழ்_அஷ்ஷேக்_ரிபான்_ஸஹ்ரி (திருகோணமலை), #அஷ்ஷேக்_நஸ்மி_ஸஹ்ரி (ஹெம்மாதகம), அல்ஹாபிழ், #அஷ்ஷேக்_நளீம்_ஸஹ்ரி (வெலிமடை) ஆகியோர் மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டமும் (BA.Hons In Linguistics & Translation),
#அஷ்ஷேக்_ஸகீப்_ஸஹ்ரி (திருகோணமலை) பொதுக் கலைமாணிப் பட்டமும் (BA) வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இறையருளால் உமது இந்த அடைவு ஸஹ்ரிய்யா அரபுக் கலாசாலை நிர்வாகம், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகளையும் பெருமிதப்படுத்துகின்றது. அல்ஹம்துலில்லாஹ்!
உமது அறிவுத்தேடல் தொடரவேண்டும்; உமது சமூக சன்மார்க்கப் பணிகள் ஓங்க வேண்டும்; உமது முயற்சியும் உழைப்பும் ஸஹ்ரிய்யாவின் அடுத்த தலைமுறையினருக்கும் ஸஹ்ரிய்யாவின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கும் முன்மாதிரியாக அமைந்திடவேண்டும்.
இறைவா! இந்த உலகிலும், மறுவுலக வாழ்விலும் உனது பங்கினை நிரப்பமாகத் தந்தருள்வாயாக!